search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர்"

    சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக அழகர்கோவிலில் இருந்து தங்க குதிரை, சேஷ மற்றும் கருட வாகனங்கள் மதுரைக்கு வந்தன.
    மதுரையை அடுத்த அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந் திருவிழா நேற்று தொடங்கியது. அப்போது மேளதாளம் முழங்க சாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) சாமி புறப்பாடு நடைபெறும். நாளை மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 18-ந்தேதி மதுரை புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும்.

    இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 20-ந்தேதி சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் காட்சி தருவார்.

    பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் பெருமாள், மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். 21-ந்தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். மறுநாள் அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும். 23-ந்தேதி காலை கள்ளழகர் அழகர்கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருவார். அதற்கு மறுநாள் திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவுபெறுகிறது.

    இந்தநிலையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை, சேஷ மற்றும் கருடன் ஆகிய 3 வாகனங்களும் தனித்தனியே லாரிகள் மூலம் ஏற்றி நேற்று காலை அழகர்கோவில் இருந்து பாதுகாப்புடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் சேஷ வாகனமும், தேனூர் மண்டபத்தில் கருட வாகனமும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 27 உண்டியல் பெட்டிகளும் சாமியுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும். 445 மண்டகப் படிகளில் கள்ளழகர் காட்சிதருவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண வைபவம்.

    இந்த விழாவானது வருகிற 18-ந்தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் அதே மண்டப வளாகத்தில் சாமி, தேவியர்களுடன் எழுந்தருள்வார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ந்தேதி, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் விழா நடைபெறுகிறது. மேலும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருக்கல்யாண திருக்கோலத்தில் கள்ளழகர் பெருமாள், மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணக்கிறார்.

    திருக்கல்யாண திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். 22-ந்தேதி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    முன்னதாக 18-ந்தேதி மாலை 5.45 மணி அளவில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நிறைநாளில் காலை 8.15 மணி அளவில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்படுகிறார்.

    பொய்கைகரைபட்டியில் உள்ள கள்ளழகர் கோவில் தெப்பக்குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    பின்னர் தெப்பக்குளம் செல்லும் சாமியை, வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டி புஷ்கரணி தெப்பத்திற்கு சாமி சென்று, அங்கு கிழக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையடுத்து கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள்.

    கடும் வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு பொய்கைகரைபட்டி தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் சாமி குளக்கரையை மட்டும் சுற்றி வருவார். பின்னர் அங்கிருந்து சாமி அதே பரிவாரங்களுடன் வந்த வழியாகவே கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருவார்.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    அழகர்கோவிலில் நடந்த திருபவுத்திர திருவிழாவில் 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தால் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.

    அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுரகங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலை, பூக்கள், மாலைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.

    அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது:- உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    மதுரையை அடுத்துள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் முப்பழ உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பம்சம் பொருந்தியதும், திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து பெருமை படைத்ததுமானது அழகர்கோவில். இங்கு வற்றாத புனித தீர்த்தமான நூபுரகங்கையுடன் அருள்பாலித்து வருவது கள்ளழகர் கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொருவிதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழாவும் ஒன்று. இந்தாண்டுக்கான முப்பழ உற்சவ விழா நேற்று கள்ளழகர் கோவிலில் நடந்தது. அதில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடந்தது. கோவில்களில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக முப்பழங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செயதிருந்தனர்.

    ×