search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97380"

    பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #EdappadiPalaniswami #ADMK

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.

    தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-

    இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல் 23-ந்தேதி வர உள்ள வெற்றிச்செய்தி இப்போது கேட்கிறது.

    தேர்தல் முடிவுக்குப்பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.


    இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதற்கு காரணம் இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டுமென்றால் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    எனவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் ஓட்டு மூலம் பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #EdappadiPalaniswami #ADMK

    தமிழக சட்டசபைக்கு நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 6 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கின்றார். #MDMK #Vaiko #TNByPolls
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சட்டசபைக்கு நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கீழ்காணும் நாட்களில் பிரசாரம் மேற்கொள்கின்றார்.

    திருப்பரங்குன்றத்தில் மே 8, 9-ந்தேதியும், ஒட்டப்பிடாரத்தில் 10-ந்தேதியும், சூலூரில் 11-ந்தேதியும், அரவக்குறிச்சியில் 12, 13-ந்தேதியிலும் பிரசாரம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko #TNByPolls
    பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக மோடி கூறுவது ஏமாற்று வேலை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். #MDMK #Vaiko #PMModi
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற 17 ஆவது பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகின்றார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளவர்களின் பின்னணி அதிர்ச்சி அளிக்கின்றது.

    மத்தியப் பிரதேசத் தலைநகர் போபால் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, சாத்வி பிரக்யா சிங் என்பவரை, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றது.

    2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள், குஜராத், மராட்டிய மாநிலங்களில் 3 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பத்து பேர் உயிர் இழந்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்து பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக, புலன் விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர்தான் சாத்வி பிரக்யா சிங்.

    இவர், 1997 -ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் அமைப்பில் இணைந்தவர். இன்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர். வன்முறை, வெறுப்பு உணர்வை விதைக்கின்ற வகையில் பேசி வருபவர்.



    ஆனால், “சாத்வி பிரக்யா சிங் இந்தியப் பண்பாட்டுக்கும், பழம்பெருமைக்கும் அடையாளமாகத் திகழ்பவர்” என்று பிரதமர் மோடி புகழ்ந்து உரைத்துள்ளார்.

    அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற 71 அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

    அந்தக் கடிதத்தில், “மாலேகான் குண்டு வெடிப்பிற்காக என்னைக் கைது செய்தபோது, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி, விசாரணையின் போது என்னைத் துன்புறுத்தினார். அவருக்கு நான் சாபம் கொடுத்தேன். அதன் விளைவாக, மும்பையை பயங்கரவாதிகள் தாக்கியபோது, ஹேமந்த் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சாத்வி பிரக்யா சிங் பேசி இருக்கின்றார்.

    பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவிப் பொதுமக்களைக் காப்பதற்காகப் போராடி உயிரை ஈந்த கர்கரேவைப் இந்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, அவரை இகழ்ந்து பேசிய ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி இருப்பதோடு மட்டும் அல்லாமல், பிரதமர் மோடி அவரை இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என புகழ்ந்து பேசி இருப்பது, எங்களைப் போன்ற அரசுப் பணியாளர்களைப் பெரிதும் புண்படுத்தி இருக்கின்றது என அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தக் கூடாது” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல், “சாத்வி பிரக்யா சிங் எந்நேரமும் ஒரு கத்தியைக் கையில் வைத்து இருப்பவர்; பிலியாகர் என்ற இடத்தில், 2001 -ம் ஆண்டு சைலேந்திர தேவகன் என்ற இளைஞரின் நெஞ்சில் கத்தியால் குத்தியவர் பிரக்யா சிங் என, நேற்று ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கூறி உள்ளார்.

    குற்றப்பின்னணி கொண்ட சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, அவர் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்று புகழ்ந்து உரைக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை.

    நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தி 50 பேர்களைக் கொன்ற வெள்ளை இனவெறி ஆகட்டும், இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆகட்டும், மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சங் பரிவார் கும்பல் ஆகட்டும், பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்த்துப் போராடுவதே பொதுமக்களின் கடமை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MDMK #Vaiko #PMModi
    ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். #LokSabhaElections2019 #Vaiko
    ஈரோடு:

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.

    முன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா?, வெற்றி விழா கூட்டமா? என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    நம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அப்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.

    நமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

    அதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.

    ஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா?, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.

    வாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.

    பச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா? தி.மு.க. உறுப்பினர் என்பதா? ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.



    ஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது பாராளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அவருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.  #LokSabhaElections2019 #Vaiko
    மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    விழுப்புரம்:

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகமா?, பாசிசமா? என்ற கேள்விக்கு விடைகாணும் தேர்தல் இந்த தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றைத்தன்மையை திணிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் கேடு விளைவித்தது மத்திய அரசு.

    மேலும் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் தஞ்சை தரணியை பஞ்சபிரதேசத்திற்கு கொண்டு செல்ல திட்டத்தை வகுத்து கொடுத்தது.

    இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்களுக்காக நிலங்களை அபகரித்து வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளை நசுக்குகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசை தூக்கியெறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வணிகர்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடி உள்ளது. அதனை விவசாயிகளுக்கு பெற்றுத்தர ஊழல் நிறைந்த அரசு தயாராக இல்லை. மத்திய அரசின் வஞ்சகத்தில் இருந்து தமிழகத்தை காக்க முடியாத அரசு உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்களுக்காக நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    பருப்பு கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல், உள்ளாட்சி துறையில் டெண்டர் விடுவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், குட்கா ஊழல் இப்படி எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

    மருத்துவமனைகளுக்கு சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோயுடையவரின் ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நடந்துள்ளது. தற்போது ஓசூர் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும், கல்விக்கடன், விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Vaiko

    மல்லை சத்யா மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இது குறித்து அவர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ளார். #mallaisathya #mdmk

    சென்னை:

    ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் மாமனார் சிவசங்கரன் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    நீலாங்கரையில் எனக்கு சொந்தமான காலிமனையை திருவான்மியூர் பிரஷ்நேஷ், பாலவாக்கம் விஜயபாரதி ஆகியோருக்கு மூன்று வருட காலத்துக்கு கார் நிறுத்துவதற்காக வாடகைக்கு விட்டேன்.

    ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மீறி வாகனம் கழுவும் இடமாக மாற்றி நிலத்தை மாசுபடுத்தினர். ஒப்பந்த காலம் முடிந்துவிட்ட நிலையில் இடத்தை காலி செய்யாமல் அத்துமீறி செயல் பட்டு வருகின்றனர். தகாத வார்த்தையால் திட்டியும், குண்டர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டியும் வருகிறார்கள்.

    எங்களை கொலை செய்யும் திட்டத்தோடு இருக்கும் பிரஷ்நேவ், விஜய பாரதி மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டுத் தந்து எங்கள் குடும்பத்துக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.  #mallaisathya #mdmk

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார். #LSPolls #MDMK #Vaiko
    சென்னை:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் அவர் பிரசாரம் செய்யவில்லை. மீண்டும் 26-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்

    அவரது பிரசார விவரத்தை ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இன்று மாலை 3.30 அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகில் வைகோ பேசுகிறார்.

    4.00 சாத்தூர்

    4.30 படந்தால்

    4.45 சுப்ரமணியபுரம் விலக்கு

    5.00 தாயில்பட்டி

    5.15 மண்குண்டாம்பட்டி

    5.45 வெம்பக்கோட்டை

    6.00 முத்துசாமிபுரம்

    6.15 ஆலங்குளம் முக்கு ரோடு

    6.30 டி.கரிசல்குளம்

    6.45 தொம்பக்குளம்

    7.00 கீழராஜகுலராமன்

    7.15 திருவேங்கடபுரம்

    7.45 வ.உ.சி. நகர்

    8.30 ராஜபாளையம் பொதுக்கூட்டம்.

    26.03.2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு , குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு , ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலஜா, சோளிங்கர் பாணாவரம், மணப்பாக்கம், நெமிலி.

    27 மார்ச் 2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர்.

    மத்திய சென்னை டாணா தெரு, புரசைவாக்கம், தென் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் (ஜோன்ஸ் ரோடு).

    மார்ச் 28 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #MDMK #Vaiko
    இந்தியாவில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #LSPolls #ADMK
    சென்னை:

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரசாரம் தொடங்க உள்ளேன். நாளை தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.



    இந்தியாவில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டது வரம்பு மீறிய செயல்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #LSPolls #ADMK
    ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார் என்று வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #MDMK #Vaiko
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #LSPolls #MDMK #Vaiko
    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து 22-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #Kanimozhi #Vaiko
    சென்னை:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும். இந்திய அரசியலில் இந்த தேர்தல் திருப்புமுனையாக அமையும்.

    முல்லைபெரியாறு, காவிரி நதிநீர் விவகாரத்திலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதி அளித்ததிலும் மோடி அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதித்துவமாக இருக்கும் பா.ஜனதா தலைமையிலான அணி வெற்றிபெறாது. வெற்றிபெறக்கூடாது.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்ற மாநிலங்களவையில் குரல் கொடுத்து தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்த கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

    நான் எனது பிரசாரத்தை 22-ந்தேதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இருந்துதான் தொடங்குகிறேன். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் என்று முதல் நாள் பிரசாரத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி முடித்து மறுநாள் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் எங்கும் அவருடைய பிரசார பயணம் மகத்தான வெற்றியை இந்த அணிக்கு குவிக்க இருக்கிறது. நானும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். அதைத்தான் மு.க. ஸ்டாலினும் விரும்பினார்.

    எங்களது தேர்தல் அறிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும். 22-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி மாலை 4 மணி வரை என்னுடைய பிரசாரம் நடைபெறும். என்மீது பாசமும், பரிவும் கொண்ட அன்புத்தங்கை கனிமொழி மாபெரும் வெற்றிபெற்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    கேள்வி:- தூத்துக்குடி தொகுதியில் உங்களை எதிர்த்து மு.க.அழகிரி மகன் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வருகிறதே?

    பதில்:- இது உங்களின் கற்பனையாகவும், ஆசையாகவும் இருக்கலாம். எனக்கு தெரிந்து அது உண்மை இல்லை.

    கே:- தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

    ப:- தி.மு.க. இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர வெளியில் இருந்து யாரையும் கொண்டுவந்து வாய்ப்பு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Kanimozhi #Vaiko
    பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது.



    இந்நிலையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

    தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    கணேசமூர்த்தி 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy

    பாராளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். #ParliamentElection #MKStalin #DMKAlliance
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.



    இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    திமுக போட்டியிடும் தொகுதிகள்:

    சென்னை வடக்கு
    சென்னை தெற்கு
    மத்திய சென்னை
    ஸ்ரீபெரும்புதூர்
    காஞ்சிபுரம் (தனி)
    அரக்கோணம்
    வேலூர்
    தர்மபுரி
    திருவண்ணாமலை
    கள்ளக்குறிச்சி
    சேலம்
    நீலகிரி (தனி)
    பொள்ளாச்சி
    திண்டுக்கல்
    கடலூர்
    மயிலாடுதுறை
    தஞ்சாவூர்
    தூத்துக்குடி
    தென்காசி (தனி)
    திருநெல்வேலி

    காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

    திருவள்ளூர் (தனி)
    கிருஷ்ணகிரி
    ஆரணி
    கரூர்
    திருச்சிராப்பள்ளி
    சிவகங்கை
    தேனி
    விருதுநகர்
    கன்னியாகுமரி
    புதுச்சேரி

    மதிமுக- ஈரோடு
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோயம்புத்தூர், மதுரை
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-  ராமநாதபுரம்
    விடுதலை சிறுத்தைகள்-  விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)
    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
    இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர். #ParliamentElection #MKStalin #DMKAlliance
    ×