search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ரஞ்சித்"

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumal #Kathir
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள். 

    முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உருவாகி உள்ள இந்த படத்தில் தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும், எளிய மக்களிடமும் உள்ள பிரிவினை படிநிலை பற்றி படம் பேசுவதாக இயக்குநர் கூறியுள்ளார். அது உருவாக்கும் தாக்கத்தை பற்றியும், காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் உருவாகி இருக்கிறது.

    சந்தோஷ் நாராயணன் இசையில் `கருப்பி', `எங்கும் புகழ்' என்ற இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற செப்டம்பர் 28-ல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumalFromSep28 #Kathir #KayalAnanthi

    காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ஹூமா குரேஷி ரஜினிகாந்த்தும், ரஞ்சித்தும் தமிழ் கற்றுக் கொடுத்ததாக கூறினார். #HumaQureshi
    காலா படத்தில் ரஜினியின் காதலியாக வந்து கவர்ந்தவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்துப் பொண்ணு நான். அப்பா சலீம் குரேஷி டெல்லியில் நிறைய ரெஸ்டாரன்ட்களை நடத்திட்டிருக்கார். அம்மா அமீனா குரேஷி குடும்பத்தலைவி. 2008ல் படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்கணும்ங்கிற கனவோட மும்பை வந்தேன். விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். 2012ல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ படத்துல் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டாங்க. கூடவே நிறைய இந்திய சினிமா விருதுகளையும் அந்தப் படம் வாங்குச்சு. எனக்கும் பிலிம் பேரின் ‘சிறந்த புதுமுக நடிகை’ விருது கிடைச்சுச்சு. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரைக்கும் என்னோட முதல் படம் ‘வொயிட்’. இந்த மலையாளப் படத்தில் மம்மூட்டி சாரோட சேர்ந்து நடிச்சேன். ‘வைசிராய்ஸ் ஹவுஸ்’ங்கிற ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன்.”



    சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?

    சமையல், டிராவல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயுமே போக நேரம் கிடைக்கலைனா பீச்சுக்குப் போவேன். ‘காலா’ படத்தோட சில காட்சிகளை சென்னையில எடுத்தப்போ, அடிக்கடி பீச்சுக்குப் போயிட்டு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன்.

    மொழி என்னைக்குமே நடிப்புக்குத் தடையா இருந்ததில்லை. ரஞ்சித் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. மம்மூட்டி சாருடன் வேலை பார்க்கும்போது, அவர் எனக்கு மலையாளம் கத்துக்கொடுத்தார். நிறைய மொழிகளைக் கத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் சரிவர உணர்ச்சிகளைத் திரையில் வெளிப்படுத்த முடியும்.

    இந்தியில் ஒரு நடிகைன்னா தோல் நிறத்துல ஆரம்பிச்சு உயரம் வரைக்கும் ‘இப்படித்தான் இருக்கணும்’னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, தமிழ் சினிமா அப்படி இல்லை. நிஜ கதாபாத்திரங்களைத் திரையில காட்டணும்னு நெனைக்கிறாங்க. அதனாலதான் வர்த்தக நோக்கத்தையும் தாண்டி, தென்னிந்திய சினிமா ஒரு படி மேல இருக்கு. அந்த வகையில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும். #HumaQureshi

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பா.ரஞ்சித் சந்திப்பின் போது தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Congrees #Ranjith #RahulGandhi
    சென்னை:

    இயக்குனர் ரஞ்சித் ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

    தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அதன் பிறகு ரஜினிகாந்த்தின் ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கினார்.

    மெட்ராஸ் படத்தில் வடசென்னையில் சிறு சிறு தாதாக்களின் அட்டகாசத்துடன் தலித் மக்களின் வாழ்க்கையையும் எடுத்துக் காட்டினார். இதன் மூலம் இயக்குனர் ரஞ்சித் தலித் போராளியாக உருவெடுத்தார். மெட்ராஸ் படத்தின் கதை திருட்டு பிரச்சினையில் கூட ரஞ்சித்தை தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் காப்பாற்றினர்.

    தொடர்ந்து தலித் அரசியலை பேசிவரும் ரஞ்சித் சமீபகாலமாக தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்.

    ஒரு பட விழாவில் அவருக்கும் இயக்குனர் அமீருக்கும் மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.

    நீட் தேர்வால் அனிதா மரணம் முதல் சமீபத்திய சாதிச்சுவர் விவகாரம் வரை தலித்களுக்காக குரல் கொடுத்துவருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ரஞ்சித் 2 நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ரஞ்சித் சந்திப்பு பற்றிய குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது.

    யார் மூலமாக ராகுலை ரஞ்சித் சந்தித்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் விவாதமே ஏற்பட்டுள்ளது. அவர்கள் டெல்லியில் இதுபற்றி விசாரித்தபோது குஜராத் சட்டபேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிதான் ராகுல் காந்தியை சந்திக்க ரஞ்சித்துக்கு நேரம் வாங்கிக் கொடுத்தார் என்று தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது ’ஜிக்னேஷ் மேவானி கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் கூட்டணியில் அவரும் எம்.எல்.ஏ. ஆனார்.

    அவர் தேர்தலில் ஜெயித்த போதே அவருக்கு ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தார். பிறகு சென்னைக்கு ஜிக்னேஷ் மேவானியை அழைத்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.



    ஜிக்னேஷை சந்தித்த போதே தலித் வாக்குகள் பற்றியும் தமிழ்நாட்டில் தலித் வாக்கு வங்கி எப்படி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர பயன்பட்டது என்பது பற்றியும் ரஞ்சித் அவரிடம் விவாதித்து இருக்கிறார்.

    இந்த நிலையில்தான் ஜிக்னேஷ் மேவானி மூலமாக ராகுல் காந்தியைச் சந்தித்து தமிழகத்தில் தலித் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்தது ஏன் என்பது பற்றி விளக்கி இருக்கிறார் ரஞ்சித்.

    ஏற்கனவே திருமாவளவன் எம்.பி.யாக இருந்த போது ராகுல் காந்தி அவரிடம் தமிழகத்தில் தலித் ஓட்டு வங்கி காங்கிரசை விட்டுப் போனது ஏன் என்று சுமார் இரண்டு மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதுபோல திருமாவளவனோடு பல முறை ராகுல்காந்தி ஆலோசித்து இருக்கிறார்.

    ஜிக்னேஷ் மேவானியோடும் இதுபற்றி ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தமிழகத்தில் ரஞ்சித் என்பவர் இருக்கிறார். அவரிடம் இதுபற்றிப் பேசுங்கள் என்று யோசனை சொல்லியிருக்கிறார் மேவானி. இதையடுத்து ராகுல் காந்தி ‘அவரை வரச் சொல்லுங்கள்’ என்று மேவானியிடம் சொல்ல, அதன் பிறகே ரஞ்சித்திடம் தகவல் தெரிவித்து அவரை ராகுல் காந்தியிடம் அழைத்துச் சென்றுள்ளார் மேவானி’ என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். #Congrees #Ranjith #RahulGandhi
    காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நானா படேகர், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹீரோ என்று புகழ்கின்றனர். #Kaala #NanaPatekar
    காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர்.

    சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன.

    ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.



    முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர். #Kaala #NanaPatekar

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

    படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 



    அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

    இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காலா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் படத்திற்கு ஆதரவு பெருகியிருக்கிறது. #Kaala #Rajinikanth
    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது.

    ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார்.

    ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் வெளியாகும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

    சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அதிகமான போராட்டக் காட்சிகள் இருப்பதாக செய்தி வந்தது பரபரப்பை கூட்டியது.

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.



    தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாத அம்பேத்கர் சிலை, புத்தர் மண்டபம் என்று ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடுகளை பல இடங்களில் வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான அடித்தட்டு மக்களின் நில உரிமையை ரஜினியை வைத்து பேசி இருக்கிறார்.

    எனவே எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வழக்கமான ரஜினி படங்களை காட்டிலும் இது குறைவு தான்.

    எனினும், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. 

    இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.

    ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

    ரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.



    ‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.

    இந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `காலா' படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கும் வத்திக்குச்சி திலீபன், படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். #Kaala #Rajinikanth #Dileepan
    வத்திக்குச்சி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து இருக்கிறார். படம் குறித்து திலீபன் பேசும் போது, 

    வத்திக்குச்சி படத்துக்குபின் குத்தூசி என்ற படத்தில் நடித்தேன். அது இயற்கை விவசாயம் பற்றிய வணிக ரீதியான படம். அது விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து படம் பண்ணபோவதாக செய்தி வந்ததும் சென்று சந்தித்தேன். வாய்ப்பு கேட்டேன். ரஞ்சித் இருக்கிறது. ஆனால் உறுதி அளிக்க முடியாதே என்று கூறிவிட்டு உடலை ஏற்ற முடியுமா? என்று கேட்டார். ஏற்ற வேண்டும் என்றார்கள். பின்னர் தேர்வின்போது ஒரு டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். ரஞ்சித் நிறைய உதவி செய்து என்னை பேச வைத்தார். கதாபாத்திரத்துக்கான பயிற்சி நடக்கும்போது தான் நான் ரஜினி சாருக்கு மகனாக நடிப்பது தெரிய வந்தது. இன்ப அதிர்ச்சி ஆனேன்.



    போட்டோஷூட்டிலேயே பார்த்துவிட்டேன். அப்போதே சின்னதாக சிரித்து நம்மை நெருக்கமாக்கினார். முதல் காட்சியில் நடிக்கும்போது தான் மிகவும் பதட்டமானேன். ஆனால் நம் பதட்டத்தை அவர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். நம்மிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்து பதட்டத்தை தணித்து நடிக்க உதவி செய்தார். ரஞ்சித்தும் மிகவும் கூல் டைப். நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் மிக பொறுமையாக கேட்டு அவருக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்.

    ரஜினியை பார்த்து வியந்த சம்பவம் ஏதாவது?

    அவரை ஒரு நடிகராக மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொழில்பக்தி என்னை வியக்க வைத்தது. 7 மணி படப்பிடிப்புக்கு 6.45 க்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதேபோல் ஒரு வரி வசனமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பார். அவரை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் முதல் படம்தான். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருப்பது யாராலும் முடியாத ஒரு வி‌ஷயம். அந்த தொழிலில் பக்தி இருந்தால் நாம் எந்த தொழிலும் வெற்றி பெறலாம் என்பதை புரிந்துகொண்டேன்.



    தாராவி மக்களின் வாழ்வியலை பேசும் படமாக இருக்கும். காலாவின் கதாபாத்திர படைப்பு வேற லெவலில் இருக்கும். ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்தும். ரஞ்சித் ரசிகர்களையும் சேர்த்தே திருப்திபடுத்தும். #Kaala #Rajinikanth #Dileepan

    ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் காலா படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

    காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தில் திரவியம் நாடாரை தவறாக காட்டியிருப்பதாகவும், அவர் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ரஜினிகாந்த்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. 



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்தை பார்க்காமலேயே அதில் தவறாக சித்தரித்திருப்பதாக எப்படி கூற முடியும் என்று கேட்ட நீதிபதிகள், படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில், சென்னையின் இரண்டு பிரபல திரையரங்குகளில் காலா ரிலீசாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படம் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



    இந்த 2 திரையரங்குகளில் படம் வெளியாகாதது குறித்து சில வதந்திகள் வெளியான நிலையில், வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    கர்நாடகாவில் காலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி, படத்தை வெளியிட அனுமதி கிடைத்துள்ள நிலையில், காலா படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசிய போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. 

    காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். 



    இதையடுத்து, காலா படத்தை, கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth

    ரஜினியின் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajini #Dhanush
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். 

    காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 



    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    ×