search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97548"

    • சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. நேற்று முதல் வருகிற 10-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பீட் எண் 4 தாணிப்பாறை பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் நேற்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.

    பிரதோஷத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்கள் நலன் கருதி அனுமதி இல்லை எனஅறிவிப்பு செய்ததோடு, அனுமதி இல்லாததால் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லுமாறு வனத்துறையினர் கூறினர்.

    இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு. 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புரட்டாசி மாதம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பீட் எண் 4, தாணிப்பாறை பகுதியில் உள்ள வல்லாளம்பாறை கூடாரம், இட்லி பாறை ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தீப்பற்றி எரிந்து வந்தது. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்நிலையில், நேற்று காலை குரங்கு பாறையிலும் பற்றி எரிந்த தீயையும் வனத்துறையினர் அனைத்தனர்.தீயின் காரணமாக இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

    இந்த நிலையில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் இன்று முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் தீ பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்லக்கூடாது எனவும், தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட்டு சமையல் செய்ய அனுமதி கிடையாது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள், மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நவராத்திரி விழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.

    சதுரகிரியில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. இதற்காக வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. விழா நாட்களில் பக்தர்கள் ஆனந்தவள்ளி அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    அப்போது, காட்டுத்தீ காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழாவை நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மலையின் மீது யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கு சென்றவர்கள் மாலை 6 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும். வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட்டு சமையல் செய்ய அனுமதி கிடையாது. இதையும் மீறி அனுமதி இன்றி வனப் பகுதிக்குள் செல்பவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5-ந்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி.
    • 4-ந்தேதி ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

    சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, தை அமாவாசை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று காலை 5 மணிக்கு காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 4-ந் தேதியன்று இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடைபெற உள்ளது.

    5-ந்தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    • இன்று முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி.
    • தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

    மழைபெய்யும் நாட்களில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்தநிலையில், புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதனால் 13 நாட்களுக்கு நாள்தோறும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சதுரகிரியில் சாமி தரிசனம் செய்யலாம்.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது.

    கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்யும் நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடர்ச்சியாக 13 நாட்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிப்பு.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு ஒரு மாதத்தில் தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத பவுர்ணமி வரும் 10-ந்தேதி வருகிறது.

    மேலும் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (8.09.2022) முதல் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கோவிலுக்கு மாதத்தில் 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
    • கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை .

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமி 10-ந்தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை (8-ந்தேதி) முன்னிட்டும் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 நாட்களில் மலைப்பகுதிகளில் மழை அறிகுறியோ, நீர்வரத்துகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மலை ஏறிச்சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி.
    • பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு தடை விதித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்குவது வழக்கம்.

    நேற்று பிரதோஷம் ஆகும். இதனால் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்தனர். ஆனால் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதாலும் வருகிற 12-ந் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அனுமதி ரத்து என்பது தெரியாமல் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இருப்பதால் அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனுமதி வழங்காததால் எண்ணற்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்தநிலையில் பக்தர்கள் இன்றி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    • சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் அடிவாரத்தில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீர் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள சங்கிலிபாறை, வழுக்குப்பாறை, மாங்கனிஓடை, பிளாவடி கருப்பணசாமி பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த முறை பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆடிஅமாவாசை அன்று சதுரகிரிக்கு வர இயலாத பக்தர்கள் ஆடி பவுர்ணமி நாளில் வருவது உண்டு. ஆனால் தொடர் மழை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அறியாமல் இன்று சதுரகிரி அடிவாரத்துக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கோவிலில் 11-ந் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
    • வருகிற 12-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல வருகிற 11-ந் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம். இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் வரத்து இருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    எனவே பக்தர்கள் யாரும் அனுமதி ரத்து செய்யப்பட்ட நாட்களில் மலை அடிவார பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.
    • பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமா வாசை பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா குறைந்ததையடுத்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த 25-ந்தேதி முதல் இன்று (30-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், குழந்தைகள் என 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

    கடந்த 27-ந்தேதி முதல் சதுரகிரி மலை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் மலை பாதைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மீட்டனர். மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் சதுகிரிக்கு மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.

    அடிவாரத்தில் குவிந்திருந்த பக்தர்களின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டு தாணிப்பாறை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    ×