search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97567"

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 700 மாடல் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. #XUV700



    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 கார் வை400 என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 இந்தியாவில் நவம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அல்டுராஸ் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. வெளியான பின் மஹிந்திரா வை400 ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    சங்யாங் ரெக்ஸ்டன் மாடலை தழுவி உருவாகும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடலில் சர்வதேச வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. 18-இன்ச் ஐந்து ஸ்போக் அலாய் வீல்கள், முன்பக்கம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் க்ரோம் அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Drivespark.Com

    காரின் பின்புறம் மேல்பக்கம் சிறிய ஸ்பாயிலர், பம்ப்பர்களில் க்ரோம் மற்றும் ஃபைபர் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் டெயில்கேட் பவர்-ஆப்பரேட் வசதி கொண்டிருக்கிறது. மூன்றாம் அடுக்கு இருக்கைகளை மடித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் 9.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகள், ஸ்டீரிங் வீலில் லோகோ இடம்பெற்றிருக்கிறது. எனினும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 ஸ்பை படங்களின் படி உள்புறத்தில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடலில் 2.2 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 184 பி.ஹெச்.பி. பவர், 420 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இது இரண்டு மற்றும் நான்கு சக்கரங்களில் இயங்கும் வசதியுடன் கிடைக்கும். #XUV700
    மஹிந்திராவின் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #jawamotorcycles



    மஹிந்திரா நிறுவனத்தின் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மீண்டும் இந்தியா வருயிருக்கிறது. நவம்பர் 15ம் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் சோதனை நடைபெறுகிறது.

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜாவா மோட்டார்சைக்கிள் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய மோட்டார்சைக்கிள் பார்க்க பழைய காலத்து வடிவமைப்பை கொண்டிருக்கிறது. வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், ஸ்போக் வீல்கள், டியர்டிராப் ஃபியூயல் டேன்க், டூயல் எக்சாஸ்ட் மற்றும் ஒற்றை சீட் கொண்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Rushlane | Kiran P Menon

    ஃபியூயல் டேன்க், முன்பக்க ஃபென்டர், பக்கவாட்டு மற்றும் பின்புற மட்கார்டு உள்ளிட்டவற்றில் ஜாவா பிரான்டிங் மறைக்கப்பட்டுள்ளது. புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் 293சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய 293சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின்களில் ஃபாக்ஸ் கூலிங் ஃபின்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஃபியூயல் இன்ஜெக்ஷன் மற்றும் பி.எஸ். VI எமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் அதிக செயல்திறன் கொண்டு தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
    இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ கார் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Marazzo



    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அறிமுகமான ஒரே மாதத்திற்குள் மஹிந்திரா மராசோ சுமார் 10,000-க்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

    இந்தியாவில் M2, M4, M6 மற்றும் M8 என நான்கு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மராசோவின் முழு வடிவமைப்பு சுறாவை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. 

    பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.



    இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.

    ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ காரில் விரைவில் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #MahindraMarazzo
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கும் மராசோ காரில் பி.எஸ்.-VI எமிஷன் அமலானதும் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    தற்சமயம் மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மேக்னெட்டி மரெல்லியுடன் இணைந்து புதிய AMT கியர்பாக்ஸ் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் இன்ஜினுடன் AMT கியர்பாக்ஸ் வழங்கலாம் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் மராசோ பெட்ரோல் வேரியன்ட் மாடல் அறிமுகம் செய்வதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது.



    புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.

    பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.



    ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப்-என்ட் மாடல்களில் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள் மற்று் கேமரா, கார்னரிங் லேம்ப்கள் மற்றும் எமெர்ஜென்சி கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MahindraMarazzo
    கேரளா வெள்ள பாதிப்பின் போது பொது மக்களுக்கு உதவிய மீனவருக்கு மஹிந்திரா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. #Marazzo



    இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.

    இயற்கை சீற்றத்தால் மாநிலமே சீரழிந்த போதும், மனம் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்தனர். அவ்வாறு உதவ வந்தவர்களில் ஒருவர் தான் ஜெய்சல் கே.பி. இதேபோன்று ஏராளமான மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினர்.



    இவர்கள் சேவையை பாராட்டி மாநில அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கினார்.

    மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார்கள். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர். 

    இதை பார்த்த ஜெய்சால் என்ற மீனவர் வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்ததும் அந்த மீனவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.



    இந்த நிலையில் மீனவர் ஜெய்சாலின் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் ஜெய்சலுக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவரிடம் வழங்கினார்.

    இதுபற்றி மீனவர் ஜெய்சால் கூறும்போது நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.

    மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் மராசோ கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எனும் துவக்க விலையில் கிடைக்கும் மராசோ தற்சமயம் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மஹிந்திரா மோஜோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். #motorcycle



    மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ மோட்டார்சைக்கிள் அக்டோபர் 2015-இல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதன் விற்பனை மந்தமாக முக்கிய காரணம் மஹிந்திரா நிர்ணயம் செய்த விலை தான் என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மோஜோ UT 300 மாடலை மஹிந்திரா வெளியிட்டது.

    புதிய மோஜோ மாடலும் விற்பனையில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தராத நிலையில், மஹிந்திரா புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மோஜோ மோட்டார்சைக்கிளின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட உள்ளது. சமீபத்தில் மஹிந்திரா மோஜோ எலெக்ட்ரிக் மாடலின் ப்ரோடோடைப் பெங்களூரு அருகே சோதனை செய்யப்பட்டது.



    வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லாத நிலையில், எலெக்ட்ரிக் வெர்ஷன் பார்க்க வழக்கமான மோஜோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் கியர் லிவர் மற்றும் கூடுதலான பேனல்கள் இல்லாதது வித்தியாசமாக உள்ளது. இதில் உள்ள பெரிய ஸ்ப்ராக்கெட் மற்றும் பெல்ட் டிரைவ் போன்றவை வழக்கமான செயின் டிரைவுக்கு மாற்றாக அமைந்துள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிளின் மோட்டார் மற்றும் பேட்டரி சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. மஹிந்திரா மோஜோ XT 300 ஃபியூயல் இன்ஜெக்டெட் மோட்டார் 27 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 30 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. மோஜோ UT 300 மாடலின் கார்புரேட்டெட் இன்ஜின் 23.1 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 25.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    புகைப்படம் நன்றி: Cartoq
    கட்டிலில் இருந்து கீழே இறங்கி விளையாட கால் உயரம் எட்டாத நிலையில், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தை செய்த அசாத்திய காரியத்தை கண்டு வியந்த பிரபல தொழிலதிபர் அந்த குழந்தைக்கு வேலைவாய்ப்பை இப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.
    ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பல நேரங்களில் அதிகமாக வதந்திகள் பரவினாலும், சில வேளைகளில் வியத்தகு சம்பவங்களும் பதிவிடப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ நமது பார்வையை தற்போது கவர்ந்துள்ளது.

    யாரும் இல்லாத தனி அறையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் சுமார் ஒரு வயது குழந்தை கீழே இறங்கி விளையாட நினைக்கிறது. இதற்காக கட்டிலில் இருந்து காலை வெளியே நீட்டி இறங்க முயற்சிக்கையில், அந்த பிஞ்சு பாதம் தரையை தொட முடியாமல் தவிக்கிறது.



    ஒரு காரியத்தை அடைய நமது உடல் அமைப்புகள் ஒத்து வராத போது அதற்கு ஏற்ப இட்டுக்கட்டி நினைத்ததை முடித்துக் கொள்ள பெரியவர்களாகிய நாம் சில நேரங்களில் சரியான முடிவெடுக்க தெரியாமல் திணறுவதுண்டு. ஆனால் இந்தச் சுட்டிக் குட்டியின் மூளை சில வினாடிகளில் மின்னல் வேகத்தில் செயலாற்றியது.

    கட்டில் மற்றும் தரைக்கான இடைவெளியை குறைக்க அங்கிருந்த தலையணைகளை தனது பலம் கொண்டு மட்டும் இழுத்து கீழே போட்ட அந்த குழந்தை தனது விளையாட்டுத் தோழனான பொம்மையையும் சேகரித்துக் கொண்டு அடிப்படாமல் கட்டிலில் இருந்து தலையணையின் மேல் விழும் வீடியோ காட்சி தான் நம்மை கவர்ந்தது. இந்த வீடியோ நிச்சயம் உங்களையும் கவரும்.



    ஏனெனில் இந்த வீடியோ கண்டு வியப்படைந்து போன மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா, "இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்தால், அதற்கு எங்கள் நிறுவனத்தில் நிச்சயமாக நல்ல வேலை காத்திருக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போதே உறுதிமொழி அளித்துள்ளார்.

    ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    ×