search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • வைகாசி விசாகம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • மாம்பழத்தை வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சுமரில் அஞ்சேலென வேல் தோன்றும்-நெஞ்சில்

    ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்

    முருகா என்றோதுவோர் முன்.

    -திருமுறை

    ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.

    வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனி ரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டால் பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். 'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகன். சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்ப சிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    விசாகம் தினமான இன்று செய்யுங்கள். முருகன் அருள் நிரம்ப கிடைக்கும்.

    • சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம்.
    • இன்று உபவாசம் இருந்து சிவபெருமானை மனதார வழிபட வேண்டும்.

    குருவிற்கு உகந்த நாளான வியாழக் கிழமையில் வருகிற பிரதோஷம் என்பதால் குருவார பிரதோஷம் என்று கூறப்படுகிறது. சிறந்த பலன்களைப் பெற சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். இந்த நாளில் இறைவனை வழிபாடு செய்ய சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். "அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று" என்கிறார் மாணிக்கவாசகர். அதில் வைகாசியில் வருகிற, இந்த குருவார பிரதோஷத்தில் இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றியை அடைவீர்கள். திருமண தடை ஏற்படுபவர்கள் குருவார பிரதோஷமான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

    மகா பிரதோஷ வமர்ச்சயத என்றபடி திரயோதசி மாலையில் நிகழும் மகா பிரதோஷ காலத்தில் ஒவ்வொருவரும் சிவனை தரிசித்து மந்திரம் சொல்லி வணங்க வேண்டும்.

    இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவபெருமானை மனதார வழிபட வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்களை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இன்று மாலை வீட்டில் அம்பிகையுடன் கூடிய பரமேஸ்வரசாம்ப பரமேஸ்வரராக முறையாக பூஜை செய்து பஞ்சாட்சர மந்திரம் சொல்லி சிவாலயம் சென்று தம்பதிகளாக சிவனை தரிசனம் செய்ய வேண்டும். இதனால் தேவையான சமயத்தில் தேவையான எண்ணங்கள், தீர்வுகள் மனதில் தோன்றி நல்லவை நடக்கும்.

    இன்று கவாமயன துவாதசி

    வைகாசி மாத சுக்லபட்ச துவாதசி அன்று காலையில் திரி விக்ரம் மூர்த்தியான ஸ்ரீ மகாவிஷ்ணுவை துளசி, மல்லிகை பூ ஆகியவற்றால் சகஸ்ர நாமார்ச்சனை செய்து மாம்பழம் நிவேதனம் செய்து பூஜை செய்து ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். திரிவிக்ரம் மூர்த்தியை வணங்குவதால் யாகங்களில் சிறந்த தான கவாமயனம் என்னும் யாகம் செய்த பலன் சுலபமாக கிடைக்கும். அத்துடன் அனைத்து சுகமும் கிடைக்கும்.

    • ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன.
    • வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.

    ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

    இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

    நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.

    நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.

    • மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான்.

    துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான். மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர். சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்துவிட்டான்.

    சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன். தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார். முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான். ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவுபதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார். முடிவாக சகுனி, உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்று தூண்டினான். அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார்.

    துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான். திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டியிருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனிடம் கட்டளையிட்டான். அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான்.

    துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.

    திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை என ஓலமிட்டாள். அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பீஷ்மப் பிதாமகன் போன்றவர்கள் குறுக்கிட்டு திருதராஷ்டிரனிடம் பாண்டவர், சூதாட்டத்தில் இழந்த நாட்டை அவர்களிடம் ஒப்படைப்பமே முறை என நல்லுரை கூறினார்கள். ஆனால் பிடிவாதமாக மறுத்த துரியோதனன், முடிவாக பாண்டவர்கள் பதினான்கு ஆண்டுகள் ஆரண்யவாசமும், 21 வருடம் அக்ஞாத வாசமும் (அதாவது யாரும் அறியாமல் மறைந்து வாழ்வது) போய்விட்டு திரும்பினால் அவர்களுக்குரிய பங்கை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டான்.

    • பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்! என நின்று யோசித்தாள்.
    • பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். கண்ணா, சீக்கிரம் வா! என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான்.

    பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்! என நின்று யோசித்தாள். அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான் என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    • ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.

    கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    • நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில் விரதம் இருக்க வேண்டும்.
    • பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

    தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

    மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள். பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

    • வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர்.
    • அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.

    வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர். கலி தோஷத்தால் ஏற்படும் பாபங்களையும் துன்பங்களையும் போக்கும் சக்தி ஏகாதசி உபவாசத்துக்கு உண்டு. ஆகவே தான் 8 வயது முதல் 80 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் ஏகாதசியன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.

    பஞ்சபாண்டவர்களுக்குள் பீமன் மிகவும் பலம் பொருந்தியவர். அதற்குத் தக்க பலமான ஆகாரம் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர். ஒரு சமயம் பீமன் வேதவ்யாஸ் மகரிஷியிடம் சென்று 'எனது வீட்டில் சகோதரர்களும், தாயாரும், மனைவியும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் என்னையும் அனுஷ்டிக்குமாறு கூறுகின்றார்கள். எனக்கும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் என்னால் உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது என்பது இயலாத காரியம் என்ன செய்வது? என்று கேட்டார் பீமன்.

    ஸ்ரீவேதவியாசரும் சிரித்துக்கொண்டே, பீமா! உன்னால் ஆண்டு முழுவதும் வரும் 25 ஏகாதசியிலும் உபவாசம் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனி மாத சுக்லபட்ச (நிர்ஜலா) ஏகாதசியன்று மட்டும் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் இரு. அதுவே ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலனை உனக்குத்தரும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதை பீமனிடம் கூறினார்.

    பீமனும் அவ்வாறே நிர்ஜல ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருந்து துவாதசியன்று சாப்பிட்டார். அது முதல் இந்த நாளுக்கு பீம ஏகாதசி என்றும், நிர்ஜல ஏகாதசி என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே நாளை எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஓரு வருடம் முழுவதும் ஏகாதசியன்று உபவாசம் இருந்த பலன் கிட்டும். அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
    • வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்.

    திங்கட்கிழமை

    திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் சிவனை வேண்டி பிரதோஷ விரதம் இருப்பது மிகுந்த நன்மையை தரும். சோமவாரம் விரதம் இருந்து , ஈசனுக்கு பால் , அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது மிகவும் சிறந்தது என ஆன்மிகப் பெரியவர்கள் கூறியுள்ளனர்.

    செவ்வாய் கிழமை

    செவ்வாய் கிழமை என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது துர்க்கை அம்மனும் , ராகு காலத்தில் ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கும் தான். அந்த அளவிற்கு செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் , இல்லத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். அன்று முருகனுக்கும் உகந்த நாள். அன்றைய தினம் முருகப்பெருமானை வணங்கி கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் பொல்லாதவரை பொடிப்பொடியாக்கும்.

    புதன்கிழமை

    புதன் கிழமை ஆனைமுகத்தனை வணங்க ஏற்ற நாளாகும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட , எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.

    வியாழன் கிழமை

    வியாழன் கிழமைகளில் விஷ்ணு , தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு விரதம் இருப்பது நன்மையை தரவல்லது. அன்று குபேரனுக்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். மேலும் செல்வத்தை வாரி வழங்குபவளான திருமகளை வணங்கவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காக்கும்.

    சனிக்கிழமை

    நவகிரகங்களில் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றவல்ல சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. ஆஞ்சநேயர் , பெருமாள் , மற்றும் காளி தேவிக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. சனிக்கிழமை அன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் ஜாதக ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் சனி தோஷத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    நவகிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சூரிய பகவானுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் , எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு, நம்முடைய வாழ்க்கையும் அந்த சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும்...

    • சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன.
    • ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

    இந்து புராணங்களின்படி சிவபெருமானே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.

    சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் சிவபெருமான், ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

    சிவனருள் பெற விரும்புவோர் எட்டு விதமான விரதங்களை மேற்கொண்டு நன்மை பெறலாம்.

    1. சோமவார விரதம் – வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இருப்பது

    2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியன்று (திருக்கார்த்திகை) இருப்பது

    3. திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது

    4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வருவது

    5. கல்யாண விரதம் – பங்குனி உத்திர நாளில் கடைபிடிப்பது

    6. பாசுபத விரதம் – தைப்பூசத்தன்று மேற்கொள்ளும் விரதம்

    7. அஷ்டமி விரதம் – வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று அனுஷ்டிப்பது.

    8. கேதாரகவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி அல்லது அதன் மறுநாள்) இருப்பது...

    • வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம்"ரிஷப விரதம்" ஆகும்.
    • இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.

    சிவபெருமானை வணங்கும் "ரிஷப விரதம்" குறித்தும், அவ்விரதத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

    ரிஷப விரதம் என்பது சிவபெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் அணுக்க தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும்.

    வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது. ரிஷப விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்ததும் மனதிற்குள் நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும். பின்பு குளித்து முடித்ததும், உணவு ஏதும் உண்ணாமல் உங்களிடம் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷபாரூடர் விக்ரகம் இருந்தால், உங்கள் பூஜையறையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, சிவனுக்கு பிடித்த அரிசி கொண்டு செய்யபட்ட அன்னங்கள் மற்றும் பாயசத்தை நைவேத்தியமாக வைத்து சிவமந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்.

    வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.

    இந்த விரதம் கடைப்பிடித்தால் வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

    இந்த விரதத்தினால் வாகனயோகம் அடையலாம். புதிய வாகனம் வாங்குவோர் அல்லது பதிவு செய்வோர்க்கு நற்பலன் உண்டு. ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது.

    இத்தினத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டாகும். பின்பு உங்களால் முடிந்த அளவிற்கு அக்கோயில்களில் சிவனடியார்களுக்கும், இன்ன பிற பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து அந்த பக்தர்களுடன் சேர்ந்து நீங்களும் பிரசாதங்களை சாப்பிட வேண்டும். பிறகு சிவ சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பி, சிவனை வழிபட்டு இரவு உணவாக பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    ரிஷப விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும், அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும், சிவயோகி ஆகவும் கூடும். அஷ்டதிக் பாலகர்கள், கருட பகவான் போன்றோர்கள் இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டித்து சிவனிடம் பல வரங்களை பெற்றனர்.

    • இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள்.
    • முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள்.

    மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

    சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

    சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

    வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

    இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!

    ×