search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97736"

    பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர் விடுமுறை காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஒகேனக்கல்:

    தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுகு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் படையெடுத்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மக்கள் வீட்டில் இறைச்சிகள் எடுத்து சமையல் செய்து குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சென்று குளித்து விட்டு உணவுகளை சாப்பிட்டனர்.

    மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கார், டெம்போ, பஸ், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு திக்குமுக்காடினர்.

    கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. அதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை வந்தடைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக வந்தது. இதனால் மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டது. ஒகேனக்கல் மெயின் அருவி நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    நேற்று காலை வினாடிக்கு 21,700 கனஅடியாக குறைந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று மதியம் தடை நீக்கப்பட்டது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் சவாரி சென்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொங்குபாலத்தில் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 14 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்த நீர்வத்து இன்று 12,200 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    தருமபுரி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டரம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று காலை 6,400 கன அடியாக இருந்த நீர்வரத்து மழையின் காரணமாக படிபடியாக அதிகரித்து நேற்று மாலை 14 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 12 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது.

    நேற்று மதியம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் திடீரென்று ஒகேனக்கல்லுக்கு வந்து ஆய்வு செய்தனர். 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தபோது மெயின் அருவி, காவிரி கரையோர பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்தது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஒகேனக்கல் பகுதிகளில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களிலும், நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆலோசனை நடத்தினர். #Hogenakkal

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம் பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 6,200 கன அடியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம் பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். #Hogenakkal

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,200 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    மெயின் அருவி, சினி சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குளித்து விட்டு சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 12,500 கனஅடியாக இருந்தது.

    தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று சற்று சரிந்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலத்திலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று சற்று சரிந்து நீர்வரத்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கடந்த சில நாட்களாகவே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.

    நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விடுமுறை நாளான நேற்றும், நேற்று முன்தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று மகாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க வந்தவர்களும் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளும், காவிரி ஆற்றிலும் குளித்தனர்.

    வழக்கமாக ஒகேனக்கல்லில் மீன் விற்பனை அதிகமாக இருக்கும். இன்று பூக்கள் மற்றும் தேங்காய், பழம் விற்பனை அதிகமாக இருந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7 கனஅடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லில் மீன் விற்பனை குறைந்தது.
    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இதனால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  #Hogenakkal #Cauvery
    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணல் பகுதியில் அணை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் நாளை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ராசி மணல் பகுதியில் அணை கட்ட காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அணை கட்ட யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் நாளை ஒகேனக்கல்லில் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டத்திற்கு சின்னசாமி தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடங்கி வைக்கிறார். நாளை மாலையில் இந்த உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன் முடித்து வைக்கிறார்.

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழி யாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ×