search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97736"

    ஒகேனக்கல் மெயின் அருவியில் நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்து காணப்பட்டதால் தொடர்ந்து 98 நாட்களுக்கு பிறகு இன்று குளிக்க தடை விலக்கப்பட்டது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் போன்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    வெள்ளப்பெருக்கின்போது மெயின் அருவியில் உள்ள தடுப்பு கம்பிகள் சிதலமடைந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தபோதும் மெயினருவியில் தடுப்பு சரிசெய்யாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டது. தடுப்பு கம்பிகளை சீரமைத்து மெயின் அருவியில் விரைவில் குளிக்க தடை விலக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மெயின் அருவியில் எண்ணெய் மசாஜ் தொழிலாளர்களை கொண்டு மணல் மூட்டைகளை அடுக்கி அருவிக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தடுப்பு கம்பிகளை சீரமைக்கும் பணியினை செய்துமுடித்தனர். மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க ஆவலாக காத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயினருவியில் சீரமைப்பு பணி முடிந்தும் குளிக்க தடை நீடிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் தவித்தனர். இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்து காணப்பட்டதால் தொடர்ந்து 98 நாட்களுக்கு பிறகு இன்று குளிக்க தடையை மாவட்ட நிர்வாகம் சார்பில் விலக்கப்பட்டது. மேலும், தடுப்பு கம்பிகளை சீரமைக்கப்பட்டு இன்று மெயின் அருவியை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு விடுமுறையொட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மெயினருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், துணை தாசில்தார் சிவக்குமார், பென்னாகரம் ஆர்.ஐ. சிவன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இன்றும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    97-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா வந்த பயணிகள் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு சென்றனர்.

    ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 90 வயது மூதாட்டியை உறவினர்கள் விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒகேனக்கல்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 90). இவர் வீட்டில் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி ஒரு ஆட்டோவில் இவரை பேரன் சிவராஜ், அவரது மனைவி உஷா ஆகியோர் பென்னாகரத்தை அடுத்த நல்லாம்பட்டிக்கு அழைத்து வந்தனர். ஆனால் கட்டு போடாமால் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.

    கடந்த 10 நாட்களாக அங்கு தவித்து வரும் மூதாட்டி வெங்கட்டம்மாளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் உணவு வாங்கி கொடுக்கிறார்கள்.

    இந்த மூதாட்டி குறித்து ஒகேனக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அந்த மூதாட்டியை அவர்கள் அழைத்து செல்லாவிட்டால் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து மூதாட்டி வெங்கட்டம்மாள் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு எனது 2 மகன்களும் இறந்தனர். இதனால் எனது மகள் முனிரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கு 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி என்னை பேரனும், பேத்தியும் அழைத்து வந்து ஒகேனக்கல்லில் விட்டு சென்றுவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது.

    தற்போது தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை முழ்கடித்து தண்ணீர் சென்றது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்வரத்து அதிகரித்ததால் சீரமைக்கப்பட்ட மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் மெயினருவியில் குளிக்க மாவட்ட சார்பில் 95-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Hogenakkal
    மேட்டூர்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 26 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்றனர்.

    ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 241 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் கூடுதலாக வரும் தண்ணீர் இன்று மாலை மேட்டூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 2 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 104.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 104.41 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.  #Hogenakkal
    ஒகேனக்கல்லில் சென்னை சுற்றுலா பயணிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 40), ரத்னபிரகாஷ் (39), ராகுல் (32) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் டிராவல்ஸ் வேனில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலாவுக்கு வந்தனர்.

    நேற்று காலை அங்குள்ள ஆற்றில் குளித்து விட்டு பரிசலில் செல்வதற்காக அங்குள்ள பரிசல் கவுண்டருக்கு முருகேசன் சென்றார். அப்போது அங்கு 15 பேருக்கு டிக்கெட் வாங்கிய அவர் தங்களுக்கு 3 பரிசல் போதும், அதில் சென்று வருகிறோம் என்றார். ஆனால் பரிசல் ஓட்டிகளும், அங்கிருந்த ஊர்காவல் படை வீரர்களும் ஒரு பரிசலில் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றனர்.

    ஒரு பரிசல் 4 பேருக்கு மேல் அனுதிக்க முடியாது. இதனால் பரிசலில் செல்லும் உங்களுக்கு சரியான பாதுகாப்பு இருக்காது. எனவே, 4 பரிசல்களில் சென்று வாருங்கள் என பரிசல் டிக்கெட் கவுண்டரில் இருந்தவர்கள் கூறினர். அப்போது முருகேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரி முருகேசனிடம், மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள். உங்களின் பாதுகாப்பு கருதி தான் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்.

    நீங்கள் நினைப்பதுபோல் பரிசலில் செல்ல முடியாது என எச்சரித்தார். அப்போது முருகேசன் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் மாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இதனால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறி தாக்கினர். அவர்கள் அங்கிருந்து செல்லாததால் முருகேசன் உள்ளிட்ட 15 பேரையும், ஒகேனக்கல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது முருகேசனும், அவருடன் வந்தவர்களும் கதறிஅழுதனர். இதையடுத்து அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிவிட்டு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் சிலர் வீடியோ பிடித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினர். சுற்றுலா பயணிகளை போலீசார் தாக்கிய வீடியோ உடனே வைரலாக பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  #Hogenakkal
    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 23 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக மேலும் குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறம்பாளையம் போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதை மேல் தண்ணீர் சென்றது.

    நேற்று மழை குறைந்ததால் மாலை நீர்வரத்து படிப்படியாக குறைந்து 23 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக மேலும் குறைந்தது.

    நேற்று நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் சீரமைக்கப்பட்ட மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்று நீர்வரத்து குறைந்தும் மெயினருவியில் குளிக்க மாவட்ட சார்பில் மெயினருவியில் 94-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.


    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவியில் போடப்பட்ட மணல் மூட்டையை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் அணைகள் நிரம்பியது. இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரி உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டனர். இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடிக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தது.

    பின்னர் படிப்படியாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,400 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 6,500 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றில் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மெயின் அருவி மற்றும் சினிபால்சில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மெயின் அருவியில் மணல் மூட்டைகள் போட்டு மராமத்து பணிகள் முடிந்த நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்குவதாக இருந்தது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவியில் போடப்பட்ட மணல் மூட்டையை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே தொடர்ச்சியாக மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  #Hogenakkal



    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து குறைந்து 8 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. மெயின் அருவியில் 3 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து குறைந்து 8 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. வழக்கம்போல சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரம் குளித்து விட்டு செல்கிறார்கள்.

    மெயின் அருவியில் வெள்ளத்தின்போது ஏற்பட்ட சேதத்தால் பழுதடைந்த கம்பிகளை அகற்றிவிட்டு புதிய தடுப்பு கம்பிகளை அமைத்து உள்ளனர். இந்த கம்பிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இன்னும் 2 நாட்களில் இந்த பணி முடிவடையும். அதன் பிறகு மெயின் அருவிக்கு வரும் தண்ணீரை வேறு வழியாக திருப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் அகற்றப்படும். அதன் பிறகு மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். 3 நாட்களுக்குள் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மீன் மார்க்கெட் அருகே உள்ள கோத்திக்கல் பாறையில் இருந்து பயணிகளை பரிசலில் ஏற்றி செல்லும் பரிசல் தொழிலாளர்கள் கூட்டாறு, ஐந்தருவி வழியாக மெயின் அருவிக்கு பயணிகளை சுற்றி காண்பிக்கிறார்கள்.

    மேலும் கர்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் தற்போது மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த மீன்களை மீன்பிடி தொழிலாளர்கள் பிடித்து சமையல் தொழிலாளர்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு வறுத்து கொடுக்கிறார்கள். இந்த மீன்கள் சுவையுடன் இருப்பதாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார். #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது. இன்று வினாடிக்கு 8,600 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் அங்குள்ள அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

    இதனால் கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது. இன்று வினாடிக்கு 8,600 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் சினிபால்ஸ், புலியருவி, ஐந்தருவி, காவிரி ஆற்றில் கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் ஒகேனக்கல்லுக்கு அதிகமாக நீர்வரத்து வந்ததால் மெயின் அருவியில் கம்பிகள் சேதம் அடைந்தது. அந்த பகுதியில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து சற்று சரிந்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து சற்று சரிந்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்தபோது ஒகேனக்கல்லில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயிருனவியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகளை யாரும் குளிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் சினிபால்ஸ், காவிரி ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், சினிபால்ஸிலும் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் மெயினருவியில் மட்டும் குளிக்க இன்றும் 63-வது நாளாக தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை யாரையும் மெயினருவி பகுதியில் அனுமதிக்கவில்லை.

    மேலும், மெயினருவியில் உள்ள சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக மெயினருவி பகுதிகளில் வரும் நீர்வரத்தை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை முடித்த பிறகு மீண்டும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி துறை அதிகாரி தெரிவித்தனர்.

    இதுபோன்று கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்க தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரிசலில் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். வழக்கமான பாதையான மாமரத்துகடுவு பகுதியில் பரிசல் இயக்க இன்றும் அதிகாரிகள் தடைவிதித்து உள்ளனர். நீர்வரத்து மேலும் சரிந்து 5 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக வரும்போதுதான் வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

    நேற்று ஒகேனல்லுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    அதே போல கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1886 கனஅடியும், கபினி அணையில் இருந்து 1000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 57-வது நாளாக தடை நீடித்து வருகிறது. ஆனால் கோத்திக்கல் - மணல்திட்டு இடையே பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படவில்லை.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal #Cauvery

    ×