search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    கேரளாவில் தாயின் இரண்டாவது கணவரால் சரமாரியாக தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். #KeralaBoyDead
    கொச்சி:

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் தாய் இறந்து 10 மாதங்கள் ஆன நிலையில், 2 சிறுவர்கள் தாயின் இரண்டாவது கணவன் அருண் ஆனந்த்(36) உடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி, 4 வயது சிறுவன் அதிகாலையில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அருண், அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளான்.

    இதை தடுக்க அந்த சிறுவனின் அண்ணன் (வயது 7) முயற்சித்தான். இதையடுத்து ஆத்திரமடைந்த அருண், 7 வயது சிறுவனை அலமாரியில் மோதி, பின்னர் அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக் கொண்டு பலமாக தாக்கினான். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் காயங்கள்,  இரத்தப்போக்கு மற்றும் நுரையீரல் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 சிறுவர்களையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அருண் ஆனந்தை போலீசார்  கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்த சிறுவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த திங்கள் அன்று சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது. #KeralaBoyDead 

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியானது.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது. #LSpolls #Congress #RahulGandhi #Wayanad 
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #RahulGandhi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதியின் நாயகன்.

    அவர் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு 2004, 2009, 2014 என கடந்த 3 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிக்கனி பறித்து சுவைத்திருக்கிறார்.

    இந்த தேர்தலிலும் அவர் அங்கே வழக்கம் போல களம் இறங்கி இருக்கிறார். கூடவே தங்கை பிரியங்கா பக்க பலமாக நின்று கொண்டிருக்கிறார்.

    இந்த தொகுதி ராகுல் காந்தியின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    கடந்த 1980-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் ஏழாவது பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தி வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். அவர் விமான விபத்தில் இறந்து விடவே, அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

    அந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 8, 9, 10-வது பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று அந்த தொகுதியை தக்க வைத்திருந்தார்.

    1991-ம் ஆண்டு அவர் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் பலி ஆனார். அதைத் தொடர்ந்து அமேதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சதீஷ் சர்மா போட்டியிட்டு வென்றார். 1996-ல் நடந்த 11-வது பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

    1998-ல் நடந்த 12-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் டாக்டர் சஞ்சய்சிங் வெற்றி பெற்றார். சதீஷ் சர்மா தோற்றுப்போனார்.

    ஆனால் 1999-ல் நடந்த 13-வது பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி முதன்முதலாக அங்கு கால் பதித்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்து 2004-ல் நடந்த 14-வது பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி, தனது மாமியார் இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கு மாறி, அமேதியை மகன் ராகுலுக்கு விட்டுத்தந்தார்.

    அதில் இருந்து 2004, 2009, 2014 என தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ அடித்தார்.

    நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அவர் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு காங்கிரஸ் கட்சியில் வலுப்பெற்றுள்ளது.



    இதற்கு காரணம் அமேதி தொகுதியில் மீண்டும் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். வலுவான போட்டியை ராகுல் காந்தி எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. எனவே அவர் இந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில, அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடுவது பாதுகாப்பாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

    ஏனென்றால் அமேதியில் 2004 தேர்தலில் ராகுல் காந்திக்கு 66.18 சதவீத ஓட்டு கிடைத்தது; 2009 தேர்தலில் அதை விட அதிகமாக 71.78 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2014 தேர்தல், ராகுல் காந்திக்கு சோதனையாக அமைந்தது.

    அந்த தேர்தலில் ராகுலுக்கு கிடைத்த ஓட்டு 36.71 சதவீதம்தான். அவரை எதிர்த்து பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானிக்கு 34.38 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அப்போது நடிகை என்ற அந்தஸ்துதான் ஸ்மிருதி இரானிக்கு இருந்தது. இப்போது அவர் மத்திய மந்திரி என்கிறபோது அவரது செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது.

    அப்படிப்பட்ட நிலையில், அமேதியில் ராகுல் காந்தியின் வெற்றி எளிதாக இருக்காது. மிகக் கடுமையான போட்டியை அவர் எதிர்கொண்டாக வேண்டும்.

    இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக உள்ள கேரளாவில், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரசார் விரும்புகிறார்கள். இதை அவரும் பரிசீலிக்காமல் இல்லை.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்திக் என்பவர் களம் இறங்க இருந்தார். ராகுல் காந்தி போட்டியிடப்போகிறார் என்ற தகவல் வெளியானதும் அவர் விலகிக்கொண்டு வழி விட்டிருக்கிறார்.

    புதிதாக உருவான வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வேட்பாளர் ஷா நவாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். சமீபத்தில் ஷா நவாஸ் மரணம் அடைந்து விட்டபோதும், இந்த முறையும் இங்கு காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் ராகுல் காந்தி களம் இறங்கினால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

    இப்படி ராகுல், வயநாடு தொகுதியில் களம் இறங்கினால், அது தென் மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள சாதகமாக இருக்கும் என்று காங்கிரசார் கருதுகின்றனர்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரத் தர்ம ஜனசேனா போட்டியிட இருக்கிறது. ஒரு வேளை ராகுல் காந்தி களம் இறங்கினால், அந்த தொகுதியை பா.ஜனதா கட்சி எடுத்துக்கொண்டு, அந்தக் கட்சிக்கு வேறுதொகுதியை தர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

    ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய அளவில் பிரபலமான ஒருவரை களம் இறக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட பா.ஜனதா கட்சி, கட்சியின் மாநில தலைமையை வலியுறுத்தி உள்ளது.

    ஆனால் இந்த தொகுதியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று பாரத் தர்மஜனசேனாவின் மூத்த தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி கருத்து தெரிவித்திருக்கிறார். பா.ஜனதா கட்சி, வயநாடு தொகுதியை எங்களிடம் இருந்து கோராது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி இதுவரை வயநாடு தொகுதியில் போட்டியிட எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ சொல்கிறார்.

    இன்று இதில் ராகுல் காந்தி இறுதி முடிவு எடுத்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

    முதல்-மந்திரி பினராயி விஜயன், “ ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட்டால், அது காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். பா.ஜனதா கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து களம் இறங்குகிற சூழலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் அது தவறான சமிக்ஞையாகி விடும்” என்கிறார்.

    ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவோ, “ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் எங்கே 20 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பயப்படுகிறது” என்கிறார்.

    ராகுல் வயநாட்டில் களம் இறங்குவாரா, மாட்டாரா, என்ன முடிவு எடுக்கப்போகிறார்? கேரளா மட்டுமல்ல, நாடே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. #LSPolls #RahulGandhi


    ஆன்மிக தலைவரான மாதா அமிர்தானந்த மயி தேவிக்கு மைசூர் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. #MataAmritanandamayi #UniversityofMysore
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் வல்லிகாவு கிராமத்தில் மாதா அமிர்தானந்த மயிக்கு ஆஸ்ரமம் உள்ளது. ஆன்மிக தலைவரான இவரது பெயரால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆஸ்ரமம் மட்டும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் அமிர்தானந்த மயியின் ஆஸ்ரமங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆன்மிக தலைவரான மாதா அமிர்தானந்த மயி தேவிக்கு மைசூர் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.



    இதுதொடர்பாக மைசூர் பல்கலை துணை வேந்தர் ஹேமநாத குமார் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது:

    மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மார்ச் 17-ம் தேதி அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் நடைபெற்றது. அப்போது, மாதா அமிர்தானந்த மயிக்கு மைசூர் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஏழை, எளியோருக்கு அவர் ஆற்றிவரும் சேவைகளை கவுரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டம் வழங்கினோம் என தெரிவித்துள்ளார். #MataAmritanandamayi #UniversityofMysore
    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பெண் தொண்டர் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Womanmolested
    பாலக்காடு:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட செர்புளசேரி பகுதியில் கடந்த 16-ந்தேதி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அதன் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரே அந்த குழந்தையை பெற்றெடுத்து வீசிச்சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 10 மாதங்களுக்கு முன் கல்லூரி விழா மலர் தயாரிப்பதற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த இளம் கட்சித்தொண்டர் ஒருவர் தன்னை கற்பழித்ததாகவும், அதன் மூலம் உருவானதுதான் இந்த குழந்தை எனவும் போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவர்கள், இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண்ணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவில் உறுப்பினராக இருப்பதாகவும், அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் உள்ளூர் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.



    கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் ஒன்றில் பெண் தொண்டர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    இந்த சம்பவத்தை கண்டித்து செர்புளசேரி கட்சி அலுவலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன பேரணி நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள் கற்பழிப்பு மையங்களாக மாறி வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார். #Womanmolested

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 3½ கிலோ தங்க நகைகள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ஒலவக்கோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவையில் இருந்து கோர்பா- திருவனந்தபுரம் ரெயில் வந்தது. ரெயிலில் ஏறி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகளை கண்டதும் ரெயிலில் இருந்து 3 பேர் குதித்து தப்பி ஓட முயன்றனர்.

    உஷாரான அதிகாரிகள் அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 3.48 கிலோ தங்க நகைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார் (வயது 30), பூபேந்திர சிங் (20), ரேஞ்சர் சிங் (26) ஆகியோர் என்பதும் அவர்கள் கோவையில் இருந்து தங்க நகைகளை திருச்சூருக்கு கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கேரளாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #KeralaGirlsetablaze
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும் மாணவியை (19), அதே பகுதியை சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியும் அவர் மறுத்து வந்துள்ளார். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோரும் மறுப்பு தெரிவித்தனர். 

    இந்நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற மாணவியை மேத்யூ வழிமறித்து நிறுத்தினார். தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த மாணவி மீண்டும் மறுப்பு தெரிவித்தார். 

    இதனால் ஆத்திரம் அடைந்த மேத்யூ, தான் கொண்டு வந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்தார். இதைக் கண்டதும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தப்பி ஓட முயன்ற மேத்யூவை மடக்கிப் பிடித்தனர்.  

    இதையடுத்து, காவல் துறையினர் மேத்யூ மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதுதொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 60 சதவித தீக்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட பெண், மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #KeralaGirlsetablaze
    சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் செலவில், கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. வருகிற 26-ந் தேதி, கேரளா மாநில கவர்னர் சதாசிவம் இந்த வீட்டை திறந்துவைக்கிறார். #MGRHouse #SaidaiDuraisamy
    சென்னை:

    ‘வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?’, என்ற பாடல் வரிகளுக்கேற்ப எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், அவரது புகழ் மக்கள் மத்தியில் குறையவில்லை. இன்றைக்கும் எம்.ஜி.ஆரை நினைத்து வருத்தத்துடன் காலத்தை அசைபோடுவோர் ஏராளம். 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னையை அடுத்த ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டபோது அனைவருமே பதறிப்போனார்கள். அதேபோல கேரளா மாநிலம் பாலக்கோடு மாவட்டம் வடவனூரில், எம்.ஜி.ஆர். குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு சிதிலமடைந்து உள்ளது என்ற செய்தி, படிப்போரை கண்கலங்க செய்தது.

    எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தபோதிலும், சிதிலமடைந்து நிற்கும் அந்த வீட்டை யாருமே சீரமைக்க முன்வராதது வேதனை தரும் செய்தியாகி போனது. இதுகுறித்த செய்தி, அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவரும், மனிதநேயம் அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி பார்வைக்கு சென்றது.

    கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு சிதிலமடைந்த நிலையில் இருக்கும் காட்சி. (பழைய படம்)

    இதையடுத்து சைதை துரைசாமி உடனடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “எம்.ஜி.ஆர். வாழ்ந்த பழமையான இந்த வீட்டை மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் சீரமைத்து புதுப்பித்து தருவோம். சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் ‘சத்திய விலாஸ்’ (வீட்டின் பெயர்) வீட்டை புதுப்பித்து உரியவர்களிடம் ஒப்படைப்போம்”, என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து மனிதநேயம் மையத்தின் செலவில் வீடு புதுப்பிக்கும் பணிகள் தீவிரமானது. சைதை துரைசாமியும் அடிக்கடி கேரளா சென்று அப்பணிகளை பார்வையிட்டார். இந்தநிலையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிற 26-ந் தேதி திறப்பு விழா காண இருக்கிறது.

    இதுகுறித்து சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆர். தனது இளம் வயதில் தவழ்ந்து விளையாடிய வடவனூர் இல்லம் மிகவும் பழுதடைந்து முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும், எந்தவித பராமரிப்பு இன்றி கிடக்கும் இந்த இடத்தை யாருமே சீரமைக்க முன்வரவில்லை என்று செய்திகள் வெளியானது.

    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், நானே நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி குடும்பத்தினரிடம் முறையான ஒப்புதல் பெற்று, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வி மையம் சார்பில் வீட்டின் தொன்மை மாறாமல் சீரமைத்தது. எம்.ஜி.ஆர். காலமெல்லாம் நேசித்த மழலையர் அங்கன்வாடி மையம், உணவுக்கூடம், மழலையர் விளையாட்டு திடல், அழகிய புல்வெளி, எம்.ஜி.ஆரின் அருமையான சுவர் ஓவியங்கள் என கண்ணையும், மனதையும் கவரும் வகையில் இந்த நினைவு இல்ல வளாகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த நினைவு இல்லம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் அளவுக்கு பொலிவு பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலையும், அவரின் தாய் சத்தியபாமா, தந்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பளிங்கு சிலைகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன.

    எம்.ஜி.ஆரின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் அரிய காட்சிகள் அடங்கிய ஒளி நாடாக்கள், அவரது ஆட்சிக்கால சாதனைகளின் ஒளிநாடா காட்சிகள், அவரது அபூர்வ புகைப்படங்களின் கண்காட்சி, எம்.ஜி.ஆர். நடித்த வெற்றி திரைப்படங்களின் சி.டி.க்கள் வெளியீடு என பல்வேறு நவீன சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதுதவிர எம்.ஜி.ஆர். குறித்த பல்வேறு பிரபலங்கள், எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் பார்வையிடவும், அவர்கள் விரும்பினால் தங்குவதற்கும், எம்.ஜி.ஆர். பக்தர்கள் தங்கள் இல்ல திருமணங்களை நடத்துவதற்கும், சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாறவும் உரிய வசதிகள் செய்யப்பட உள்ளன. வழிநெடுக பல்வேறு திருத்தலங்களுக்கு செல்பவர்கள், தரிசித்து செல்லும் மற்றொரு திருக்கோவிலாக எம்.ஜி.ஆர். இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நினைவு இல்லத்தை கேரளா மாநில கவர்னர் பி.சதாசிவம் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

    நம் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள நம் அன்புத்தலைவன் வாழ்ந்த நினைவு இல்ல திறப்பு விழாவில் நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள், அபிமானிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இந்த நினைவு இல்லத்தை 26-ந் தேதி முதல் தினமும் பொதுமக்கள் பார்வையிட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி பற்றி விவரங்கள் அறிய 9884612307 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #MGRHouse #SaidaiDuraisamy
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று மாலை சரண முழக்கங்களுடன் திறக்கப்பட்டது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மாசி (மலையாளத்தில் கும்போஹம்) மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

    வரும் 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple
    தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது. #SC #KeralaGovernment
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

    அவர்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்காமல் புதிய அணையை கட்டும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு முன்வைத்துள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் கேரளா அரசு கருத்தில் கொள்ளவில்லை.



    மேலும் 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவின் 84-வது கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த திட்டமாக இருந்தாலும், அது இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் கேரளா அரசு இந்த நிபந்தனையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி உள்ளது. மத்திய அரசும் இந்த ஆய்வு தொடர்பாக அனுமதி வழங்கி உள்ளது. இது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பின்னர் கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதாடுகையில் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு பகுதியில் ஆய்வு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இறுதி கட்டத்தை நாங்கள் நெருங்கவில்லை. தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன்தான் அணை கட்ட முடியும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் நாங்கள் புதிய அணை எதையும் கட்ட முடியாது. புதிய அணைக்கான ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் மட்டுமே அங்கு புதிய அணை கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.கே.சிக்ரி, இங்கே கோர்ட்டு அவமதிப்பு எங்கே வந்தது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அணை எதையும் கட்ட தொடங்கவில்லையே என்றும் கூறினார்.

    அதற்கு சேகர் நாப்டே, ஆய்வு மேற்கொள்வதே கோர்ட்டு அவமதிப்புதான் என்றும், அதற்கான அனுமதியைத்தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றும் கூறினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியோ, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இன்றியோ புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். #SC #KeralaGovernment

    கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி பொய்கள் பேசியே வீணாக்கி விட்டார் என குற்றம்சாட்டினார். #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.
     
    கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.

    சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜ.க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:



    மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் பயிர்க்கட்ன்களை தள்ளுபடி செய்துள்ளோம். இதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி செய்த தவறுகளை எல்லாம் சரிசெய்வோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி வீணாக்கி விட்டார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஒன்றையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #Congress #RahulGandhi 
    கேரளாவின் கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிபிசி நிறுவன விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார். அதன்பின்னர், திருச்சூரில் பா.ஜ.க இளைஞரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரள கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது.

    சபரிமலை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க இடதுசாரி அரசு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள். இடதுசாரி அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை சிதைப்பது ஏன்? துரதிஷ்டவசமாக கேரளாவின் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இவையனைத்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசால் ஏற்பட்டது.



    காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகம் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையானது. எதிர்க்கட்சிகள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் தாக்கி பேசலாம், ஆனால் அவர்களால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

    சபரிமலை விவகாரத்தில் கேரளாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் முரண்பட்ட நிலைபாட்டில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் விஞ்ஞானி நம்பி நாராயணனை அரசியல் ஆதாயத்துக்காக பொய்வழக்கில் சிக்க வைத்தனர். அரசியல் ஆதாயத்துக்கு தேச நலனை சேதப்படுத்தியதுடன் தேசப்பற்றுமிக்க விஞ்ஞானிக்கும் தொல்லை தந்தனர். வலிமையான இந்தியாவை உருவாக்க உழைக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
    ×