என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97757"
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பா.ஜனதா கட்சி தென்மாநிலங்களில் கூடுதல் இடங்களை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மேலிடத்தலைவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி வருகிறார். மதுரையில் நடைபெறும் விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுறார்.
தமிழக சுற்றுப்பயணம் முடிந்ததும் பிரதமர் மோடி அன்று பகல் 1.50 மணிக்கு தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார். கொச்சி விமானப்படை மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராஜகிரி புறப்படுகிறார்.
அரசு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருச்சூரில் நடைபெறும் பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் கேரள மாநில நிர்வாகிகள் செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கேரள மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
கேரளாவில் இப்போது சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராடி வருகிறார்கள்.
அவர்களுக்கு பந்தளம் ராஜ குடும்பமும், பா.ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கேரளா வரும்போது அவரை சந்திக்க நேரம் வாங்கி தரும்படி பந்தளம் ராஜகுடும்பத்தினர் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர்.
அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி கேரள பயணத்தை முடித்துக்கொண்டு 27-ந்தேதி மாலை கொச்சியில் இருந்து டெல்லி திரும்ப உள்ளார். அப்போது பிரதமர் மோடியை பந்தளம் ராஜ குடும்பத்தினர் சந்தித்து பேச ஏற்பாடு நடந்து வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி கேரள சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பும் முன்பு முதல்-மந்திரி பினராயி விஜயனையும் சந்தித்து பேச உள்ளார். #PMModi #SabarimalaIssue
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. விஷ்ணு பகவானின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளா வந்தார். அவர் கொல்லத்தில் 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.
பிரதமர் மோடியுடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் உள்பட பலர் சென்றனர். அத்துடன் கேரள பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி திரும்பினார்.
முன்னதாக கொல்லத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் மாநில அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த நாடும் சபரிமலை பற்றித்தான் பேசி வருகிறது. சபரிமலை விவகாரத்தை ஆளும் இடதுசாரி முன்னணி அரசு கையாளும் முறையானது, வரலாற்றிலேயே எந்த ஒரு அரசோ, கட்சியோ செய்திராத மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்’ என குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை கம்யூனிஸ்டுகள் மதிக்கமாட்டார் கள் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் இத்தகைய வெறுப்பு செயலானது யாரும் கற்பனை செய்திட முடியாதது. இதைப்போல காங்கிரஸ் கட்சியும் சபரிமலை விவகாரத்தில் இரட்டை நிலையை கொண்டிருக்கிறது. அந்தவகையில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்’ எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மோடி கண்டனம் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.
இதைப்போல சபரிமலை விவகாரத்தை அரசியல் வாய்ப்பாக பா.ஜனதா பயன்படுத்துவதையே பிரதமரின் பேச்சு எடுத்துரைப்பதாக காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு திருவிழா நடந்து வருகிறது.
மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடைதிறந்த பின்னர் கடந்த 2-ந்தேதி இளம்பெண்கள் இருவர் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.
இளம்பெண்கள் தரிசனம் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 3-ந்தேதி கேரளா முழுவதும் முழு அடைப்பும் நடந்தது.
கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று வரை அங்கு பிரச்சினை ஓயவில்லை. வாகனங்களை தடுத்து நிறுத்துவது, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் மீது குண்டு வீசுவது என வன்முறை நீடிக்கிறது.
தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்துவந்தாலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. மகரவிளக்கு பூஜைக்கான நாள் நெருங்க நெருங்க பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
சபரிமலையில் முழு அடைப்பு நாளான 3-ந்தேதி மட்டும் 57 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் 4-ந்தேதி 54 ஆயிரம் பேரும், 5-ந்தேதி 51 ஆயிரம் பேரும், 6-ந்தேதி 45 ஆயிரத்து 500 பேரும் தரிசனம் செய்திருந்தனர்.
கடந்த 7-ந்தேதி மதியம் வரை சாமி தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டியது.
மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதற்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கேற்ப அங்கு பாதுகாப்பு நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Sabarimala
நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு வரை நீடிக்கிறது.
கேரளாவிலும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோ, டாக்சி, வேன்களும் ஓடவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதனால் ரெயில்களை பொதுமக்கள் நாடிச் சென்றனர். ஆனால் ரெயில்களையும் மறித்து போராட்டம் நடைபெற்றதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாகவே புறப்பட்டுச் செல்ல முடிந்தது. இந்த போராட்டம் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது.
இன்று 2-வது நாளாக கேரளாவில் ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்ததால் அந்த ரெயில் புறப்பட முடியாத சூழ்நிலை உருவானது. உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.
இன்றும் கேரள அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக டெப்போக்களில் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சபரிமலைக்கு சென்று வந்தன.
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் பலர் பஸ், ஆட்டோக்கள் இயங்காததால் சிரமத்திற்கு ஆளானார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தங்களது ஜீப், வேன்களில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல உதவினார்கள்.
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #BharatBandh
ஒட்டன்சத்திரம்:
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் நாளை பல்வேறு தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினசரி 100-க்கும மேற்பட்ட லாரிகளில் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து மட்டும் 50 முதல் 60 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு மட்டுமே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்றே விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கேரளாவுக்கு அனுப்ப உள்ள காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நேற்று முதலே காய்கறிகளை கொண்டு வராததாலும், லாரிகளும் வராததாலும் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
வெளியூர்களுக்கு அனுப்ப காய்கறிகள் தயாராக இருந்த போதும் தொழிலாளர்கள் வரவில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது. #Vegetables
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கம்யூனிஸ்டு, பா.ஜனதா கட்சி தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுவதும், வெடிகுண்டுகள் வீச்சு சம்பவமும் நடந்து வருகின்றன.
இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் தலச்சேரி பகுதியில் இருக்கும் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. #KeralaViolent #Sabarimala #PinarayiVijayan
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சாமி தரிசனத்திற்கு ஆதரவு திரட்ட மாநில அரசு சார்பில் பெண்கள் மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.
காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போராட்டத்தில் 35 லட்சம் பெண்கள் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடக்க இடமான காசர்கோட்டில் கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜாவும், முடிவு இடமான திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தாகரத்தும் பங்கேற்றனர். ரீமா கல்லிங்கல் உள்பட நடிகைகள் பலரும் மனித சுவர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்கள் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்பட்ட மனித சுவர் போராட்டத்தில் அதிக அளவு பெண்கள் திரண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். 620 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போராட்டம் பற்றி ஒரு மாதத்திற்கு முன்புதான் முடிவு செய்யப்பட்டது. அதை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பாகுபாடு இல்லாமல் பெண்கள் கலந்துகொண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். சட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டமாக கருதுகிறோம்.
பெண்களுக்கு எதிராக செயல்படும் பழமைவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இது. பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். வழபாடுகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்