search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
     
    அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை கடந்த இரு தினங்களாக ஒத்திவைக்கப்பட்டது.



    இந்நிலையில், 3-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை கோவில் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவை நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர், உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

    அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, சபரிமலையில் பக்தர்கள் நுழைவதை தடுக்கும்வகையில் பாஜகவும், தற்போது ஆட்சியில் உள்ள சிபிஐ அரசும் மறைமுகமாக கூட்டு சேர்ந்துள்ளன என கடுமையாக குற்றம் சாட்டினார். 

    இதைத்தொடர்ந்து அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதால் சபாநாயகர் அவையை மூன்றாவது நாளாக ஒத்திவைத்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue 
    கேரளாவில் பதுங்கியிருந்த 3 போடோ பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். #Militants #Militantsarrest

    கொழிஞ்சாம்பாறை:

    அசாம் மாநிலம் கொக்குரு ஜார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்கேது பிரம்மா (வயது 35), மனு பத்தேரி (25), பிரிதம் பசுமதாரி (24). இவர்கள் 3 பேரும் போடோ பயங்கரவாதிகள். பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர்களை அசாம் போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் 3 பேரும் திடீரென மாயமானார்கள். பயங்கர குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இந்த போடோ பயங்கரவாதிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அசாம் போலீசார் கேரள போலீசாரை தொடர்பு கொண்டு 3 போடோ பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்து பிடித்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

    இதனையடுத்து போடோ பயங்கரவாதிகளை பிடிக்க எர்ணாகுளம் எஸ்.பி. (பொறுப்பு) பிரேம்மேந்திரநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உதவி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் மாநிலம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அசாம் போலீசாரால் தேடப்படும் போடோ பயங்கரவாதிகள் பெரும்பாவூர் மன்னூரில் ஒரு பிளைவுட் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடன் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து நேற்று மாறுவேடத்தில் சென்ற போலீசார் 3 பயங்கரவாதிகளையும் பிடித்து கைது செய்தனர்.

    இது குறித்து அசாம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று கேரள வர உள்ளனர். 3 போடோ பயங்கரவாதிகளையும் கேரள போலீசார் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் 14 முறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கி ஷாட் அடித்த போதிலும் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளில், சென்னை அணியினர் அவசர கோலத்தில் செயல்பட்டு பந்தை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் கோலின்றி டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.



    உள்ளூரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. மொத்தத்தில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறுவது சிக்கலாகி இருக்கிறது. 9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 3 தோல்வியை பெற்றுள்ளது.

    பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
    கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. #sabarimala
    செங்கோட்டை:

    கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை கண்டித்தும், அனைத்து வயது பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் சசிகலா என்பவரை நேற்று இரவு கேரள அரசு கைது செய்தது.

    இதனை கண்டித்து கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் எந்த வாகனமும் செல்லவில்லை.

    தினமும் செங்கோட்டை வழியாக ஏராளமானவர்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். இன்று வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கேரளாவில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்கள் அனைத்தும் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கும். #sabarimala
    கேரளாவுக்கு மீண்டும் வந்து கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன் என்று திருப்பி அனுப்பப்பட்ட திருப்திதேசாய் ஆவேசமாக கூறி உள்ளார். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலை வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும் வருகிறார்கள்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணீய ஆர்வலர் திருப்திதேசாய் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, நேற்று திருப்திதேசாய் 6 இளம்பெண்களுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். திருப்திதேசாய் வருவதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கொச்சி விமான நிலையம் முன்பு திரண்டனர்.

    திருப்திதேசாய் வந்த விமானம் அதிகாலை 4.40 மணிக்கு கொச்சி வந்ததும், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வர விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும், சுமூக நிலை ஏற்படவில்லை. திருப்திதேசாயை ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல கார் டிரைவர்களும் முன் வரவில்லை. இதனால் அதிகாலை 4.40 மணி முதல் இரவு 9.40 மணி வரை 17 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த திருப்திதேசாயை திரும்பிச் செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.



    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர், திரும்பிச் செல்ல வேண்டும் என்ற போலீசாரின் வேண்டுகோளை ஏற்று திருப்திதேசாய் திரும்பிச் சென்றார். இது குறித்து திருப்திதேசாய் அளித்த பேட்டி வருமாறு:-

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான் வருவதை முன்கூட்டியே அறிந்த போராட்டக்காரர்கள் பயந்து விட்டனர். எனவேதான் என்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வர விடாமல் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தை கண்டு நான் பின்வாங்க மாட்டேன். மீண்டும் கேரளா வருவேன். அப்போது கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

    கேரள போலீசார் என்னிடம் கனிவாக நடந்து கொண்டனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே நான், திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

    எனது வருகையால் இங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது. வன்முறைக்கு நான், காரணமாகி விடக் கூடாது. எனவேதான் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இப்போது திரும்பிச் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே விமான நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஐயப்ப பக்தர்கள் 250 பேர் மீது நெடும்பாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  #TruptiDesai #Sabarimala


    கஜா புயல் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்ததால் இடுக்கியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. #GajaCyclone #KeralaRain
    திருவனந்தபுரம்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்தில் கரையை கடந்தது.

    தமிழகத்தின் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல் நேற்று பிற்பகலுக்கு மேல் திண்டுக்கல், தேனி, போடி வழியாக கேரள மாநிலத்தில் நுழைந்து அரபிக்கடலுக்கு நகர்ந்தது.

    இதன் காரணமாக கேரளாவின் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்தது.



    கஜா புயலின் கண் பகுதி கேரளாவிற்குள் நுழைந்ததும் இடுக்கியில் மிக கனத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு, மூணாறு பகுதிகள் வெள்ளக்காடானது. ஏற்கனவே இங்கு பெருமழை பெய்ததால் சேதமான பாலங்களுக்கு பதில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இந்த பாலங்களை கஜா புயல் துவம்சம் செய்தது. இதனால் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    இடுக்கியில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், பல வீடுகள் இடிந்து சேதமானது. இடுக்கி, வயநாடு பகுதிகளை சேதப்படுத்திய கஜா புயல் மெதுவாக தென்கிழக்கு அரபிக்கடலுக்குள் நகர்ந்தது.

    தற்போது இப்புயல் கொச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அமித்தி தீவுகளை கடந்து மினிகாய் தீவு வழியாக வளைகுடா நாட்டுக்கு நகரும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் இன்றும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சபரிமலை, எரிமேலி, பம்பை, நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

    இன்றும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அரபிக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளைகுடா நாட்டிற்கு நகர்ந்த பின்னரே கேரளாவில் மழை குறையுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #GajaCyclone #KeralaRain



    மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்து வெற்றிபெற்ற முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்து கேரளா ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #KeralaHC #IUMLMLAdisqualified
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆழிக்கோடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் கே.எம்.ஷாஜி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி வேட்பாளரான நிக்கேஷ் குமாரைவிட கூடுதலாக  2,287 வாக்குகள் வாங்கி ஷாஜி வெற்றி பெற்றார்.



    அவரது வெற்றியை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் நிக்கேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய வகையில், ‘முஸ்லிமல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என துண்டு பிரசுரங்களை வெளியிட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய ஷாஜியை சட்டசபையில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கை தொடர்பாக ஐகோர்ட் விசாரித்து வந்தது.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.டி.ராஜன் ஷாஜியை ஆறாண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  கேரள சட்டசபை சபாநாயகர் மற்றும் அம்மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் லீக் கட்சி மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaHC #IUMLMLAdisqualified
    கேரளாவில் பாஜக சார்பில் 6 நாள் நடைபெற உள்ள சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரையை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். #SabarimalaRathYatra #SabarimalaProtests
    காசர்கோடு:

    கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று தொடங்கியது. காசர்கோடு மாவட்டம் மாத்தூர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.



    இந்நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியபோது, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார்  வேலப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரையானது, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடது சாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும் என்றார். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு பினராயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

    ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ்  மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ரத யாத்திரை, வரும் 13ம்தேதி சபரிமலையை சென்றடைய உள்ளது. #SabarimalaRathYatra #SabarimalaProtests
    சபரிமலை பக்தர்கள் மீது போலீசாரை வைத்து அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கேரள மாநிலத்தின் கண்ணூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று கேரளாவில் மத நம்பிக்கைகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கொடுமை ஆகியவற்றிற்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்.



    இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, கோர்ட் உத்தரவின்பேரில் சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை.  எனவே ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது என தெரிவித்துள்ளார். #SabarimalaTemple #BJP #AmitShah #PinarayiVijayan
    கேரளாவில் தொண்டி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடற்கரைகிராமமான காரங்காட்டைச் சேர்ந்தவர் ஐசக் நியூட்டன். இவரது மனைவி அந்தோணியம்மாள்.

    இவர்களது மூத்த மகன் ரூசோ (22). பட்டதாரியான இவர் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சக்தி குலங்கரா கடல் பகுதியில் மீன் பிடிக்க விசைப் படகில் சென்றார். கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார்.

    இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான காரங்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

    கேரளாவில் சிவகிரி மடத்தில் நடைபெறும் நாராயணகுரு பூஜையில் கலந்துகொள்ளும் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். #Amitshah #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று மண்டல பூஜை நடக்கிறது.

    சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் இன்று பிற்பகல் சிவகிரி மடத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் பூஜைகளில் பங்கேற்கிறார்.

    சிவகிரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு இன்று மாலை நடைபெறும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் நாளை டெல்லி புறப்படுகிறார்.

    சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமித்ஷா கேரளா வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Amitshah #BJP


    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் விளம்பரத்துக்காக பெண்கள் செல்வதாக குற்றம்சாட்டி அவர்களை அனுமதிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #SabarimalaTemple
    சென்னை:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டக்காரகள் மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றனர்.



    இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண்களில் கருப்புத்துணிகளை கட்டியபடி, ‘10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் விளம்பரத்துக்காக சபரிமலைக்கு செல்வதாகவும், அவர்கள் பக்தர்கள் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தூய்மையாக இல்லை எனவும், அவர்கள் கோவிலுக்குள் சென்றால் ஐயப்பனின் புனிதம் மற்றும் பிரம்மச்சரியம் வீணாகிவிடும் எனவும் இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple
    ×