search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    மாநில ஜிஎஸ்டி மீது 10% செஸ் வரி விதிக்க அனுமதி வேண்டிய கேரளாவின் கோரிக்கையை பரிசீலிக்க, 7 மந்திரிகள் கொண்ட குழுவை மத்திய மந்திரி அருண் ஜெட்லி நியமித்துள்ளார். #Kerala #FMJaitley #CalamityCess
    புதுடெல்லி:

    கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை விரைந்து சரிசெய்யும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அந்த முயற்சிகளில் ஒன்றாக மாநில ஜிஎஸ்டி வரியில் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்க அனுமதி கோரி மத்திய மந்திரி அருண் ஜெட்லியிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிக்க 7 மந்திரிகள் கொண்ட குழுவை மத்திய மந்திரி அருண் ஜெட்லி நியமித்துள்ளார். #Kerala #FMJaitley #CalamityCess
    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா பெரிய சக்தியாக மாறும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #RajnathSingh #BJP
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில பா.ஜனதா தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நீண்டநாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் மாநில தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை தொடர்ந்து ஸ்ரீதரன்பிள்ளை பா.ஜனதா மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

    அவர் பதவி ஏற்றபிறகு பா.ஜனதா கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டவும் அவர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி கொச்சியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ., மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

    கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை மாறி வருகிறது. முதலில் நமக்கு ஒரு எம்.எல்.ஏ. பதவி ஓ.ராஜகோபால் மூலம் கிடைத்தது. அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிபெற்று மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பதவிகளை கைப்பற்றி உள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா பெரிய சக்தியாக மாறும். பா.ஜனதா கட்சி ஜாதி, மத வேறுபாடு இன்றி மக்களுக்காக பாடுபடும் கட்சி ஆகும். ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக மதவாத கட்சி என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    மக்களுக்கு முன்மாதிரியாக திகழும் பாதிரியார்கள் பா.ஜனதாவில் இணைந்து உள்ளனர். பா.ஜனதாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கட்சியில் இணைந்ததாக கூறி உள்ளனர். கேரளாவில் எதற்கெடுத்தாலும் காங்கிரசும், கம்யூனிஸ்டும் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அந்த நிலை விரைவில் மாறும்.

    இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட உதவியை செய்துள்ளது. தொடர்ந்து இந்த மாநில மக்களுக்காக பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RajnathSingh #BJP

    கேரள மாநிலத்தில் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரி மீது தேவாலயம் எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    பாதிரியார் கைது செய்யப்பட்ட உடனே, கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து நேற்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்திருந்தது. எந்த வித எழுத்துப்பூர்வ அறிவிப்பும் இன்றி வாய்மொழியாக தன்னை தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என நிர்வாகம் தெரிவித்ததாக லூசி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரி லூசி கலப்புரா மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #Kerala #KeralaNun 
    கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரியை மீண்டும் பணியில் சேர்க்க வயநாடு தேவாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு 3 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இதையடுத்து கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து இன்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாஸ்திரி லூசி, எந்த வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பும் அளிக்காமல், காரணங்களும் சொல்லாமல், தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என வாய்மொழியாக மட்டுமே கூறி, தம்மை வெளியேற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    தேவாலய நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. #Kerala #KeralaNun 
    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்திருந்து.

    தொடர்ந்து மூன்று நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.



    இதைத்தொடர்ந்து, சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிமன்ற விசாரணையின்போது, பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    செங்கோட்டையில் புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ்சில் கடத்தி செல்ல முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசியை வாகன சோதனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செங்கோட்டை:

    தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரே‌ஷன் அரிசிகளை செங்கோட்டை மற்றும் தென்காசி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காலம் காலமாக பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி பேருந்துகள் மற்றும் ரெயில் மூலம் கடத்தி அண்டை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வருவதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

    எனினும் போலீசார் இதனை கட்டுப்படுத்த பேருந்துகள், சோதனைசாவடி மூலம் தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருவதுடன் அவர்களிடமிருந்து அரிசிகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குகள் போடுவதும், வாடிக்கையாகி வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரளா எல்லைபகுதியில் இருக்கும் புளியரை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது தென்காசியில் இருந்து செல்லும் கேரளா அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்த போது பயணிகள் இருக்கைக்கு அடியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1 டன் ரேசன் அரசிகளை சிறு, சிறு சாக்குப்பைகளில் பயணிகள் இருக்கைகளுக்கு அடியில் இருந்தது. இதையடுத்து 20 மூடைகளாக இருந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் இதுபோன்று அரிசி கடத்தல்காரர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கேரளா செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டு கடத்தலை முற்றிலும் தடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #KeralaFloods #ReliefService #KannanGopinath
    திருவனந்தபுரம்

    கேரள மாநிலம் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பேரழிவை சமீபத்தில் பெய்த கனமழையால் சந்தித்தது.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 488 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
    ராணுவப் படையினரும், கேரள மீனவர்களும் தக்க சமயத்தில் வெள்ளத்தை வென்று மக்களை மீட்டனர். 

    இதையடுத்து, மத்திய அரசு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் வெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு உதவிக்கரங்களை நீட்டின.

    இந்நிலையில், தான் வகித்து வரும் பதவியை மறைத்து, கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கண்ணன் கோபிநாத். 

    இவர் தங்கள் யூனியன் பிரதேசம் சார்பாக கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க ஆகஸ்ட் 26-ம் தேதி கேரளா வந்தார். 

    இவரது வீடு கேரளாவின் புதுபள்ளியில் உள்ளது. பணத்தை ஒப்படைத்த பின்னர் அங்கு செல்லலாம் என்று நினைத்த அவர், கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றார்.

    அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 10 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.  அதைத்தொடர்ந்து, தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச் சென்றார்.

    கேரளா வந்த அடுத்த நாளே மீட்புப் பணிகளுக்காக கண்ணன் விடுப்பு பெற்றுவிட்டார். ஆனால் அவர் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்த அரசு நிர்வாகம், அவரது விடுப்பு நாள்களை வேலை செய்த நாட்களாக கணக்கெடுத்துக் கொண்டது.

    தான் வகித்து வரும் பதவியை மறைத்து சாதாரண மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலெக்டர் கண்ணன் கோபிநாத்துக்கு கேரள மக்கள் மட்டுமின்றிஅனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். #KeralaFloods #ReliefService #KannanGopinath
    கேரளா மாநிலத்தில் வெள்ளம் வடிந்த பின்னர் வேகமாக பரவிய எலி காய்ச்சலுக்கு நேற்றும் 11 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #Ratfeverdeath #KeralaRatfever
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தை சூறையாடிய பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்குக்கு 600-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

    இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் என்னும் தொற்றுநோய் வேகமாக பரவ தொடங்கியது. இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது.



    எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்த 842 பேரில் 372 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் வரை எலி காய்ச்சலுக்கு 55 பேர் உயிரிழந்திருந்தனர்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 11 பேர் உயிரிழந்ததால் இன்றையை நிலவரப்படி பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #Ratfeverdeath #KeralaRatfever
    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் நிதி திரட்டும் யோசனையை கைவிட வேண்டும் என அரசுக்கு கேரள மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #KVThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 483 பேர் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தங்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கேரள மாநிலத்தின் இந்த நூறாண்டு காணாத மிகப்பெரிய துயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பன்மொழி பேசும் மக்களும் பங்கெடுத்தனர். அவர்கள் அழித்த நிவாரணத்தொகை மட்டும் ஆயிரம் கோடியை எட்டியது. மேலும், பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களும் கேரளாவுக்கு வழங்கப்பட்டது.



    இந்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரிசெய்ய நிதி திரட்டும் முனைப்பில் தற்போது கேரள அரசு உள்ளது. முன்னதாக கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மத்திய அரசு வாங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து, கேரளாவில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வெளிநாடுகளிடமும், வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடமும் நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டும் என தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், அரசின் இந்த முடிவை கைவிடுமாறு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி. தாமஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி கையேந்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும், இதனால், இந்தியா மற்றும் கேரள மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரள மந்திரிகள் நிதி திரட்டுவதாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து புணரமைக்க பாடுபட வேண்டும் என கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார். #KeralaFlood #KVThomas
    கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் சேகரித்து கொடுத்த மும்பை மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #KeralaRains #KeralaFloods
    மும்பை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததில் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக மும்பை மாணவர்கள் டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் சேகரித்து கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



    மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள அகமதுபூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்ட முடிவு செய்தனர்.

    இதற்காக டீக்கடை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, டீக்கடை திறந்து தினமும் பணத்தை சேகரித்து வந்தனர். இப்படி சிறுக சிறுக சேகரித்த பணம் 51 ஆயிரம் ஆனது.

    இதைத்தொடர்ந்து, தாங்கள் சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு பள்ளி அலுவலர்களுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அவரிடம் தாங்கள் சேகரித்த பணம் 51 ஆயிரத்தை அளித்து, கேரளா வெள்ள நிவாரண நிதியில் சேர்க்கும்படி கூறினர்.

    கேரளா வெள்ள நிவாரணத்துக்காக மும்பையை சேர்ந்த மாணவர்கள் டீக்கடை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaRains #KeralaFloods 
    தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார். #Southwestmoonsoon #Karnatakarain #Cauvery

    பெங்களூரு:

    கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதாவது ஜூன் மாதத்தில் 9.2 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.9 டி.எம்.சி. நீரும், ஆகஸ்டு மாதத்தில் 46.2 டி.எம்.சி. நீரும் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும்.

    ஆனால் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை அப்படியே கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.

    குறைந்தபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை 3 மாதங்களுக்குள் திறந்துவிட்டு உள்ளது. அதுவும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 177.3 டி.எம்.சி. நீரை காட்டிலும் கூடுதலாக 133.3 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு உள்ளது.

    இந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் காலத்தில் காவிரியில் கூடுதர் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்து உள்ளது. எனவே மின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். அந்த அணை நீரை தமிழகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மேகதாதுவில் அணை கட்டினால் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.

    இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நீரை அந்த அரசு சேமிக்கவில்லை. வீணாக கடலில் சென்று கலந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட சென்ற ராகுல் காந்தி, ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து காத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளித்தன. மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை அங்கு 370-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இதற்கிடையே, மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் நேற்று செங்கனூர் சென்றார். அங்குள்ள முகாமுக்கு நேரில் சென்ற அவர் அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா செல்வதற்கு தயாராக இருந்தார். அப்போது அங்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நிவாரணமுகாமில் தங்கியிருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை ஆலப்புழா மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.

    இதை கவனித்த ராகுல் காந்தி, தனது ஹெலிகாப்டரை நிறுத்துமாறு கூறினார். முதலில் ஏர் ஆம்புலன்சுக்கு பறக்க அனுமதி கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து, அந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஆலப்புழாவுக்கு சென்றது. சுமார் அரை மணி நேரம் கழித்து ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் ஆலப்புழாவுக்கு சென்றது.

    ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து தனது ஹெலிகாப்டரை காத்திருக்க செய்த ராகுல் காந்தியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance
    ×