என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97757"
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேத பகுதிகளை ஆய்வுசெய்தபின், பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மாநிலத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது.
எனவே, கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
சுரண்டை:
நெல்லை மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வீ.கே.புதூர் தாலுகா சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க வீ.கே. புதூர் தாசில்தார் நல்லையா கேட்டுக்கொண்டார். அதன்படி வீ.கே. புதூர் தாலுகா மக்களின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்பேரில் பொது மக்கள் அரிசி, கோதுமை மாவு, மைதா, ரவை, குடிநீர் பாட்டில்கள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப், பவுடர், கொசுவர்த்தி சுருள், கொசு விரட்டி, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, தலையணை, போர்வை, டீத்தூள், காபித் தூள், பால் பவுடர், சானிடரி நாப்கின், துணிகள், நிலக்கடலை, பயறு வகைகள், தேங்காய் எண்ணெய், ரஸ்க், பிஸ்கட், டார்ச், பேட்டரி ஆகிய பொருட்களை (பயன்படுத்திய ஆடைகளை தவிர்த்து) வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராளமாக வழங்கினர்.
அதனை தாசில்தார் நல்லையா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். கலெக்டர் அலுவலகம் மூலமாக அவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்தது. இத்தகவலை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல், திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26-ந் தேதி வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. #KeralaFlood #GST #CustomsDuty #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்