search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சௌந்தரராஜா"

    மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் குழந்தைக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.
    தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

    மனைவி, மகளுடன் சௌந்தரராஜா
    மனைவி, மகளுடன் சௌந்தரராஜா

    இவர்களுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்தது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார். மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.
    வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்த சௌந்தரராஜா, தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.
    சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாக முழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்கிறார்.

    காபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர்.



    மேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்திலும், விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    பல வெற்றி படங்களில் நடித்து வரும் சௌந்தரராஜா போலீசில் இருந்து, ராணுவத்திற்கு மாறி இருக்கிறார். #SoundaraRaja #Army #Police
    தன்னுடைய தனித் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

    மேலும் இவரது நடிப்பில் ‘பில்லா பாண்டி’, ‘அபிமன்யு’ ஆகிய படங்கள் ரிலீசாக இருக்கிறது. அபிமன்யு படத்தில் உதவி கமிஷனராக நடிக்கிறார். இப்படத்திற்காக போலீஸ் அதிகாரிகளின் உடை, பாவனை, உடல் மொழி உள்ளிட்ட அனைத்து சம்சங்களை தெரிந்து பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். 



    இந்நிலையில், தற்போது ராணுவ அதிகாரியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். ஆர்மி மேனாக நடிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால், இன்று அவர்களின் மேல் இருக்கும் மரியாதை இன்னும் அதிகமாகி, கடவுளுக்கு நிகராஜ உணர்கிறேன் என்று சௌந்தரராஜா கூறியிருக்கிறார்.
    சமீபத்தில் தமன்னாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் சௌந்தராஜா, தன் மனைவியுடன் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். #Vijayakanth #Soundararaja
    நடிகர் சௌந்தரராஜாவிற்கும் தமன்னாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, விஷால், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் சௌந்தரராஜா. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், ‘தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். 

    அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய விஜயகாந்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.
    ×