search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டில் லோகேஸ் ராகுல் ஆடக்கூடாது என்றும், அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    அடிலெய்டில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் 4 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    பெர்த் டெஸ்டில் கேப்டன் விராட்கோலி மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முதன்மை சுழற்பந்து வீரரான ஜடேஜாவை சேர்க்காமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. அதனால் ஆஸ்திரேலியா ரன்களை வாரி குவித்தது. இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.



    மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீரர் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட் கைப்பற்றி மிகுந்த நெருக்கடியை கொடுத்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது.

    அணி வெற்றி பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.

    அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். சுமித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல இயலவில்லை என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். தேர்வு குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.

    பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

    முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் லோகேஷ்ராகுல். எஞ்சிய 2 டெஸ்டில் அவர் விளையாடக் கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணிக்கு வந்து ஆட வேண்டும்.



    எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. #AUSvIND #AustraliaWon
    பெர்த்:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா 55 ரன்னிற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 எடுத்திருந்தது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை, கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய விஹாரி, மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ரிஷப் பந்த் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி வெளியேறியதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. யமேஷ் யாதவ் (2), இஷாந்த் சர்மா (0), பும்ரா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.



    இதனால் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் 2வது இன்னிங்சில் ஸ்டார்க், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3வது ஆட்டம் மெல்போர்னில் 26-ம் தேதி தொடங்குகிறது. #AUSvIND #AustraliaWon
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை 8 -1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி வெண்கலத்தை வென்றது. #HockeyWorldCup2018 #Australia #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.

    இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின்ர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோல் அடித்தனர்.

    இறுதியில், 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. #HockeyWorldCup2018 #Australia #England
    பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கோலியின் சதம் மற்றும் ரகானேயின் அரை சதத்தால் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் அவுட்டானார். அடுத்து இறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடினார்.



    மறுபுறம் ஷான் மார்ஷ் 5 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னுடனும் அவுட்டாகினர். ஆரோன் பிஞ்ச் காயமடைந்து ரிடயர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவாஜா 41 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா சார்பில் மொகமது ஷமி 2 விக்கெட்டும், பும்ரா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #AUSvIND
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பெனால்டி ஷுட் முறையில் 4 -3 என்ற கணக்கில் தோற்கடித்த நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Netherlands #Australia
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 6 -0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையே இன்று இரவு நடைபெற்றது.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து வீரர் கிளென் ஷுர்மான் 9வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து, 20வது நிமிடத்தில் நெதர்லாந்தை சேர்ந்த சிவி வான் ஆஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் நெதர்லாந்து 2 -0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 45வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் ஹோவர்டு தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இறுதிவரை போராடிய ஆஸ்திரேலிய வீரர்கள், ஆட்டத்தின் இறுதி வினாடியான 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தேர்வு செய்ய பெனால்டி ஷூட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெனால்டி ஷுட் முறை இந்த போட்டியில்தான் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018 #Netherlands #Australia
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரகானேயின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND #ViratKohli #AjinkyaRahane
    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
      
    இதற்கிடையே, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, பெர்த்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் மூன்று வீரர்கள் அரை சதமடித்தனர். இறுதியில், 108.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ், விகாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் முரளி விஜய் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய லோகேஷ் ராகுல் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் 8 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.



    அடுத்து புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். 74 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 24 ரன்கள் எடுத்த புஜாரா அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து அஜிங்கியா ரகானே களமிறங்கினார். இவரும் விராட் கோலியும் நிதானமாக ஆடினர். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரிகள் அடித்தனர். இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.  விராட் கோலி 82 ரன்களும், ரகானே 51 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா இன்னும் 154 ரன்கள் பின்தங்கியுள்ளது. #AUSvIND #ViratKohli #AjinkyaRahane
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என மைக்கேல் வாகன், சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளனர். #AUSvIND #Jadeja #SunilGavaskar #MichaelVaughan
    பெர்த்:

    பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

    ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் விகாரி 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதன்மை சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-



    அணியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு. அடுத்து சில நாட்களில் சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது பற்றி கோலி நிச்சயம் சிந்திப்பார் என்றார்.

    இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது,



    அஸ்வின் காயம் அடையாமல் இருந்தால் கண்டிப்பாக அணியில் இடம் பெற்று இருப்பார். ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது தவறு. ஜடேஜா கூட பந்தை சுழற்றுவார். 4-வது நாளில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது கடினமானது என்றார். #AUSvIND #Jadeja #SunilGavaskar
    மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
    சிட்னி:

    யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேமை பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதேபோல் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை திறந்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகமும் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.



    இந்நிலையில், மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால், அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து மாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

    அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பாலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
    உலக கோப்பை ஹாக்கி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. #HockeyWorldCup2018 #Netherlands

    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று வெளியேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல்ணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகியவை தகுதி பெற்றன. அரை இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதுவரை கோப்பையை பெறாத இங்கிலாந்து அணி 2-வது முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெல்ஜியம், இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும்.

    மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கடந்த உலக கோப்பை (2014) இறுதிப் போட்டியில் ஆஸ்ரேலியாவிடம் நெதர்லாந்து தோற்றது.

    அதற்கு பலி தீர்க்க நெதர்லாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #HockeyWorldCup2018 #Netherlands

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் பற்றிய விவரங்களை பார்ப்போம். #AUSvIND #PerthTest
    உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த் மைதானத்தில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

    2008-ம் ஆண்டு கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோரது பேட்டிங்கும், ஆர்.பி.சிங், இர்பான்பதான், கும்ப்ளே ஆகியோரது பந்து வீச்சும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.



    இந்திய அணி பெர்த் மைதானத்தில் 3 டெஸ்டில் தோற்றுள்ளது. 1977-ம் ஆண்டு பி‌ஷன்சிங்பெடி தலைமையிலான அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும், 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான அணி 300 ரன் வித்தியாசத்திலும், 2012-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி இன்னிங்சில் மற்றும் 37 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.



    ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் 44 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றி பெற்றது.

    11 டெஸ்டில் தோற்றது, 8 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

    ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 735 ரன் குவித்ததே (2003) இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 400 ரன் குவித்ததே அதிக பட்சமாகும்.

    பாகிஸ்தான் 62 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். ஆஸ்திரேலிய அணி 76 ரன்னும், இந்தியா 141 ரன்னும் குறைந்தபட்சமாக எடுத்தன. #AUSvIND #PerthTest
    ×