search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுடெல்லி"

    கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா கேட்டுக்கொண்டார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து  காற்று மாசை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால்  உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும், கட்டுமான பணிகள் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களின் என்ஜினை ஆப் செய்வது மற்றும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நாளாவது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற சிறிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், டெல்லியை ஆரோக்கியமான மற்றும் மாசு இல்லாத நகராக மாற்ற முடியும், என்றார்.

    நாமாக முன்வந்து மாசுபாட்டைக் குறைப்பது நமது கடமை என்று கூறிய சிசோடியா, டெல்லியை மாசு இல்லாத நகரமாக மாற்ற, ஒவ்வொரு குடிமகனும் மாசுபாட்டைக் குறைக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    “தொழில்துறை மற்றும் கட்டுமான தொழில் செய்வோர், மாசுபாட்டின் பங்களிப்பை குறைக்க வேண்டும். கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கிய கட்டுமானத் தளங்களில் மாசுக்கட்டுப்பாட்டு கருவியை நிறுவி, தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். தொழில்துறையும் அதன் மாசுபாட்டின் பங்கைக் குறைப்பதற்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சமீபத்திய வளங்களை நோக்கி நகர வேண்டும்” என்றும் அமித் ஷா பேசினார்.

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அனைத்து கட்டுமான பணிகளும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு திட்டம் குறித்து விளக்கிய அவர், ஒரு வாரத்திற்கும் மேலாக மூடியிருக்கும் நச்சு புகையை எதிர்த்து டெல்லி போராடி வருவதால், பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஒருவாரத்திற்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என உத்தரவிட்டார். இதனால் குழந்தைகள் அசுத்தமான காற்றை  சுவாசிக்க வேண்டிய நிலை இருக்காது என்றார்.

    ‘அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும். இதற்கான உத்தரவு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்களும், முடிந்தவரை வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும்படி அறிவுறுத்தப்படும். 

    கட்டுமானப் பணிகள் காற்றில் உள்ள தூசி மற்றும் நுண்ணிய மாசுபாடுகளுக்கு காரணமாக இருப்பதால், அனைத்துவித கட்டுமான பணிகளும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது’ என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
    சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் தடை விதித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம் கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசம் கான் 72 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.



    இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி சமாஜ்வாடி வேட்பாளரான அசம் கான், நாளை காலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.

    சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    சந்திரபாபு நாயுடு பங்கேற்ற அம்மாநாட்டில் சில கட்சிகள் ராகுல் காந்தி தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

    மேலும் சந்திரபாபுநாயுடு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் சந்தித்தார். அப்போது அமராவதியில் ஐகோர்ட்டு கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். #ChandrababuNaidu #RahulGandhi


    டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள், அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
    புதுடெல்லி :

    டெல்லியின் த்வாரகா பகுதியில் அமைந்துள்ள கார்பரேஷன் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து வங்கியை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில், குண்டு தாக்கி ரத்த வெள்ளத்தில் தரையில் சந்தோஷ் குமார் தரையில் சரிந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வங்கி வாசலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 
    ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ள நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
    புதுடெல்லி:

    இந்தியா ஒரு நடுநிலையான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. உலக அரங்கில் இருதுருவங்களாக பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுடனும் இந்தியா நட்புடன் உள்ளது.

    இதையடுத்து, சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.

    ஏனெனில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதால், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை இந்தியா மீதும் விதிக்க முடியும். இதையடுத்து, ரஷ்யாவுடனான நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், இருநாட்டு நட்பு தொடரும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



    இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
    மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. #LokSabha #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17-ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி உட்பட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேரமல்லாத நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    தனது இறுதி உரையில் மக்களுக்கும், மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் 17 முறை அவை கூட்டப்பட்டதாகவும், 112 மணி நேரங்கள் அவை நடைபெற்றதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabha
    சாரதா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது பலவந்தமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #NaliniChidambaram
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த இந்த சிட்பண்ட் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.



    அந்த மனுவில் பெண்களை அவர்கள் இருப்பிடம் அன்றி வேறு இடத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது கட்சிக்காரருக்காக வாதாடியதற்கு சம்பளம் பெற்றதற்காக வக்கீல்களை விசாரிக்க முடியாது என்றும் அதனை துவக்கத்திலேயே கிள்ளி எரிய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண்களை வேறு பகுதிக்கு விசாரணைக்காக அழைக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தாது என்றும், சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த அசோக் புசான், ஏ.கே.ஷிக்ரி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் நளினி சிதம்பரத்துக்கு எதிராக பலவந்த நடவடிக்கைகள் எடுக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், நளினி சிதம்பரத்தின் இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SupremeCourt #NaliniChidambaram
    அமெரிக்காவில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி தொல்லை இருப்பதாக எழுந்த புகாருக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. #AirIndia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இந்தியாவுக்கு டோன் சேகர் என்ற பயணி கடந்த 17-ம் தேதி வந்துள்ளார். இந்த பயணத்தின் போது மூட்டை பூச்சிகளின் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டதாகவும், தனது மனைவியும் குழந்தையும் கூட பாதிக்கப்பட்டதாகவும் விமான போக்குவரத்து விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார்.

    இதே போல், ஜூலை 20-ம் தேதி நியூ ஆர்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியும் மூட்டை பூச்சிகளால் கடிபட்ட தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.



    இந்நிலையில், இந்த ட்வீட்டுகளுக்கு பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், இதுபோன்ற சம்பவம் எதிர்பாராதவிதமாக எப்போதாவது நடக்கும் நிகழ்வு ஆகும். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    மேலும், அனுபவமிக்க நிபுணர்களை கொண்டு பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்றவாறு இருக்கைகள் உள்ளிட்டவை மாற்றி அமைக்கப்படும் எனவும் தனது அறிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. #AirIndia
    ரோம் நகரில் உள்ள கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரிக்கும் போது, தாஜ்மகாலை தனியார் வசம் ஒப்படைப்பதில் என்ன தவறு என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ் பேசியுள்ளார். #TajMahal #KJAlphons
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணியை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுமார் 95 நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்றாகும்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே. அல்போன்ஸ், இந்த திட்டத்தின் மூலம் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களை பராமரிக்கவும், விரிவுபடுத்தி பாதுகாக்கவும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய சுற்றுலாத்துறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார்.



    மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியை தனியார் சிமெண்ட் நிறுவனம் பராமரித்து வருவதை மேற்கோள் காட்டிய மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்ஸ், இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திருநாட்டின் அடையாளமாக விளங்கும் நினைவுச் சின்னங்களை வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த திட்டத்துக்கு கண்டனங்களும் வலுக்கத் துவங்கியுள்ளது.

    சமீபத்தில் தாஜ்மகாலை பராமரிப்பதில் உத்தரப்பிரதேச அரசு முறையாக செயல்படவில்லை எனவும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான எந்தவித திட்டமும் மாநில அரசிடம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TajMahal #KJAlphons
    ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2014-ம் ஆண்டு பிரதமாராகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்துவரும் சுஷ்மா சுவராஜ் குறித்து முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும் அப்போதே அவர் பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



    ஆனால், 2014-ம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி, அதில் தோல்வியையே கண்டனர் என்றும் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பணிகளை சிறப்பாக செய்து வருவதாகவும், உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள் தேவை எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
    2017-18 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் மொத்த பொதுத்துறை வங்கிகளில் ரூ.87 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PSBloss
    புதுடெல்லி:

    இந்தியாவில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2017 - 18 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளில் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் முதன்மை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடிக்கு அளிக்கப்பட்ட 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஐ.டி.பி.ஐ வங்கியும் ரூ.88,237.93 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இரண்டாம் இடம் வகிக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இந்த ஆண்டு லாபம் ஏதுமின்றி சுமார் ரூ.6,547.45 கோடி ரூபாய் இழப்பு அடைந்துள்ளது.

    மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் இழப்பு ஏற்பட்ட வங்கிகள் பட்டியலில் இருந்து விலகி, இந்தியன் வங்கியும், விஜயா வங்கியுமே கணிசமான லாபம் ஈட்டியுள்ளன. 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல் விஜயா வங்கியும் ரூ.727.02 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

    கடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்தன. இந்நிலையில், ஒரே ஆண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன. #PSBloss
    ×