search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்குலி"

    நியூசிலாந்து சிறிய நாடு என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில்,  வெல்லப் போவது யார் என்று சமூக வலைதளங்ளில் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவும் சிறந்த அணிதான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர். 

    நியூசிலாந்து அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்திருப்பது ஆட்டத்தில் நன்றாக தெரிகிறது. நியூசிலாந்து அணிக்கு போராடும் குணமும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றனர். நியூசிலாந்து சிறிய நாடு தான் என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளது. இது நியூசிலாந்திற்கான நேரம் என்பதே எனது கருத்து" என்று தெரிவித்தார்.
    உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன்ஷிப்புடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார்.

    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து மண்ணில் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகும். அங்கு 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி நன்றாகவே ரன் குவித்து வருகிறது.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாகும். இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணியை, தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடக் கூடாது. இரு அணிகளும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்ததாகும். தற்போதைய இந்திய அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.

    இந்திய அணிக்கு நெருக்கடி இருப்பது நல்லது தான். நெருக்கடியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். மற்ற அணிகளுக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. உலக கோப்பை போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.

    இவ்வாறு கங்குலி கூறினார்.
    ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    12-வது ஐ.பி.எல். போட்டி தொடரில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஆட்டத்தில் 5 வெற்றி, 8 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி இடத்தை பிடித்தது.

    ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் விமர்சனம் செய்திருந்தார்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத விராட்கோலி, கேப்டனாக நீடிப்பதற்கு அவர் அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

    இதற்கிடையே இந்த முறையும் பெங்களூர் அணி சாதிக்க தவறியது. தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.

    ஆனால் ஐ.பி.எல்.லில் விராட்கோலியின் கேப்டன் ஷிப் உலக கோப்பை போட்டியில் எதிரொலிக்கும் என்று கருத்து நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    விராட்கோலியின் ஐ.பி.எல். போட்டி கேப்டன் ஷிப்பை இந்திய அணி விளையாடும் போட்டிகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணிக்காக கோலியின் கேப்டன்ஷிப் மிக நன்றாக உள்ளது.

    ரோகித்சர்மா துணை கேப்டனாக உள்ளார். அணியில் டோனி இருக்கிறார். ஆகையால் அவர் நல்ல ஆதரவு பெற்று இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு அளிப்பார். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கான வாய்ப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

    உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். இங்கிலாந்தில் நடக்கும் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றனர்.

    இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் போது இந்தியா அணி எப்போதுமே வாய்ப்பில் இருக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளதால் நெருக்கடி இருக்கும். ஆனால் அதுவே இந்திய வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்குரிய வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் என்றும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். #IPL #SouravGanguly #WorldCup2019
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கான அணிகளின் உத்தேச பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அதில் இருந்து 15 பேர் கொண்ட இறுதி அணியை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘கெடு’ விதித்துள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு சில இடத்திற்கு யாரை சேர்ப்பது என்பது பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் 4-வது வரிசையில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இந்த வரிசைக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அந்த இடத்தை பிடிப்பாரா? என்பதிலும் உறுதி இல்லை. இதனால் இந்திய அணியின் 4-வது வரிசையில் ஆடப்போவது யார்? என்பது மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கங்குலி கூறியதாவது:-



    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த சீசனை எடுத்துக் கொண்டால் ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்) சிறப்பாக ஆடினார். அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. மூத்த விக்கெட் கீப்பர் டோனி இருப்பதால் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருக்கிறார். நிலையான இடம் கிடைக்காததால் ஒரு நாள் போட்டியில் அவரால் முத்திரை பதிக்க முடியவில்லை. ஆனால் ரிஷப் பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று வடிவிலான போட்டிகளில் இருந்தும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கலாம். அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடின உழைப்பாளி. கடந்த 4 ஆண்டுகளாக அவரை வலை பயிற்சியில் கவனித்து வருகிறேன். பயிற்சிக்கு முதலிலேயே வந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடுவார். நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்கு பலரது பெயர் பரிசீலிக்கப்படலாம். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டு தான் அந்த வரிசைக்கு சரியான வீரர் யார் என்பதை முடிவு செய்ய உதவும் என்று நினைக்கிறேன். புஜாராவை கூட அந்த வரிசையில் இறக்கலாம் என்று ஏற்கனவே யோசனை சொன்னேன். ஏனெனில் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். நான் கேப்டனாக இருந்தபோது, ராகுல் டிராவிட் இந்த பணியை செய்தார். வேறு எந்த வழியும் இல்லை என்றால் புஜாராவை வைத்து பரிசோதித்து பார்க்கலாம். ரிஷப் பந்த் அல்லது அம்பத்தி ராயுடு இதற்கான வாய்ப்பில் இருக்கலாம். நாங்கள் கருத்து தான் சொல்ல முடியும். ஆனால் அந்த வரிசைக்கு யார் இறக்கப்பட வேண்டும் என்பது கேப்டன் கோலிக்கு தான் தெரியும்.

    விராட் கோலி எந்த வரிசையில் விளையாடினாலும் ரன்கள் குவிப்பார். என்னை பொறுத்தவரை அவர் 2-வது விக்கெட்டுக்கு இறங்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    பேட்டியின் போது உடன் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனுமான ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘நானாக இருந்தால் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ரிஷப் பந்தை தேர்வு செய்வேன். அவரை 4-வது வரிசைக்கு பயன்படுத்துவேன். அவரிடம் இருக்கும் திறமைக்கு அவரால் உலக கோப்பையை வென்று தர முடியும். அவர் துருப்பு சீட்டாக இருப்பார்’ என்றார். #IPL #SouravGanguly #WorldCup2019


    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி நான்காவது இடத்திற்கு இன்னும் சரியான நபரை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், புஜாராதான் சரியான நபர் என கங்குலி தெரிவித்துள்ளார். #Ganguly
    இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்திய அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய கடைசி தொடரில் ஆஸ்திரேயாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர 2-3 எனத் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியில் இன்னும் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேன் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.

    இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் புஜாராவை, நான்காவது இடத்தில் களம் இறக்கலாம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் ஒரு கருத்து கூற இருக்கிறேன். என்னுடைய கருத்து சிலருக்கு நம்ப முடியாத வகையில் இருக்கால், ஏராளமானவர்களுக்கு சிரிப்பைக் கூட தரலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.

    புஜாராவின் பீல்டிங் சற்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்னும் என்னுடைய அபிப்ராயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், இதற்கு முன் இந்திய அணி முயற்சித்துப் பார்த்த இதர பேட்ஸ்மேன்களை விட இவர் சிறந்தவர் என்பது எனது கருத்து’’ என்றார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆலோசகராக நியமனம் செய்துள்ளது. #IPLSeason2019 #DC
    ஐபிஎல் டி20 லீக்கின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கடந்த 11 சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடி வந்த அணி, தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.



    தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா ஸ்டேடியத்தில் இருந்து இம்ரான் கான் படத்தை நீக்க முடியாது என்று கங்குலி மறுத்துள்ளதால் அவருக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. #BJP #Ganguly #ImranKhan
    கொல்கத்தா:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 40 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் படத்தை மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் நீக்கியது.

    இதேபோல மற்ற மாநில கிரிக்கெட் சங்கங்களும் இம்ரான்கான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படத்தை நீக்கியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிளப் ஹவுசில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா ஆகியோரது படங்கள் உள்ளன. இந்த படங்களை நீக்ககோரி கொல்கத்தா பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனால் இம்ரான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படங்களை நீக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி மறுத்துள்ளார். தனது நிலையில் மாற்றம் இல்லை. இம்ரான்கான் உள்ளிட்டோர் படங்களை நீக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.



    மாநில பா.ஜனதா நிர்வாகி கூறும் போது “இம்ரான்கானின் படத்தை நீக்கும் வரை எங்களது போராட்டம் நீடிக்கும். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் நீக்கியது போலதான் படங்களை நீக்க வேண்டும் என்று கோருகிறோம்“ என்றார்.

    இது தொடர்பாக கங்குலிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கங்குலி மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் ஆதரவாளர் ஆவார்.

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும் துண்டிக்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Ganguly #ImranKhan
    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி ரூ.3.49 லட்சம் மதிப்புள்ள அதி நவீன மோட்டார்சைக்கிளை வாங்கி உள்ளார். #Yuvrajsingh #SouravGanguly #MSDhoni
    புதுடெல்லி:

    கிரிக்கெட் வீரர் டோனி மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்.

    அவரிடம் சுமார் 20 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி இல்லாத நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலாவருவது அவருக்கு பிடித்த பொழுது போக்காக உள்ளது.

    டோனி போலவே மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஆர்வத்துடன் உள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.

    அந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 3 ஆண்டுகள் வாரண்டி கொண்ட அந்த மோட்டார்சைக்கிள் அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.

    தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் இதே ரக புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.

    313 சி.சி. சக்தி கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிநவீன வசதிகள் கொண்டது. பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் ஜெர்மனி, தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Yuvrajsingh #SouravGanguly #MSDhoni
    ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான சர்ச்சையில் விவகாரத்தில் இருந்து நாம் நகர்ந்து செல்ல வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #HardikPandya
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதேபோல் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடி வருபவர் லோகேஷ் ராகுல். இருவரும் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.

    இதனால் அவர்களுக்கு எதிராக கடும் கண்டன குரல் கிளம்பியது. இதனால் அணியில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் சர்ச்சையில் இருந்து நாம் கடந்து செல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘பொதுவாக வீரர்கள் சில தவறுகள் செய்யக்கூடும். நாம் அதன்கூட அப்படியே செல்ல வேண்டியதில்லை. செய்த தவரை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் சிறந்த மனிதராக மாறுவார்கள். எப்போதும் சரியாக நடந்து கொள்வதற்கு நாம் மெஷின் கிடையாது. மனிதர்கள். இதுபோன்று மீண்டும் நடக்காது என்று நாம் இந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும்’’ என்றார்.
    இந்திய அணி புகழ்மிக்க மெல்போர்ன் மைதானத்தில் 37 வருடத்திற்குப் பிறகு வெற்றி வாகை சூடியுள்ளது. #AUSvIND #ViratKohli #TeamIndia
    மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா 37 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு மெல்போர்னில் இந்தியா 12 டெஸ்டில் 2 வெற்றி, 8 தோல்வி, 2 டிரா பெற்று இருந்தது. 1978-ம் ஆண்டு பி‌ஷன்சிங் பெடி தலைமையிலும், 1981-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் தலைமையிலும் வென்றிருந்தது.



    தற்போது இம்மைதானத்தில் 37 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு வெற்றியை ருசித்து உள்ளது. மேலும் பாக்சிங் டே டெஸ்டை இந்தியா வென்றதே கிடையாது. தற்போது ‘பாக்சிங் டே’ டெஸ்டில் வெற்றி வாகை சூடியது
    மெல்போர்ன் வெற்றி மூலம் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன் வெற்றி மூலம் விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 26-வது வெற்றியை ருசித்துள்ளது. அவரது தலைமையில் இந்தியா 45 டெஸ்டில் போட்டியில் விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளது. 10 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 9 டெஸ்ட் போட்டிகள் ‘டிரா ஆகியுள்ளது.

    இன்னும் ஒரு வெற்றி பெற்றால் இவர் டோனியின் சாதனையை சமன் செய்வார். டோனி தலைமையில் இந்தியா 27 டெஸ்டில் (மொத்தம் 60) வெற்றி பெற்றுள்ளது.

    வெளிநாட்டு மண்ணில் கங்குலி தலைமையில் இந்திய அணி 11 வெற்றிகள் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி மூலம் கங்குலியின் சாதனையை கோலி சமன் செய்தார். வெளிநாட்டில் கோலி தலைமையில் இந்தியாவின் 11-வது வெற்றி இதுவாகும்.

    1986-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (சேனா- SENA) மண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.

    ‘சேனா’ நாடுகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் விராட் கோலியே. அவர் 4 வெற்றிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் டோனி, பட்டோடியை முந்தினார். இருவரும் தலா 3 வெற்றிகளை பெற்று இருந்தனர்.
    வெளிநாட்டு தொடரின்போது காயத்திற்குள்ளாகும் அஸ்வினால் பந்து வீச்சில் அவரின் தனிச்சிறப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    2-வது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றதால் அஸ்வின், ஜடேஜா களம் இறங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அஸ்வின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது. அவரது காயம் இன்னும் குணமடையாததால் இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டிலும் இடம் பெறவில்லை.

    இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடியவர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் அஸ்வின் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ச்சியாக காயம் அடைந்திருப்பது கங்குலிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்டில் மொயீன் அலி 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்ற நிலையில், காயத்துடன் களம் இறங்கிய அஸ்வின், 37.1 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். காயத்தால் விளையாடியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

    தொடர்ச்சியாக அஸ்வின் காயம் அடைவது குறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போது எனக்கு அஸ்வின் காயம் குறித்து பெரும் கவலையாக உள்ளது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, தற்போது ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடரின்போது தொடர்ச்சியாக காயம் அடைந்துள்ளதால், அஸ்வின் முதன்மை சுழற்பந்து விச்சாளராக இருக்க முடியாது.

    எதிரணியில் ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணிக்கு அஸ்வின் தேவைப்படுகிறார். ஆனால் காயத்தால் அவருடைய தனிச்சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அஸ்வினால் செயல்பட முடியவில்லை’’ என்றார்.
    ×