search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டியில் விதிமுறைகளை மீறியதற்காக பவுல்ட்டுக்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Boult #Mahmudullah
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.

    இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர்.



    இதை தொடர்ந்து இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Boult #Mahmudullah
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 233 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. #NZvBAN
    நேப்பியர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சைபுதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்றி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 233 ரன் இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. #NZvBAN
    நியூலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடரையும் பறிகொடுத்தது. #NZvIND #newzealandwin
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.

    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது. 

    பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. #NZvIND  #newzealandwin
    ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
    ஆக்லாந்தில் நேற்று நடந்த 2-வது 20-வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலுக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ. அவுட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. #Mitchell #NZvIND
    ஆட்டத்தின் 6-வது ஓவரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்டயாவின் பந்து வீச்சை, டேரில் மிட்செல் (1 ரன்) எதிர்கொண்ட போது பந்து அவரது காலுறையில் பட்டது. இந்திய வீரர்கள் அவுட் கேட்டு குரல் எழுப்பியதும், நடுவர் கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து நாட்டவர்) விரலை உயர்த்தினார். ஆனால் பந்து பேட்டில் பட்டது என்று உறுதியாக நம்பிய டேரில் மிட்செல், டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தார். இதையடுத்து ரீப்ளேயில், ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியதற்கான அடையாளம் தெரிந்தது. ஆனால் ‘ஸ்னிக்கோ’ மீட்டரில் பந்து பேட்டில் பட்டதற்கான அதிர்வு தென்படவில்லை. அதே சமயம் இந்த பந்து அவரது காலுறையில் படாமல் இருந்திருந்தால் ஸ்டம்பை தாக்கியிருக்கும் என்பதும் காட்டப்பட்டது.

    இதனால் குழம்பி போன 3-வது நடுவர் ஷான் ஹாக் (நியூசிலாந்து), டேரில் மிட்செல் அவுட் என்று தீர்ப்பு அளித்தார். தனக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் டேரில் மிட்செலும், எதிர்முனையில் நின்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்கள் கள நடுவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லை. இந்த மாதிரியான சூழலில் அடுத்த பந்து வீசப்படாத நிலையில் எதிரணி கேப்டன் அப்பீலை வாபஸ் பெற்றால் சம்பந்தப்பட்ட பேட்ஸ்மேனை தொடர்ந்து விளையாட வைக்கலாம்.

    இதையடுத்து வில்லியம்சனும், டேரில் மிட்செலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பேசி பார்த்தனர். நடுவர்களும் ரோகித் சர்மாவிடம் விவாதித்தனர். இதனால் களத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதன் பின்னர் டோனி குறுக்கிட்டு ரோகித் சர்மாவிடம் ஏதோ சொல்லி அந்த இடத்தை விட்டு நகர வைத்தார். நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது என்பது போல் ரோகித் சர்மா கூறியதால், சில நிமிடங்களுக்கு பிறகு டேரில் மிட்செல் அதிருப்தியுடன் வெளியேறினார்.

    இந்த சம்பவத்தால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கேள்விக்குறியாகி உள்ளது. இது நடுவரின் மோசமான தீர்ப்பு என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

    சர்ச்சை குறித்து இந்திய வீரர் கலீல் அகமது பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மிட்செல் விவகாரத்தில் 3-வது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தோம். ஏனெனில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நடுவர் என்ன சொன்னாரே அதை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டோம்’ என்றார். #Mitchell #NZvIND
    நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvIND
    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. மூன்று 20 ஓவர் தொடரில் வெல்லிங்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன் முலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது.

    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான அணி நாளை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீண்டும் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது.

    வெல்லிங்டன் போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையும் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாளைய போட்டியில் இதை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    டோனி, தவான் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மற்ற வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பந்து வீச்சும் ஏமாற்றத்தை அளித்தது. வேகப்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்தனர். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் நாளைய ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-வது 20 ஓவர் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது. ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து 20 ஓவர் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.

    அந்த அணியின் தொடக்க வீரர் டிம் செய் பெர்ட் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினார். இதே போல முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 10-வது போட்டியாகும். இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 2-ல், நியூசிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NZvIND
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் விலகியுள்ளார். #NZvIND #MartinGuptill
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் விலகியுள்ளார்.

    முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் குணமடையவில்லை. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையததால் 20 ஓவர் போட்டியில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். #NZvIND #MartinGuptill
    சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என்று இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறினார். #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நியூசிலாந்தை வீழ்த்திய பின்னர் இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    ‘டாஸ்’ போடுவதற்கு முன்பு ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், ஒரு அணியாக இது போன்ற கடினமான சீதோஷ்ண நிலையை எப்படி சமாளிப்பது என்பதை சோதித்து பார்க்க விரும்பினோம். அதனால் தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தேன். ஒரு வேளை இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருந்திருந்தால், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருப்பேன். பந்து ‘ஸ்விங்’ ஆகும்போது எந்த மாதிரி பேட் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது தெரிந்து இருக்கும். முதல் 30 ஓவருக்குள் ரன்ரேட் மோசமாக இருந்தது. அதன் பிறகு 250 ரன்களை தாண்டியது நல்ல அறிகுறியாகும்.

    நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை 4-1 என்ற கணக்கில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த முறை இங்கு 0-4 என்ற கணக்கில் தோற்றோம். இப்போது சிறப்பாக விளையாடி சாதித்து காட்டியிருக்கிறோம்.

    விஜய் சங்கரின் பேட்டிங் அருமையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி விட்டார். அவர் ஆடிய விதத்தை பார்க்கும் போது, 50 ரன்களோ ஏன் 100 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். கேதர் ஜாதவ் 2-வது சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் போது, அணிக்கு சமச்சீர் தன்மை வந்து விடுகிறது. என்னை பொறுத்தவரை அவரை முறையான ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே பார்க்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் 6 அல்லது 7 ஓவர்கள் பந்து வீசுவதோடு விக்கெட்டும் வீழ்த்துகிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார். #NZvIND
    இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 93 ரன்கள் என்ற எளிய இலக்கை விரைவில் எட்டிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND #NewZealandWon
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார்.

    இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. அதேசமயம், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் கூட ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

    துவக்க வீரர்கள் ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), சுப்மான் கில் (9), ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) என முக்கிய விக்கெட்டுகளை போல்ட் கைப்பற்றினார். இதேபோல், அம்பதி ராயுடு (0), தினேஷ் கார்த்திக் (0), புவனேஸ்வர் குமார் (1) ஆகியோரை வந்த வேகத்தில் வெளியேற்றினார் கிராண்ட்ஹோம். இதனால் நிலைகுலைந்த இந்திய அணி, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து,  92 ரன்களில் சுருண்டது.

    இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்  குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனையும் (11), விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். ஆனால், 3வது விக்கெட்டுக்கு இணைந்த, நிக்கோல்ஸ்-டெய்லர் ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.



    நிக்கோல்ஸ் 30 ரன்களும்(நாட் அவுட்), டெய்லர் 37 ரன்களும் (நாட்  அவுட்) சேர்க்க, 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது நியூசிலாந்து. இதனால், 8 விக்கெட்  வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை மிரட்டிய டிரென்ட் போல்ட், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 1-3 என நியூசிலாந்து பின்தங்கி உள்ளது. கடைசி போட்டி வெலிங்டனில் 3-ம் தேதி நடக்கிறது.  #NZvIND #NewZealandWon
    ஹாமில்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 92 ரன்களில் இந்திய அணியை சுருட்டியது. #NZvIND #TeamIndia
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    இந்திய அணியைப் பொருத்தவரை எஞ்சிய இரு போட்டிகளும் சம்பிரதாய போட்டிகள்தான். எனவே, பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் விக்கெட்டை இழந்தனர். தேனீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியபோதும், பேட்ஸ்மேன்களால் களத்தில் நீடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் பாண்டியா, 16 ரன்னுடன் நடையைக் கட்டினார். புவனேஸ்வர் குமார் 1 ரன், குல்தீப் யாதவ் 15 ரன்கள், அகமது 5 ரன்களில் ஆட்டமிழக்க, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா, 92 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்  குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து நிகோலஸ்-கேன் வில்லியம்சன் ஜோடி விளையாடியது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 33 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. #NZvIND
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.



    துவக்க வீரர்களாக உற்சாகத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களே எடுத்த போல்ட் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். 33 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.

    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ்,  சுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம்,  ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கிராண்ட்ஹோம், டாட் ஆஸ்ட்லே, மேட் ஹெண்ட்ரி, டிரென்ட் போல்ட். #NZvIND

    இந்திய அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NZvIND #INDvNZ #DarylMitchell #BlairTickner
    வெலிங்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 6, 8 மற்றும் 10-ந்தேதிகளில் இந்த போட்டி நடக்கிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. டேரியல் மிக்சேல், பிளேயர், டிக்ளேர் ஆகிய 2 புதுமுக வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணி வருமாறு:-

    வில்லியம்சன் (கேப்டன்), கிரான்ட் ஹோம், பிரேஸ்வெல், டெய்லர், குப்தில், ஸ்காட், டேரியல் மிக்சேல், காலின் முன்ரோ, சான்ட்னெர், சவுத்ரி, ஸ்காட் குக்ஜிலியின், டிம் சிபெர்ட், பெர்குசன் (முதல் 2 போட்டி), பிளேயர் டிக்னெர் (3-வது போட்டி மட்டும்). #NZvIND #INDvNZ #DarylMitchell #BlairTickner
    ×