search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்ததையடுத்து நிதானமாக விளையாடி வருகிறது. #NZvIND #TeamIndia
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மாங்கானுவில் நடந்த 2வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி உள்ளது.  இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.



    அந்த அணியில் கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோன்று இந்திய அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளார். விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா விளையாட இருக்கிறார்.

    நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் 13 ரன்களிலும், முன்ரோ 7 ரன்னிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நியூசிலாந்து நிதானமாக விளையாடி வருகிறது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். அடித்து ஆட முற்பட்ட டாப் ஆர்டர் வீரர்கள், குறைந்த ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அணியின் ரன் ரேட் சரியத் தொடங்கியது. அதன்பின்னர், குல்தீப் யாதவ் சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 166 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல், பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டு அரை சதம் கடந்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசிய அவர், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டான பெர்குசனை (12) சாகல் வீழ்த்த, நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த வெற்றியின் மூலம், 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3வது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  #NZvIND #TeamIndia
    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடி வரும் இந்திய துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



    இந்தியா தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டானார். #NZvIND #TeamIndia
    ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். #ShikharDhawan #BrianLara
    நேப்பியர்:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தவான் 10 ரன்னை எடுத்த போது 5 ஆயிரம் ரன்னை தொட்டார்.

    119 ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் தவான் 5 ஆயிரம் ரன்னை எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை லாராவுடன் (வெஸ்ட் இண்டீஸ்) இணைந்து பெற்றார்.

    ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), 101 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), விராட்கோலி (இந்தியா) 114 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர். லாராவும், தவானும் 118 இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்தனர். இந்த இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.



    வில்லியம்சன் (நியூசிலாந்து) 119 இன்னிங்சிலும், கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) 121 இன்னிங்சிலும் டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்க) 124 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர்.

    ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்னை எடுத்த 13-வது இந்தியர் தவான் ஆவார்.

    டெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,221), டிராவிட் (10,768), விராட் கோலி (10,387), டோனி (10,192), அசாருதீன் (9378), யுவராஜ்சிங் (8609), ஷேவாக் (7995), ரோகித்சர்மா (7650), ரெய்னா (5615), அஜய் ஜடேஜா (5359), காம்பீர் (5238) ஆகியோர் வரிசையில் தவான் இணைந்தார். #ShikharDhawan #BrianLara
    நேப்பியரில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சினால் நியூசிலாந்து அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #NZvsIND
    நேப்பியர்:

    ஆஸ்திரேயாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், முதலாவது ஆட்டம் நேப்பியரில் இன்று நடைபெற்று வருகிறது.  

    உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

    போட்டியின் துவக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். துவக்க வீரர்கள் குப்தில் 5 ரன்னிலும், முன்ரோ 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளை முகமது சமி கைப்பற்றினார். அதன்பின்னர் டெய்லர் (24), லாதம் (11) ஆகியோரை சாகல் வெளியேற்றினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தவும் போராடினார். எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ரன்ரேட் உயரவில்லை. வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.



    மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி, 38 ஓவர் மட்டுமே தாக்கு பிடித்து 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது சமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #NZvsIND
    மவுண்ட் மவுங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #NZvSL #ThisaraPerera
    மவுண்ட் மவுங்கானுய்:

    நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
     
    கொலின் முன்றோ சிறப்பாக ஆடி 87 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 90 ரன்னில் அவுட்டானார். கடைசி வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீசம் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
     
    இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.



    அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் திசாரா பெரேரா வெற்றிக்காக போராடினார். அவர் அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார். #NZvSL #ThisaraPerera
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 423 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது நியூசிலாந்து. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லாதம் 176 ரன்னில் அவுட்டானார். நிக்கோல்ஸ் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணியின் 2வது இன்னிங்சில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். சண்டிமால் 56 ரன்னிலும், மெண்டிஸ் 67 ரன்னிலும் அவுட்டாகினர். ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின், ரோஷன் சில்வா 18 ரன்னிலும், நிரோஷன் டிக்வெலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது. தில்ருவான் பெராரா 22 ரன்னும், சுரங்க லக்மால் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.



    இந்நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி மேலும் 5 ரன்கள் சேர்த்த நிலையில் 236 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது. #NZvSL
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லாதம் 176 ரன்னில் அவுட்டானார். நிக்கோல்ஸ் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-வதுநாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். இருவரும் சேர்ந்து 117 ரன்கள் சேர்த்தனர். சண்டிமால் 56 ரன்னிலும், மெண்டிஸ் 67 ரன்னிலும் அவுட்டாகினர். 

    அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின், ரோஷன் சில்வா 18 ரன்னிலும், நிரோஷன் டிக்வெலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    4வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. தில்ருவான் பெராரா 22 ரன்னும், சுரங்க லக்மால் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது. #NZvSL
    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது. #NZvSL

    கிரைஸ்ட்சர்ச்:

    இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 178 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. சவுத்தி அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.

    நியூசிலாந்தின் வேகப்பந்து வீரர் போலட்டின் அதிரடியான பந்து வீச்சால் இலங்கை அணி நிலைகுலைந்தது. அவர் 15 பந்துகளில் 4 ரன் கொடுத்து இலங்கை அணியின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் 4 வீரர்கள் பேரைரா, லக்மல், சமிரா, குமார ‘டக்அவுட்’ ஆனார்கள்.

    அவர் வீசிய 4-வது பந்தில் சில்வா (21 ரன்) ஆட்டம் இழந்தார். 5-வது பாலில் பவுண்டரி கொடுத்தார். அடுத்த பந்தில் ரன் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்த 2 ஓவர்களில் அவர் 3 விக்கெட்டையும், 2 விக்கெட்டையும் ரன் கொடுக்காமல் கைப்பற்றினார்.

    போலட்டின் அதிரடியான பந்து வீச்சில் இலங்கை அணி 41 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. மேத்யூஸ் 33 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    74 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் ராம்டாம், லாதம் அரைசதம் அடித்தனர். ராவல் 76 ரன்னில் ஆட்டம் இழந்தார். #NZvSL

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. #SLvNZ
    வெல்லிங்டன்:

    இலங்கை அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி 20 போட்டியில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா, திமுத் கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.



    கருணரத்னே சிறப்பாக ஆடி அரை சதமடித்த அவர் 79 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 83 ரன்னிலும் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 87 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. நிரோஷன் டிக்வெலா 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், நீல் வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #SLvNZ
    ×