search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீக்கியர்கள்"

    இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் சீக்கியர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வாகா எல்லை வழியாக சென்று பாகிஸ்தான் செல்வார்கள்.

    புதுடெல்லி:

    சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது.

    அங்கு புகழ் பெற்ற குருத்துவாரா அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. குருநானக்கின் பிறந்த நாளையொட்டி சீக்கியர்கள் இந்த கோவிலுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.

    இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் அங்கு செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விசா வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஏற்கனவே சில நேரங்களில் இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அனுமதி தர மறுத்து இருக்கிறது.

    இந்த நிலையில் குருநானக்கின் 552-வது ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புனித யாத்திரை செல்ல ஏராளமான சீக்கியர்கள் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    குருநானக் பிறந்த ஊருக்கு செல்ல 8 ஆயிரம் சீக்கியர்களுக்கு அனுமதி

    உலகம் முழுவதும் இருந்து 8 ஆயிரம் சீக்கியர்கள் இதில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.

    ஆனால் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. மற்ற சீக்கியர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் ஆவர்.

    இந்தியாவில் இருந்து செல்லும் சீக்கியர்கள் வாகா எல்லை வழியாக சென்று பாகிஸ்தான் செல்வார்கள். பின்னர் அங்குள்ள வாகனங்கள் மூலம் அவர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

    இதையும் படியுங்கள்...18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 15 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. #AntiSikhRiots #SupremeCourt
    புதுடெல்லி:

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது டெல்லியின் திரிலோக்பூர் பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 1996ம் ஆண்டு 89 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 70 பேரின் தண்டனையை உறுதி செய்து, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மீதமுள்ள 19 பேரில் 16 பேர் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது மரணம் அடைந்துவிட்டனர். 3 பேர் தலைமறைவாக இருந்ததால், அவர்களின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து, 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 15 பேரையும் இன்று விடுவித்து தீர்ப்பளித்தது.

    குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததாலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் நேரடியாக சாட்சியம் அடையாளம் காட்டாததாலும் 15 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். #AntiSikhRiots #SupremeCourt
    ஆன்-லைன் விற்பனை நிறுவனத்தில் தரை விரிப்பில் பொற்கோவில் படம் இடம் பெற்றதை கண்டித்து அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. #Amazon #Doormat #Toilet #GoldenTemple
    நியூயார்க்:

    பிரபல ஆன்-லைன் விற்பனை நிறுவனம் அமேசான். இந்த நிறுவனம் மூலம், விற்பனை செய்யப்பட்ட தரை விரிப்புகளில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.

    இது சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் கூட்டமைப்பு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியது.



    அதில், இதுபோன்று ஆட்சேபனைக்குரிய பொருட்களை விற்பனை செய்ய நிரந்தர தடைவிதிக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என உறுதி அளிக்க வேண்டும் என்றும் அமேசான் நிறுவனத்துக்கு சீக்கியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    சீக்கியர்கள் ஆட்சேபனை தெரிவித்த சில மணி நேரத்தில் சர்ச்சைக்குரிய அந்த பொருட்கள் அமேசான் விற்பனை தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.  #Amazon #Doormat #Toilet #GoldenTemple 
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு ஷிரோமணி அகாலி தளம் சார்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
    புதுடெல்லி:

    இந்தியாவில் 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வமாக 2800 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், சுமார் 8000 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 34 ஆண்டு நிறைவையொட்டி, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு டெல்லியில் இன்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

    இதில், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். 

    இப்போராட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ‘எங்கள் சமுதாயம் 34 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். இந்த கொடுமை இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஆகும். யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை நீதித்துறை ஏன் தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை?’ என ஆதங்கம் தெரிவித்தார். #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
    ×