search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குனர்"

    • ஷங்கர் தாதா சிந்தாபாத், வாண்டட், ரவுடி ராத்தோர், தபங் போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கினார்.
    • ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

    காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். பின் தெலுங்கு திரையுலகில் "நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா." என்ற படத்தின் மூல இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தின் ரீமேக்தான் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடித்து வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம்.

    பின் அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தை இயக்கினார். மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ஒரு மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பார்.

    போக்கிரி படத்திற்கு பிறகு இந்தி திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார் ஷங்கர் தாதா சிந்தாபாத், வாண்டட், ரவுடி ராத்தோர், தபங் போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கினார்.

    தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இன்று 51- வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபுதேவாவிற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பின் சினு இயக்கத்தில் ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா மற்றும் வேதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் பேட்ட ராப். படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் போஸ்டரை பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.
    • வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் - 2' படத்தை இயக்க தொடங்கினார்.

    இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




    தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது 'இந்தியன்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    எனவே விரைவில் இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல்  முடிந்ததும் இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டது.

    இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது.
    • இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

    இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.

    இந்நிலையில் வருகிற 15- ந்தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது. இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை தடபுடலாக நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்து உள்ளது.
    • GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

    வருகிற 14 - ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது.விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ள GOAT படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உருவாகி உள்ளது.

    கடந்த பல மாதங்களாகவே விஜய் கண்டிப்பாக அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மேலும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.




    வருகிற 2026- ல் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார் .தளபதி -69' படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தளபதி - 69 படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்து வருகிறது.இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜெ. பாலாஜி ,வெற்றிமாறன், எச்.வினோத் உள்ளிட்டோரில் ஒருவர் தான் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்து உள்ளது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்து உள்ளார்

    GOAT படப்பிடிப்பு முடிந்ததும் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டை காட்சி இதில் இடம் பெறுகிறது.
    • இந்த படத்திலும் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK-23 புதிய ஆக்ஷன் படத்தில் சிவகார்த்திகேயன்நடிக்கிறார். கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

    தற்போது இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் 3- வது முறையாக இணைந்து உள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ்' இந்த படத்தை தயாரிக்கிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கியது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கும் முதல் ஷெட்யூல் முன்னதாகவே முடிவடைந்து உள்ளது. தற்போது பாண்டிச்சேரியில் 2- வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

    இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்க இணைந்து உள்ளார். சிவகார்த்திகேயனுடன் வில்லன் நடிகர் மோதும் ஒரு பயங்கர சண்டை காட்சி இதில் இடம் பெறுகிறது.




    இந்த சண்டை காட்சி பார்வையாளர்களை, ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் எடுக்கப்பட உள்ளது. 'துப்பாக்கி' படத்தில் வித்யுத் ஜம் வாலின் 'வில்லன்' கேரக்டர் ரசிகர்களிடம் சிறந்த பாராட்டு பெற்றது. அந்த படத்துக்கு வில்லன் வேடம் மிக பொருத்தமாக அமைந்தது.

    அதுபோல இந்த படத்திலும் வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்து உள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார்
    • லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார்.சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்துடன் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.




    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார்.

    மேலும் அதுபோல விஜய் மகனுக்கும்லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    இந்தப்படம் 'கிரிக்கெட்' மையமாக கொண்ட கதையாகும். அது தொடர்பான 'ஸ்க்ரிப்ட்' உருவாக்கும் பணியில் சஞ்சய் தற்போது தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்
    • விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் பகிர்ந்துள்ளார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்"தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்"

    என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு உள்ளார்.

    நயன்தாரா அடுத்ததாக 'டெஸ்ட்' மற்றும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்களில் நடிக்கிறார்.அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அவர் கடைசியாக 'அன்னபூரணி' படத்தில் நடித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு , இந்தி , மலையாள சினிமாவிலும் ஓம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார். 500-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
    • களவாணி, நாணயம், அனேகன், மாரி, நீதானே என் பொன்வசந்தம், திருச்சிற்றம்பலம் போன்ற பல பிரபலமான படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரில் ஒருவர் ஓம் பிரகாஷ். தெலுங்கு , இந்தி , மலையாள சினிமாவிலும் ஓம் பிரகாஷ் பணியாற்றியுள்ளார். 5௦௦-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 15 வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    களவாணி, நாணயம், அனேகன், மாரி, நீதானே என் பொன்வசந்தம், திருச்சிற்றம்பலம் போன்ற பல பிரபலமான படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலின் மிகவும் ஹிட்டானது. பாடல் ஹிட்டாவதற்கு ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் படத்தில் பெரும்பாலும் காட்சிகள் காட்டுக்குள் இரவு நடப்பது போன்று அமைந்து இருக்கும்.அக்காட்சிகளை ஓம் பிரகாஷ் மிகவும் திறமையுடன் கையாண்டு இருப்பார்.

    இந்நிலையில் ஓம் பிராகாஷ் ஒளிப்பதிவாளர் அவதாரத்தில் இருந்து இயக்குனர் அவதாரத்திற்கு மாறியுள்ளார்.

    தனுஷை கதாநாயகனாக வைத்து படத்தை இயக்கவிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பில்ம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் கதையை தனுஷ் எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பற்றிய அதிகாரப் பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'துப்பறிவாளன் - 2.' படத்தின் மூலம் முதல் பட இயக்குனர் ஆக லண்டன், அஜர்பைஜான், மால்டாவுக்கு செல்கிறேன்
    • துப்பறிவாளன்- 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .

    ஆக்ஷன் கிங்' அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியை தொடங்கியவர் விஷால். அதன் பிறகு 2004 -ல் 'செல்லமே' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல தொடக்கத்தை தந்தது.

    அதன்பின் 2005- ல் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் 'சண்டைக்கோழி' படத்தில் நடித்து சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.இந்த படம் அவருக்கு திருப்பு முனையை தந்தது.

    'திமிரு', தாமிரபரணி, மலைக்கோட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன்- 2' படம் மூலம் புதிய இயக்குநராக மாறி இருக்கிறார். 

    இது தொடர்பாக அவர் தனது ' எக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-


     



    " எனது சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு எனது கனவு, எனது லட்சியம், வாழ்க்கையில் நான் என்னவாக வேண்டும் என்ற எனது முதல் எண்ணம் தற்போது நிறைவேறி உள்ளது.நான் ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சவாலான ஒரு அறிமுக இயக்குனர் பொறுப்பை அடைய போகிறேன்.

    'துப்பறிவாளன் - 2.' படத்தின் மூலம் முதல் பட இயக்குனர் ஆக லண்டன், அஜர்பைஜான், மால்டாவுக்கு செல்கிறேன்.இதனை விளக்க வார்த்தைகள் இல்லை, ஆனால் என் அப்பாவை நினைவு கூர்கிறேன் . ஜி.கே. ரெட்டி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார். கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது.

    எது வந்தாலும் பரவாயில்லை, உங்கள் கனவுகளை விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும் தொடருங்கள், ஒரு நாள் அது நனவாகும்.ஒரு நடிகனாக இந்த அடையாளத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. துப்பறிவாளன்- 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .

    ஒரு இயக்குனராகவும் எனது கனவை முன்னெடுத்துச் சென்ற மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலை வேண்டாம் நிஜ வாழ்க்கையிலோ அல்லது ரீல் வாழ்க்கையிலோ நான் யாரையும் கைவிடுவதில்லை. இலக்கை அடையவோம் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது.
    • இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

    2016 ஆண்டு வெளியாகிய இறுதிச்சுற்று படம் குத்துச் சண்டையை மையமாக எடுக்கபட்ட படம். இப்படத்தில் மாதவன்,ரித்திக்கா சிங் நடித்தனர். சுதா கொங்கரா இயக்கினார். இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

    இறுதிச்சுற்று படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியானது. ரித்திக்கா சிங்கை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்தியவர் சுதா கொங்கரா. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்தார்.மாதவனின் சிறந்த நடிப்பும், ரிதிக்கா சிங்கின் நடிப்பும் மக்களிடையே பேசப்பட்டது. இறுதி சுற்று அமேசான் மற்றும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது.  இன்று முத்தமிழ் மன்றத்தில் நடக்கும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  விருது வழங்கி கவுரவித்தனர்..

    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

    சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.

    'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.


    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் பவித்ரா, பொது மேலாளர் தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.


    இதில் அந்தோணி தாசன் பேசியதாவது, "சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குனராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன். ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குனர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன்.

    குளோப் நெக்சஸின் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ஏப்ரல் 14 -ஆம் தேதி நடைபெறும் 'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்' இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி என்றார்.

    • விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.


    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி " என்று பதிவிட்டுள்ளார்.

    ×