search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98066"

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர். #IndianOpenBadminton #PVSindhu
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் முக்தா அக்ரியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) போராடி தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 14-21, 22-20, 21-11 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரர் டாமி சுகியர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார். சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர். #IndianOpenBadminton #PVSindhu
    கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். 
     
    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பா.ஜ.க. அரசு வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில்,  கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

    கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest  #PramodSawant
    காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது.
    எப்போதும் போல, எல்லோரையும் போல யாரும் இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும்போது, மாற்றம் பெறாத எதுவும், வித்தியாசமாக இல்லாத எவருடைய வாழ்வும் அத்தனை வரவேற்பைப் பெறாது. வந்து போவதில் என்ன இருக்கப் போகிறது என்று வித்தியாசமாக இருப்பவர்களே செய்தியிலும், சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர்.

    எப்போதோ படித்தது. ஆப்பிரிக்காவில் அத்தனை அதிகமாய் நாகரிகம் பரவாத நேரம். பிரபலமான செருப்பு நிறுவனம் தன் காலணிகளை அங்கே சந்தைப்படுத்துவதற்காக ஒரு விற்பனைப் பிரதிநிதியை அனுப்புகிறது. போனவன் திரும்பிவந்து தந்த பதில், “அங்கே யாருமே செருப்பு அணியாதபோது, எப்படி செருப்பு விற்பது?” சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு இளைஞன் சென்றிருக்கிறான்.

    சென்றடைந்த சில நாள்களுக்குள் ஆயிரக்கணக்கான செருப்புகளைத் தருவித்துக் கொண்டதோடு, செருப்பு அணிவது எத்தனைப் பாதுகாப்பானது என்பதை அங்குள்ள மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, சிலருக்கு இலவசமாகவும், சிலருக்குக் குறைந்த விலையிலும் விற்றுச் சந்தைப்படுத்த தொடங்கியதைக் கூறுகிறான். இதுதான் வித்தியாசமாக சிந்திப்பதென்பது.

    புதிதாகச் சிந்திப்பது இப்போதல்ல, அப்போதே இருந்திருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்திக்காமலும், கவலைப்படாமலும் உழைத்துக் கொண்டிருந்தவர் தாம் புதிதாகக் கண்டுபிடித்த மின் குமிழை (பல்ப்) பத்திரிகைச் செய்தியாளர்களிடம் காட்டி எரிவதை அறிமுகப்படுத்த விழைகிறார். தன் உதவியாளரை அழைத்து அதை பத்திரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்த விடுதிக்குக் கொண்டுவரக் கொடுத்திருக்கிறார்.

    உதவியாளர் பாவம், வரும் வழியில் அதைக் கீழே தவறவிட்டு உடைத்து விடுகிறார். வழக்கம் போலத் தோல்வி என்றாலும், துவண்டு போகாத அவர் மறுவாரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதே நபரிடம் அதைக் கொண்டுவரப் பணித்தபோது அவருடைய நண்பர்கள் “இவன் பொறுப்பற்றவனாயிற்றே, மறுபடியும் உடைத்து விடுவானே” என்றபோது, “ஒருமுறை தவறு செய்தவன்தான் மறுமுறை கவனமாக இருப்பான்” என்று பதிலளித்தார் எடிசன்.

    “இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
    அதனை அவன் கண்விடல்”

    என்பது நிர்வாகக் கலை. எவன் சரியாகச் செய்வான் என்பதை விடவும், எவன் பொறுப்பாகச் செய்வான் எனும்போது தவறு செய்தவன்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று வித்தியாசமாக எடிசன் நினைத்ததுகூட திறமையான நிர்வாகக் கலைதான்.

    பல நிறுவனங்களில் ‘வேலை தெரியாது, செய்ய முடியாது’ என்று சொல்லியே பலர் வேலைகளிலிருந்து நழுவிக் கொள்வார்கள். அதையே காரணமாக வைத்து பெரிய பொறுப்புகளிலிருந்தும் தம்மை பத்திரமாக விடுவித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு “வேலை கள்வர்கள்” என்றுகூட ஒரு பெயருண்டு. அவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வேலை வாங்கிக் கொள்வது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.

    சோம்பேறிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பது பழைய சித்தாந்தம். ஆனால் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் “சோம்பேறிகளிடம்தான் வேலைகளை ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் சீக்கிரமாகச் செய்து முடிக்கும் எளிமையான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்” என்பார். இதுவோர் வித்தியாசமான கோட்பாடு. வெற்றிகரமான விளைவுகளுக்கு உகந்ததாக அவர் கண்டுபிடித்த இக்கோட்பாடு பெரிதும் வரவேற்கத்தக்கது.

    மற்றுமோர் மாற்றுச் சிந்தனை. நியூயார்க் டைம்ஸ் நிருபர் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு காலம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உணர்த்துவார். முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு உணவூட்டும் அமெரிக்கத் தாய், தன் பிள்ளைகள் சிதறடிக்கும் உணவைக் காட்டி, “இப்படியெல்லாம் உணவை வீணடிக்கிறாயே, இந்த உணவுக்குக்கூட வழியில்லாமல் இந்தியாவிலும், சீனாவிலும் எண்ணற்ற குழந்தைகள் தவிக்கிறார்கள்” என்று கூறியதுபோக, இப்போது, “இப்படி உணவை வீணடிக்கிறாயே. இன்னும் சில நாள்களில் இதுகூட நமக்குக் கிடைக்காமல் செய்ய இந்திய சீன இளைஞர்கள் நமது வாய்ப்புகளை இங்கு வந்து பறிக்கப் போகிறார்கள்” என்று எச்சரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அச்சுறுத்தல் என்பது அறிவுறுத்தலைவிடவும் வலிமையானது.

    காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது. இரண்டு இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் கல்வித் தகுதியிலும் நிறுவனத் தேர்விலும், நேர்காணலிலும் சமமாகவே மதிப்பெண்கள் பெற்றிருக்க யாரைத் தேர்வு செய்வது, யாரைத் தவிர்ப்பது என்று நிர்வாகம் தவித்தபோது இருவரையும் அழைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறார் நிறுவனத் தலைவர்.

    “இந்த வேலை கிடைக்காவிட்டால் நீ என்ன நினைப்பாய் எப்படி உணர்வாய்” என்றபோது, “என்ன நினைப்பது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்வேன்” என்கிறான் முதல் இளைஞன். அடுத்த இளைஞனுக்கும் அதே கேள்வி. அதற்கு அவன் தந்த பதில், “உங்கள் நிறுவனம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். வேறென்ன நினைப்பது? “இரண்டாவது இளைஞனே தேர்ந்தெடுக்கப்படுகிறான். இது வித்தியாசமான பதில் மட்டுமல்ல, நம்பிக்கை மிகுந்த விவேகமான பதிலும்கூட. இதுதான் சிலரின் வெற்றி ரகசியம். வித்தியாசமாக சிந்தியுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

    ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டுக்கு பிறகு, தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    கொச்சியில் நேற்றிரவு நடந்த புரோ கைப்பந்து போட்டி 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. #ProVolleyballLeague
    கொச்சி:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.

    இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி, மும்பா வாலியை எதிர்கொண்டது. திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. கோழிக்கோடு அணியில் அதிகபட்சமாக அஜித் லால் 16 புள்ளிகள் சேகரித்தார். கோழிக்கோடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தனது முதல் லீக்கில் சென்னை அணியை தோற்கடித்து இருந்தது.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ்- ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. #ProVolleyballLeague

    சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என்று இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறினார். #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நியூசிலாந்தை வீழ்த்திய பின்னர் இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    ‘டாஸ்’ போடுவதற்கு முன்பு ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், ஒரு அணியாக இது போன்ற கடினமான சீதோஷ்ண நிலையை எப்படி சமாளிப்பது என்பதை சோதித்து பார்க்க விரும்பினோம். அதனால் தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தேன். ஒரு வேளை இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருந்திருந்தால், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருப்பேன். பந்து ‘ஸ்விங்’ ஆகும்போது எந்த மாதிரி பேட் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது தெரிந்து இருக்கும். முதல் 30 ஓவருக்குள் ரன்ரேட் மோசமாக இருந்தது. அதன் பிறகு 250 ரன்களை தாண்டியது நல்ல அறிகுறியாகும்.

    நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை 4-1 என்ற கணக்கில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த முறை இங்கு 0-4 என்ற கணக்கில் தோற்றோம். இப்போது சிறப்பாக விளையாடி சாதித்து காட்டியிருக்கிறோம்.

    விஜய் சங்கரின் பேட்டிங் அருமையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி விட்டார். அவர் ஆடிய விதத்தை பார்க்கும் போது, 50 ரன்களோ ஏன் 100 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். கேதர் ஜாதவ் 2-வது சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் போது, அணிக்கு சமச்சீர் தன்மை வந்து விடுகிறது. என்னை பொறுத்தவரை அவரை முறையான ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே பார்க்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் 6 அல்லது 7 ஓவர்கள் பந்து வீசுவதோடு விக்கெட்டும் வீழ்த்துகிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார். #NZvIND
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.



    விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'. 

    அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா,  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.


    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019-ல் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. #AUSvIND #AustraliaWon
    பெர்த்:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா 55 ரன்னிற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 எடுத்திருந்தது. விஹாரி 24 ரன்னுடனும், ரிஷப் பந்த் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்தியாவின் வெற்றிக்கு 175 ரன்கள் தேவை, கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய விஹாரி, மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ரிஷப் பந்த் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி வெளியேறியதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. யமேஷ் யாதவ் (2), இஷாந்த் சர்மா (0), பும்ரா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.



    இதனால் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் 2வது இன்னிங்சில் ஸ்டார்க், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 3வது ஆட்டம் மெல்போர்னில் 26-ம் தேதி தொடங்குகிறது. #AUSvIND #AustraliaWon
    பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். #TheresaMay #BrexitDeal #ConfidenceVote
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
     
    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்காகவும், ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.



    அதன்படி தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து தெரசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 317 எம்பிக்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார்.

    பிரதமர் மீது பாராளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார். #TheresaMay #BrexitDeal  #ConfidenceVote
    பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். #BJP #Congress #ElectionResult2018 #SoniaGandhi
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங் கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.



    இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியாகாந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார். #BJP #Congress #AssemblyElection2018 #SoniaGandhi 
    ×