search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ்ணு"

    காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர் கருடன். இவர் மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர். மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார்.
    மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர்.

    நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.

    இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.
    பெருமாளை திருப்பதி சென்று தரிசிப்பதற்கு ஒப்பானதாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள் தலங்கள் அமைந்துள்ளன.
    பெருமாளை திருப்பதி சென்று தரிசிப்பதற்கு ஒப்பானதாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள் தலங்கள் அமைந்துள்ளன. நவக்கிரகத் தலங்களாகவும் பெருமை பெற்ற இந்த ஆலயங்களை, பெருமாளுக்கு உகந்த ஏகாதசி நாளில் சென்று வழிபடுவது அனைத்து நலன்களையும் நல்கும்.

    ஆழ்வார்களில் பெரும் சிறப்பு பெற்ற நம்மாழ்வாரால் பாடப்பட்ட பெருமையும் இந்த நவதிருப்பதிகளுக்கு உண்டு. இந்தப் பாசுரங்கள் திருவாய்மொழியில் இடம் பெற்றுள்ளது.

    மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது.

    ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் ஒரு குகையில் ஓய்வெடுத்தார். ஓய்வெடுக்கும் வேளையில் மகாவிஷ்ணுவை கொல்ல வந்தான் முரன்.

    அப்போது விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண்ணாக உருவெடுத்து, முரனை அழித்தது. கண்விழித்த மகாவிஷ்ணு அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டதாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. மேலும் ‘ஏகாதசியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நான் அளிப்பேன்’ என்றும் மகாவிஷ்ணு அருள்புரிந்தார்.

    மன்னர் அம்பரிஷ், தீவிர விஷ்ணு பக்தர். அவர் நெடுங்காலமாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால் அம்பரிஷ் மன்னனின் உயிருக்கு ஆபத்து வந்தது. ஆனால் அவன் செய்த ஏகாதசி விரத பலனால், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் துர்வாசரை கொல்ல துரத்தியது. பயந்து போன துர்வாச முனிவர், அம்பரிஷ் மன்னனை சரணடைந்ததுடன், அவனுக்கு அளித்த சாபத்தையும் நீக்கினார். ஏகாதசி விரதத்தின் பலன் அப்படிப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும், அரகண்டநல்லூர் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவில்.

    இந்த கோவில் அரசமரத்தடியில் கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளது. கோவிலில் நரசிம்மர் மீது ஆண்டு முழுவதும் சூரிய ஒளி படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பு அம்சம் ஆகும். மகாவிஷ்ணு தனது நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பக்த பிரகலாதனை காப்பாற்றினார். அப்போது மகாவிஷ்ணு கருட வாகனத்தை பயன்படுத்தவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் தன் மீதே அமர்ந்து பயணம் செய்யும் மகாவிஷ்ணு இந்த முறை பரமபதத்தின் மூலம் தூணில் இருந்து தோன்றி பக்த பிரகலாதனை காப்பாற்றி காட்சியளிக்க காரணம் என்ன? தான் (கருடன்) ஏதாவது தவறு செய்து விட்டோமா? அதனால்தான் நம்மீது பயணம் செய்வதை மகாவிஷ்ணு தவிர்த்து விட்டாரோ என்று கருட பகவான் குழப்பம் அடைந்தார்.

    உடனே பூமிக்கு வந்து தென்பெண்ணை நதிக்கரையின் அருகில் உள்ள கருட வடிவிலான பாறையில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார். கருடனின் கடும் தவத்தை பார்த்த மகாவிஷ்ணு நேரில் வந்து கருடனின் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு கருடன், பக்த பிரகலாதனுக்கு நரசிம்மராக காட்சியளித்த நீங்கள், எனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கூறினார். இதைகேட்ட மகாவிஷ்ணு கருடன் முன்பு நரசிம்மராக காட்சியளித்தார்.அப்போது மகாலட்சுமியும், மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்து கருடனுக்கு காட்சியளித்த காரணத்தால் இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலுக்கு பல மகான்கள் வந்து தரிசித்து சென்றுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும். திருமண தடை நீங்கும். கண் சம்மந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும் கூறுகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாற்றுதல், ஹோமம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும் கொடுக்கிறார்கள்.
    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும்  கொடுக்கிறார்கள்.

    பெருமாளுக்கு பூஜை நடத்தப்படும் போது துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகர் போடும் துளசி இலை பெருமாளின் திருவடியில் விழும். அந்த  இலையை நாம் பிரசாதமாக வெறும்போது, பெருமாலின் அனுக்கிரகம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

    பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதை வைத்து, அதில் துலசி இலை கலந்து துலசி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் புண்ணிய நதி அல்லது அந்தந்த கோவில் தீர்த்தங்களையும் கலந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்.

    துளசி தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்க்கப்படுவதுண்டு. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது.

    வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

    ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில்  திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம்.
    இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். கஷ்டம், இன்பம் எதுவாக இருந்தாலும் கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் கடவுள் நம் கையைப் பிடித்து ஒரு நல்ல பாதையை
    நோக்கி அழைத்து செல்வார். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். மிக எளிய மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.

    ஓம் விஷ்ணுவே நமஹ
    ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ நாராயணா
    ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் .

    விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர்.
    மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. அவரை விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
    மஹாவிஷ்ணு தீயோரை தண்டித்து நல்லவர்களை காக்கும் கடவுள் மட்டுமன்று. எல்லாவற்றிலும் எல்லாமாக நிறைந்திருப்பவர். அவரை வழிபடுவதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

    ஒரு பௌர்ணமி அன்று, மஹாவிஷ்ணுக்கு முதல் பூஜையை தொடங்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த பூஜையை தொடர வேண்டும். இந்த பூஜை செய்வதால் மகிழ்ச்சி மட்டுமன்று, செல்வம் சேரும், புகழ் கிட்டும், பொருளாதார சிக்கல் தீரும்.

    மஹாவிஷ்ணு பூஜைக்கு தேவையான பொருள்கள் :

    நிறை நாழி நெல், துளசி தளம், வாசனை திரவியங்கள், இனிப்பு பலகாரங்கள், நெற்பொரி, செங்கதலிப்பழம், பால், தேன், இளநீர், துருவிய தேங்காய், வெல்லம் ஆகியன சேர்த்து பிசைந்த அவல், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் .

    பௌர்ணமியன்று, வீட்டிலுள்ள ஓர் அறையை சுத்தம் செய்து, கிழக்கு முகமாக ஒரு பீடம் அமைக்க வேண்டும். அந்த பீடத்தில் துளசி தளம் நிரப்பி அதன் மீது நிறை நாழி நெல் வைக்க வேண்டும்.

    துளசி தளத்தால் கட்டிய சரங்களால் நிறை நாழியை அலங்காரம் செய்ய வேண்டும். பின் அதற்கு மஞ்சள், குங்குமம் திலகமிடவும். அதனருகே, நெய் ஊற்றி ஏற்றிய விளக்கை வைக்கவும். தனியாக ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி, அதன் மீது மஞ்சள் தூள் அல்லது சாணத்தால் செய்த விநாயகரை வைத்து, மஞ்சள் குங்கும திலகமிடவும்.

    வீட்டில் இருபவருள் எவர் மூத்தவரோ அவரை பூஜை செய்ய சொல்லவும். முதலில் விநாயகரை பூஜித்து கற்பூர தூபம் காட்டி எல்லோரும் வணங்கவும் . அதற்கடுத்து நிறை நாழியிலுள்ள மஹாவிஷ்ணுவிற்கு கற்பூர தூபம் காட்டி, ஸ்ரீ மஹாவிஷ்ணு தோத்திரம், மஹாவிஷ்ணு நாமாவளி கூறி, துளசி தாழ் அர்ச்சனை செய்யவேண்டும். அதற்கு பிறகு கற்பூர தூப தீபம் காட்டி எல்லாரும் வணங்க வேண்டும்.

    இறைவனுக்கு படைத்த பிரசாதங்களை, பிறருக்கு கொடுத்து விட்டு பின்னரே வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த மஹா விஷ்ணு பூஜை செய்தால் மன மகிழ்ச்சியும், குடும்பத்தினர் அனைவர்க்கும் எல்லா நன்மைகளும் கிட்டும்.
    புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறிய விளக்கம் சொல்லப்படுகிறது.
    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் நம்மவர்களின் வழக்கம். மேலும் புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறிய விளக்கம் சொல்லப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.

    ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 6-வது ராசியாக வருவது கன்னி ராசி. சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழைந்து வெளிவரும் கால அளவே மாதமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சூரியன் கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் புரட்டாசி மாதம் ஆகும். கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் மகாவிஷ்ணுவின் சொருபம். எனவே தான் புரட்டாசி மாதத்தில், பெருமாளை வழிபடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

    புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், அந்த மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து துளசி நீரை பருக வேண்டும் என்று சாஸ்திரம் செல்கிறது.

    புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது, பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. புரட்டாசி மாதம் என்பது புதனின் வீட்டில் சூரியன் இருக்கக்கூடிய காலம். புதன் கிரகம் ஒரு சாத்வீகமான கிரகம். புதனை ‘சவுமியன்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சவுமியன்’ என்பதற்கு ‘சாது, சாத்வீகமானவர்’ என்று பொருள் உண்டு. அதிர்ந்து பேசாமல் இருப்பவர்களையே நாம் ‘சாது’ என்று அழைக்கிறோம்.

    புதனுக்குரிய உணவு என்பது உப்பு, காரம் இல்லாத உணவு தான். துவர்ப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளே புதனுக்குரிய உணவுகளாக இருக்கின்றன. இவரது உணவு வகையில் அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், சைவ உணவுகள் மட்டுமே இவருக்கானது. அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதாக ஆன்மிக ரீதியிலான விளக்கம் அளிக்கப்படுகிறது.

    அதே நேரத்தில் நாம் அறிவியல் ரீதியிலான விளக்கத்தையும் இங்கே பார்த்து விடுவோம். புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். மேலும் பூமியின் இயக்கத்துக்கு தகுந்தபடி நமக்கு செரிமானக் குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படுவதோடு, கெட்டக் கொழுப்பு உடலில் தங்கிவிடும் காலமும் இது தான். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

    தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து, மழை காலம் தொடங்கும் மாதம் ஆகும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகி இருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால் புரட்டாசி மாதத்தை ‘சூட்டை கிளப்பிவிடும் காலம்’ என்றும் சொல்லலாம்.

    இந்த காலமானது, வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி, உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் தான், நமது முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர்.

    அது மட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடும். இந்த நேரத்தில் காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும். அவற்றை கட்டுப்படுத்தும் அருமருந்து தான் துளசி. சளியைக் கட்டுப்படுத்தும் துளசியை பெருமாள் ஆலயங்களில் கொடுப்பார்கள். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். அங்கு துளசியை இலையாகவும், துளசி கலந்த தீர்த்தமாகவும் தருவார்கள். அதை பருகினால் வயிற்று பிரச்சினைகள் நீங்கும்.

    சாதாரணமாக சைவ உணவு நமது உடலுக்கு எல்லா வகையிலும் உகந்தது. ஆனால் பலராலும் அனைத்து நேரங்களிலும் சைவத்தை மட்டுமே சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள், இதுபோன்ற காலங்களிலாவது அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நல்லது.

    கடகம் ராமசாமி 
    புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.
    ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

    பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.
    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்
    கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் மூலவர் குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச்சிறப்பு கொண்டது. பாதாள அஞ்சனம் எனும் கல்லில், இந்த மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
    கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் மூலவர் குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச்சிறப்பு கொண்டது. பாதாள அஞ்சனம் எனும் கல்லில், இந்த மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    ஒரு காலத்தில் இந்த விக்கிரகத்தை, மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபர், பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் வைத்து வணங்கி வந்தார், கிருஷ்ணர்.

    கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாக தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்’ என்றார் கிருஷ்ண பகவான்.

    அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும், அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.

    இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். ‘இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான்’ என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பன்னெடுங்காலமாக சிவபெருமான் தவம் செய்த இடம் அது.

    அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த திருத்தலம் ‘குருவாயூர்’ என்றானதாக சொல்லப்படுகிறது. மேலும் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.
    தூய பக்தியின் முன் தவவலிமை ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
    முன்னொரு காலத்தில் சூரியவம்சத்தை சேர்ந்த அம்பரீஷர் எனும் சக்கரவர்த்தி, தனது நாட்டை சத்தியம் தவறாது ஆண்டு வந்தார். மக்களின் உயர்வுக்காக அரும்பாடுபட்டார். அதோடு தான் அரசராக இருந்தாலும், இவை யாவும் மாயை என்பதையும் உணர்ந்து, ஆத்ம சுகம் தரும் தெய்வங்களின் ஆராதனையிலும், தியானத்திலும் மட்டுமே மனதை செலுத்தி வந்தார். அதிலும் அவரின் மனதில் மகாவிஷ்ணு மட்டுமே ஆட்சி செலுத்தி வந்ததால், பெருமாளின் பக்தனாக திகழ்ந்தார்.

    பெருமாளுக்கு உண்டான விரதங்களையும் நியமப்படி கடைப்பிடித்து வந்தார். இந்த அரசர் ஒவ்வொரு துவாதசி விரதத்தின் போதும், பெருமாளை பூஜித்து தன்னை நாடி வரும் அதிதிகள் எனப்படும் இறை அடியார்களுக்கு, அன்னம் அளித்து அவர்களின் பசியைப் போக்கிய பின்பே உணவு உண்டு விரதம் முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அப்படி ஒரு துவாதசியன்று வழிபாடு மற்றும் தானங்களை முடித்து, அவர் உணவு உண்ணப்போகும் சமயம் முனிவர்களில் அதிக தவவலிமை கொண்டவரும், கோபத்திற்கும் சாபத்திற்கும் பெயர் பெற்றவருமான துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவர் வருகை தந்த செய்தியை அறிந்ததும், அம்பரீஷர் தன் பசி மறந்து உண்பதை விடுத்து முனிவரை வரவேற்றார். அவரையும் தன்னுடன் உணவருந்த வரும்படி அன்புடன் அழைத்தார்.

    அரசர் உணவுக்கு அழைத்ததும் ‘கொஞ்சம் பொறு மன்னா. நான் சென்று யமுனை நதியில் நீராடிவிட்டுத் தூய்மையுடன் வந்து உன் உணவை ஏற்கிறேன்’ எனக் கூறிச்சென்றவர், வெகுநேரம் கழிந்தும் வரவில்லை.

    மன்னருக்கோ விரத நேரம் முடியும் தருணம் வந்துவிட்டது. அந்த நேரம் தாண்டி விட்டால், இத்தனை நாள் இருந்த விரதம் பலனளிக்காமல் போய்விடுமே என்ற கவலையில் ஆழ்ந்தார். அதே நேரம் அடியார்களுக்கு முன்பாக தான் உண்டால், அந்த பாவமும் வந்து சேருமே என்று வருந்தினார்.

    அப்போது அவையில் இருந்து ஆன்றோர்கள், அம்பரீஷரிடம் ‘மன்னா! இறைவனுக்கு செய்த அபிஷேக நீரை எடுத்து அருந்தினால், துவாதசியில் விரதம் இருந்து பாராணை செய்த பலன் கிடைத்துவிடும். அதே நேரம் அடியவருக்கு முன் உணவருந்திய பாவமும் வராது. இவ்வாறு செய்வதே நலம்’ என்று தர்மத்தின் நியதியை அவருக்கு எடுத்துரைத்தனர். அரசனும் அவர்கள் கூறியபடியே உரிய காலத்தில் தீர்த்தம் அருந்தி விரதத்தை முடித்தார்.

    துர்வாசர் யமுனையில் நீராடி விட்டு வந்ததும், அவருக்கு மன்னன் தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தது தெரிந்து விட்டது. அவர் மன்னனின் மேல் கடுங்கோபம் கொண்டு, தன்னுடைய சடைமுடியில் இருந்து சில ரோமங்களை எடுத்து அவற்றை பெரிய பூதமாக்கி, அரசனின் உயிரை எடுக்க உத்தரவிட்டார்.

    அம்பரீஷரோ சிறிதும் பயப்படவில்லை. பெருமாளின் பக்தனான தான் செய்தது சரியே என்று பெருமாளின் நினைவுடன், தான் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றார். தான் வழிபடும் திருமாலிடமே தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, விஷ்ணுவின் நினைவிலேயே ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

    ஆபத்தில் இருக்கும் தன்னுடைய பக்தனைக் காக்க சித்தம் கொண்டார் மகாவிஷ்ணு. அடுத்த நொடி அவரது கையில் இருந்த சுதர்சன சக்கரம் பாய்ந்து சென்று, அம்பரீஷரை நெருங்கிய பூதத்தை கொன்றது. பின்னர் அந்த பூதத்தை ஏவிய துர்வாச முனிவரிடம் சென்றது சுதர்சன சக்கரம். இதை சற்றும் எதிர்பாராத துர்வாச முனிவர், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் சுதர்சன சக்கரம் அவரை விடுவதாக இல்லை.

    தேவலோகம் சென்ற துர்வாச முனிவர், தன்னைக் காக்கும்படி தேவலோக தலைவரான இந்திரனிடம் வேண்டினார். அவரோ, ‘விஷ்ணுவின் சக்கரத்தை எதிர்க்க எவராலும் முடியாது. உங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால், விஷ்ணுவிடமே தாங்கள் சென்று சரண் அடையுங்கள்’ என்று விலகி விட்டார்.

    துர்வாசருக்கு வேறு வழியில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பெருமாளிடம் சென்று சரணடைந்தார்.

    பகவானோ ‘நான் என் அடியார்களுக்கு மட்டுமே அடங்கியவன். பக்த சிரோமணியான அம்பரீஷனைக் காக்க இச்சக்கரம் புறப்பட்டது. இதை என்னால் தடுக்க முடியாது. அம்பரீஷன் மனது வைத்தால் மட்டுமே உம்மைக் காப்பாற்ற இயலும். அவனைச் சரணடையும்’ என்றார்.

    துர்வாச முனிவருக்கு வேறு மார்க்கம் இல்லை. ஒரு சிறந்த பக்தனிடம் தான் தோல்வியுற்றதை அவர் மனம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

    இப்போது துர்வாச முனிவர், அம்பரீஷரின் அரண்மனை நோக்கி புறப்பட்டார். சுதர்சன சக்கரம் அவரை துரத்துவதை நிறுத்தவே இல்லை. துர்வாச முனிவர், அம்பரீஷரை சரணடைந்தார். அவர் முனிவருக்கு பெருந்தன்மையுடன் அபயம் அளித்ததுடன், சுதர்சன சக்கரத்திற்கு வழிபாடுகள் செய்து, அதைச் சாந்தப்படுத்தினார். மேலும் துர்வாச முனிவரை மன்னித்து அருளும்படியும் வேண்டினார்.

    சுதர்சன சக்கரமும், பக்தனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து மீண்டும் திருமாலின் கரத்தில் போய் புகுந்து கொண்டது.

    துர்வாசரும் அரசரிடம் மன்னிப்பு கோரி தன் உயிரைக் காப்பற்றியதற்கு நன்றி தெரிவித்தார். நிலையறியாத தன் கடுங்கோபம் ஏற்படுத்திய ஆபத்தில் இருந்து தப்பிய துர்வாசர், தூய பக்தியின் முன் தன் தவவலிமை ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்தார். 
    ×