search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலை ஊர் மக்கள் சார்பாக புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 3 கால யாகசாலை பூஜை செய்து, பின்னர் யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கொண்டு மேள வாத்தியம் முழங்க வலம் வந்த சிவாச்சாரியார்கள் முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராம மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பாலாபிஷேகம் செய்து வழிபாடு
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி,

    வாணியம்பாடி தொகுதி புல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மேல்பள்ளத்தூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊர் கவுண்டர் டி.தங்கவேல், தர்மகர்த்தாக்கள் பி.கே. ரவி, மகேந்திரன், ரமேஷ், பூஜாரி பெரிய மாணிக்கம், கோல்கார் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள்நாதன், துணைத் தலைவர் செல்லப்பன், வார்டு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவை நடத்தினர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய கும்பாபிஷேக விழா யாக சாலையை பிச்சை குருக்கள் பார்வையிட்டார்,
    • 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன் கும்பாபி ஷேகமும் நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ந் தேதி ஆன்மீக விழாவும், 29-ந் தேதி அரசியல் விழாவும், 30-ந் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன.

    வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் மற்றும் குழுவினர் பசும்பொன் வந்து யாகசாலை பூஜை பணிகளை பார்வையிட்டு சிவாச்சாரியார்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை விக்னேசுவரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும் 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணி அளவில் அன்னதானம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல், சத்தியமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேக விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள்‌, திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர் கோவில் கட்டி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவர் நினைவாலயத்தில்2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 22 ஆண்டு களுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷே கமும் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந்தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந்தேதி ஆன்மீக விழாவும், 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர், சுப்ரமணியர் கோவில், முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடை பெறும். இதையொட்டி 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு தீபாரனையும் நடைபெற உள்ளன.

    இதுகுறித்து தேவர் நினைவாலைய பொறுப்பா ளர் காந்திமீனாள் நடராஜன் கூறுகையில், தேவர் நினைவிடத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவின ரால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட உள்ளது என்றார்.

    • கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
    • கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள மண்டபங்கள் தூய்மை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள், கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    இந்நிலையில் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கும்பாபிஷேகத்தின்போது மூலவர் சிலையை பாதுகாத்திடவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஆன்மிக பெரியோர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர், சிற்ப சாஸ்திரம் கற்று அறிந்த ஸ்தபதிகள், ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதியரசர் பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள், பழனி ஸ்தல அர்ச்சர்கள் பிரதிநிதி கும்பேஸ்வர குருக்கள், ஆகம வல்லுநர் செல்வசுப்பிரமணிய குருக்கள், பழனி திருமஞ்சன ஊழியர்கள் பிரதிநிதி பழனிசாமி, சென்னை தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, ஸ்தபதி செல்வநாதன், முதுகலை சித்த மருத்துவம் மற்றும் மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணைய அலுவலர் பிச்சையாகுமார், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சென்னை அறநிலையத்துறை தலைமையிட இணை ஆணையர், பழனி கோவில் இணை ஆணையர் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த முறை பழனி கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தின் போது மூலவர் சன்னதியில் உள்ள நவபாசான சிலை குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கும்பாபிஷேக பணிகளுக்கு முன்பாக சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தேவஸ்தானம் சார்பில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையான ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கான காசோலையை இணை ஆணையர் நடராஜன், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது.
    • கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி 2018-ம் ஆண்டு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதையடுத்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்தது.

    இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    குறிப்பாக கோவில் ராஜகோபுரம், சிறிய கோபுரங்கள், வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக அங்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. எனவே பணிகள் நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    • ரூ.68 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்மாள் கோவிலில் ரூ.68 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மேல்சாந்தியிடம் கோவிலின் நிறை, குறைகளை கேட்டறிந்தார். கோவில் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக கிடைக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.

    மேலும் அம்பாள் தேர், சாமி தேர்களை பார்வையிட்டு பழுது ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அமைச்சரிடம், தேர் நிலை நிறுத்தும் பகுதியை மழைநீர் தேங்காதவாறு உயர்த்த வேண்டும். பெரிய தேருக்கு கண்ணாடி இழை கூடாரம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குமரி மாவட்ட அறநிலையத்துறையில் ரூ.15 கோடி மீதம் இருப்பதாகவும், அந்த ரூபாயை வைத்து உடனடியாக அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவிலில் சாமி மற்றும் சிவகாமி அம்மன் சன்னதிகள், விமானங்கள், கொடிமர மண்டபம், அர்த்த மண்டபம், நமஸ்கார மண்டபம் போன்றவற்றை பழுது பார்த்தல், மின் இணைப்புகளை சரிசெய்தல், மேலவாசல் கோபுர திருப்பணிகள், சாமி உலா வரும் வாகனங்களை செப்பனிடுதல், மதிற்சுவரை சீரமைத்தல், முகப்பில் நிழற்கூடம் அமைத்தல், கோவிலுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நிர்வாகத்தின் மூலமும் உபயதாரர்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான உதவிகளை செய்திடவும் தயாராக உள்ளோம். இந்த பணிகள் நிறைவுற்ற பிறகு வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட இணைக்கப்பட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் நகைகள் பாதுகாப்பு அலுவலர் பாரதி மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுரங்க மலைசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் இருந்து வரும் சுரங்க மலை சுவாமி கோவிலில் வருடபிஷேக விழாவை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக பால், தயிர், திருமஞ்சனம் முதலிய 7 பொருட்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகளால் பெரிய இடையன், சின்ன இடையன் கண்மாய்களில் இருந்து தீர்த்தங்களை தலையில் சுமந்து கோவில் முன்பாக உள்ள கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக தண்ணீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து ெகாண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பெரிய கோன், சின்ன கோன் வகையறா பங்காளிகள் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது.
    • யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி, தீர்த்த கலசம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக பூஜை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 6:45 மணி முதல் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் அருகே உள்ள குண்ணங்கல் பாளையம் பிரிவில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.
    • பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நிலையில், கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில், கோவில் முறையாக அளவீடு செய்து அதன் பின்னர் சுற்றுச்சுவர் தளம் அமைக்கும் பணி செய்ய வேண்டும். திருப்பணி நடைபெறுவது குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து செயல் அலுவலர் பிரேமா பேசுகையில், பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும். எனவே கோவில் திருப்பணி செய்வதற்கான தேதியை முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 23, 28, நவம்பர் 11, 13, 14, ஆகிய தேதிகள் திருப்பணி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் திருப்பணிக்கு ஸ்தபதி, மற்றும் கும்பாபிஷேக தேதி ஆகியவற்றை தீர்மானித்து, சர்வேயர் மூலம் அளவீடு பணி செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, கும்பாபிஷேகப் பணிகள் செய்யலாம், மேலும் இந்து அறநிலையத்துறை கோவில் என்பதால் அறநிலையத்துறை அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாது. கோவில் கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள் மூலம், திருப்பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு புதியதாக திருப்பணிகள் நடைபெற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 12-ம் ஆண்டு நிறைவ டைந்ததை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ராமேஸ்வரம் பவானி கூடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் ஆகியவைகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அனைத்து வேலைகளும் நன்மையாக நடைபெற வேண்டி ஆனந்த விநாயகர் யாகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜைகள், துவார பூஜை பலவித திரவியங்கள், கனிவகைகள் யாக பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் நேற்று காலை கும்பாபிஷேகம் நடை–பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    • செங்கமலையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நான்குகால பூஜைகளும் நடத்தப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள மகா கணபதி, போன்ற செங்கமலையார், ஆஞ்சநேயர் ஆகிய புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி உள்ளிட்ட நான்குகால பூஜைகளும் நடத்தப்பட்டு மகா கணபதி, செங்கமலையார், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சன்னாவூர், கோவில்எசனை, இலங்தைகூடம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

    ×