search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்ஹாரம்"

    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில், சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அசுரர்களான தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் முருகப்பெருமான் வதம் செய்வார்.

    இந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. பழனியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பொம்மைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3 தலைமுறைகளாக பொம்மை செய்யும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன், அவை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த பொம்மைகள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு அசுரர்கள் தலை, கால், கை அடங்கிய பொம்மைகள் விசுவ பிராமண மகாஜன சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மீண்டும் அதை தயார் செய்தவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதற்காக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று கிரிவீதிகளில் பக்தர்கள் வருவதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட உள்ளது.

    தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பழனிக்கு நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. குறிப்பாக கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை உள்ளிட்ட இடங்களிலும், தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சோலைமலை கோவிலில் காமதேனு வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு நடைபெறும் திருவிழாவில் ஐப்பசி மாதம் நடக்கும் கந்த சஷ்டி பெருந்திருவிழா முக்கியமானது ஆகும். இந்த விழாவானது கடந்த 4-ந்தேதி காலையில் தொடங்கியது. விழாவில் சண்முகார்ச்சனையும், அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

    நேற்று 2-ம் திருநாள். இதையொட்டி நேற்று காலையில் வழக்கம் போல் பூஜைகளும், பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.

    தொடர்ந்து மேளதாளம் முழங்க காமதேனு வாகனத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, மூலவர் சன்னதி வெளி பிரகாரத்தில் வலம் வந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும் வேல் சன்னதியிலும், வித்தக விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இன்று 6-தேதி 3-ம் திருவிழா யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.நாளை 7-ம் தேதி 4-ம் திருநாள் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8-ந் தேதி 5-ம் திருநாள் சப்பர வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

    9-ந் தேதி 6-ம் திருநாள், காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் 4.30 மணிக்கு வேல் வாங்குதல், 5.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற உள்ளது.

    10-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைகளிலும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானவர்கள் காப்பு கட்டினர்.
    கோவையை அடுத்த வடவள்ளியில் மருதமலை முருகன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும், கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோ-பூஜையும், அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.

    தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

    மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வருகிற 9-ந் தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.

    9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 3 மணிக்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. பின்னர் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், சக்தி வேலுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் முருகனை வணங்கி, தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். வருகிற 9-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடை பெற உள்ளது.

    கொரோனா தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் லட்சார்ச்சனைக்கு அனுமதி இல்லை. விழா நாட்களில் பக்தர்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 9-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் புஷ்பாஞ்சலி மற்றும் 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் வலை தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 9-ந்தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.
    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் 7-வது படைவீடு என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்து வருகிற 9-ந் தேதி சூரபத்ரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விரதம் முடிப்பார்கள்.

    இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. இதையடுத்து 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு உச்சி கால பூஜை, 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்து உள்ள மகாமண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு சுப்ரமணியசுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங் களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை முருகப்பெருமானை வேண்டி காப்புக் கட்டிக் கொள்கின்றனர். மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்த மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

    மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடக்கிறது. 9-ந் தேதி மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு சூரபத்ரமனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது.

    மறுநாள் காலை 10-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மருதமலை திருக்கோவில் உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், உச்சிகால அபிஷேகம், யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏனினும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி தங்க சப்பரத்தில் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தார்.

    2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    கந்தசஷ்டி அன்று பஞ்சமுக விளக்கேற்றி, கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பத்தையும், பாசிப்பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யுங்கள்.
    முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்வார்கள்.

    இந்த ஆண்டு கந்தசஷ்டி திருநாள், 9.11.2021 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அன்றுதான் முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

    கந்தசஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, தூய ஆடை அணிந்து கந்த கவசம் படித்து, கந்தனை வழிபடுங்கள். சூரபதுமனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.

    ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால், பிள்ளைப் பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் ‘கருப்பை’யில் பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம், பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

    கந்தசஷ்டி அன்று பஞ்சமுக விளக்கேற்றி, கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பத்தையும், பாசிப்பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யுங்கள். அன்றைய தினம் இனிப்பு பொருளை மட்டும் சிறிதளவு உட்கொண்டு, அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானையோ, அல்லது அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ சென்று வழிபட்டு வரலாம். அப்படி செல்ல முடியாதவர்கள், வீட்டின் பூஜை அறையில் வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபடுங்கள். கந்தசஷ்டி திருநாளில் விரதமிருப்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டுப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும். செல்வ வளம் பெருக இந்த வழிபாடு கைகொடுக்கிறது.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் கோவில் வளாகம், உட்பிரகாரத்தில் வைத்து கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்தசஷ்டி திருவிழாநாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.35மணிக்கு சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெறுகிறது.

    தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 5-ந்தேதி முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    6-ம் நாள் திருவிழாவான 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மதியம் 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு மாலை மாற்றும் வைபவம், இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    8-ம் நாள் திருவிழாவான 11-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு பட்டிணபிரவேசம் நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரு நாட்களும் காலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

    11-ம் நாள் திருவிழாவான 14-ந்தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் இரவு ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

    12-ம் நாள் திருவிழாவான வருகிற 15-ந்தேதி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு மஞ்சள் நீராட்டும் வைபவம் தொடர்ந்து உற்சவம் நிறைவு பெறுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் கோவில் வளாகம், உட்பிரகாரத்தில் வைத்து கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது.

    1-ம் திருவிழா முதல் 5-ம் நாள் முடிய நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் சரிதனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமும், 5 ஆயிரம் பேர் நேரில் வருபவர்களுக்கும் என காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். சிகர நிகழ்ச்சியான
    சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய இரண்டு நாள்கள் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர் கோவிலில் 6, 7-ம் திருநாட்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

    காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 2-வது ஆண்டாகவும் பக்தர்களின்றி எளிமையாக நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    7-ம் திருநாளான 10-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தண்டு விரதத்தை நிறைவு செய்து வழிபாடு நடத்தினர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். சஷ்டி விரதம் என்பது திதி விரதம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அமாவாசை தினத்துக்கு அடுத்த நாள் பிரதமை அன்று தொடங்குகிறது. சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்று பழமொழி இருக் கிறது.

    சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பதே இதன் பொருளாகும். சஷ்டி விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி விரத நாட்களான 6 நாட்களும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகும். கந்தசஷ்டியையொட்டி முருகன் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் பூர்ண கும்பம் வைத்து விசேஷ அபிஷேகம், அர்ச்சனை போன்றவை நடைபெறும்.

    6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 6-ம் நாளில் வாழைத்தண்டு, உளுந்தம்பருப்பு, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், மாங்காய், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்டு கூட்டு தயாரிப்பார்கள். பின்னர் அதனை முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த வழிபாடு தண்டுவிரதம் நிறைவு செய்யும் வழிபாடு என அழைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் அதை சாப்பிட்டு தண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இதன் மூலம் 6 நாட்களாக கடும் விரதம் இருந்த பக்தர்களின் உடல்நலம் இயல்பு நிலைக்கு திரும்பும். 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து முருகப்பெருமானை வணங்கிவிட்டு, பின்னர் நடக்கும் திருமண விருந்தில் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள். 
    திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் ‘வேல் வாங்குதல்‘ நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதேபோல் போர் படை தளபதி வீரபாகு தேவருக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.10 மணி அளவில் முருகப்பெருமான் தனது தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேலை ஏந்தியபடி தனது வாகனமான தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகர் வீதியில் வலம் வந்தார். இதனையடுத்து வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளியபடி வீரபாகு தேவரும் வீதிஉலா வந்தார்.

    அப்போது அசுரனான சூரபத்மன் இருமாப்புடன் சன்னதி தெருவுக்கு வந்தார். இதற்கிடையே முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வாள் ஏந்தியபடி வந்தார். முருகப்பெருமான் நகரின் நான்கு வீதிகளிலுமாக இருமாப்பு கொண்ட சூரபத்மனை ஓட, ஓட விரட்டினார். அதில் சூரபத்மன் யானை முகம், சிங்கமுகம், ஆட்டுத் தலை என்று மாறி, மாறி உருவெடுத்து கொக்கரித்தார்.

    இந்த நிலையிலும் முருகப் பெருமான் 4 திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6.42 மணி அளவில் முருகப்பெருமான் சக்திவேலால் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா‘ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் வீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானை படத்தில் காணலாம். உள்படம்- மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.

    சூரசம்ஹாரத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) கிரிவலத்தில் சட்டத்தேர் பவனி நடக்கிறது.

    இதேபோன்று முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர் சோலை என்றழைக்கப்படும் சோலைமலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி காலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலை 4.35 மணி அளவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியசாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணி அளவில் முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாமிக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெறும். முடிவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்தனர். 
    சுவாமிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்தலம் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றதையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சாமி புறப்பட்டு அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சண்முகசுவாமி புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ×