search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்க்கை"

    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனை பல்வேறு ரூபங்களில் வழிபடுவார்கள். தொடர்ந்து 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

    மகிஷன் என்ற அசுரன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய பிரம்மன், மகிஷன் முன்பாக போய் நின்றார். பிரம்மனைக் கண்டதும் மகிஷன் மனம் மகிழ்ந்தான். தனக்கு அழிவில்லா வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் அசுரன் கேட்டான்.

    ‘பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேள்’ என்றார் பிரம்மன்.

    இதையடுத்து, ‘எனக்கு அழிவு வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான்.

    பிரம்மதேவரும் அப்படியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர் களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. அந்த தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான்.

    மகிஷனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு.

    தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.

    சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

    போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10-ம் நாளில் மகிஷாசூரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

    கொடியவனான மகிஷாசூரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசூரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடிவருகிறோம். இந்தியாவில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் கொண்டாட்ட முறைகள் என்பது சற்று மாறுபட்டு வருகின்றது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்டு இருப்பினும் ஒன்பது இரவுகளில் மட்டுமே கொண்டாட்டம் என்பது மட்டும் ஒரே மாதிரியாகவே உள்ளது.

    தாண்டியா ஆட்டத்துடன் கூடிய குஜராத் நவராத்திரி

    நவராத்திரியின் ஒன்பது நாளும் மாலைநேர வழிபாடு என்பது தாண்டியா ஆட்டத்துடன் தான் மேற்கொள்ளப்படும். மாலை நேரங்களில் மகா சக்தியை வழிபடுவதற்கான புதிய பானை கொண்டு வருவர். அதில் சிறு சிறு ஓட்டை இடப்பட்டு இருக்கும். அதன் உள் ஓர் விளக்கு ஏற்றி மகா சக்தியை வழிபாடு செய்வர். இந்த பானைக்கு பெயர் கர்டி. இந்த தீப நிகழ்வுக்கு பின் ஆண்,பெண் இருபாலரும் கையில் தாண்டியா குச்சிகளுடன் கூடிய தாண்டியா நடனத்தை ஆடுவர்.

    மேற்கு வங்காளத்தின் துர்க்கா பூஜை


    நாட்டின் கிழக்கத்திய பகுதிகளில் அதிகமாகவே துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப்படுகிறது. மகிஷனை கொன்ற துர்க்கைதான் பிரதான தெய்வமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வீடுகள் மட்டுமின்றி மக்கள் கூடும் இடங்களில், பொது பூங்காக்களில் பெரிய உயரமான துர்க்கா உருவங்கள் இடம் பெற செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டு பின்னர் துர்க்கா பூஜை முடிந்து அச்சிலைகளை கங்கை ஆற்றிலும் கடல் பகுதிகளிலும் கரைத்து விடுவர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் துர்க்கா பூஜை காலங்களில் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்க்கையின் அருள் வேண்டி பூஜைகள் நடத்தப்படும்.

    பஞ்சாப்பின் நவராத்திரி

    பங்சாப் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏழு நாட்கள் மகா சக்தியின் வடிவங்கள் வணங்கப்படும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் பூஜை மேற்கொள்ளப்பட்டு இறைபாடல்கள் பாடப்பட்டு கொண்டாடப்படும். பிறகு அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் விரதம் மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீட்டிற்கும் ஒன்பது கன்னி பெண்களை அழைத்து வந்து பூஜை செய்து பரிசளித்து அனுப்பி வைப்பர். இந்த பெண்களை “கன்ஜக்” என்றவாறு தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றி வணங்குகின்றனர்.

    மலர் பதாகைகளுடன் ஆந்திர நவராத்திரி

    ஆந்திராவில் நவராத்திரி விழா என்பது “பத்தகம்மா பண்டூக” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று போட்டுவிடுவர்.

    செல்வ வளங்களை பெருக்கும் மஹாராஷ்டிரா நவராத்திரி

    மஹாராஷ்டிராவில் நவராத்திரி விழா என்பது ஓர் புதிய தொடக்கத்தை ஆரம்பிக்கும் விழாவாகவே அமைகிறது. இந்நாட்களில் சொத்துக்கள் வாங்குவது, புதிய வியாபார திட்டங்களை மேற்கொள்வது போன்ற செல்வ வளங்களை பெருக்கும் செயல்களை செய்கின்றனர். பெண்கள் திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து நெற்றியில் திலகமிட்டு புதிய பரிசுகளை வழங்கி கவுரவிப்பர். அபோல் குஜராத்தில் நடைபெறும் தாண்டியா நடன நிகழ்வு அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் நடைபெறும்.

    ஹிமாசல பிரதேச நவராத்திரி

    அங்கு நவராத்திரி என்பது மற்ற பகுதிகளில் நவராத்திரி முடியும் காலகட்டத்தில் தான் இங்கு தொடங்கும் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி வந்த நாள் என்பதை “குல்லு துஸ்ரா” என்றவாறு கொண்டாடப்படுகின்றனர். துர்க்கா தேவியையும் பூஜை செய்வர். குடும்பத்தினருடன் விருந்து மேற்கொள்வர். 
    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி
    மநோக்ருஹ மந்மத மத
    ஜிஹ்வாபிஸாசீருத்
    ஸாதயோத் ஸாதய
    ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
    பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
    சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய
    ஹூம் பட் ஸ்வாஹா
    அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது.
    இந்தியா முழுவதுமே நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 9 நாளும் மாலை நேரத்தில் பூஜை ஆரம்பித்து இரவில் நடைபெறும் பண்டிகை என்பதுடன் முடிந்து 10-ம் நாள் விஜயதசமி என்றவாறு நவராத்திரி விழா முழுமை பெறுகிறது. நவராத்திரி என்து 9 இரவை குறிப்பிடுகிறது. இரவு என்பது இருள் மயமானது. அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த 3 நாள் லட்சுமி வழிபாடும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி வழிபாடும் நடைபெறுகின்றன.

    முதல் 3 நாட்களின் வழிபாடாக சிங்க வாகினி துர்க்கை வழிபாடு நிகழ்கிறது. துர்க்கை என்பவள் சக்தி ரூபம். உக்கிரத்தின் வடிவம். நமது உள்ளத்தில் உள்ள எதிரிகளை அழிக்க மனம் உறுதி பெறவேண்டும். மன உறுதியை பெற சக்தி வேண்டும். துர்க்கையை வழிபடுவதன் மூலமே உள் மனதில் சக்தியை பெற்று மன பலவீனங்களை எதிர்த்து போரிட முடியும் என்பதே அதன் தத்துவம்.

    இவ்வாறு பெறும் ஆத்ம சக்தியினால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகன்று மனதில் நற்குணங்கள் நிறைவதற்கு வழி பிறக்கும். அதற்காகவே அடுத்த 3 தினங்கள் மகாலட்சுமியை வழிபடுகிறோம். மகாலட்சுமியின் பூஜையின் மூலம் நற்குணங்களை பெறமுடியும். அன்பு, இரக்கம், கருணை, தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குண செல்வங்களை பெறவே இம்மூன்று தின வழிபாடு செய்யப்படுகிறது. இதில் பெறும் நற்குணங்களை கொண்டு மனம் புதிய உத்வேகத்துடன் ஞானம் பெறும்.

    கடைசி 3 நாட்களும் ஞானம், கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். ஞானத்தின் பிறப்பிடமான சரஸ்வதி தேவியை வணங்கி அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் பெற்று உலகம் சிறக்க, மனிதர்கள் சிறக்க வழி வகை செய்ய பூஜை மேற்கொள்ளப்படுகின்றன. இந்நாளில் செய்யப்படும் ஜப, தியான, ஹோமங்கள் வெற்றி பெறும் நோக்கில் விஜயதசமி என்பது பத்தாம் நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நான்கு நவராத்திரிகள் :

    பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 4 நவராத்திரிகள் உண்டு. சித்திரை மாதத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். ஆடி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பாக்ரபத (அ) சாரதா நவராத்திரி என கூறப்படும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியைதான் அனைவரும் கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தை சரத்காலம் என்று கூறுவர். சரத் காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுகின்றனர்.

    இந்த நவராத்திரி விழாவில் ஒருநாள் இணைந்து 10 நாள் தசரா விழாவாக மைசூர் சாமுண்டிஸ்வரி அம்மனுக்கு கொண்டாடப்படுகிறது. இதுவே மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி விழாவில் நவசக்தி வழிபாடு :


    9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் முப்பெரும் சக்திகளுக்கு உரிய தனித்தனி 3 சக்தி அம்சங்கள் உள்ளன. துர்க்கா தேவிக்கு மகேஸ்வரி, கவுமாரி, வராகி எனவும், லட்சுமிக்கு மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திரராணி எனவும், சரஸ்வதிக்கு சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி என்றவாறு அவரவர்க்கு உரிய சக்திகள் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் வரிசைப்படி நவசக்தி வழிபாடும் செய்யவேண்டும். இந்த 9 தேவியர்களில் ஒரு தேவி முதன்மையானவராகவும், மற்றவர்களை பரிவார தெய்வமாக கொண்டு நவசக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

    கன்னியர்கள் வழிபாடு :


    நவராத்திரி வழிபாட்டில் கன்னி வழிபாடு பிரதானமாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியரையும் ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபாடு நிகழ்த்தப்படும். கன்னிகளும், பெண் குழந்தைகளும் தேவியாக பாவித்து குடும்பத்தினர் அனைவரும் அவர்களை மகாசக்தியின் உருவமாக மனதார நினைத்து வழிபாடு செய்கின்றனர். நவராத்திரி என்பது குடும்பத்தினர் மன அழுக்குகளை நீக்கி மனபூர்வமாக சந்தோஷத்துடன் கொண்டாடும் விழாவாகும். 
    ஒன்பது இரவுகள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், பொன், பொருள் குவியும். துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை விரதம் இருந்து வழிபடுவது அவசியமாகும்.
    மாசி மாதத்தில் சிவனுக்கு உகந்த ‘சிவராத்திரி’ வருவது போல், புரட்டாசி மாதம் அம்பிகையைக் கொண்டாட உகந்தநாள் ‘நவராத்திரி’ வருகின்றது. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ என்று பொருள். ‘ராத்திரி’ என்றால் ‘இரவு’ என்று பொருள். ஒன்பது இரவுகள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், பொன் - பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் புரட்டாசியில் நவராத்திரி தொடங்கினாலும், புரட்டாசி 31-ந் தேதி (17.10.2018) அன்று துர்க்காஷ்டமி வருகின்றது.

    ஐப்பசி முதல் நாள் தான் சரஸ்வதி பூஜையும், அடுத்த நாள் விஜயதசமியும் வருகின்றது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த நவராத்திரி நாட்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் எல்லாம் ஒவ்வொரு உண்மைகளைச் சொல்லும் விதத்தில் அலங்கரித்து வைத்து, அதற்கு மேலே நடுநாயகமாக ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒன்பது வடிவங்களில் அலங்கரித்து விழா கொண்டாடுவது வழக்கம். வீட்டில் கொலு வைத்துக் கொண்டாடுவதன் மூலம், விருந்தினரை உபசரிக்கும் குணம் நமக்கு வருகிறது. வழிபடுவதன் மூலம் வளர்ச்சியும் ஏற்படுகிறது.

    ‘கல்வியா? செல்வமா? வீரமா? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?’ என்று கவியரசு கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தால் தான், கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் ‘வீரம்’ தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்களும், ‘செல்வம்’ தரும் லட்சுமிதேவியை அடுத்த மூன்று தினங்களும், ‘கல்வி’ தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.

    தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடு கிறோம். அசையாத பொம்மைகள் மூலம் அசைந்து வரும் வாழ்க்கை உண்மைகளை உலகிற்கு உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.

    ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டால் தடை, தாமதங்கள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அடிப்படையில் உருவானது தான் நவராத்திரி விழா.

    கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுக்களில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதத்தில் அலங்காரங்கள் செய்து நவரத்தின மாலைகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

    நைவேத்தியப் பொருட்களாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, பொரி, தேங்காய், பழம் வைக்க வேண்டும். வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம், புஷ்பம் மற்றும் நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வழங்கி அன்போடு வருபவர்களை உபசரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையின் பாடல்களை ஒவ்வொரு ராகத்தில் பாடி அம்பிகையைக் குளிர்விக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றும் நாம் அன்றாடம் அம்பிகையை வழிபட்டு வர வேண்டும்.

    கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங் களான புல், செடி, கொடி, தாவர வகைகளை வைக்கவேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட உயிரினங்களான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்யவேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும். நான்காவது படியில் நான்குஅறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

    ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், சிறு தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்கவேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகைளையும், அவர் களின் துணைவிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரது உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும். வலது கை, இடது கை நீங்கலாக, நம்பிக்கை என்ற ‘கை’ நமக்குத் தேவை. அந்த நம்பிக்கையை துர்க்கை மீது வைத்து வழிபடுவதற்கு உகந்த நாள் தான் துர்க்காஷ்டமி. செம்பருத்தி, செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து விரதம் இருந்து வழிபட்டு வருவது நல்லது.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.
    கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.

    பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
    மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
    ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
    கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:

    பொதுப் பொருள் :

    சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன.

    இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
    ×