search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    சூளகிரி அருகே குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரமேஷ் (23). நண்பர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் நாகராஜ் உள்பட 5பேருடன் அதேபகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு போதை தலைகேறியது.

    இதில் ரமேசும், நாகராஜும் தனியாக சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து ரமேசின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து நாகராஜியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    சூளகிரி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆபிரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா (வயது 70). மோட்டப்பாவின் வீட்டின் அருகே அவரது தம்பி சின்னப்பா என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், சிவபிரகாஷ் (வயது 29) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோட்டப்பாவுக்கும் சின்னப்பாவுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன் தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் அங்கு வந்த சின்னப்பாவின் மகன் சிவபிரகாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது பெரியப்பா மோட்டப்பாவின் வலது காலை வெட்டினார். இதில் அவரது வலது கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே சிவபிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மோட்டாப்பாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவபிரகாசை தேடி வந்தனர். அப்போது ஓசூரில் சுற்றி திரிந்து கொண்டிருந்த அவரை கைது செய்தனர். கைதான சிவபிரகாஷை ஓசூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக குறிச்சியை சேர்ந்த ஷாஜகான், ஜி.எம். நகரை சேர்ந்த சுபாஷ், திருப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை கடந்த 21-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது சிங்காநல்லூர் பீளமேடு, சரவணம்பட்டி போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய குனியமுத்தூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வழிப்புறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் காவேரிமணியன் (வயது 33). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார். இந்நிலையில் கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகியோர் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வாகன சோதனை என்று அவர்களை வழிமறித்து, 2 பவுன் செயின் மற்றும் 4 கிராம் மோதிரம் ஆகியவற்றை போலீஸ்காரர் காவேரி மணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து பறித்துள்ளார். இதில் செந்தில்குமாரும், செல்வியும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து காவேரி மணியனை சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

    இதேபோல் கழுகுமலையில் இருந்து இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்களிடம் 11.5 பவுன் நகை பறித்தது மற்றும் கோவில்பட்டி தனியார் நகைக்கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த கயத்தாறை சேர்ந்த முருகானந்தத்தை அரிவாளை காண்பித்து மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்தது ஆகிய புகார்கள் தொடர்பாக காவிரி மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் அவரது கூட்டாளிகளான வெங்கடேஷ், கணேசன், சுடலை மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் காவலர் காவேரி மணியன் பணிநீக்கமும் செய்யப்பட்டார். இந்த 3 வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் குமார், செல்வியிடம் நகை பறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் காவேரி மணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் தீர்ப்பளித்தார். மற்ற இரு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டார். இதேபோல் அவரது கூட்டாளிகள் மூவரும் அனைத்து வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து காவிரி மணியனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். #tamilnews
    பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
    சென்னை:

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது, செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #BalakrishnaReddy #Sengottaiyan
    தென்காசியில் பள்ளி வேனில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விளையாட்டு ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 4 வயது சிறுமி படித்து வருகிறாள். தினமும் அந்த சிறுமி காலையில் வேனில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் அதே வேனில் வீட்டுக்கு திரும்பி வருவாள்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அந்த சிறுமி வேனில் பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். மாலையில் வேனில் இருந்து இறங்கிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளாள். அந்த சிறுமி இறங்கியவுடன் டிரைவரும் வேனை வேகமாக எடுத்து கொண்டு சென்று விட்டார்.

    பின்னர் தாயாருடன் அந்த சிறுமி வீட்டிற்கு நடந்து சென்ற போது சிறுமி அழுதாள். பின்னர் அந்த சிறுமி தனது தாயாரிடம் வேனில் வரும்போது தனது பள்ளி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக கூறினாள்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த சிறுமியை பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 39) பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தினமும் அந்த சிறுமி பயணிக்கும் வேனில் வழி நெடுகிலும் மற்ற மாணவ-மாணவிகள் இறங்கி கொள்ள, கடைசியாக இந்த சிறுமி மட்டும் தனியாக ஊருக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி ஆசிரியர் இளையராஜா இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இளையராஜா கைது செய்யப்பட்டார்.

    மேலும், அந்த வேனில் கிளீன‌ருக்கு பதிலாக விளையாட்டு ஆசிரியர் சென்றது எப்படி? அவர் அடிக்கடி இதுபோன்று வேனில் சென்று வேறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான ஆசிரியர் தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பள்ளி ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள‌து. இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரிட்டன் நாட்டில் புற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி இரண்டரை லட்சம் பவுண்டுகள் நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #Indianorigin #conwoman #fakingcancer #JasminMistry
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஜாஸ்மின் மிஸ்திரி என்ற  இந்திய வம்சாவளி பெண், தனக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி இதற்கான சிகிச்சை செலவுக்கு 5 லட்சம் பவுண்டுகள் தேவைப்படுவதாக கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி திரட்டி வந்தார்.

    இதற்கு ஆதாரமாக ஒரு டாக்டரின் பரிந்துரை கடிதம் மற்றும் மூளைப்பகுதியின் ஸ்கேன் ஆகியவற்றை அவர் வெளியிட்டிருந்தார்.

    இதை உண்மை என்று நம்பி ஜாஸ்மின் கணவரின் உறவினர்கள் மற்றும் சில கொடையாளர்கள் சுமார் இரண்டரை லட்சம் பவுண்டுகள் வரை நிதியுதவி செய்திருந்தனர்.

    இந்நிலையில், ஜாஸ்மினுடைய கணவர் தனது மனைவியின் ஸ்கேன் படத்தை தனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் காட்டியபோது, அது ஜாஸ்மினுடைய மூளைப்பகுதி அல்ல, ‘கூகுள்’ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட போலியான படம் என்பது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து கடந்த ஆண்டு ஜாஸ்மினை கைது செய்த போலீசார் ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜூடித் ஹக்ஸ் ‘மிக மோசமான குற்றச்செயலாக தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஜாஸ்மின்(36) நான்காண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டார். #Indianorigin #conwoman #fakingcancer #JasminMistry 
    ஓமலூர் அருகே ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்தது குறித்து கைதான கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    காடையாம்பட்டி:

    ஓமலூர் அருகே குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இந்த சங்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாகவும், விவசாயிகள் கொடுத்த நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கை செய்தனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 67 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கடன் சங்க செயலாளர் பழனிசாமி (56), உதவி செயலாளர் பெரியசாமி (54), காசாளர் ரகுமணி (52), நகை மதிப்பீட்டாளர் சேட்டு (53), உதவியாளர் பெரியதம்பி (50) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சேலம் வணிக குற்ற புலனாய்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் தொடர் விசாரணைக்கு பிறகு 5 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianTechie #USCourt
    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.

    பிரபு ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் லாஸ் வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது தனதருகில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண், விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் பிரபு  ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது டெட்ராய்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில், ராமமூர்த்தியை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின்னர் அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது, விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். #IndianTechie #USCourt

    ஊட்டியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஊட்டி:

    ஊட்டி அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமியுடன் அவரது தம்பி ரூபேஸ் பாபு(48) என்பவரும் வசித்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல சிறுமி பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் அவர் சோர்வாக விரக்தி அடைந்து காணப்பட்டார்.

    இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை சிறுமியிடம் கேட்டார். அப்போது ஒருவித பயத்துடன் இருந்தார். விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த ஆசிரியை சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் சமூக நல அலுவலர் முன்னிலையில் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியை அவரது தாய் மாமன் ரூபேஸ் பாபு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து வகுப்பு ஆசிரியை அளித்த புகாரின் பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமன் ரூபேஸ் பாபு, இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் மினியன் (55). கூலித் தொழிலாளி. இவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதில் சிறுமி சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மினியனிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மினியனை குன்னத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் குட்டை குளத்தைச் சேர்ந்தவர் கலீல் (வயது 24). கடந்த 2015-ம் ஆண்டு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கலீலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார்.

    அவரை பிடித்து விசாரித்த போது திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த கலீல் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான 9 தமிழர்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து சித்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #RedSandalwood #SmugglingCase
    திருமலை:

    ஆந்திர மாநிலம், சித்தூர் தாலுகா போலீசார், கடந்த 2016-ம் ஆண்டு செம்மரக்கடத்தியதாக 5 பேரை கைது செய்தனர். இதேபோல் 2017-ம் ஆண்டு செம்மரம் கடத்தல் வழக்கில் 4 பேரை கைது செய்தனர். இந்த 9 பேர் மீதான வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

    மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமார் விவேக் வழக்கை விசாரித்து, புதுக்கோட்டை மாவட்டம், முலம்பட்டியை சேர்ந்த வீரமகாமணி (35), ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த சங்கர் (40), பாலமுருகன் (35), சேலம் மாவட்டம், கருமந்துரையை சேர்ந்த மதன் (49), ஈரோடு மாவட்டம், சுல்தான்பேட்டையை சேர்ந்த முகமது ரபி (38), தர்மபுரி மாவட்டம், பெரியபுதூரை சேர்ந்த சிவக்குமார் (34), ரமேஷ் (24), முருகன் (48), லட்சுமண் (39) ஆகிய 9 பேருக்கும் 8 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சித்தூர் சிறையில் அடைத்தனர். இவர்கள் 9 பேருக்கும் ஆந்திர மாநில புதிய வனச்சட்டத்தின்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RedSandalwood #SmugglingCase

    ×