என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாசா"
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.
சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.
இதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது.
நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’ மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’ என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சார்பில் 2011-ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவாகும்.
மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மண்ணில் இருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என ஹூஸ்டன் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசா ஜான்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 321 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #NASA #SunitaWilliams #SpaceCraft
பெய்ஜிங்:
விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9’ என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ராக்கெட் 10 மீட்டர் அகலம் கொண்டது. 4 சக்தி வாய்ந்த ‘பூஸ்டர்’கள் பொருத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 5 மீட்டர் அகலம் கொண்டவை. இது பூமியின் கீழ்மட்ட சுற்று பாதையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ராக்கெட் வருகிற 2030-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சீன தொழில்நுட்ப அகாடமி இதை உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் 13 டன் எடையை சுமந்துசெல்லும் திறன் படைத்த ராக்கெட்டை தயாரித்து வருகிறது. அது 2020-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. ஐரோப்பாவின் அரீனே 5 ராக்கெட் 20டன் எடையையும், எல்கான் முஸ்கின் பால்கான் ராக்கெட் 64டன் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. #NASA #Heavyliftrocket
சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.
அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.
ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.
தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Mars #Earth
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது.
செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை கியூரியாசிட்டி தோண்டியிருக்கிறது. பெரிய அளவில் தோண்டாமல் வெறும் 5 செ.மீட்டர் மட்டுமே தோண்டியுள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆய்வு செய்ய நாசா முடிவெத்துள்ளது. #NASA #Mars
இவர் 2 தடவை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டவர். அப்பல்லோ விண்கலம் மூலம் முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரன் சென்று திரும்பினார். அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து அப்பல்லோ விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவுடன் ஆலன் பீன் சந்திரன் சென்றார்.
அப்போது அவர் சந்திரனில் இறங்கி நடந்தார். இச்சம்பவம் கடந்த 1969-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி நடந்தது. இதன் மூலம் இவர் சந்திரனில் நடந்த 4-வது விண்வெளி வீரர் ஆனார்.
சந்திரனில் தரை இறங்கி நடந்த அவர் அங்கு 32 அங்குலம் தோண்டி பாறைகள், தாதுக்கள் மற்றும் தூசிகளை எடுத்து வந்தார்.
அவரது மரண செய்தியை நாசா மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆலன் பீன் அமெரிக்க கடற்படை சோதனை ஓட்ட விமானத்தின் விமானி ஆக இருந்தார். 1963-ம் ஆண்டில் ‘நாசா’ விண்வெளி மையத்தில் இணைந்து பணியாற்றினார். #NASA #AlanBean
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.
இதற்காக ஒரு குழுவினர், 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்து அதன் எடையை 1.8 கிலோ அளவுக்கு குறைத்து உள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறும்போது, “மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்” என்றார்.
‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.
பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.
2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். #NASA #Helicopter #Mars
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்