search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98345"

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரைக்கும் விராட கோலிக்கு டோனி தேவை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வருகிறார்.

    37 வயதாகும் டோனி, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தார். அபாரனமான கிரிக்கெட் திறமை, சிறப்பாக பீல்டிங் அமைப்பு, துல்லியமான ஸ்டம்பிங் ஆகியவற்றில் டோனியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.



    டி20-யில் இருந்து நீக்கப்பட்ட டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் திறமை பெற்றுள்ள டோனி உலகக்கோப்பை வரை விராட் கோலிக்கு வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உலகக்கோப்பை வரை கட்டாயம் விளையாட வேண்டும். விராட் கோலிக்கு டோனி தேவை. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோனி பீல்டிங்கை சரியாக நிற்கும்படி அட்ஜஸ்ட் செய்வது உங்களுக்கே தெரியும். பந்து வீச்சாளர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் இந்தியில் ஆலோசனை வழங்குவார். இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் பிளஸ்-யாக அமையும்’’ என்றார்.
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை மோதியுள்ள டெஸ்ட் ஆட்டங்கள் குறித்து சில விவரங்களை காண்போம். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இதுவரை 22 டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 8 டெஸ்ட் தொடரையும், வெஸ்ட்இண்டீஸ் 12 தொடரையும் வென்றுள்ளன. 2 டெஸ்ட் தொடர் சம நிலையில் முடிந்தது.

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் தொடரையும் (2002-2016) இந்திய அணியே கைப்பற்றி வலுவானதாக இருக்கிறது. இதில் 3 தொடர் சொந்த மண்ணிலும், 3 தொடர் வெஸ்ட்இண்டீசிலும் நடந்தவையாகும். வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவில் 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 4-ல், வெஸ்ட்இண்டீஸ் 5-ல் வெற்றி பெற்றன. 1983-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

    இரு அணிகளும் 94 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இந்திய அணி 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் டெல்லியில் 8 விக்கெட் இழப்புக்கு 644 ரன் (1959) குவித்து இருந்தது.

    இந்திய அணி 1987-ம் ஆண்டு டெல்லியில் 75 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட்இண்டீஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 103 ரன் ஆகும்.

    கவாஸ்கர் 27 டெஸ்டில் விளையாடி 2749 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 236 ரன் குவித்துள்ளார். கிளைவ் லாயிட் 2344 ரன்னும், சந்தர்பால் 2171 ரன்னும், டிராவிட் 1978 ரன்னும், விவியன் ரிச்சர்ட்ஸ் 1927 ரன்னும் எடுத்துள்ளனர்.

    ரோகன் கசாய் (வெஸ்ட்இண்டீஸ்) 1958-ம் ஆண்டு கொல்கத்தாவில் 256 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் ஆகும். கவாஸ்கர் அதிகபட்சமாக 13 சதம் எடுத்துள்ளார். சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ் தலா 8 செஞ்சூரி அடித்துள்ளனர்.

    கபில்தேவ் 89 விக்கெட் (25 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மால்கம் மார்‌ஷல் 76 விக்கெட்டும், கும்ப்ளே 74 விக்கெட்டும், வெங்கட்ராகவன் 68 விக்கெட்டும், ஆன்டி ராபர்ட்ஸ் 67 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    கபில்தேவ் 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சின் (அகமதாபாத், 1983) சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்ட்டில் அதிகபட்சமாக நரேந்திர ஹர்வானி 16 விக்கெட் (சென்னை, 1988) கைப்பற்றினார். #INDvWI
    இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதிக்க விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 593 ரன்கள் குவித்த போதிலும், கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது. முக்கியமான கட்டத்தில் அவரால் சிறந்த முடிவை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.



    இந்நிலையில் விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலி இன்றும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் பீல்டர்களை சரியான இடத்தில் நிற்க வைப்பது அல்லது பந்து வீச்சை சரியான நேரத்தில் மாற்றுவது ஆகியவற்றில் விராட் கோலியின் செயல்பாட்டில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதன்மூலம் அவருடைய அனுபவ குறைபாடு தெளிவாக தெரிகிறது’’ என்றார்.
    கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார். #KapilDev #SunilGavaskar #ImranKhan

    மும்பை:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல இந்தி நடிகர் அமீர்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவாஸ்கர் மறுத்துவிட்டார். தனக்கு வர்ணனை செய்யும் பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்தார்.

     


     

    இந்த நிலையில் கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவி யேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கபில்தேவ் பதவியேற்பு விழாவை புறக்கணித்தாக கூறப்படுகிறது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சித்து மட்டுமே இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பாலிவுட் பிரபலமான அமீர்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் சித்து, கபில்தேவ் கலந்து கொள்கிறார்கள். #ImranKhan #pakistanpm

    சண்டிகார்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக பஞ்சாப் கேபினட் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து கூறிதாவது:-


    இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவரது கட்சியின் அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பிதழ் வந்துள்ளது. இது தவிர இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங் அலுவலகத்திடம் தகவல் தெரிவித்து விட்டேன்.

    கபில்தேவிடமும் பேசினேன். அவருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அவரும் விழாவில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான கவாஸ்கர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாததை இம்ரானிடம் போனில் தெரிவித்து விட்டேன். இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனால் இம்ரானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

    இம்ரான்கான் எனக்கு பல ஆண்டு நண்பர் ஆவார். அவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளது மிகப் பெருமையான வி‌ஷயம். பல முறை இந்தியா வந்துள்ள அவர் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர். இதனால் இந்தியா உடனான அவரது உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார். #ImranKhan #pakistanpm

    லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் மற்றும் டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #ViratKohli #KapilDev #ENGvIND

    லார்ட்ஸ்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றின.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) தொடங்குகிறது.

    புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ், டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றி கிடைத்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் டேவிட் கோவா தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது.

    அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்த மைதானத்தில் வெற்றி கிடைத்தது. அந்த அணி 95 ரன் வித்தியாசத்தில் குக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 17 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 11 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

    1932-ம் ஆண்டு சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி தனது டெஸ்டை லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியது. 11-வது டெஸ்டில் விளையாடிய போது தான் கபில்தேவ் தலைமையில் முதல் வெற்றி கிடைத்தது. அதன்பிறகு டோனி அந்த பெருமையை பெற்றார்.

    இவர்கள் வரிசையில் இணையும் ஆர்வத்தில் விராட்கோலி இருக்கிறார்.

    கபில்தேவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். #ENGvIND #SunilGavaskar #KapilDev

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ் பவர் ஹர்த்திக் பாண்ட்யா.

    அவரது ஆட்டத்தை வைத்து முன்னாள் வீரர்கள் சிலர் கபில்தேவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர். இதை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் நிராகரித்துள்ளார்.

    இதுகுறித்து தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கபில்தேவை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருதலைமுறை வீரர் இல்லை. ஒரு நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர். டான் பிராட்மேன், தெண்டுல்கரை போன்றவர் ஆவார். இதனால் நாம் கபில்தேவுடன் யாரையும் ஒப்பிடக்கூடாது.

    டெஸ்ட் போட்டியில் தவானின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர் தனது விளையாட்டு முறையை மாற்ற விரும்பவில்லை. வெளிநாடுகளில் அவர் டெஸ்டில் ரன்களை எடுக்க தடுமாடுகிறார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இந்திய அணி கூடுதலாக ஒரு பேட்ஸ் மேனுடன் ஆடவேண்டும். புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். உமேஷ் யாதவ் இடத்தில் சேர்க்கலாம். ஹர்த்திக் பாண்ட்யா நீடிக்கலாம். ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்த முடிவை மேற்கொள்ளலாம்.

    லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற இந்தியா ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்ஸ்பர்க் டெஸ்டில் 200 ரன்னுக்குள் சுருண்டது போல் நடந்து விடக்கூடாது.

    பெரும்பாலான அணிகள் 4-வது இன்னிங்சில் 200 ரன் இலக்கை எடுக்க தடுமாறுகின்றன. முதல் டெஸ்டில் சேஸ் செய்து இருந்ததால் இங்கிலாந்து அணியும் திணறி இருக்கும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலககோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் எடுத்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 225 ஒருநாள் போட்டியில் 3783 ரன் எடுத்துள்ளார். 253 விக்கெட் கைப்பற்றியுள்ளார். #ENGvIND #SunilGavaskar #KapilDev

    ×