search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதயம்"

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
    இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினை சீராக பராமரிப்பது போல இதயத்தை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எந்த செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டால் இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்த அழுத்தம் மாரடைப்புக்குக் கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாகச் செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் ‘நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளையே சாப்பிட விரும்புகிறார்கள்.

    ‘உணவே மருந்து' என்ற அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் மறந்துவருகிறார்கள்.. இதனால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப்பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    இதயத்தின் முக்கிய எதிரி புகை. எனவே, புகையை விட்டொழிக்க வேண்டும். புகையிலை சார்ந்த எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது.

    தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தை பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
    ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம்.
    இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

    இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

    இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

    இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

    இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்பவை கரோனரி தமனிகள்.

    இதயத் துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

    இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

    இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.

    இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

    நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

    உங்கள் கையை பொத்திக்கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

    இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.

    இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை உருவாக்கும்.

    இதயத்துடிப்பு உருவாக்கும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

    இதேபெயரில் இதய சிகிச்சை கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    எல்லா நெஞ்சு வலிக்கும் பயப்பட வேண்டாம். எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பு இல்லை. நெஞ்சை சுற்றிலும் நுரையீரல், வயிறு, உணவுக் குழல் உள்ளது. மேலும் அதை சுற்றி தசைகள் இருக்கிறது. அதில் வலி ஏற்பட்டாலோ அது நெஞ்சு வலி மாதிரியாகத்தான் இருக்கும். இதில் சில விஷயங்களை வைத்துத் தான் இந்த வலி இருதயத்திலிருந்து வருகிறதா, இல்லை நுறையீரல், உணவுக் குழலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்போம்.

    எந்தமாதிரியான வலி இருதய வலி என்றால் ஒரு யானை நெஞ்சின்மேல் நிற்கும் மாதிரியான வலி, தேவையில்லாமல் மூச்சுத்திணறல், தேவையில்லாமல் அதிக வியர்வை இருந்தாலோ அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

    யாரை தாக்கும்?

    மனச்சோர்வு, உடற்சோர்வு, மூச்சுத்திணறல் இதெல்லாம் ஏற்பட்டால் இருதய நல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற காலக்கட்டத்தில் சிறிய வயதினருக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்கிறார்கள். அது உண்மைதான். ஏனெனில் இந்த உலகில் தொழில் ரீதியான போட்டிகள், மனஅழுத்தம் மற்றும் தீய பழக்கங்கள் (மது, புகைப்பழக்கம்) அதிகரித்து இருப்பதே ஒரு முக்கிய காரணம். சிறிய வயதினருக்கும், பெரியவர்களுக்கும் வரும் மாரடைப்பில் வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சிறிய வயதினருக்கு வரும் இதயப்பிரச்சனையில் அந்த நேரத்தில் ஏற்படுகிற இரத்த உறைவு (Blood Clots) ஒரு நாள் இல்லை இரண்டு நாளில் ஏற்பட்டதாக இருக்கும். 50-60 வயது உள்ளவர்களுக்கு பார்த்தோம் என்றால் கொலஸ்ட்ராலினால் வரும். இது ஒருநாள் இரண்டு நாளில் வருவது இல்லை.

    ECG எடுத்த பிறகு 2 விதமான சிகிச்சைகள் உள்ளன. உடனே மருந்து கொடுத்து கரைக்கலாம் அல்லது ஆஞ்சியோகிராம் பார்த்துவிட்டு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யலாம். நோயாளியை Cathlab அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டி கொண்டு சென்று பலூன் மூலமா அந்த அடைப்பினை எடுத்துவிட்டு இரத்த ஓட்டத்தைச் சரி செய்துவிடலாம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். இதை சரிசெய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் அவரது ஆயுள் காலத்திற்கும் எந்தவிதப் பிரச்சனையும் வராது.

    ஒருவேளை தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் அதாவது ஒரு 6 (or) 12 மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்தோ தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் அந்த இரத்த ஓட்டம் இல்லாத தசைகள் செயலிழந்து விடும். ஒருமுறை செயலிழந்த தசைகள் திருப்பி செயல்பாட்டிற்கு வராது. அந்த சமயத்தில் அந்த மாரடைப்பு வந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் இதய வலுவல் ஏற்படலாம். இவர்கள் காலம் முழுவதும் நடக்கும் போது மூச்சு வாங்குவதோ இல்லை. நெஞ்சுவலி வந்தோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருப்பதற்கே தாமதிக்காத சிக்சைகள் உடனடியாக செய்யப்படவேண்டும் என்கிறோம்.

    இருதய நோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்

    முன்கூட்டியே கண்டுபிடிக்கிறதுக்கு இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவினைக் கண்டறிந்தும், டிரெட்மில்லில் நடக்கும் போது ECG பார்த்து கண்டு பிடிக்கலாம். அல்லது இதயத்திற்கான எக்கோ பரிசோதனையின் மூலமோ கண்டறியலாம். இந்த மாதிரி கண்டுபிடிக்கும் போது ஒரு இரத்தக்குழாய் மட்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சரிசெய்யலாம். சில சமயம் நிறைய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு இரத்தக்குழாய்க்கும் போய் பலூன் வைத்து பண்ண முடியாது. அவர்களுக்குத்தான் பைபாஸ் சிகிச்சை அவசியமாகிறது. பைபாஸ் சிகிச்சையில் அடைப்பு இருக்கிற இரத்த குழாய்களை அப்படியே வைத்துவிட்டு புதிய ரத்தக் குழாய்களை எடுத்து அடைப்பு இருக்கிற மீதிப் பகுதியில் போய் இணைத்து விடவேண்டும். இதுதான் பைபாஸ்.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு சோர்ந்து போகாமல் தினமும் நடைபயிற்சி, மருத்துவர் பரிந்துரை செய்த உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் கொழுப்பு உணவுகள், எண்ணை பலகாரங்கள் தவிர்த்தல், ஆரோக்கியமான, சத்தான ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல், மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்வது. மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டங்களில் தவறாது பரிசோதனைகள் செய்து கொள்வது இவற்றினால் நீடித்த ஆயுள்காலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

    நாராயணா இருதய மையம், பாளையங்கோட்டை
    பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.
    பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம் இவைகள் ஏற்படவும் காரணமாகின்றது.

    இன்று பல் மருத்துவம் மிகப்பெரிய முன்னேற்ற நிலையினை அடைந்துள்ளது. இருப்பினும் பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    பல்லில் எனாமல் தேயும் பொழுது ஓட்டைகள் ஏற்படுகின்றன. முதலில் பாதிக்கப்பட்டுள்ள இடம் மிருதுவாகும். வலி இருக்கும். சூடு, குளுமை, ஸ்வீட் சாப்பிட்டால் அந்த குறிப்பிட்ட இடத்தில் வலிக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே பல் மருத்துவரிடம் சென்றால் உங்கள் பல்லினை பாதுகாத்து விடுவார். பொதுவில் வருடம் ஒருமுறையாவது பல் செக்-அப் செய்து கொள்வது அவசியமே.

    இருப்பினும் பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.

    • பல்லில் எனாமல் கால்சியம், பாஸ்பேட் நிறைந்தது. இவை இரண்டும் உடலில் கிடைக்க வைட்டமின் டி நமக்கு வேண்டும். மருத்துவ அறிவுரையோடு வைட்டமின் ‘டி’ எடுத்துக்கொள்வோம்.

    • பாஸ்பரஸ் இருந்தாலே எனாமல் நன்கு பாதுகாக்கப்படும். கொட்டை வகைகள், முட்டை, பூண்டு, தக்காளி, பீன்ஸ் போன்றவை பாஸ்பரஸ் சத்தினை பெற உதவும்.

    • அன்றாட உணவில் 5 சதவீதத்துக்கு மேல் இனிப்புகள் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது. இனிப்பில் உள்ள ஆசிட் பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    • சோடா அருந்துவதனை தவிர்த்துவிட வேண்டும்.

    • தூங்கும்பொழுது வாய்மூடி இருக்க வேண்டும். வாய் திறந்து தூங்கும் பொழுது வாய் வறண்டு விடுகின்றது. வாயில் உமிழ்நீர் வாய் மூடி இருக்கும் பொழுதே வாய் வறண்டு விடாமல் காக்கும். வறண்ட வாயில் பல் பாதிப்பு ஏற்படும்.

    • பாதுகாப்பான பல் பவுடர், பற்பசையினை உபயோகியுங்கள்.

    • காய்கறி ஜூஸ், பச்சை காய்கறிகள் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • 4-5 முந்திரியினை தினமும் உண்ணுங்கள். கெட்ட கிருமிகளை எதிர்க்கும் சத்துகள் இதில் அதிகம்.

    • ஆயுர்வேதம் எண்ணெய் வாய் கொப்பளிப்பினை பரிந்துரைக்கின்றது.
    பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
    பற்களின் ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3600 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    ‘‘ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய்வழி ஆரோக்கியம் அவசியமானது. அதனால் பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், அது தொடர்பாக சிகிச்சை பெறுபவர்கள் வாய்வழி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உணவில் உப்பை குறைவாக சேர்த்து கொள்வது, முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவைகளும் அவசியமானவை’’ என்கிறார்கள், பல் மருத்துவர்கள்.

    இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான்.
    இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். மருந்தின் உதவியோடு அதனை வேலை செய்ய வைக்க முடியும் என்பது மருத்துவ முன்னேற்றம். சிறுநீரகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் கிடைக்காத பொழுது சிறுநீரகங்கள் உப்பு, நீர் இவற்றினைத் தேங்க வைத்து விடுகின்றன.

    இந்த அதிக நீர் கணுக்கால், பாதம், கால் சில சமயம் வயிறு பகுதிகளில் வீக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் திடீரென எடையும் கூடலாம். இந்த நீர் தேக்கம் மூச்சுத் திணறலினை உருவாக்கலாம். இது நீண்ட கால தொடர் மருத்துவம் தேவைப்படும் பாதிப்பு. மருத்துவம் இருக்கும் பாதிப்பினை மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தும். மருத்துவத்துடன் உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றினை மாற்றிக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கின்றது.
    உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான். ஆகவே

    * உங்கள் எடையினை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.
    * நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், டீ, காபி, மோர், ஜூஸ் என எந்த திரவ உணவாயின் அளவினை கணக்கில் கொள்ளுங்கள்.
    * ரத்தக் கொதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.
    * உப்பின் அளவினை குறைத்துக் கொள்ளுங்கள்.
    * மது வேண்டாமே

    * புகை பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.
    * தினமும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
    * மருந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
    * இருதய வால்வினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை தேவைபடலாம்.

    * மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய வால்வு பிரச்சினை இவைகள் இருதய பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள்.
    * வாழ்க்கையே போய் விட்டது போல் கருத வேண்டாம். சிறிது கவனம் உங்கள் வாழ்வை நன்றாக வைக்கும். அதிக வெய்யில், அதிக குளிர் காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம்.
    நீண்ட நேரம் வேலை செய்யாமல் நேரத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.

    இருதயத்தினை பாதுகாப்பதற்கான டிப்ஸ்:

    * அவ்வப்போது இருதயத்திற்கும் சற்று வேக தூண்டுதல் நல்லதே. நல்ல புத்தகம், பாசமானவர்களுடன் இருத்தல், இவை இருதயத்தினை சற்று சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.

    * வெய்யில் காலத்தில் அதிக தூசு இருக்கும் நேரங்களில் வெட்ட வெளியில் உடற் பயிற்சி செய்யக் கூடாது. இது உங்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவினைக் குறைத்து இருதய பிரச்சினைகளை கூட்டி விடும்.

    * புகை பிடிக்கவும் வேண்டாம். புகை பிடிப்போர் அருகில் இருக்கவும் வேண்டாம்.



    * நீச்சல் போன்ற பயிற்சியினை ஆரம்ப காலத்தில் இருந்தே பழகி விடுவது நல்லது. இது 60 சதவிகிதம் இருதய பாதிப்பு ஏற்படுவதினைக் குறைத்து விடுகின்றதாம்.
    * மனஉளைச்சல் ஒன்றே போதும். உங்கள் இருதயத்தினை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்க. ஆக முனைந்து கவலைகளை அடித்து துரத்தி விடுங்கள்.
    * அன்றாடம் 20 நிமிட தியானம் அவசியம் என்று வலியுறுத்தாத மருத்துவர்கள் உலகில் இல்லை எனலாம்.

    * punching bag ஒரு தலையணையாவது வைத்துக் கொள்ளுங்கள். கோபம் ஏற்பட்டால் அதனை வலுவாக boxing போல் குத்துங்கள். ஏனெனில் கோபம் உங்களுள் இருந்தால் உங்களை பாதிக்கும். வெளி வந்தால் மற்றவரை பாதிக்கும்.

    * உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு ஆஸ்பிரீன் மாத்திரை அவசியமா என கேட்டறியுங்கள். உங்கள் வயது, உடல் நலம், வேலை பளு இவற்றுக்கேற்ப அவரே உங்களுக்கு சரியான அளவினை தேவையெனின் பரிந்துரை செய்வார்.

    * காலை உணவினை தவறாது உண்பவர்களுக்கு 44 சதவிகிதம் இருதய பாதிப்பின் அபாயம் குறைந்தே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமா? 41 சதவிகித சர்க்கரை நோய் பாதிப்பும் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * பி வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பபோலிக் ஆசிட் சத்து மாத்திரையாக எடுத்துக் கொள்வது இருதய நோய் பாதிப்பினை குறைத்து விடுகின்றதாம்.

    * 5000 அடிகள் வீதம் தினம் நடப்பவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வெகுவாய் குறைகின்றது.

    * முழு தானியம், காய்கறி சாலட் இவை மாபெரும் உதவியாய் இருதய நோயிலிருந்து மனிதனை காக்கின்றது.

    * டீ குடிக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. அதிலும் கிரீன் டீ, லெமன் டீ, கறுப்பு டீ இவற்றினை நல்லது என்கின்றனர். இதிலுள்ள ப்ளேவனாய்ட் ரத்த நாளங்கள் உறுதியாய் வைப்பதுடன் ரத்தத்தினையும் இறுகாமல் வைக்கின்றது. இதனால் சிறு ரத்த கட்டிகள் உருவாகி அடைப்புகள் ஏற்படுவது வெகுவாய் தடுக்கப்படுகின்றது.

    * காபி இருதய பாதிப்பு உருவாகும் நிலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
    * அடர்ந்த சாக்லேட் ஓரிரு துண்டுகள் தினமும் சாப்பிடலாம்.
    * அதிக சோடியம் அதாவது உப்பினை தவிர்ப்பது இருதய பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றது.
    * குடும்ப உறவுகளுடன் தினமும் சிறிது நேரம் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள்.

    * ஓமேகா-3, இதனைப் பற்றி உங்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். 
    ×