search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98360"

    நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
    ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
    ஓம் அரங்கமா நகருளானே போற்றி
    ஓம் அற்புத லீலா போற்றி
    ஓம் அச்சுதனே போற்றி
    ஓம் அமரேறே போற்றி
    ஓம் அரவிந்த லோசனா போற்றி
    ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
    ஓம் ஆபத்சகாயனே போற்றி
    ஓம் ஆலிலை பாலகா போற்றி
    ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
    ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
    ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
    ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
    ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
    ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
    ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
    ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
    ஓம் ஊழி முதல்வனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
    ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
    ஓம் எண் குணத்தானே போற்றி
    ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
    ஓம் எழில் மிகுதேவா போற்றி
    ஓம் ஏழைப் பங்காளா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
    ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
    ஓம் கலியுக தெய்வமே போற்றி
    ஓம் கண்கண்ட தேவா போற்றி
    ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கமலக் கண்ணனே போற்றி
    ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
    ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
    ஓம் கிரிதர கோபாலனே போற்றி
    ஓம் கீதையின் நாயகனே போற்றி
    ஓம் குசேலர் நண்பனே போற்றி
    ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
    ஓம் கோபியர் தலைவனே போற்றி
    ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
    ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
    ஓம் கோகுல பாலகனே போற்றி
    ஓம் கோவிந்த ராஜனே போற்றி
    ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
    ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
    ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
    ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
    ஓம் சாந்த குணசீலனே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
    ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
    ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
    ஓம் திருமகள் மணாளனே போற்றி
    ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
    ஓம் துவாரகை மன்னனே போற்றி
    ஓம் தேவகி செல்வனே போற்றி
    ஓம் நந்த கோபாலனே போற்றி
    ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
    ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
    ஓம் நவநீத சோரனே போற்றி
    ஓம் நான்மறை பிரியனே போற்றி
    ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
    ஓம் பரந்தாமனே போற்றி
    ஓம் பக்த வத்சலனே போற்றி
    ஓம் பலராமர் சோதரனே போற்றி
    ஓம் பவள வாயனே போற்றி
    ஓம் பத்ம நாபனே போற்றி
    ஓம் பார்த்த சாரதியே போற்றி
    ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
    ஓம் பாண்டவர் துாதனே போற்றி
    ஓம் பாண்டு ரங்கனே போற்றி
    ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
    ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
    ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
    ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
    ஓம் புருஷோத்தமனே போற்றி
    ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
    ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
    ஓம் மதுசூதனனே போற்றி
    ஓம் மண்ணை உண்டவனே போற்றி
    ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
    ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
    ஓம் மாயா வினோதனே போற்றி
    ஓம் மீராவின் வாழ்வே போற்றி
    ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
    ஓம் முழுமதி வதனா போற்றி
    ஓம் யமுனைத் துறைவனே போற்றி
    ஓம் யசோதை செய்தவமே போற்றி
    ஓம் யதுகுலத் திலகமே போற்றி
    ஓம் ராதையின் நாயகனே போற்றி
    ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
    ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
    ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேணு கோபாலனே போற்றி
    ஓம் வைகுண்ட வாசனே போற்றி
    ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
    கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். இவர்களின் நட்பை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். திருமணமாகி அவருக்கு 27 குழந்தைகள் பிறந்ததால் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.
    குசேலரின் மனைவி சுசீலை. கணவர் மனம் நோகாதபடி குடும்பம் நடத்தினார்.

    ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனைவருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.

    உடனே சுசீலை குசேலரிடம், குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றார். முதலில் தயங்கிய குசேலர் பிறகு குழந்தைகளுக்காக ஒத்துக்கொண்டார். ஒரு துணியில் சிறிது அவல் கட்டிக்கொண்டு நண்பனை காண துவாரகாபுரி சென்றார். குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார். குசேலரை அழைத்துச் சென்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.

    பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார். இதை கவனித்துவிட்ட கிருஷ்ணர் குசேலர் மறைத்த அவல் பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.

    கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் “அட்சயம்” என்று உச்சரித்தார். மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின. குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாளைத் தான் “அட்சய திருதியை” திருநாள் என்றழைக்கிறார்கள்.
    திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.
    விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம், பலராம அவதாரம். இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.

    வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து, வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம். இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம். தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க எடுக்கப்பட்டது வாமன அவதாரம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்த எடுக்கப்பட்டது ராம அவதாரம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இருப்பினும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்டது கிருஷ்ண அவதாரம். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்கு உற்ற துணையாக இருந்தவர்களை, உன்னதமாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரமே, பலராமர் அவதாரம் ஆகும்.

    திருமாலின் அவதார வரிசை பற்றிய சந்தேகம் நாரதருக்கு ஏற்பட்டது. அப்போது திருமால் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தார். நேராக அவரிடம் சென்ற நாரதர், “இறைவா! இந்த கிருஷ்ண அவதாரம் உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?” என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணர், “இது என்னுடைய ஒன்பதாவது அவதாரம்” என்று பதிலளித்தார்.

    “அப்படியானால் எட்டாவது அவதாரம் எது?” என்ற நாரதரின் கேள்விக்கு, “இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்துள்ள பலராமன்தான், என்னுடைய எட்டாவது அவதாரம்” என்றார்.

    குழப்பம் அடைந்த நாரதர், “எப்படி பெருமாளே! தங்களின் படுக்கையாக இருக்கிற ஆதிஷேசன் என்ற நாகம்தானே பலராமனாக பிறந்துள்ளது. அப்படியிருக்க, பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வர முடியும்?” என்று கேட்டார்.

    “நாரதரே, எனது ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்து சதா சர்வகாலமும், ‘அண்ணா.. அண்ணா..’ என்று என் காலையே பிடித்து கொண்டிருந்த லட்சுமணனுக்கு, நான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே. அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆதிசேஷன் மூலமாக எனது அண்ணனாக அவனை படைத்து, தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்துள்ளேன்” என்றார் பரந்தாமன்.

    இப்படி திருமாலே உருகி உருவாக்கிய உன்னத அவதாரமே, பலராமர் அவதாரம்.

    கலப்பையை ஆயதமாகக் கொண்ட பலராமர், உறவுமுறையில் கிருஷ்ணரின் சகோதரர், கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் உதித்தவர். இவரை ‘பலதேவன்’, ‘பலபுத்திரன்’, ‘கதாயுதன்’ என்று போற்றுவர். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. பலராமரின் தங்கை பெயர் சுபத்திரை.

    பலராமர் பிறந்தபோது, அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர், சடங்குகள் செய்து ராமன் என்று பெயரிட்டார். மேலும் அந்தக் குழந்தை மிகவும் பலசாலியாக இருந்ததால், ‘பலராமன்’ என்றும் அழைக்கலாம் என்றார்.

    ரோகிணியின் வயிற்றில் உதித்த பலராமனும், தேவகி வயிற்றில் உதித்த கண்ணனும் இணை பிரியா சகோதரர்கள் ஆயினர். பிருந்தாவனத்திலும், ஆயர்பாடியிலும் இவர்கள் நடத்திய திருவிளையாடல் கொஞ்ச நஞ்சமல்ல. கோவர்த்தனகிரியில் இவர்கள் மாடுமேய்க்கும் காலத்தில், மனித மாமிசத்தை உண்ணும் வழக்கம் கொண்ட கழுதை வடிவிலான தேனுகன் என்பவனையும், வில்வ மரத்தடியின் கீழ் வில்வ பழத்தால் பந்தாடிய காலத்தில் பிரலம்பன் என்பவனையும், நரகாசுரனின் வானரத் தலைவனான துவிதனின் சகோதரன் மயிந்தன் என்பவனையும் இருவரும் சேர்ந்தே அழித்தனர்.

    மகாபாரதத்தில் பலராமர்

    துரியோதனனுக்கு லட்சுமளை என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணம் செய்ய சுயம்வரம் ஏற்பாடு செய்தான், துரியோதனன். சுயம்வரத்திற்கு வந்த சாம்பன், லட்சுமளையை தூக்கிச் சென்றான். சாம்பன் வேறுயாருமல்ல, கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன்தான். தன் மகளை சாம்பன் தூக்கிச் சென்றதும், துரியோதனன் தன் படையோடு வந்து சாம்பனுடன் பேரிட்டான். அவர்களை எதிர்த்து நின்றான் சாம்பன். இருப்பினும் அந்த படையில் பலம் வாய்ந்த பீஷ்மரும், துரோணரும் இருந்ததால், சாம்பன் சிறைபடுத்தப்பட்டான்.

    இதுபற்றி அறிந்ததும் பலராமர், அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தார். “துரியோதனா! நீ செய்ததில் நியாயம் இல்லை. தனி ஒருவனாக போராடிய சாம்பனை, படையோடு சென்று சிறைபடுத்தியிருக்கிறாய். நாங்கள் உன்னுடைய உறவினர் என்பது மறந்து போயிற்றா? ஏன் எப்பொழுது பார்த்தாலும் எங்களோடு பகைமை பாராட்டிக் கொண்டே இருக்கிறாய்? சாம்பனை விடுவித்து, உன்னுடைய மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடு” என்றார்.

    ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன், பலராமரையும் அவர் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமருக்குக் கோபம் பீறிட்டது.

    “உங்களோடு சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை. கணப் பொழுதில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன்” என்று கூறி, தன் ஆயுதமான கலப்பையை எடுத்து தரையில் அடித்தார்.

    அடுத்த நொடி அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நதியில், அந்த நகரமே மூழ்கிப் போகுமோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. உடனே துரியோதனன், பலராமர் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சு மளையை, சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான்.

    அதன்பிறகு, தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமர் கொண்டுவந்து நிலைப்படுத்தினார்.
    கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்ப்பு எனும் ஊரில் பசி தாங்காத கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    தல வரலாறு :

    பன்னிரண்டு ஆண்டு வனவாச காலத்தின் போது வழிபடுவதற்காக, தனது உருவச் சிலை ஒன்றை பாண்டவர்களுக்கு, கிருஷ்ணர் கொடுத்திருந்தார். பாண்டவர்களும் தங்களது வனவாசக் காலம் முழுவதும் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.

    அவர்கள் வனவாசம் முடிந்து, நாட்டிற்குத் திரும்ப இருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள், அந்தக் கிருஷ்ணர் சிலையைத் தங்கள் வழிபாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி பாண்டவர்களிடம் கேட்டனர். பாண்டவர்களும், அச்சிலையை அவர்களிடம் கொடுத்தனர்.

    சிலையைப் பெற்றுக் கொண்ட சேர்தலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதனை ஓரிடத்தில் நிறுவி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், அவர்களால் அந்தச் சிலையைத் தொடர்ந்து வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் அந்தச் சிலையைக் கடலில் போட்டுவிட்டனர்.

    நீண்ட காலத்திற்குப் பின்பு முனிவர் ஒருவர், அந்தப் பகுதியின் வழியாகப் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகு, ஓரிடத்தில் நகராமல் நின்றது. திடீரென்று கடல் நீர் வற்றியதுடன், கிருஷ்ணர் சிலை ஒன்று தென்பட்டது. முனிவர் சிலையை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்பட்டார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், தானாகவே கிழக்குப் பகுதியில் உள்ள குன்னம், பள்ளிக்கரா வழியா பயணித்து, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை அடைந்து நின்றது.

    படகில் இருந்து இறங்கிய முனிவர், அங்கு சிலை எதுவும் நிறுவப்படாமல் இருந்த கோவில் ஒன்றைக் கண்டார். அங்கு அச்சிலையை நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கடற்கரைப் பகுதியில் உள்ள மீனாட்சி ஆற்றின் கரை அருகில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு கருவறையில் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்கிறார். இச்சிலையின் முன்புறத்தில் இருக்கும் வலது கையில் உணவு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் இரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி, கணபதி, சுப்பிரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னிதிகளும் உள்ளன.

    கம்சனைக் கொன்று விட்டு, மிகுந்த கோபத்துடனும், அதிகப் பசியுடனும் இருந்த கிருஷ்ணர் தோற்றமாக இச்சிலை கருதப்படுகிறது. எனவே ஆலயத்தில் அதிகாலை வேளையில், மூலவருக்கு அபிஷேகம் முடிந்தவுடன் முதலில் மூலவரின் தலையை உலர்த்தி அவருடைய கோபம் குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது பசியைத் தீர்க்கும் வகையில் அவருக்கு உசா பாயசம் எனும் உணவு படைக்கப்படுகிறது. அதன் பிறகே, உடல் பகுதி உலர்த்தப்படுகிறது.

    இந்தக் கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் பசியைத் தாங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாலை வேளையில் கோவில் திறக்கப்படும் போது, அர்ச்சகர் கோடரி ஒன்றை வைத்துக் கொண்டே கோவில் நடையைத் திறக்கிறார். கோவில் பூட்டைத் திறக்கத் தாமதம் ஏற்பட்டால், அவர் கையில் வைத்திருக்கும் கோடாரியைக் கொண்டு கதவை உடனடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பசியுடன் இருக்கும் கிருஷ்ணருக்குக் கால தாமதமின்றி, உணவு படைத்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்பதற்காக, இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

    இந்து சமயக் கோவில்கள் அனைத்தும் சூரிய கிரகண வேளைகளில் மூடப்பட்டு விடும். அதே போன்று, இக்கோவிலும் ஒரு முறை சூரிய கிரகணத்தின் போது மூடப்பட்டது. கிரகணக் காலம் முடிந்த பிறகுக் கதவைத் திறந்திருக்கின்றனர். அப்போது மூலவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்து போயிருந்தது. அதனைக் கண்ட அர்ச்சகரும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிசங்கரர், இங்கிருக்கும் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்றும், இனி கிரகண வேளைகளில் கோவிலை அடைக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார். அன்றில் இருந்து கிரகணத்தின் போது இத்தலம் மூடப்படுவது இல்லை.

    இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிடும் பக்தர்களுக்கு, அவர்களது வாழ்நாளில் பசிப் பிணி ஏற்படாது என்கிறார்கள். இதற்காகவே, இக்கோவிலில் இரவு வேளையில் கோவிலின் நடைசாத்துவதற்கு முன்பாகப் அர்ச்சகர், ‘இங்கு யாராவது பசியோடு இருக்கிறீர்களா?’ எனக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    இந்த ஆலயம் தினமும் அதிகாலை 2 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். கேரளாவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும் ஒரே ஆலயம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கோட்டயம் நகரில் இருந்து வடமேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவார்ப்பு என்னும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. கோட்டயத்தில் இருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.
    கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
    அந்த பாதத்தைக் கவனித்துப் பாருங்கள். எட்டு என்ற எண்ணைப் போல காட்சி தரும். அதற்கு மேல் உள்ள விரல்கள் 5 புள்ளிகளாகக் காட்சி தரும். இங்கு 8-ம், 5-ம் சேருகின்றது.

    8 என்பது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், 5 என்பது ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதையும் குறிப்பதாகும். அஷ்டாச்சரமும், பஞ்சாட்சரமும் இணைந்து, கண்ணனின் திருவடிக் கோலமாக மாறுகிறது.

    எனவே கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
    மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் இருக்கிறது.
    இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து உலகங்கொண்ட மாயனின் துதி! மோஹினியும் நானே, மோஹம் அளிப்பவனும் நானே, மாயையும் நானே, மாயை விலக்குபவனும் நானே என மாயன் காட்டி நின்ற கோலம்.

    தானே மாயனுமாய் மோஹினியாய் காட்டி நின்ற சம்மோஹன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் மயக்க நிலை நீங்கும்.

    ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
    காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
    பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
    கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.

    எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதென்றால் அது மிகவும் சிரமமானது. காரணம், அவன் ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன். அப்படி என்றால் இரண்டும் அல்லாத மூன்றாம் பாலினத்தவனா என்றால், அதுவும் அல்லன்! அவனை எங்கே காட்டென்று சொன்னால் அவன் நம் கண்ணால் காண்பதற்கு இயலாதவன். உள்ளவனா என்றால் அவன் உள்ளவன் அல்லன். அப்படி என்றால் அவன் இல்லையா என்று கேட்டால், அவன் இல்லாதவனும் அல்லன். ஆனால் அடியார் என்ன விரும்புகின்றனரோ அதற்கு ஏற்ப, அவர்கள் விரும்பிய வடிவை உடையவன் ஆவான். அப்படி அல்லாதவனாகவும் இருப்பான். ஆகவேதான் அவனை குறிப்பிட்டு அவன் தன்மையைச் சொல்லுதல் சிரமம் என்றார் நம் ஆழ்வார்.

    ஆயினும் நமக்காக இப்பூவுலகில் அவதரித்து நம்முடனே வாழ்ந்து பக்தியின் பரிணாமத்தை விதைத்த கண்ணன் தன் மாயையினால் தோற்றுவித்த சம்மோஹன வடிவத்தை தியானித்து நலம் பெறலாம்.

    உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் இது. நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பங்களில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அருமையான சுலோகம். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அளித்தருளும்.

    க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
    த்ரிபங்கீ லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
    பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
    ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
    இஷீசாபம் வேணுவாத்தியம் ச தாரயந்தம் புஜாஷ்டகை:
    ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
    ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே ||

    தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமுமாகத் திகழ்பவரும் பாதி புருஷாகார சரீரரும் பாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கரங்களில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கரங்களில் வேணு வாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்த படி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல் படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹன ரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது, அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.

    ஆங்கிலேயர் நம் நாட்டை திருச்சி ஆண்ட போது படைவீரர்கள் தங்கும் பகுதியாக இருந்த இடம்தான் கண்டோண்மெண்ட் பகுதி. அவர்களது முழுமையான ஆளுகையின் கீழ் இருந்த இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களது விருப்ப தெய்வமாக காளிகாபரமேஸ்வரியை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உருமாறியது.

    வடக்கு திசைநோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பழமையானது.

    முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால் அழகிய நுழைவு வாசல் உள்ளது. இதைக் கடந்ததும் நீண்ட மண்டபம். அதையடுத்து மகாமண்டபம் உள்ளது.

    எதிரே அர்த்தமண்டப நுழைவு வாயிலின் இடதுபுறம் ஜெயன், விஷ்ணு திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் விஜயன், ஆஞ்சநேயர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.

    மகா மண்டபத்தின் வலதுபுறம் காளிகா பரமேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க அன்னையின் சன்னிதியின் முன் சூலம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. பிரகாரத்தின் தென் திசையில் நெடிதுயர்ந்த துளசிமாடம் உள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் சொர்ண கணபதி, நாகராஜா, தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். சுந்தரேஸ்வர், மீனாட்சி இருவர் முன்பும் நந்தியம் பலிபீடமும் இருக்க இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்து சண்டிகேசுவரர் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். அடுத்து ஐய்யப்பன் மண்டபம் உள்ளது. அருள்மிகு முருகன் வள்ளி தெய்வானையுடன் தனிக் கோவில் கொண்டு அருள்கிறார்.

    இக்கோவிலின் தேவக்கோட்டத்தின் வடபுறம் காலைபரவர் தென்திசை நோக்கி இருக்கிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மயிலும் பலிபீடமும் உள்ளன. அடுத்து ராஜ கணபதியின் சன்னிதி உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தின் வலது புறம் விஷ்ணு துர்க்கை தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. துர்க்கை எட்டு கைகளுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறவும் விரைவாக திருமணம் நடக்க பிரார்த்தனை செய்பவர்களும் வெள்ளிக் கிழமை அன்று ராகு கால அர்ச்சனை செய்வதுடன் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு மாத பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்னைக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் கூட்டம் கணிசமாகக் காணப்படும். சித்திரை முதல் நாள் காளிகா பரமேஸ்வரி புறப்பாடும் நடைபெறுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை இங்கு குத்து விளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மார்கழி திருநாட்கள், கார்த்திகை, சிவராத்திரி, பொங்கல், ஆண்டு பிறப்பு போன்ற நாட்களில் இங்கு இறைவன் இறைவிக்கு சிறப்பான பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.

    பக்தர்களிடம் பணம் வசூலிக்க இந்த ஆலயத்தில் மகா உண்டியல்கள் கிடையாது. உபயமாக ஆலயத்திற்கு பொருட்கள் வாங்கித் தருபவர்களின் பெயர்களை அந்தப் பொருட்களின் மீதோ வேறு எங்கேனுமோ காண இயலாது.

    இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர் என இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குணமாக இங்குள்ள கிருஷ்ண பரமாத்மாவை வேண்டிக் கொண்டு ரோகிணி நட்சத்திரத்தில் இறைவனுக்கு பால், தயிர் மற்றும் பழச்சார் அபிஷேகம் செய்தால், அந்த குழந்தைகள் ஓரளவோ அல்லது முற்றிலுமோ குணமடைகின்றனர் என்பது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    தங்களது கோரிக்கை நிறைவேறத் தொடங்கியதும் வேண்டியவர்கள் கிருஷ்ணனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வது இங்கு சர்வ சாதாரணமாகக் காணும் காட்சியாகும்.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்தி ருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு உரியடி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அன்னதானமும் நடைபெறும். பின்னர் கிருஷ்ணர் உலா வருவது வழக்கம்.

    வெண்ணெய் திருடனான பால கிருஷ்ணன் சிறார்களின் குறைகளை இந்த ஆலயத்தில் நிவர்த்தி செய்து வைப்பது கண்கூடான நிஜம்.

    அமைவிடம் :

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது இந்த ஆலயம்.
    உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.

    விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.

    தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங் களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

    உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.



    புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.

    முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டு வந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனக தாசருக்கு காட்சியளித்தார்.

    கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது. 
    மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் அவதாரம். விஷ்ணுவின் அவதாரங்களிலேயே லீலைகள் பல நிறைந்தது இந்த அவதாரம் தான்.
    மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் அவதாரம். விஷ்ணுவின் அவதாரங்களிலேயே லீலைகள் பல நிறைந்தது இந்த அவதாரம் தான்.

    வசுதேவருக்கும்- தேவகிக்கும் சிறைச் சாலைக்குள் பிறந்த கிருஷ்ணர், அன்றே இரவோடு இரவாக கோகுலத்தில் உள்ள யசோதையிடம் சேர்க்கப்பட்டார். அங்கு பல லீலைகள் செய்தபடி வளர்ந்த கிருஷ்ணரை, தேவகியின் சகோதரன் கம்சன் கொல்ல துடித்தான்.

    ஒரு கட்டத்தில் சிறுவனான கிருஷ்ணன், கம்சனை வதம் செய்தார். கிருஷ்ணர், மகாபாரதத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தன் உறவினர்களுக்கு எதிராக போர் புரிய தயங்கி, அர்ச்சுனன் செய்வதறியாது நின்றான்.

    அப்போது அவனுக்கு தர்ம அதர்மங்களை விளக்கி, அவன் போர் புரிய வேண்டியதன் அவசியத்தை விளக்கியவர், கிருஷ்ணன். பாண்டவர்கள் அந்த குருசேத்திரப் போரில் வெற்றிபெறவும், கிருஷ்ணன் செய்த சூட்சுமங்களே காரணமாக அமைந்தன.

    குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் வழங்கிய அறிவுரைகளே பகவத் கீதையாக புகழ்பெற்று விளங்குகிறது.
    மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.
    மதுராவை தலைநகராக கொண்ட விருசினி ராஜ்ஜியத்தின் மன்னன் உக்கிரசேனர். இவருக்கும் பத்மாவதிக்கும் பிறந்தவன் கம்சன் என்ற கொடுங்கோலன். இவன் தனது தந்தையை சிறையில் அடைத்து விட்டு ஆட்சியை கைப்பற்றியவன்.

    கம்சனின் தங்கை தேவகி. இவளுக்கு பிறக்கப்போகும் 8-வது குழந்தையால் கம்சனுக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டது. இதனால் தங்கையையும், அவளது கணவனையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த 6 குழந்தை களைக் கொன்றான்.

    அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளை கம்சனால் கொல்ல முடியவில்லை. அவர்கள் கோகுலத்தில் யசோதாவிடம் வளர்ந்தனர். குழந்தையாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் பல அரக்கர்களை அனுப்பினான். ஆனால் கிருஷ்ணனை எதுவும் செய்ய முடியவில்லை.

    முடிவில் மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.
    பகவத் கீதை படியுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.
    பகவத் கீதை எந்த கால கட்டத்தில் தோன்றியது என்பதில் ஆராய்ச்சியாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருந்தாலும் அது அவதரித்த தினத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள். எனவே நாளை 18-ந்தேதி பகவத் கீதைக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பகவத் கீதை ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல் ஆகும். பகவத் கீதை இருந்தால் உலகமே உங்கள் பக்கம் இருக்கும் பலம் வந்துவிடும்.

    இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பகவத் கீதை என்பதற்கு, “கடவுளின் பாடல்கள்” என்று அர்த்தம் ஆகும். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது எது தெரியுமா? மகாபாரதப் போர். இந்த போர் எப்போது, எப்படி, யார்-யாருக்கு இடையே நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் “பகவத்கீதை” பிறந்த சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    அஸ்தினாபுரம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை குரு குலத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த குலத்தில் பிறந்த அண்ணன்-தம்பியான திருதராஷ்டிரனுக்கும் பாண்டு வுக்கும் இடையே ஆட்சியை யார் நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

    பிறவிக் குருடரான திருதராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் துரியோதனன், துச்சாதனன் என 100 மகன்கள் பிறந்தனர். இவர்கள் கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
    பாண்டுவுக்கு குந்தி மூலம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என 5 மகன்கள் பிறந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்த 5 பேருக்கும் பொதுவான ஒரே மனைவியாக திரவுபதி இருந்தார்.

    துரியோதனனுக்கும், தர்மனுக்கும் இடையில் அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சகுனி செய்த சூழ்ச்சியால் சூதாட்டத்தில் நாட்டையும், மனைவியையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. 12 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி உரிமையை கேட்டனர். ஆட்சியைக் கொடுக்க துரியோதனன் மறுத்தான். இதையடுத்து இருவரும் போருக்குத் தயாரானார்கள்.

    இருவருக்கும் பொது வானவராக இருந்தவர் கிருஷ்ணர். அதாவது இரு தரப்பினருக்குமே அவர் மாமா உறவில் வருபவர். அந்த உரிமையில் துரியோதனன், தர்மர் இருவரும் அவரிடம் சென்று போரில் தங்களுக்கு உதவுமாறு கேட்டனர்.

    அவர்களிடம் கிருஷ்ணர், “நான் மட்டும் வேண்டுமா? அல்லது லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட எனது படை வேண்டுமா? என்று கேட்டார்.

    துரியோதனன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை தந்தாலே போதும்” என்றான். பஞ்ச பாண்டவர்களோ, தங்களுக்கு “பரமாத்மாவான கிருஷ்ணர் மட்டும் உதவியாக வந்தால் போதும்” என்றனர்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரத போர் தொடங்கியது. மொத்தம் 18 நாட்கள் போர் நடந்தது. இந்த போரின்போது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக நிற்பவர்களை பார்த்தான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்த்து போர் புரிய அர்ச்சுனனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

    சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று மிகவும் யோசித்தார். அவரது மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாமா? என்று கூட அர்ச்சுனன் மனம் நினைத்தது.

    அப்போது அவருக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். “தர்மத்துக் காக போர் செய்யும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலில் நிறைய தத்துவங்கள், யோகங்கள், விளக்கங்கள் இடம் பெற்று இருந்தன.

    அந்த உரையாடல் தொகுப்பே பகவத் கீதையாகும்.

    அர்ச்சுனனின் சோர்ந்து போன மனத்தை சுறுசுறுப்பாக்கும் வகையில் கிருஷ்ணரின் உபதேசங்கள் இருந்தன. போர் களத்தில் பிறந்த இந்த உபதேசங்கள் சாதாரண மானவை அல்ல. ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் பின்னி பிணைந்தவை. எனவேதான் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு உபதேசத்தையும், கோட்பாடுகளையும் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்த கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    யார் ஒருவர் பகவத் கீதை வழி நடக்கிறார்களோ அவர்களது ஆன்மா மேம்படும். சகல துக்கங்களில் இருந்தும் அவர்களால் மிக எளிதாக விலக முடியும். இதுதான் பகவத் கீதைக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பாகும். உண்மையில் பகவத் கீதையின் உண்மையான கருத்து என்பது, “காமம், குரோதம், சோம்பல், ஆணவம், சந்தேகம், கவலை போன்றவற்றை நீக்கி ஆன்மிகத்தை அடைய வேண்டும்” என்பதே ஆகும்.

    மொத்தம் 18 அத்தியாயங்களை கொண்ட பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஸ்ரீகிருஷ்ணர் கூறிய வேதாந்த பார்வை, சுயதர்ம பார்வை, தர்ம யோக பார்வை, பக்தி யோக பார்வை, ஞானயோக பார்வை ஆகிய ஐந்தும் மிக முக்கியமானது ஆகும்.

    இதில் வேதாந்த பார்வையில், “ஆத்மா என்பது அழியாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. நீ அழிக்கப் போவது உடம்பைத்தான்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த ஒரே தத்துவத்தின் அடிப்படையில்தான் முழு கீதையும் செயல்படுகிறது.

    கிருஷ்ணரின் போதனைகள் வாழ்நாள் முழுவதற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. குறிப்பாக கீதாச்சாரம் ஒன்றே போதும், நமது மனதை பக்குவப்படுத்த. இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    மகாபாரத போர் நடந்த இடம்தான் பகவத் கீதை பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த போருக்கு குருஷேத்திர போர் என்ற பெயரும் உண்டு. மகாபாரதப் போர் நடந்த பெருமைக்குரிய அந்த இடம் அரியானா மாநிலம் குருஷேத்திரா மாவட்டத்தில் உள்ளது.

    இந்த இடம் சண்டிகர் நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பரதகுலத்தில் பிறந்த குரு எனும் அரசன் இந்த தலத்தில் தவம் இருந்து சிறப்பு பெற்றான். இதனால் அந்த இடம் அந்த அரசனின் பெயராலேயே குருஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

    பகவத் கீதையின் தாயக மாக திகழும் குருஷேத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் “பகவத் கீதை ஜெயந்தி விழா” பிரமாண்டமாக கொண் டாடப்பட்டு வருகிறது.
    இந்த ஆண்டுக்கான விழா நாளை 18-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
    குருஷேத்திரம் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. அதில் முக்கியமானது பிரம்ம சரோவர் புனித குளம் ஆகும். இது இந்தியாவில் பழமை வாய்ந்த மிகப்பெரிய புனித குளமாக கருதப்படுகிறது.

    அந்த புனித குளத்தில் நீராடினால் உடலும் உள்ளமும் சக்தி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த புனித குளத்தை உருவாக்கியவர் பிரம்மா ஆவார். மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திய பிறகு அவர் இந்த குளத்தை உருவாக்கியதாக புராணங்களில் குறிப்பிடப்படப் பட்டுள்ளது.

    ஜோதிசர்:- இது அர்ச்சு னனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம். இந்த இடம் குருச்சேத்திரம் மாவட்டத்தில் குருச்சேத்திரம்- பெஹோவா சாலையையட்டி அமைந்துள்ளது. குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    இந்த இடத்தின் முழு பெயர் ஜோதிசர் தீர்த் என்பதாகும். இந்த இடத்தில்தான் அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை கிருஷ்ணர் உபதேசித்தார். இந்த இடத்தில்தான் அர்ச்சுனன் உற்சாகம் பெற்றார்.

    அங்குள்ள பெரிய ஆலமரத்தின் அடியில்தான் கீதா உபதேசம் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த ஆலமரம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அந்த ஆலமரத்தை புனிதமாக கருதி கம்பிவேலி போட்டு பாதுகாத்து வருகிறார்கள். அந்த மரத்திற்கு கீழ் கிருஷ்ணரின் பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் கீதா உபதேச சிலை கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. அருகில் தீர்த்தமும் இருக்கிறது. கிரகணங்களின்போது இந்த தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராடி பித்ருதர்பணம் செய்து விட்டு செல்வார்கள்.

    இந்த தீர்த்தக் கரையோரம் அமர்ந்து பகவத் கீதை படிப்பது மிகுந்த பலன்களை தரும் என்பது மக்களிடம் நம்பிக்கையாக உள்ளது. இதே பகுதியில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் ஆலயம் உள்ளது. பீஷ்மரை சுற்றி பாண்டவர்கள் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் அந்த பகுதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    குருசேத்திர பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் வருமாறு:-

    * பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய ரதம் உள்ளது.
    * கிருஷ்ணா அருங்காட்சியகம்:- மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம்.
    * பீஷ்ம குண்டம்:- இது பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்.
    * பிரம்ம குண்டம்:- இது அர்ச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
    * குருஷேத்திர அறிவியல் அருங்காட்சியகம்.

    இந்த தலத்தில் பகவத் கீதைக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கும் சமயத்தில் நாடு முழுவதும் பகவத் கீதை பிறந்த தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகவத் கீதை படியுங்கள். விஷ்ணுசகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.

    பகவத் கீதை புத்தகம் தானம் செய்யுங்கள்

    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.

    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது.
    பாண்டவர்களுக்கு குண்டூசி அளவு நிலம் கூட தர முடியாது என்று கூறியதன் விளைவாக, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூண்டது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரை ‘குருசேத்திரப் போர்’ என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது.

    இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பாக, போர்க்களத்தில் தனது உறவினர்களை எதிர்த்து போரிட அர்ச்சுனன் விரும்பவில்லை. அப்பொழுது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பகவான், கர்ம வினைகளை பற்றி எடுத்துரைத்து அர்ச்சுனனை போருக்கு தயாராக்கினார்.

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது. இது 18 பகுதிகளையும், 650 செய்யுள்களையும் கொண்டது.
    ×