search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோம்பை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகள் ரூபிகா (வயது15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ரூபிகா தனது தந்தையிடம் கடைக்கு சென்று பேப்பர் வாங்கி வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பெற்றோர் கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி ரூபிகாவை தேடி வருகின்றனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் திரைப்படவிழாவை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் குழந்தைகள் திரைப்பட விழா சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு குழந்தைகள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில், எங்களாலும் முடியும், மல்லி, துபாஷி மற்றும் முதலை ஆகிய நான்கு படங்கள் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 27 திரையரங்குகளில் 81 காட்சிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் தேர்வுகள் பாதிக்காத வகையில் அட்டவணை தயார் செய்து, அருகில் உள்ள திரையரங்குகளின் இருக்கைக்கு ஏற்றவாறு பள்ளி குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 114 பள்ளிகளில் பயிலும் 51 ஆயிரத்து 936 மாணவ, மாணவிகளுக்கு இக்குழந்தைகள் திரைப்படமானது திரையிடப்படுகிறது.

    பள்ளி குழந்தைகளை அழைத்து வரும்போது உடன் ஆசிரியர்கள் வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளை தூய்மையாக பராமரித்திடவும், மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்விசிறி வசதி, சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்திடவும், குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் சமயம் திரையரங்க பணியாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் திரையரங்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முன்னதாக தியேட்டரில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் பலரும் அமர்ந்து குழந்தைகள் திரைப்படத்தை பார்த்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்க உதவி வினியோக அலுவலர் அகிலா, சேலம் (மேற்கு) தாசில்தார் தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் அருகே பிளஸ்-2 மாணவியை காதலிக்குமாறு அத்துமீறிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    அருமனை அருகே மானங்கன்னி விளையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அந்த மாணவியை அருமனை வட்டவிளை பகுதியைச் சேர்ந்த ரெஜின் (வயது 25) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதை அந்த மாணவி தனது பெற்றோரிடம் சென்று கூறினார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெஜின் வீட்டிற்குச் சென்று கண்டித்தனர். நேற்று முன்தினம் மாணவி, பள்ளிக்கூடத்திற்கு சென்றபோது, பள்ளிக்கூட வாசலில் வைத்து மாணவியை ரெஜின் தடுத்து நிறுத்தினார். தன்னை காதலிக்குமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரெஜின், மாணவியை கன்னத்தில் அடித்ததுடன் கையை பிடித்து இழுத்தார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார்.

    இதையடுத்து அந்த மாணவி, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ரெஜின் மீது போஸ்கோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெஜினை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரெஜின் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரெஜின் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
    விருதுநகரில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்ததாக போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பாண்டியன் நகர் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (17), அஜீத்குமார் (19) ஆகியோர் மாணவியிடம் கேலி-கிண்டல் செய்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் என்ற கருப்பசாமி மற்றும் அஜீத்குமாரை கைது செய்தனர்.

    கைதான விஜய், வத்தலக்குண்டு செங்கல், சிமெண்டு ஆலையிலும், அஜீத்குமார் கமுதியிலும் வேலை பார்த்து வருகின்றனர். #tamilnews
    ஊத்துக்கோட்டையில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை கைது செய்த போலீசார் அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை அவள் பள்ளி முடிந்து வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த விவசாயி ராமன், சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.

    பின்னர் அவர், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுபற்றி அவள் பெற்றோரிடம் கூறி கதறினார்.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தார். அவரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே விபத்தில் மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் ராஜா. டீ மாஸ்டர். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 14). இவர், சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், திடீரென தமிழ்ச்செல்வி மீது மோதியது.

    இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளும் அகற்றப்பட்டன. இதற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

    சாலையை கடக்கும்போது, பலர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். விரைவில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து, விபத்தைத் தடுக்க வேண்டும், என்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே மாணவியை ஆட்டோவில் கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் புத்தாடை வாங்குவதற்காக மாணவி ஒரு ஆட்டோவில் எலவனாசூர்கோட்டையில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். பின்னர் புத்தாடை வாங்கிவிட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் மாணவியின் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் ஆட்டோ டிரைவர் சென்றதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். ஆனால் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் மிரட்டி, அவரை கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை கடத்தி சென்றதாக புகைப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி கீழே குதித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    அறுவை சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாக வக்கீல் அறிவித்துள்ளார். #HIVBlood

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த மாணவி ரத்தம் உறையாமை நோயால் அவதிப்பட்டார். அவருக்கு மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மதுரை புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது மாணவிக்கு மூக்கில் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆபரே‌ஷன் நடந்தது. ஆபரே‌ஷனுக்கு பின்னர் ரத்தம் செலுத்தப்பட்டது. ஒருசில நாட்களுக்கு பின்னர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாணவிக்கு ஆபரே‌ஷன் நடந்த ஆஸ்பத்திரியில் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

    எனவே ஆஸ்பத்திரி மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தற்போது மாணவிக்கு ரத்தம் கொடுத்த ரத்த வங்கி செயல்பாட்டில் இல்லை. மாணவி தற்போது மதுரையில் உள்ள கல்லூரியில் நடனம் தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    உடல் நலக்குறைவு காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #HIVBlood

    சிறந்த கடிதம் எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒருநாள் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி பேசினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் ‘என் கனவு’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,508 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் டானிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். சார்பு நீதிபதி ராஜ்மோகன், முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீராம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி லட்சுமி, அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாக எடுத்துரைக்கும் வகையில் இந்த சாதனை நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது. முந்தைய காலத்தில் பெற்றோர்கள், பிள்ளைகளிடையே கடித தொடர்பு இருந்தது. இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவிகள் உங்களது பெற்றோர்களுக்கு உங்கள் எண்ணங்கள், ஆசைகள், சமமாக நடத்துவது, உயர்கல்வி படிக்க வைப்பது, குழந்தை திருமணம் செய்யக்கூடாது என்பன குறித்து தபால் அட்டையில் எழுதலாம்.

    இங்கு எழுதப்படும் கடிதங்களில் சிறந்த முறையில் நன்றாக எழுதியுள்ள கடிதங்களில் 25 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு என்னுடன் காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

    பெற்றோர்களுக்கு நான் கூறுவது பெண் குழந்தைகளை வீட்டில் சமமாக நடத்துங்கள், அப்போது தான் அவர்களும் சமுதாயத்தில் அனைவரிடமும் சமமாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாணவிகள் கலெக்டர், நீதிபதிகள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தபால்துறை மூலமாக ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தின் பாஸ் புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 
    வேலூரில் காதல் தோல்வியால் நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த குணசீலன் மகள் லாவண்யா (21). இவர் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    அவரது உறவினரான வாலிபரை காதலித்து வந்தார். காதலுக்கு வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

    உடல் கருகிய அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாகாயம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.இவர் அவரது உறவினர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பாலாஜி நேற்று உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது வீட்டில் பெண் கேட்க சென்றுள்ளார்.

    அதற்கு பெண்ணின் தந்தை பெண்ணை தர விருப்பம் இல்லையென்று கூறி அனுப்பி உள்ளார். இதனால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார். மனமுடைந்த பாலாஜி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை தீயில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பதியில் சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சுஷ்மிதா (24). திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று மதியம் சுஷ்மிதாவுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று விட்டனர். ஆனால் சுஷ்மிதா கல்லூரிக்கு செல்லவில்லை.

    மாலை கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். வார்டன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து யுனிவர்சிட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாணவியின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவியிடம் வாலிபர், காதலிக்க கூறி டார்ச்சர் செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவியை சேப்பனவாரியை சேர்ந்த 21 வயது நிரம்பிய வாலிபர், ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் மாணவியை பார்க்கும் சமயங்களில் எல்லாம், தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தி வந்தாராம்.

    இதேபோல் நேற்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாணவியிடம், அந்த வாலிபர் காதலிக்க கூறி தகராறு செய்துள்ளார். இதனால் மாணவியை அவரை கண்டித்து சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது அதை அருகில் நின்றவர்கள் கவனித்து, மாணவியையும், வாலிபரையும் உதவி காவல் மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதற்கிடையே வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை அழுதுக் கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, இன்று கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×