search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"

    ராஜபாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சேத்தூர் புறக்காவல் போலீசார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் மலைப்பகுதியில் உள்ள சின்னப்புல்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இயைடுத்து போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய கிருஷ்ணன்கோவில் கணபதிசுந்தரநாச்சியார் புரத்தைச் சேர்ந்த பொன் இருளப்பன் (வயது30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து மதுபானங்களை விற்பனை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LiquorDeaths
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). சாண்டலார்புரத்தைச் சேர்ந்தவர் சாய்ராம் (60), பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கம் (50). கூலித் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் இன்று காலை பள்ளப்பட்டி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது வாங்கி குடித்தனர்.

    பின்னர் தங்கள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது அடுத்தடுத்து 3 பேரும் மயங்கி விழுந்தனர். அப்பகுதி வழியே வந்தவர்கள் போதையில் கிடக்கலாம் என நினைத்து விட்டு சென்று விட்டனர்.

    ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் வாயில் நுரை தள்ளியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது முருகன் அதே இடத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய மற்ற 2 பேர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சாய்ராம் உயிரிழந்தார். இதனையடுத்து தங்கம் என்பவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழிலாளர்கள் வாங்கி குடித்த மது போலியானதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். பெட்டிக்கடைகளில் பதுக்கி மது பானங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இது போன்ற கடைகளில் மது பானத்தில் கலப்படம் செய்தும், அதிக போதைக்காக மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதும் உண்டு. எனவே அது போன்ற மதுபானங்களை இவர்கள் வாங்கி குடித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மது பானங்களை விற்பனை செய்தது யார்? அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அந்த கடையில் இருந்து வேறு யாரேனும் மது பானங்கள் வாங்கி குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மது குடித்து அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  #LiquorDeaths

    சிறுபாக்கம் அருகே காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.

    இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.

    இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    அசாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SpuriousLiquor
    திஷ்பூர் :

    அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டத்தில் உள்ள போர்பதார் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 48 மணி நேரத்தில்  ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள் யார் ? அது எங்கு தயாரிக்கப்பட்டது ? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். #SpuriousLiquor
    ×