search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98432"

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரின் உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • அஜித் தந்தை மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை 3:15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
    • சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

    சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.

    • அஜித்-ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித், அதன்பின்னர் ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசம் படுத்திக் கொண்டார். இவர் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய தமிழ் படங்களில் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    அஜித்-ஷாலினி

    அஜித்-ஷாலினி


    இந்நிலையில் அஜித்-ஷாலினி இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. அஜித்-ஷாலினி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களுக்கு இருவரும் இணைந்து நடித்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற  பாடலின் வரிகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

    • அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.
    • தற்போது அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

     

    அஜித்

    அஜித்


    இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    அஜித்

    அஜித்

    அஜித்

    இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பரத்வாஜ்.
    • இப்படம் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.

     

    காதல் மன்னன்

    காதல் மன்னன்


    இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

    • நடிகர் அஜித் குமார் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட்டார்.
    • தற்போது அவரது இரண்டாம் கட்ட உலக மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

    இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

    தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு , அஜித் குமார் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் அஜித் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

     போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'துணிவு' திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர்.


    துணிவு போஸ்டர்

     'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தில் 50-வது நாள் கொண்டாட்டத்தில் படக்குழு இறங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் சமீபத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


    அஜித் - மஞ்சுவாரியர்

    போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியர் 'என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்' என்று பதிவிட்டிருந்தார்.


    மஞ்சு வாரியர்

    இந்நிலையில், தற்போது இவரின் சமூக வலைதளப்பதிவு வைரலாகி வருகிறது. அதில், சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'சேலை என்பது வெறும் ஆடையல்ல. அது ஒரு மொழி' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.


    • இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    துணிவு

    துணிவு


    போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர். 'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


    சில்லா சில்லா பாடல்

    சில்லா சில்லா பாடல்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று பலரின் கவனத்தை ஈர்த்த சில்லா சில்லா பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    அஜித் - விக்னேஷ் சிவன்

    இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.


    அஜித் - அருண் விஜய்

    இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி, ஏகே62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×