search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
    • பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    ரெயில்வேயில் பாயின்ட்மேன் பணி என்பது அதிகாரி தரத்திலான பணி இல்லை என்றாலும், அது ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். தண்டவாளத்தின் பாயின்டுகளை சரிபார்த்து ரெயிலின் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களின் பணி.

    இப்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மத்தியபிரதேசத்தின் ஸ்லீமனாபாத், துண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சில இடங்களில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. பயணிகளை ஏற்றி வந்த ரெயில், தண்டவாளம் தெரியாததால் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பாயின்ட்மேன்கள் 3 பேர், ரெயில் முன்பாக தண்ணீரில் தண்டவாளத்தில் நடந்து சென்றபடி ரெயிலை, தங்களை பின்தொடர்ந்து அழைத்து செல்கிறார்கள்.

    பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு பின்னோக்கி செல்லும்போது உதவியாளர்கள், பின்புற சூழலை சரிபார்த்து வரலாம் வா... வரலாம் வா என்று சொல்லி அழைப்பதுபோல, பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    • ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
    • கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த  தொலைக்காட்சி  ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

    கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால்  மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    • பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
    • நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    குடகு மாவட்டத்தில் கொட்டிய கனமழை காரணமாக அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மங்களூர் நகரில் நேற்று காலை முதல் இடைவிடாது கன மழை கொட்டியது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் மேக மூட்டமாக இருந்தது.

    பெங்களூர் மாநகர் பகுதியில் நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் இரவு வரை கொட்டி தீர்த்தது. அரண்மனை நகர், ராஜராஜேஸ்வரி நகர், நயண்டஹள்ளி, கெங்கேரி, வசந்தபுரா, ஸ்ரீநகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது.

    இந்த பகுதிகளில் 1 முதல் 3 செ.மீ வரை மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக பெங்களூர் மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    • சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
    • ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

    சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக்  காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

    இந்த  சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில்  மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று  கமன்ட் tவருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
    • மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

    வங்காளதேசத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    மழை-வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது.
    • அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காணாமல் போன 9 பேரை பேரிடர் குழுக்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாடான இந்தியாவிலும், பங்களாதேஷின் கீழ்பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.

    இதுகுறித்து நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்ற அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.

    ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது. அதேபோல், சமீபத்திய ஆண்டுகளில் அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வியாழன் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலை தேசத்தில் பேரழிவு அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    கடந்த மாதம் நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பயங்கர புயல்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

    • மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோயிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த திடீர் பள்ளத்தால் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்த கால்வாய் தண்ணீர் மறுபக்கத்தில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அண்மையில் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோவிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மியான்மரின் வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • 30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

    மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஐராவதி ஆறு ஒடுகிறது. கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் உயிரிழந்தோர் விவரம் தெரியவில்லை. ஆனால் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது கச்சின் மாநில அரசு தெரிவித்துள்ளது.

    30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மியீச்சினா மற்றும் வைமாவ் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

    மியீச்சினாவில் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி 5 அடிக்கு மேல் செல்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இரண்டு அடி உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்லி முழுக்க தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. வாகனங்கள் நீரில் மூழ்கின.

     


    கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனைய செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன.


    இதேபோன்று டெல்லியை சுற்றியுள்ள ஜங்புறா, ஆர்.கே. ஆஷ்ரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.


    டெல்லியின் வசந்த விகார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் பணியாற்றிய பணியாளர்கள் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.  

    டெல்லி முழுக்க கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
    • முக்கியமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் ஏராளனமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயமடைந்தனர். முக்கியமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சாலையில்  தேங்கியுள்ள தண்ணீரில் பா.ஜ.க. கவுன்சிலர் ரவீந்தர் சிங் நேகி படகில் சென்ற சம்பவம் அரங்கேறியது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை எடுத்துரைக்கும் வகையில், அவர் இவ்வாறு செய்துள்ளார். இதன் மூலம் டெல்லி அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், அனைத்து வடிகால்களும் நிரம்பி வழிகின்றன. பருவமழைக்கு முன் வடிகால்களை தூர் வாராததால் தண்ணீர் தேங்கியுள்ளது. வினோத் நகர் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது என்றார்.

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

    இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×