search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்"

    அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
    தேவையான பொருட்கள்:

    அகத்திக்கீரை - அரை கட்டு,
    தக்காளி - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய்ப்பால் - 200 கிராம்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    அரிசி கழுவின நீர் - 200 மில்லி,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

    பின்னர் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

    சூப்பரான சத்தான அகத்திக் கீரை தேங்காய் பால் சூப் ரெடி.

    இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மா அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 1/4 கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    பூண்டு - 3 பல்,
    பிரிஞ்சி இலை - 1,
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
    ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
    உப்பு - தேவையான அளவு,
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.



    செய்முறை :

    ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.

    அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.

    விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.

    சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண கோளாறு, வயிறு உபாதைகள் உள்ளவர்கள் புதினா - இஞ்சி ரசம் செய்து சாப்பிடலாம். இந்த ரசத்தை சூப் போன்று அருந்தலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா - கால் கப்,
    இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு,
    மோர் - 3 கப்,
    கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான புதினா - இஞ்சி ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
    காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
    பால் - ஒரு கப்,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 5 பல்,
    நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.

    2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

    விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

    சூப்பரான சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். இன்று நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நண்டு - 250 கிராம்.
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க…

    சாம்பார் வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    பச்சைமிளகாய் - 3,
    பூண்டு - 4 பல்,
    இஞ்சி - சிறிது,
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிது.



    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.

    மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.

    கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

    சூப்பரான நண்டு ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
    தண்ணீர் - தேவைக்கு
    துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
    நறுக்கிய பேபி கார்ன் - 1
    பட்டாணி - சிறிதளவு
    கேரட், மிளகாய் - 1
    உப்பு - தேவைக்கு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி



    செய்முறை :

    ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.

    ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

    சூப்பரான சத்தான கொத்தமல்லித் தழை சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1/2 கப்
    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
    கேரட் - 1
    ப்ரோக்கோலி - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்லு
    இஞ்சி - 1/2 இன்சி
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.

    காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

    காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 50 கிராம்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    புளி - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம் - தலா 2
    ஏலக்காய் - 2
    உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :


    வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.

    சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.

    ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

    சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

    பின் அதை வடிகட்டி விடவும்.

    பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.

    இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.

    இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவும் நல்லது. இன்று கோஸ், கார்ன் சேர்த்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோஸ் - 150 கிராம்,
    ஸ்வீட் கார்ன் - 1/4 கப்,
    வெங்காயத்தாள் - 4,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    சிறிய பச்சைமிளகாய் - 1,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தாள், கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கோஸ் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் ஸ்வீட் கார்னை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, பச்சைமிளகாய், தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

    சிறிது வெந்ததும் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும்.

    2 நிமிடம் கழித்து இறக்கி, வெங்காயத்தாளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோஸ் ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இன்று ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ப்ரோக்கோலி - ஒரு கப்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப்,
    வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - ஒன்று,
    தைம் இலை (Thyme leaf) - சிறிதளவு,
    கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலி நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.

    கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    இதனுடன் தைம் இலை (Thyme leaf) சேர்த்து, நன்கு வதங்கியவுடன் சோள மாவு சேர்த்து வறுக்கவும்.

    பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.

    பிறகு ப்ரோக்கோலி சேர்த்து வேகவிடவும்.

    மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும்.

    வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.

    சத்து நிறைந்த ப்ரோக்கோலி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சுக்கு சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு தூள் - 2 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    புதினா - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகு, சுக்கு தூள், சோம்பு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

    குக்கர் விசிவ்ல போனவுடன் மூடியை திறந்து சூப் வடிகட்டி புதினா தூவி சூப்பை பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான சுக்கு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேரட், மிளகு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மிளகு - 1 டீஸ்பூன்
    பாசிப்பருப்பு - 100 கிராம்
    பிரியாணி இலை - சிறிதளவு
    வெங்காயம் - 1
    கேரட் - 3
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பிரியாணி இலையை போட்டு கிளறவும்.

    அதனுடன் வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்.

    மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி போதுமான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.

    4 விசில் வந்ததும் இறக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு இறக்கி மிதமான சூட்டில் பருகலாம்.

    சூப்பரான கேரட் - மிளகு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×