search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98614"

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை வழங்கினார். #CollectorInnocentDivya
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 1,876 குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் ஊட்டசத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலங்கள். பிறந்த குழந்தை 1 முதல் 5 வயது வரை தான் அதிக அளவு மூளை வளர்ச்சி அடைகிறது. அச்சமயத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகபடியான ஊட்டசத்து வழங்க வேண்டும். அப்பொழுது தான் ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக வளர்க்க முடியும்.

    மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் 100 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    போ‌ஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் தேசிய குடும்ப சுகாதாரம் மூலம் கணக்கெடுக்கப்பட்டதில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, எடைகுறைவு உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கண்ட குறைபாடுகளை குறைக்க வேண்டுமெனில் புரதசத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தவறாது உண்ண வேண்டும். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 1,876 குழந்தைகளுக்கு மும்பையை சேர்ந்த இஷ்பிரவா என்ற அமைப்பின் மூலம் நெய், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறி அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கோப £லகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், இஷ்பிரவா அமைப்பின் தலைவர் தர்சன்ஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #CollectorInnocentDivya
    மினரல் வாட்டர் கம்பெனியை மூடவேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது குழுந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமத்தில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், மேலும் இங்கிருந்து வெளியேற்றப்படும் நீரால் சுகாதாரகேடு ஏற்பட்டு நோய்பரவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் மினரல் வாட்டர் கம்பெனியை மூடக்கோரி போராட்டம் நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு மினரல் வாட்டர் கம்பெனி மூடப்பட்டது.

    மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மினரல் வாட்டர் கம்பெனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதனை விசாரித்த கோர்ட்டு கம்பெனியை மூட இடைக்கால தடைவிதித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் மினரல் வாட்டர் கம்பெனி திறக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த தொட்டியபட்டி கிராம மக்கள் மினரல் வாட்டர் கம்பெனியை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் ஆலையை மூடும்வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தொட்டியபட்டி பகுதியில் ஏராளமான மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
    டெல்லி அரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோய்க்கான மருந்து பற்றாக்குறையால், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi #MaharishiValmikiHospital
    புதுடெல்லி:

    டெல்லியில் இயங்கிவரும் மஹரிஷி வால்மீகி என்ற அரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோயால் சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் தொண்டை அழற்சிக்கான மருந்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், மருந்துகளை பெற்றோரை வாங்கி தருமாறும் வற்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து குறைபாடால், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த வித தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Delhi #MaharishiValmikiHospital
    பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சிந்துமதி அறிவுரை கூறினார்.
    வாடிப்பட்டி:

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வாடிப்பட்டி கிரட் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து சிறுபான்மையினர் பெண்களுக்கு தலைமைத் துவ பயிற்சி முகாமை நடத்தின. வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிந்துமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாதர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டும் என்றும் மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம் என்றும் புரட்சிகவி பாரதியார் பெண்மையின் பெருமை பற்றி பாடி பெண் அடிமை விலங்கை உடைத்தெரிய கவிதைகள் மூலம் பாடுபட்டார்.

    அதனால் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். சாதிப்பதற்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் சாதனை செய்யலாம்.

    சுயசிந்தனை, தன்னம்பிக்கை,பொறுமை இவைகளை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள் அது அவர்களின் வாழ்க்கையில் வெற்றிக் கனியை பெற்றுத்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் திருமணசட்டங்கள்mபற்றி வழக்கறிஞர் செல்வராஜ், குடும்ப நல ஆலோசகர் டாக்டர் கண்மணி பாலியல் பாகுபாடுகளில் பெண்களின் நிலை பற்றி பேசினார். இதில் குடும்ப நலம், ஊட்டச்சத்து முறைகள், குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி முறைகள், பெண்ணுரிமை கல்வி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தன்சுத்தம் குடும்ப கட்டுபாட்டு முறைகள், சுற்றுப்புற சுகாதாரம், அரசு நலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடல்களும், குழு விவாதங்களும் நடந்தன.
    பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு தத்தெடுப்பு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு மையங்களில் குழந்தைகள் பசியால் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகாரில் பாதுகாப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியாகி நாட்டையே குலுக்கியது. இந்த நிலையில், பீகாரில் அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி டாடா சமூக அறிவியல் அமைப்பு பட்டியலிட்டு உள்ளது.

    இதற்காக பீகாரின் 20 மாவட்டங்களில் உள்ள 21 அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த மையங்களில் அனாதைகள், வீட்டை விட்டு வெளியேறியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் என 6 வயது வரையிலான குழந்தைகள் தங்கி உள்ளனர்.  இந்த மையங்களில் 70 சதவீதம் சிறுமிகள் உள்ளனர்.

    இதில் 3 வயது உடைய சில குழந்தைகள் பேசுவது இல்லை. ஏனெனில், இங்கு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பும், அவர்களின் துளிர் பருவத்தில் தேவையானவற்றை கற்பிக்கவும் ஆட்கள் இல்லை என கூறப்படுகிறது.

    இங்குள்ள குழந்தைகள் சிறிய தவறு செய்தாலும், அவர்களை குளியல் அறையில் அடைத்து வைத்தல், தனிமையில் இருக்க வைத்தல், தகாத சொற்களால் திட்டுதல் என கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற தண்டனைகளால் குழந்தைகள் நீண்ட கால பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என அறிக்கை குழுவின் தலைவர் முகமது தாரீக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    'இவர்கள் மிக சிறியவர்கள். குளியல் அறையில் அடைத்து வைப்பது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். எதற்காக தண்டனை வழங்குகிறார்கள் என்பது கூட அவர்களுக்கு புரியாது. இந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவ வசதிகளும் இல்லை. இதனால் அவர்களின் வாழ்நாள் பற்றிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

    இங்கு தத்தெடுக்க வரும் பெற்றோர் சிலரால், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சில குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.  அவர்களை திட்டுவது கூடாது.  அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஆள் இல்லாதது குழந்தைகளை வருத்தமடைய செய்கிறது.’

    என அவர் கூறியுள்ளார்.

    மேலும் இந்த அறிக்கையில் மிக முக்கியமாக, சில மையங்களில் குழந்தைகள் தங்குவதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், இங்கு உள்ள குழந்தைகள் போதிய உணவு இன்றி பசியுடனே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Bihar
    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி மூலம் 415 குழந்தைகள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பால் அவசியமாகும். சில தாய்மார்களின் குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கிடைப்பதில்லை. இதனை தவிர்க்க அரசு சார்பில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.

    தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இவ்வங்கி மூலம் பால் கொடுக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 165 தாய்மார்களிடம் இருந்து 19.5 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது.

    இந்த வங்கியில் பாலை பதப்படுத்தி குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல்லில் 415 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். தாய்ப்பால் இல்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பாலை வங்கியில் பெறலாம். மேலும் தானமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாய்மார்களும் இந்த வங்கியில் தொடர்பு கொள்ளலாம் என நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் தெரிவித்துள்ளார். #tamilnews
    தூத்துக்குடி மாவட்டத்தில் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் எல்லோராலும் பாராட்டு பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,

    பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் சவுபாக்கியா சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் உட்பட 16 வகையான பொருட்கள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மூலம், தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 28 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 2108 பெண்களுக்கும், 7 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 91 பெண்களுக்கும், 5 அரசு மருத்துவமனையில் 7214 பெண்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6739 பெண்களுக்கும்,

    கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 22 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 1598 பெண்களுக்கும், 2 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 பெண்களுக்கும், 4 அரசு மருத்துவமனையில் 5104 பெண்களுக்கும், என மொத்தம் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற்ற அத்திமரப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த நாகதுரை மனைவி முத்துக்கனி கூறுகையில், "அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தின் மூலம் எங்கள் சுமை எங்களுக்கு குறைந்துள்ளது. இதில் உள்ள அனைத்து பொருட்களும் தரமானதாக உள்ளது" என்றார்.

    மேலதட்டப்பாறை யாதவர்தெருவை சேர்ந்த கந்தவடிவேல் மனைவி மாரியம்மாள் கூறுகையில், "இப்பொருட்களை நாங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் அதிகமாக செலவாகும். மகப்பேறு சிகிச்சையும் இலவசமாக அளித்து குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையையும் கவனிப்பதற்கு இலவசமாக பொருட்கள் வழங்கிய அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.
    பென்னாகரம் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஏரியூர் தனியார் பள்ளி உள்ளது. இன்று காலை நாகமரையில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஏரியூருக்கு வந்து கொண்டிருந்தது.

    நெருப்பூர் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தி விட்டு குழந்தைகளை ஏற்றி கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் மீது லாரி மோதியது. வேனில் இருந்த 6 பள்ளி குழந்தைகளுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பள்ளி குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று மகளிர் சங்க தலைவி கூறியுள்ளார்.
    சித்தூர்:

    பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமையை கண்டித்து சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், பலாத்காரம், குழந்தைகள் பலாத்காரம், மாணவிகளை சில்மி‌ஷம் செய்தல் ஆகியவற்றை கண்டித்துக் கோ‌ஷம் எழுப்பினர்.

    மாவட்ட மகளிர் சங்க தலைவி ஜெயலட்சுமி பேசியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் அதிகளவு பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் நடக்கிறது. அதன் மீது மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. குழந்தைகளிடம் பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பீளேரைச் சேர்ந்த டாக்டர் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முக்கிய காரணம் திருப்பதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்களின் துன்புறுத்தல் தான். அதேபோல் திருப்பதியைச் சேர்ந்த அதே மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 2 பெண்களை பலாத்காரம் செய்யப்படுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு நிமிடத்தில் 100 பேரை பலாத்காரம் செய்வார்கள். சிறுமிகளை அதிகளவு முதியோர்களே பலாத்காரம் செய்கிறார்கள். அவ்வாறு பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

    அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதன் மூலம் நாட்டில் பலாத்கார செயல்கள் குறையும். அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு, பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பெண்களுக்கு அதிகளவு துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பல பெண்கள் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்தால் மோதல் ஏற்படும் எனக் கருதி பல பெண்கள் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கெனக் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும்.

    பஸ், ரெயில் நிலையங்களில் போலீசாரை கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவிகளை யாராவது கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். அதை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் ஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் பலியாகி உள்ளனர். #YemenAttack #YemenConflict
    சனா:

    எமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்கு அரசுக்கு உதவியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 

    இந்நிலையில் இன்று காலை வடக்கு  ஏமனில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    சவுதி கூட்டுப்படை பேருந்து மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் இறந்ததாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும் கிளர்ச்சிக்குழு ஆதரவு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் கூட்டுப்படை தரப்பில் வான் தாக்குதல் நடத்தியதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

    உள்நாட்டு போர் நடைபெறும்பொது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டம் சொல்வதாகவும், அதனை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் ரெட் கிராஸ் அமைப்பு கூறியுள்ளது. #YemenAttack #YemenConflict
    இந்தியாவில் ஆயிரத்து 991 அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை தத்தெடுக்க சுமார் 20 ஆயிரம் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority
    புதுடெல்லி:

    பல்வேறு காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக காப்பகங்களிலும், கருணை இல்லங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்க்க குழந்தை பெற இயலா பெற்றோர்கள் பலர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவில் அனாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் மட்டும் ஆயிரத்து 991 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெண் குழந்தைகள் மட்டும் ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.



    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 376 குழந்தைகளும், ஒடிசாவில் 299 குழந்தைகளும் வளர்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவர்களை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரத்து 991 குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், குழந்தைகளை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் காத்திருப்பதாகவும், அதன்படி, 1 குழந்தைக்காக சுமார் 10 பெற்றோர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority 
    டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினி காரணமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MysteriousDeath #BlamedStarvation
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் 3 சிறுமிகளை ஒரு பெண்ணும், ஆணும் கொண்டு வந்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது 3 பேரும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது பட்டினி காரணமாக 3 சிறுமிகளும் இறந்தது தெரியவந்தது. இறந்த 3 சிறுமிகளும் அக்காள், தங்கைகள். இந்த சிறுமிகளில் இளைய சகோதரிக்கு 2 வயதும், அடுத்த சகோதரிக்கு 5 வயதும், மூத்த சகோதரிக்கு 8 வயதும் இருக்கும். சிறுமிகளின் தந்தை ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ரிக்‌ஷா காணாமல் போய் விட்டது.

    பிழைப்புக்கு வழி இல்லாததால், தனது நண்பர் ஒருவரது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 3 சிறுமிகளும் இறந்து உள்ளனர். சிறுமிகள் இறப்பு முதலில் இயற்கையான இறப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் இருந்து சில மருந்து பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.

    எனவே சிறுமிகளின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே சிறுமிகள் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது.  #Tamilnews 
    ×