search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுனிசெப்"

    தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார்.
    நியூயார்க்:

    ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். 

    தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார். 

    பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப்  கூறி உள்ளது. வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

    இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுப்பது யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #UNICEF #newfathers #paidpaternityleave

    நியூயார்க்:  

    அரசு அலுவலங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது. இதுபோல குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது. 

    இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், உலகில் ஒரு வயதுகூட நிரம்பாத 9 கோடிக்கும் அதிகமாக் குழந்தைகள் உள்ளனர். இவர்களது தந்தைகளுக்கு ஒருநாள் கூட சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் வழங்கவில்லை. இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் அதிகளவு குழந்தைகள் உள்ளனர். இந்த நாடுகள் உள்பட 92 நாடுகளில் குழந்தை வளர்ப்பின் போது தந்தைக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தனியாக தேசிய அளவிலான கொள்கைகள் இல்லை.



    இந்தியாவில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தந்தைக்கு பேறுகால விடுமுறையாக 3 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்கான வரைவு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. குறிப்பாக ஐநா சபை உள்ள அமெரிக்காவிலும் 40 லட்சம் குழந்தைகள் உள்ளன. அங்கும் பேறுகால விடுமுறை அல்லது தந்தைக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அதிக குழந்தைகள் உள்ள பிரேசில் மற்றும் காங்கோவில் தந்தைக்கு பேறுகால விடுறை வழங்குவதற்கான கொள்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறுகையில், குழந்தை வளர்ப்பு தொடர்பாக தந்தை மற்றும் தாய்க்கு இடையே அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடத்துவதற்கும், பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியடையவதற்கும், குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கும் இந்த விடுமுறை உதவும், என்றார். #UNICEF #newfathers #paidpaternityleave
    ×