search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 20 ஓவர் போட்டியில் பும்ரா 50 விக்கெட்டை எடுத்துள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோற்றாலும் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2-வது விக்கெட்டான பீட்டர் ஹேண்ட்ஸ் கோயை அவுட் செய்த போது 50-வது விக்கெட்டை தொட்டார். 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை எடுத்த 2-வது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

    அஸ்வின் 47 போட்டியில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் எடுத்துள்ளார். இந்த தொடரில் அவர் அஸ்வினை முந்தி முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச அளவில் அப்ரிடி 98 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 75 விக்கெட் கைப்பற்றி 6-வது இடத்தில் உள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. பும்ரா அணியில் இணைந்துள்ளார். #INDvAUS
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.

    இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, தவான் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட பும்ரா, மீண்டும் அணியில் இணைந்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான மயாங்க் மார்கண்டே முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.



    புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் ஷுப்மான் கில்லும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த், 5. தினேஷ் கார்த்திக், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. குருணால் பாண்டியா, 9. விஜய் சங்கர், 10. சாஹல், 11. பும்ரா, 12. உமேஷ் யாதவ், 13. சித்தார்த் கவுல், 14. மயாங்க் மார்கண்டே, 15. ஷிகர் தவான்.
    ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.



    பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு கட்டாயம் இடமுண்டு என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் உறுதியாக தெரிவித்துள்ளார். #RishabhPant
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் குவித்து, தொடரில் புஜாராவிற்கு அடுத்தபடி அதிக ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திது.

    இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:-

    சாம்பியன் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் ரிசப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் ஆட்டம், 4 டெஸ்டில் தொடர்ந்து ஆடினார். தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஒய்வு தேவை. இதனால்தான் ஒருநாள் தொடரில் அவரை சேர்க்கவில்லை. எதிர்கால நட்சத்திர வீரராக உள்ள ரிசப் பந்த் தொடர்பாக தேர்வுக்குழு கவனத்துடன் செயல்படுகிறது. 2019 உலகக்கோப்பை அணியின் செயல் திட்டத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை ரிசப் பந்த் கடைபிடித்து வருகிறார்.  இங்கிலாந்தில் அவர் கேட்ச்களை பிடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.

    இளம் வீரர் ஷுப்மான் கில் சர்வதேச போட்டிக்கு தயாரானது மகிழ்ச்சி அளிக்கிறது. விகாரி, அகர்வால், பிரித்வி ஷா, கலீல் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்டில் அவர் ஆடி இருக்க முடியாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் முகமது ‌ஷமிக்கு அவரது உடல் தகுதி சாதகமான அம்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முறையே பேட்ஸ்மேன், பவுலர் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்கள். #ICCODIRankings
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டில் 14 ஒரு நாள் போட்டியில் 1,202 ரன் எடுத்தார். இதில் 6 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 166 ரன் (அவுட் இல்லை) குவித்தார். சராசரி 133.55 ஆகும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 12-ந்தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் கோலி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் அவர் 19 ஆட்டத்தில் 1030 ரன் எடுத்தார். இதில் 5 சதங்கள் அடங்கும். சராசரி 73.57 ஆகும். மற்ற இந்திய வீரர்களில் தவான் 9-வது இடத்தில் உள்ளார்.

    டெய்லர் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), டு பிளிசிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் முறையே 3 முதல் 8-வது இடங்களில் உள்ளனர். குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) 10-வது இடத்தில் உள்ளார்.

    பந்து வீச்சிலும் இந்திய வேகப்பந்து வீரர் பும்ரா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் 841 புள்ளிகள் பெற்று உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சாஹல் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), 2-வது இடத்திலும், ரபாடா (தென் ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், முஸ்டாபிஷூர் ரகுமான் (வங்காள தேசம்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

    அணிகளை பொறுத்தவரை இந்தியா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி இங்கிலாந்தை நெருங்கும்.

    இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளியுடன் 5-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். மொத்தம் 157 ஓவர்கள் வீசிய பும்ரா 21 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது பந்து வீச்சு சராசரி 17 ஆகும்.

    பும்ராவின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுலும் இடம் பெற்றுள்ளார்.



    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 12-ம்தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஜனவரி 15-ம் தேதி 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், 18-ம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

    அத்துடன் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 521 ரன்கள் எடுத்து புஜாரா முதலிடத்திலும் 350 ரன்களை குவித்த ரிஷப் பந்த் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். #AUSvIND #Pujara #RishabhPant

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல பேட்டிங்கில் புஜாராவும், பந்துவீச்சில் பும்ராவும் முக்கிய பங்கு வகித்தனர்.

    புஜாரா 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் விளையாடி 521 ரன் குவித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 74.42 ஆகும். அவர் இந்த தொடரில் 3 சதம் அடித்துள்ளார். முதல் டெஸ்டில் 173 ரன்னும், 3-வது டெஸ்டில் 106 ரன்னும், 4-வது டெஸ்டில் 193 ரன்னும் எடுத்து முத்திரை பதித்தார். மேலும் ஒரு அரைசதமும் புஜாரா அடித்து இருந்தார்.

    புஜாராவுக்கு அடுத்தப்படியாக ரிசப் பந்த் 7 இன்னிங்சில் 350 ரன் குவித்தார். சராசரி 58.33 ஆகும். அதிகபட்சமாக 159 ரன் (அவுட்இல்லை) குவித்து இருந்தார்.

    விராட்கோலி 1 சதம், 1 அரைசதத்துடன் 282 ரன்கள் குவித்து 3-வது இடத்தை பிடித்தார். அவரது சராசரி 40.28 ஆகும். அதிகபட்சமாக 123 ரன் எடுத்தார்.

    வேகப்பந்து வீரர் பும்ரா 21 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். அவர் 33 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்டில் 86 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.



    மற்ற இந்திய வீரர்களில் முகமது‌ சமி 16 விக்கெட்டும், இஷாந்த்சர்மா 11 விக்கெட்டும் (3 டெஸ்ட்), ஜடேஜா 7 விக்கெட்டும் (2 டெஸ்ட்), அஸ்வின் 6 விக்கெட்டும் (1 டெஸ்ட்), குல்தீப்யாதவ் 5 விக்கெட்டும் (1 டெஸ்ட்) எடுத்து இருந்தனர்.

    ஆஸ்திரேலிய வீரர்களில் நாதன் லயன் 21 விக்கெட் கைப்பற்றி இருந்தார். கம்மின்ஸ் 14 விக்கெட்டும், ஹாசில்வுட், ஸ்டார்க் தலா 13 விக்கெட்டும் எடுத்தனர். #AUSvIND #Pujara #RishabhPant
    ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இதை தனது மிகப்பெரிய சாதனையாக கருதுவதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். #AUSvIND #ViratKohli
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

    2011-ல் உலக கோப்பையை வென்றபோது நான் இளம் வீரராக இருந்தேன். அப்போது மற்ற வீரர்களின் உத்வேகத்தை பார்த்தேன்.

    தற்போது தொடரை வென்ற இந்திய அணி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வீரர்கள் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    நான் கேப்டனாக பொறுப்பேற்று 4 ஆண்டில் இந்த சாதனையை படைத்து இருக்கிறேன். இதற்கு வீரர்களின் செயல்பாடுதான் காரணம். இந்த வீரர்களுக்கு நான் கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கிறது. உண்மையிலேயே இது மிகுந்த மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும்.



    இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புஜாராவின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்புக்கு உரிய வீரர் ஆவார்.

    இதேபோல மெல்போர்ன் டெஸ்டில் புதுமுக வீரர் அகர்வால் தனது திறமையை வெளிப்படுத்தியது சிறப்பானது. ரிசப்பந்தும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். வேகப்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை முறியடித்து அபாரமாக வீசினார்கள். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-

    நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.

    4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல். எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #ViratKohli
    சிட்னியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்னுடனும், கம்மின்ஸ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மழையால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 25 ரன்னிலேயே ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். ஹேண்ட்ஸ்காம்ப் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.



    கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவிற்கு வந்தது. ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. .இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இந்தியாவை விட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.
    சர்வதேச போட்டியில் நீண்ட நாட்கள் ஜொலிக்க முடியாது என்ற எனது கணிப்பு தவறு என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார் என கபில் தேவ் குறிப்பிட்டுள்ளார். #Bumrah #KapilDev
    ‘யார்க்கர்’ ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தன்னுடைய அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி 2018-ல் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில் பும்ரா குறித்த என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது என கபில் தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் ‘‘நான் தவறாக கணித்து விட்டேன் என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார். நான் அவரை முதன்முறையாக பார்க்கும்பொழுது, அவர் பந்து வீசும் முறையை வைத்து நீண்ட நாட்களாக சர்வதேச போட்டியில் சாதிக்க இயலாது என்று கணித்தேன். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு தலை வணங்குகின்றேன். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பந்து வீசி வரும் அவரை உண்மையிலேயே பாராட்டுகிறேன். அவரது மனநிலை மிகவும் வலிமையாக உள்ளது.



    பும்ரா மிகவும் அற்புதமானவர். குறைந்த தூரத்தில் இருந்து ஓடிவந்து அவரால் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வேகத்தில் பந்து வீச முடியும் என்றால், நாம் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பும்ரா ஸ்பெஷலான தோள்பட்டையை பெற்றுள்ளார். இதுபோன்ற பந்து வீச்சாளர்கள் சிறப்புக்குரியவர்கள். புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிறப்பான பவுன்சர்களை வீசுகிறார்’’ என்றார்.
    தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார், அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள நானே தயங்குவேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli
    மெல்போர்ன் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அதனால்தான் கோப்பையை தக்க வைத்துள்ளோம். ‘பாலோ-ஆன்’ வழங்கப்படாதது குறித்து வெளியான கருத்துகளை படிக்காதது நல்ல விஷயமாகும். 2-வது இன்னிங்சிலும் பேட்டிங் செய்து இன்னும் கூடுதலான ரன்களை இலக்காக நிர்ணயிக்க விரும்பினோம். ஏனெனில் 4 மற்றும் 5-வது நாளில் இங்கு பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது தெரியும்.

    வெற்றிக்கான எல்லா பெருமையும் பந்து வீச்சாளர்களையே சாரும். ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி மூன்று பேரும் இணைந்து, ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சு கூட்டணி (134 விக்கெட்) என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். அவர்கள் பந்து வீசி வரும் விதம் கேப்டனாக என்னை பெருமைப்பட வைக்கிறது.

    ஜஸ்பிரித் பும்ரா, இப்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளராக விளங்குகிறார் என்றுதான் சொல்வேன். குறைவான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் கூட அவர் ஒரு ‘மேட்ச் வின்னர்’ என்பதில் சந்தேகமில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பெர்த் போன்ற ஆடுகளங்களில் அவரது பந்து வீச்சை நானே சந்திக்க விரும்பமாட்டேன். ஏனெனில் அவருக்குரிய உகந்த சூழல் அமைந்தால், பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியவராக மாறி விடுவார்.

    இந்தியாவில் ரஞ்சி போன்ற முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான வசதி வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன. உள்ளூர் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய சவால்களை சந்திக்கிறார்கள். அது வெளிநாட்டில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது.



    எங்களது வெற்றிப் பயணத்தை இத்தோடு நிறுத்தி விடப்போவதில்லை. இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்டில் நேர்மறை எண்ணத்துடன் விளையாடுவோம். கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை தொடர விரும்புகிறோம்.

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக இருப்பேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. ஆனால் தொடரை வெல்வதுதான் எங்களது ஒரே இலக்கு. அதற்கான முயற்சிக்கு தடை எதுவும் இல்லை. தொடரை வெல்லும் வாய்ப்பில் இதற்கு முன்பு இத்தகைய நிலைமையில் (2-1) இருந்ததில்லை.

    இவ்வாறு கோலி கூறினார்.
    மெல்போர்ன் டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர்களை ஆஸி. கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இந்தியா 151 ரன்னில் சுருட்டியது.

    இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் நாங்கள் சில முன்னேற்றங்கள் அடைந்தோம். ஆனால் மொல்போர்னில் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் சில உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறோம். சிட்னி தொடருக்கு முன் சில நேர்மறையான வழிகளைத் தேட வேண்டியது அவசியமானது.

    எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து சிறு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் சிட்னி சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, நாங்கள் சிறந்த பார்முலாவை முடிவு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் குறித்து சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் சிறப்பானதுதான்.

    இந்தத் தொடரில் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சு எப்போதும் தரமாகத்தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருடைய முயற்சியை பார்க்க வேண்டும். அவரைப்போன்று மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
    ×