search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒருவேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷான் மார்ஷை ‘ஸ்லோ யார்க்கர்’ பந்தால் வீழ்த்த ரோகித் சர்மாதான் ஐடியா கொடுத்தார் என பும்ரா தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. மார்கஸ் ஹாரிஸ் 22 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 8 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4-வது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் ஆஸ்திரேலியா மேலும் விக்கெட் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்திலும் விக்கெட் ஏதம் விழவில்லை.

    கடைசி பந்தை ஷான் மார்ஷ் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் பும்ரா அந்த பந்தை ஸ்லோ யார்க்கராக வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஷான் மார்ஷ் பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேடில் பட்டதால் சந்தேகமின்றி எல்பிடபிள்யூ ஆனார்.

    அதன்பின் பும்ரா அபாரமாக பந்து வீசி 15.5 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இன்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிந்தபின், பும்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தது குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை வீசும்போது ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. பந்தும் சாப்ட்-ஆக இருந்தது.



    மிட்-ஆஃப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா என்னிடம், ‘‘இது கடைசி பந்து. நீங்கள் ‘ஸ்லோ’வாக வீச முயற்சி செய்யுங்கள்’’ என்றார். ஒருநாள் போட்டியில் நான் அதிக அளவில் பயன்படுத்தும் யுக்தியை அவர் கூறியதால், நான் அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். திட்டத்தை சரியாக வெளிப்படுத்தியதால், கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினோம்.

    உண்மையிலேயே ரோகித் சர்மா ஆலோசனை வழங்கியதற்காக நன்றி சொல்லனும். ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, இந்த ஆடுகளத்தில் ஸ்லோ பந்துகளை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.
    ஒரே வருடத்தில் வெளிநாட்டு தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடம்பிடிக்க பும்ரா, முகமது ஷமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. #AUSvIND
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மிகவும் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் அசத்திய இவர்களின் சாதனை ஆஸ்திரேலியாவிலும் தொடர்கிறது.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது ஷமி 43 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர். இதனால் ஒரே வருடத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க முகமது ஷமிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.



    இந்தியாவிற்கான இந்திய வருடத்தின் கடைசி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. இதில் பும்ரா 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பும்ரா 45 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார். ஷமி 43 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.



    2-வது இன்னிங்சில் முகமது ஷமி ஐந்து விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்தினால் பும்ராவை பின்னுக்ககுத் தள்ள வாய்ப்புள்ளது. இல்லையெனில் பும்ரா முதல் இடம்பிடிப்பார். இதனால் இருவருக்கும் இடையில் 2-வது இன்னிங்சில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இது இந்தியாவின் பந்து வீச்சிற்கு மேலும வலுசேர்க்கும்.

    கும்ப்ளே 2006-ல் 41 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா 2011 மற்றும் 2014-ல் தலா 38 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    அறிமுகமான வருடத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார். #AUSvIND
    மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. பும்ரா 33 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அவர் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக அறிமுகம் ஆனார். மூன்று முறை 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் இதை செய்து இருந்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் ஐந்து விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    மேலும் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பும்ரா 9 டெஸ்டில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். திலீப் தோஷி தனது அறிமுக டெஸ்ட் ஆண்டில் (1979) 40 விக்கெட் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. அதை தற்போது பும்ரா முறியடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பந்து வீச்சு என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.

    அறிமுக டெஸ்ட் ஆண்டில் அவர் விக்கெட் கைப்பற்றிய ‘டாப் 5’ இந்திய பந்து வீச்சாளர்கள் விவரம்:-

    1. பும்ரா - 45 விக்கெட் (2018)

    2. திலீப் தோஷி - 40 விக்கெட் (1979)

    3. வெங்கடேஷ் பிரசாத் - 37 விக்கெட் (1996)

    4. ஹிர்வானி - 36 விக்கெட் (1988)

    5. ஸ்ரீசாந்த் - 35 விக்கெட் (2006)
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில், இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்தபோதும், 346 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார். இந்தியாவின் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலியா, மூன்றாம் நாளான இன்று 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


    இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, 2ம் இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஏற்பட்ட பின்னடைவுக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். குறிப்பாக கம்மின்ஸ் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    துவக்க வீரர் விகாரி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா, இந்த இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்கமல் வெளியேறினார். இதேபோல் கேப்டன் விராட் கோலியும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரகானே 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்த நான்கு விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் கைப்பற்றினார்.


    இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு முன்னணி வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஹேசில்வுட் கைப்பற்றினார். 44 ரன்கள் எடுப்பதற்குள் 5 முன்னணி விக்கெட்டுகளை இழந்த நிலையில், மயங்க் அகர்வால், ரிஷப் பந்த் ஜோடி நிதானமாக விளையாடியது. இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பந்த் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் மேற்கொண்டு 50 ரன்கள் சேர்த்தால்கூட ஆஸ்திரேலியாவுக்கு அது கடின இலக்காக அமையும்.  #AUSvIND #TeamIndia
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பும்ராவின் வேகப்பந்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.

    22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.


    உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    விக்கெட்டைக் காப்பாற்ற போராடிய கம்மின்ஸ் 17 ரன்களிலும், பெயின் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். லயன் மற்றும் ஹாசில்வுட் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் சுருண்டது.


    இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.  #AUSvIND #TeamIndia 
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி ஆடியது. எஞ்சிய 6 ஓவர்களை ஆரோன் பிஞ்ச் (3 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (5 ரன்) ஜோடி சமாளித்துக் கொண்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவர்கள் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்தனர்.

    3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.



    22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை காப்பாற்ற நிதானமாக ஆடி வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டிம் பெயின், கம்மின்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். #AUSvIND #TeamIndia 
    பெர்த் டெஸ்டில் க்ரீன் பிட்சியில் விளையாட இருப்பது பதற்றத்தை விட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா பேட்டிங்கில் பலம் இழந்து காணப்படுகிறது. அடிலெய்டு டெஸ்டில் புஜாரா, ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி, லோகேஷ் ராகுல் 2-வது இன்னிங்சில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள்.

    நாளை பெர்த்தில் தொடங்கும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஒரே வழி இந்தியாவின் பேட்டிங்கை அடியோடு சீர்குலைப்பதுதான் என்ற முடிவிற்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

    பெர்த் பிட்சில் ஏற்கனவே பவுன்ஸ், வேகம் இருக்கும். தற்போது அதிக அளவில் புற்களுடன் காணப்படுகிறது. க்ரீன் பிட்ச்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற்கள் அதிகமாக இருந்தால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் மூலம் இந்தியாவின் பேட்டிங் ஆர்டரை தகர்த்து விடலாம் என நினைக்கிறது.

    ஆனால் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா, க்ரீன் பிட்சியால் பதற்றமடையவில்லை. ஆர்வம்தான் அதிகமாக உள்ளது என்று விராட் கோலி அதீத நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. உண்மையிலேயே ஆஸ்திரேலியா பெர்த் போன்ற அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது. ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பெர்த் அவர்களுக்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது.



    தற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். 20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட பார்மில் இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்.

    பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது ஊக்கத்தை கொடுக்கும். ஏனென்றால், பந்து வீச்சாளர்கள் மீது அவர்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். சிறப்பாக பேட்டிங் செய்துவிட்டால், உறுதியாக விரும்பும் முடிவு கிடைக்கும் என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்’’ என்றார்.
    அடிலெய்டு டெஸ்டில் நான்கு பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி 20 விக்கெட்டுக்களை சாய்த்தது பெருமையான விஷயம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கி விளையாடி வருகிறது. 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால், கேப்டன் விராட் கோலி இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரின்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால் இந்திய அணி சொற்ப ரன்களில் வெற்றி வாய்ப்புகளை இழந்தது. இதனால் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்தார்.

    இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடியது. பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், நேர்த்தியாக பந்து வீசினார். 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

    நான்கு பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 31 ரன்னில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

    வெற்றிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை காப்பது முக்கியமானது. நாங்கள் பேட் கம்மின்ஸை வீழ்த்திய பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. நான் ஐஸ் போன்று கூலாக இருப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் விளையாடும்போது அவர்கள் ஒரு தவறு செய்ய வேண்டும். அல்லது நாங்கள் ஒரேயொரு சிறந்த பந்து வீச வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. நான்கு பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தது மிகப்பெரிய பெருமையான விஷயம்.



    இந்த தொடரில் எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல நிலைமைக்கு உயர இது உதவியாக இருக்கும். புஜாரா மற்றும் ரகானே இந்த போட்டியை அருமையாக கொண்டு சென்றனர். நாங்கள் சிறந்த அணி. இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். இதேபோல் புஜாரா மற்றும் ரகானே இணைந்து விளையாடினார்கள், எங்களின் மிகவும் திடமான ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.

    மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கனும். பெர்த் டெஸ்டிற்கு செல்லும்போது இதுகுறித்து யோசிப்போம். முதல் போட்டியிலேயே 1-0 என முன்னிலைப் பெற்று தந்த பிறகு, அதை நான் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.
    ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் எடுத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்கள். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இந்தியா 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மார்ஷ் 60 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் 167 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை பேட்ஸ்மேன்களான பந்து வீச்சாளர்கள் களம் இறங்கிய தொடங்கினார்கள்.

    முதலாவதாக பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். இவர் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பெய்ன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 136 ரன்கள் தேவைப்பட்டது.


    கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விளாசிய காட்சி

    இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுக்கள் மட்டுமே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். 8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் இணைந்த ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஸ்டார்க் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் ஆட்டமிழக்கும்போது 95 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த நேரத்தில் 9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் கடும் சவாலாக விளங்கி வரும் நிலையில், கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. இக்கட்டான நிலையில் கம்மின்ஸை வெளியேற்றினார் பும்ரா. அப்போதுதான் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. இருந்தாலும் இந்தியாவின் நெருக்கடி குறையவில்லை.

    கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் லாயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஹசில்வுட் திறமையான வகையில் சமாளிக்க, நாதன் லயன் இலக்கை நோக்கி ரன்களை விரட்ட தொடங்கினார்.


    ஹசில்வுட் ஆட்டமிழந்து சோகமாக திரும்பு காட்சி

    ஒரு கட்டத்தில் இஷாந்த சர்மா பந்தில் நாதன் லயன் எல்பிடபிள்யூ ஆக, நடுவர் நோ-பால் என்றதால், இந்திய வீரர்கள் விரக்தியடைந்தனர். ஸ்கோர் 54-ல் இருந்து 44, 34 என குறைந்து கொண்டே வந்தது. இதனால் ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இறுதியில் அஸ்வின் பந்தில் ஹசில்வுட் 43 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 291 ரன்னில் ஆல்அவுட் ஆகி, 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் (5), இஷாந்த் சர்மா (0), முகமது ஷமி (0), பும்ரா (0) ஆகியோர் 44 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்ஸ் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்ததோடு, நெருக்கடியும் அளித்துவிட்டனர்.
    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாதுகாப்பான (defensive batting) ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்ததில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 88 ஓவரில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

    பெரும்பாலும் பாதுகாப்பு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் 2-வது நாளில் 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இஷாந்த் சர்மா 15 ஓவவர்கள் வீசி 6 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 2.07 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    பும்ரா 20 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு 1.70 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    அஸ்வின் 33 ஓவர்கள் வீசி 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 1.52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி 16 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு 3.19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுபோன்று பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடியது கிடையாது என்று சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தனது ட்வீட்டில் ‘‘இந்தியா இந்த சூழ்நிலையை அதிக அளவில் உருவாக்க வேண்டும். தங்களது பலத்தை விட்டுவிடக் கூடாது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் பாதுகாப்பு ஆட்டம் மனநிலையுடன் விளையாடினார்கள். இதற்கு முன் எனது அனுபவத்தில் அப்படி பார்த்தது கிடையாது. அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். தற்போது வரை அணி நல்ல நிலைமையில் இருக்க அவர்தான் காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    எதிரணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் தலைவலி கொடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் ஜாம்பவனாக விளங்கிய இந்திய அணி தற்போது வெளிநாடுகளில் விளையாடி வருகிறது. பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்குகிறது. ஆனால் பேட்டிங்கில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை 1-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 1-4 என தோல்வியடைந்தது.

    இந்த தொடரில் இந்தியா சார்பில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். கடைசி டெஸ்டில் மட்டும் லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் சதம் அடித்தனர்.

    இங்கிலாந்து தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களான ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடவில்லை. அதேசமயம் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை இந்திய பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் குறைந்த ரன்களில் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

    தற்போது ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இதிலும் டெய்ல் எண்டர்ஸ் என்ற சோதனை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    அடிலெய்டு பிட்ச் ரன் குவிப்பிற்கு சாதகமான வகையில் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 127 ரன்னிற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.



    7-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் 21 ரன்னுடன் களத்தில் இருந்தார். பேட் கம்மின்ஸை துணைக்கு வைத்துக் கொண்டு டிராவிஸ் 17.3 ஓவர்கள் கடத்தி விட்டார். இந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் - கம்மின்ஸ் ஜோடி 50 ரன்கள் எடுத்துவிட்டது. கம்மின்ஸ் 47 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து ஸ்டார்க் களம் இறங்கினார். ஸ்டார்க்கை வைத்துக்கொண்டு அரைசதம் அடித்ததோடு 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் உள்ளனர்.

    முன்னணி பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு, டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் தலைவலி கொடுத்து வருகிறது இன்னும் நீண்டு கொண்டே வருகிறது.
    ×