search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்குமார்"

    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் பலரும் படத்தில் இணைந்துள்ளனர். #DD2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஏ.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அதிதி ராவ் ஹிடாரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படத்தின் கலை பணிகளை முத்துராஜ் மேற்கொள்கிறார். #DD2 #Dhanush

    ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் படமாக்கப்பட்டுள்ளது. #GVPrakash #Adangathey
    சரத்குமார், ஜிவி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

    சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார்.



    படத்தின் டீசரில் இருந்த சில வசனங்களால் எனக்கு எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வருகின்றன. எனக்கு ஹவாலா பணம் வருவதாக எழுதுகிறார்கள். சிரிப்புதான் வருகிறது’ என்றார்.
    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 27 பேர் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். #SamathuvaMakkalKatchi
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 12-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அதன் தலைவர் சரத்குமார், கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

    பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய சமத்துவ கட்சியின் 12-வது ஆண்டு தொடக்க விழா இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனது 22 வருட அரசியல் பயணம் தொடர்கிறது. சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

    நாங்கள் எந்தகட்சியையும் வீழ்த்துவதை பற்றி யோசிக்கவில்லை. எங்களை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இதில் போட்டியிட 27 பேர் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை வர வேண்டும் என்று நேற்று நடந்த கலைஞர் புகழ் வணக்க கூட்டத்தில் தலைவர்கள் பேசியுள்ளனர். அது வரவேற்கத்தக்கது.

    மேற்கு வங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் நாற்பதும் நமதே. நாங்க ரெடி நீங்க ரெடியா என்று பேசி இருக்கிறார். அவர் எனது நண்பர். இந்த கோ‌ஷங்கள் நான் எழுப்பியவை. அதை நினைவில் வைத்து பேசி இருப்பது சந்தோ‌ஷம்.

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. எங்கள் கொள்கையே இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான். வெறும் 2 எம்.பி.க்களை மட்டும் வைத்திருந்த பா.ஜனதா கட்சி ஆட்சிக்க வரவில்லையா. நாங்களும் 2 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தோம். எங்களுக்கும் நாட்டை ஆளும் காலம் வரும்.

    சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. நான் கேட்டுக் கொள்வது நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

    மாணவர்கள் கையில் அரிவாள், கத்தியுடன் செல்வது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களே உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும், உங்கள் பெற்றோரை பற்றியும் சிந்தியுங்கள்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.

    நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், துணை பொதுச்செயலாளர் எம்.எ.சேவியர், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, மாவட்ட செயலாளர்கள் முருகேச பாண்டியன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SamathuvaMakkalKatchi

    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் புதிரானதாக இருக்கும் என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். #Peranbu #Mammootty
    ‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

    “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



    படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

    தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.” 

    சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Peranbu #Mammootty #Anjali

    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty
    ‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.

    தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 7-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



    படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். சரத்குமார், அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்ரீ ராஜலெக்‌ஷ்மி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #Peranbu #Mammootty #Anjali
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவ அதிசயம் என்றும் அவர் விரைவில் குணமடைவார் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Karunanidhi #KauveryHospital #Vaiko
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில், இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம். வாழ்நாளெல்லாம் தமிழர் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்’ என குறிப்பிட்டார்.


    இதேபோல் நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் கூறும்போது, தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி, அவர் மீண்டு வர வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் கவி அரசனாகவும், புவியரசனாகவும் ஜொலித்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், திரைப்பட இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  #DMKLeader #Karunanidhi #KauveryHospital #Vaiko
    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ராம் மீதோ, அஞ்சலி மீதோ தனக்கு கோபம் இல்லை என்று கூறினார். #Peranbu
    கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என்று மூன்று தரமான படங்களை ராம் இயக்கி இருக்கிறார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, தங்க மீன்கள் சாதனா, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு நடந்தது.

    இதில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் மம்முட்டி, சத்யராஜ், சித்தார்த், வசந்த் ரவி, இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், வெற்றிமாறன், அமீர், கே.எஸ்.ரவிகுமார், விஜய், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மனோபாலா, கோபி நயினார், சசி, மீரா கதிரவன், ஈ.ராம்தாஸ், நடிகைகள் அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    சத்யராஜ் பேசும்போது ‘நான் முதலில் வில்லனாக நடித்துவிட்டு தான் கதாநாயகனாக மாறினேன். அப்போது எனக்கு உதவி செய்தது மம்முட்டி நடித்த படங்கள் தான். அவரை பார்த்து தான் நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். மம்முட்டி படங்களை ரீமேக் செய்துதான் நான் கதாநாயகன் ஆனேன் என்றார்.

    ஆன்ட்ரியா பேசும்போது ‘இந்த படத்தில் என்னை நடிக்க அழைக்கவில்லை என்று ராம் மீது கோபம் இல்லை. அஞ்சலி அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்’ என்றார். #Peranbu #Mammootty #Anjali #Andrea

    ஆண்ட்ரியா பேசிய வீடியோவை பார்க்க:

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

    இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது, 

    கே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது?

    ப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும். 



    கே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்?

    ப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும். 

    இந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

    ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார். #Peranbu
    ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

    இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேசும் போது,

    ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கும்போது, இயக்குநருடைய குணாதிசயம் வெளியே வரும். எல்லா இயக்குநர்களும் தங்குளுடைய கதைகளை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். பொதுவாக எல்லா இயக்குநர்களின் படங்களிலும் அவர்களுடைய குணாதிசயம் அல்லது அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது அந்த படத்தின் தலைப்பில் இருந்து வரும். உதாரணமாக மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார் அல்லவா, அதுபோல தான். அதை அவரே ஒத்துக் கொள்வார். 



    பேரன்பு என்ற தலைப்பை வைக்கும் போதே ஒரு மனிதனுக்குள் இவ்வுளவு பெரிய ஒரு சிந்தனை எப்படி இருக்கமுடியும். நாம் எல்லோருமே கடந்து போயிருப்போம். நாம் அனைவரும் மாற்றுத்திறனாளி ஒருவரை பார்ப்போம். பார்த்துவிட்டு கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத்திறனாளியின் பார்வையில் உலகத்தை பார்க்கும் பார்வை, அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பார்வை தான் ராமின் பேரன்பு. 

    இந்த படத்தை பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அவ்வுளவு பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இவையெல்லாமே ஒரு அனுபவம் தான். அடுத்தவர்களுக்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்தில் தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் அதுபோன்ற ஒரு காட்சியை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு. எல்லாவற்றிலும் இந்த படம் முன்மாதிரியாக இருக்கும். நாம் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்திருப்போம். அதை ஒருநாள் நேரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான் பேரன்பு படம். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாததை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். #Sterliteplant #Sarathkumar
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கடந்த மே 28-ந் தேதி ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்ததை வரவேற்றோம்.

    தற்போது ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், தமிழக அரசின் அரசாணை மீது இடைக்காலத்தடை விதிக்க இயலாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் வரும் 18-ந் தேதிக்குள் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாததை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். மேலும் தீவிர மக்கள் போராட்டத்துக்கும், 13 பேரின் உயிர் தியாகத்துக்கு பிறகும் கிடைக்கப்பெற்ற தீர்வு, நிரந்தரத்தீர்வாக அமையுமாறு சட்டரீதியில் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sterliteplant #Sarathkumar
    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருக்கிறோம். எனவே கட்சி நிர்வாகிகள் வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தங்கள் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்களுடனோ, என்.ஜி.ஓ. நிறுவனங்களுடனோ, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடனோ இணைந்து ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.

    இதுவரை தமிழகத்தில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே தலைவர் ஆர்.சரத்குமாரின் எண்ணம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    `மயங்கினேன் தயங்கினேன்' படத்தை இயக்கிய எஸ்.டி.வேந்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தில் நடிகர் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். #VelacheryThuppakiSoodu #SarathKumar
    வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'

    வி.ஆர்.மூவிஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. எஸ்.டி.வேந்தன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஷாம் - சினேகா நடித்த `இன்பா' மற்றும் `மயங்கினேன் தயங்கினேன்' ஆகிய படங்களை இயக்கியவர். 

    இந்த படத்தில் நடிகர் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக, மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை பணிகளை கவனிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.

    தற்போதைய காலகட்டத்தைப் பொறுத்தவரை வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. 

    இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என பெயரிட்டுள்ளனர்.

     

    இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால், இந்தப்படத்திற்கு `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

    படம் குறித்து இயக்குநர் S.T..வேந்தன் கூறும்போது, "காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை. யாரும் போராடுவதில்லை. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. 

    ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும்  என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.

    இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்" என்றார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #VelacheryThuppakiSoodu #SarathKumar

    ×