search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • சாயல்குடி அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வேப்பமரத்து பனை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டுப் படகில் கரைவலை வைத்து மீன்களை பிடித்து வருகின்றனர். நேற்று இரவு நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனைக் கண்ட நாட்டுப் படகு மீனவர்கள் வேப்பமரத்துப்பனை கடற்கரையோரம் வலைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    • ஏர்வாடி அருகே வலையில் சிக்கிய டால்பின் மீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
    • இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    கீழக்கரை

    மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வாலிநோக்கம் கடலில் தற்போது சீலா மீன் பிடிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி பின்னர் கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன் வலையில் சிக்கி இருந்தது. வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பினை கண்ட மீனவர்கள் அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

    இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்.
    • முத்துப்பேட்டை சுற்றுவட்டார மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், வாழ்வுரிமை குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் பேசினர்.

    இதில், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    • மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.
    • மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.

     விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றது .இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது.

    இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த2 மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை.

    இந்த 2 மாவட்ட மக்களின் கோரிக்ககைளை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் அழகன் குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும் செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பரா என்கிற இடத்திலும் 2 பீப்பிள் துறைமுகங்கள் அமைக்க கடந்த 2ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டனர்.

    தற்போது இந்த பணிகள் கிடப்பில் உள்ளது. எனவே இந்த 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள துறைமுகப் பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ.சி.ஆர். சாலையில் அனுமந்தையில் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

    • புயல் வலுவிழந்தததால் 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    • மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டல சுழற்சி புயலாக மாறியது. இதனால் ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. அதனுடைய தாக்கம் காரணமாக தமிழக கடலோரப்பகுதியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    பாம்பனில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ராமேசுவரம் மண்டபம், பாம்பன் ஆகிய கடலோரப்பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி விசைப்படகுகள் தரையில் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து புயலின் தாக்கம் குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு இன்று (23-ந் தேதி) காலையில் மீனவர்கள் மீன் பிடிக்கசெல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் ராமேசுவரம் மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு படகுகளில் மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக் கொண்டு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க சென்றனர்.

    • 14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும்.
    • உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம் குமரி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவநலத் துறை சார்பில் உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம் முட்டத்தில் நடந்தது.

    பொதுக்கூட்டத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சகாயராஜ் தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசினார்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய உங்களோடு இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாதி மீனவர்கள் வசிக்கின்றனர். மெரினா கடற்கரை பாதி தொகுதியில் வருகிறது. என் எம்.எல்.ஏ. அலுவலகம் மீனவ பகுதியில் தான் உள்ளது. அவர்களின் செல்ல பிள்ளையாக அவர்கள் வீட்டில் ஒருவராக நான் உள்ளேன். இங்கே உங்களை அன்போடு பார்க்கிறேன்.

    கலைஞர் அரசு தான் கை ரிக்‌ஷாவை ஒழித்தது. படகுகளுக்கு இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தந்தது, மீனவர் நல வாரியம், மீன்பிடி தடை கால நிவாரணம், டீசல் மானியம் உயர்வு போன்றவற்றை தந்தது கலைஞர் அரசுதான்.

    சிறு படகுகளுக்கு மண்எண்ணெய், காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டியது வெளிநாடுகளில் சிறையில் வாடிய 170 மீனவர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்து வந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.ரூ.320 கோடி மீனவர்களுக்கு நிவாரணம் ரூ.743 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெய் மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 6000 ஆக உயர்த்தியது மு க ஸ்டாலின் அரசு தான். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ.8000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

    14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். கடலில் காணாமல் போன மீனவர்களில் இறந்தவர்க ளாக அறிவிக்க 7 ஆண்டுகள் என்பது அதிகம்.இதை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

    கணவரை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் கிடைக்க பரிசீலனை செய்யப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். கடல் ஆம்புலன்ஸ் சர்வதேச அடையாள அட்டை அரசின் கவனத்தில் உள்ளது. நிதி நிலையை பொறுத்து அவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார் என உறுதி அளிக்கிறேன். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகள் காலி செய்ய வேண்டும் தி.மு.க. இதனை ஏற்காது. மீனவர்களின் கோரிக்கைகளை முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.

    மத்திய அரசு மீனவர்க ளுக்கு எதிராக எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் மீனவர்கள் பக்கம் தான் திமுக அரசு இருக்கும் அதனால் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.

    13 கோரிக்கைகள் இங்கு தந்துள்ளீர்கள். மீன வர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணும் பணியில் திராவிட மாடல் அரசு ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மீன் துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில தலைமை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் கலந்து கொண்டனர்.

    • சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது
    • 4 நாட்கள் தொடர் மழை எச்சரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதேபோல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைகிராமங்களிலும் பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை கிராமங்க ளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    • 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த 5-ந்தேதி மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை 2 படகுகளோடு இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

    மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரியும் ராமேசுவரத்தில் கடந்த 6-ந்தேதி முதல் பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 8-ந் தேதி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

    எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு வானிலை சீரான நிலையில் 13 நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இன்று காலையில் மீன்பிடி உபகரண பொருட்களை சேகரித்துக்கொண்டு மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்கு புறப்பட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே ராமேசுவரம் துறைமுகம் பரபரப்பானது. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதேபோல் 300-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகளில் 1500-க்கு மேற்பட்டோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    • இன்று மாலையில் கரைக்கு திரும்பும் படகுகளுக்கு மட்டும் அனுமதி.
    • விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம்.

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என்று கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு, மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் இன்று முதல் தினசரி இழுவை விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடலில் தங்காமல் காலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மாலையில் கரை திரும்பும் படகுகளுக்கு மட்டும் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கடலுக்குச் செல்லும் படகுகள் உயிர்காப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. வரும் 16-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கடலில் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
    • இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடற்கரை வெறிச்சோை காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரையில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுகளை காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இந்தநிலையில் இன்று வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.கடல் சீற்றத்தால் கடற்கரை யில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் படகுகளை இழுவை டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்மற்றும் கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்ப ட்டுள்ள நிலையில் தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகா ப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    புயல் எச்சரிக்கை கார ணமாக மீன்வளத்துறை எச்சரிக்கை அடுத்து கோடிய க்கரை, ஆறுகா ட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் கடற்கரை பகுதி வெளிச்சோடி காணப்படுகிறது.

    • குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    • ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளை தோப்பு, மணக்குடி, கோவளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதால் சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களுக்கு இதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு மூலமாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வள்ளங்கள் விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்துகொண்டே இருந்தது. வள்ளவிளை சின்னத்துரை நீரோடி இரயுமன்துறை பூத்துறை பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் வள்ளங்கள் கட்டு மரங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளை தோப்பு, மணக்குடி, கோவளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியிலும் ஒரு சில மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். சின்னமுட்டம், குளச்சல் துறைமுகங்களில் அவர்கள் கரை வந்த வண்ணம் உள்ளனர்.

    • வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்.
    • மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்துவருகிறது.

    வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு எதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உட்பட ரூ.1.25 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×