search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. #FisherMen #TNFisherMen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 28-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.

    மறுநாள் அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 2 விசைப் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.



    அதே நாளில் எல்லை தாண்டி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட 17 தமிழக மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜுட்சன் முன்பு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து 17 மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 23-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  #FisherMen #TNFisherMen
    கடந்தாண்டு இறுதியில் வீசிய ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 188 பேருக்கு அரசுப்பணி அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கடந்தாண்டு இறுதியில் தமிழக கடலோர பகுதிகளில் ஒக்கி புயல் தாக்கியது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல மீனவர்கள் இந்த புயலில் சிக்கி பலியாகினர். பலர் மாயமான நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

    இதனால், புயலில் பலியான மீனவர்களின் எண்ணிக்கையும் துல்லியமாக இல்லை. பலியான மற்றும் காணமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அப்போது நிவாரணம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.

    இதற்கேற்ப அவர்களின் குடும்ப சூழல்களை கருத்தில் கொண்டு 188 பேருக்கு அரசு வேலை வழங்க கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையில் அவர்களுக்கு பணி ஒதுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தற்போது அவர்கள் தங்களின் படகுகளை கரையில் நிறுத்தி அதில் உள்ள பழுதுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த நிவாரண தொகை புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு படகுகளை கடன் வாங்கி தான் சரி செய்யும் நிலை உள்ளது. தடைக்காலம் தொடங்கி கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

    நாகை மாவட்டத்தில் விசைபடகை கரையில் ஏற்றி பழுதுகளை சரி செய்வதற்கு அரசுடமை வங்கி மூலம் ரூ.5 லட்சம் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் ரூ.3 கோடியே 44 லட்சம் செலவில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழா சமீபத்தில் நடந்தது. இங்கு உரக்கிடங்கு அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வேதாரண்யம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
    ×