search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொழுக்கட்டை"

    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று நட்ஸ் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 20,
    சர்க்கரை - கால் கப்,
    ஏலக்காய் - 3.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    நட்ஸ் பூரண கொழுக்கட்டை ரெடி.

    சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய:

    கடலைப் பருப்பு - அரை கப்,
    வெல்லத்தூள் - முக்கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை:


    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மலர வேக விட்டு எடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய், அரைத்த விழுது சேர்த்து சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.

    செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    கறுப்பு எள் - 50 கிராம்,
    வெல்லம் - 50 கிராம்,
    ஏலக்காய் - 2.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.

    ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.

    வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு அணில் கொழுக்கட்டை மாவை பயன்படுத்தி பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1/2 கப்
    பால் - 1 கப்
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை



    செய்முறை :

    ஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.

    2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

    அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.

    பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

    சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.

    இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.

    குறிப்பு:
    வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அரைக்கீரை வைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 250 கிராம்,
    அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

    அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    அடுத்து அதில் வதக்கிய கீரை சேர்க்கவும்.

    அடுத்து ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்கு கொதித்த உடன் அரிசி ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும்.

    வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கீரை கொழுக்கட்டை ரெடி.

    கார சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட் அருமையாக இருக்கும். இதற்கு உங்களுக்கு விருப்பமான கீரையை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகில் காலை நேர டிபனாக நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் உருண்டைகளை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது இந்த ஓட்ஸ் கார உருண்டை. இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - ஒரு கப்,
    காய்ந்த மிளகாய் - 4,
    தேங்காய் - ஒரு துண்டு,
    கறிவேப்பிலை - சிறிது,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    பின்னர் அதில் ஓட்ஸ், உப்பு சேர்த்து, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, நன்றாக கிளறி இறக்கவும்.

    சூடு ஆறிய பின்னர் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த ஓட்ஸ் கார உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உப்பு உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த உப்பு உருண்டையில் காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×