search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுஷ்கா"

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, எடையை குறைத்த பிறகுதான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். #Anushka
    நடிகை அனுஷ்காவுக்கு பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் இல்லை. எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    “நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல் அடையாளம் என்கிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் எல்லோருடைய மனதையும் தொட்டு விட்டது என்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.

    என்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும் என்று அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.



    எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.”

    இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
    `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கவுதம்மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. #GVMSTRARRNxT #STR
    `விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள்.

    அந்த படம் `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இந்த கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GVMSTRARRNxT #STR #GauthamMenon #ARRahman #VTV2

    `பாகுபலி' படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் முக்கி நாயகியாக பார்க்கப்படும் ஹன்சிகா தற்போது கதை கேட்டு வரும் நிலையில், இனி கொஞ்ச காலத்துக்கு பேய் படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார். #AnushkaShetty
    `பாகுபலி' படத்துக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு படங்களில் ஒப்பந்தமாகாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. 

    திருமணத்திற்காக சில பரிகாரங்கள் செய்யவிருப்பதால் அனுஷ்கா கதை தேர்வில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அனுஷ்கா தற்போது கதை தேர்வில் மிக கவனமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால், அனுஷ்காவுக்கோ மீண்டும் மீண்டும் பேய் பட கதைகளாகவே வருகின்றனவாம். எனவே சில காலத்துக்கு பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். 



    அதோடு கதை கேட்கும்போதே அந்த கதை இந்தி சினிமாவுக்கும் ஒத்து போவது போல கதை கேட்கிறாராம். பாகுபலியால் கிடைத்த இந்திய அளவிலான வரவேற்பை அனுஷ்கா தான் சிறப்பாக அறுவடை செய்யப்போகிறார் என்கிறார்கள். #AnushkaShetty

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
    வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

    வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.

    "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.



    'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

    'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
    பிரபாசும், அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், பிரபாசின் திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் தீவிரப்படுத்தி இருப்பதாகவும், மணப்பெண்ணை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas
    பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

    திரையில் இருவரும் பொருத்தமான ஜோடியாக வலம் வந்ததால் இருவருரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், பாகுபலி படமும் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர். 

    முன்னதாக பாகுபலி படம் ரிலீசுக்கு பிறகு, பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்ததாக கூறப்பட்டது. அனுஷ்கா சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி வந்தார். ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதாகவும் திருமண தடை நீங்க அவர் பரிகாரங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. 



    இந்த நிலையில், பிரபாசின் திருமணத்தை விரைவில் முடிக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை கவனித்து வருவதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மணமகளை முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

    இதனால் தெலுங்கு பட உலகினரும், ரசிகர்களும் மணமகள் யார்? என்ற கேள்விகளை எழுப்பிய வண்ணமாக இருக்கிறார்கள். அனுஷ்காவைத் தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சு உள்ளது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் `சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. #Prabhas #Anushka

    12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாதவன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஜோடியாக பிரபல நடிகை நடிக்க இருக்கிறார். #Madhavan
    சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான படம் ‘ரெண்டு’. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இதில் இடம் பெற்ற ‘மொபைலா மொபைலா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் அனுஷ்கா.

    தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளது. சைலன்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹேமந்த் மதுகர் இயக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் திரைக்கதை எழுதுவதோடு பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.



    சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் அமெரிக்காவில் செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக மூன்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தில் கமல்ஹாசன், மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில் இயக்குநர் விஜய் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

    இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்றாவதாக இப்போது பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம். இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

    மற்ற இரு படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன், வித்யாபாலன், நித்யா மேனன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 3 படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan

    கவுதம்மேனன் - சிம்பு கூட்டணி அடுத்ததாக இணையவிருக்கும் `விண்ணைத்தாண்டி வருவாயா' இரண்டாம் பாகத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #STR #Anushka
    கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. 

    இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவன் பேசப்பட்ட நிலையில், தற்போது முதல் பாகத்தில் நடித்த சிம்புவே திரும்பவும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்னும் தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது. இதில் அனுஷ்கா நடிக்கவைக்கப்பட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கவுதம் மேனன் இயக்கத்திலும், வானம் படத்தில் சிம்புவுடனும் அனுஷ்கா இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Anushka

    பிரபாஸ் - அனுஷ்கா காதலிப்பதாக பல்வேறு தகவல்கள் வரும் நிலையில், பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அனுஷ்காவின் தாயார் தெரிவித்துள்ளார். #Prabhas #AnushkaShetty
    பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

    இதுகுறித்து அனுஷ்காவின் தாயார் கூறும்போது ‘எனக்கு பிரபாசை மிகவும் பிடிக்கும். அவரும், அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். #Prabhas #AnushkaShetty
    பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
    பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

    பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

    6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.



    ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
    பிரபாஸ் - அனுஷ்கா இடையேயான காதல் உண்மை தான் என்றும், அனுஷ்காவை திருமணம் செய்துகொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெலுங்கு சினிமாவில் தகவல் பரவி வருகிறது. #Prabhas #Anushka
    அனுஷ்காவும் பிரபாசும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது பிரபாசுக்கு பெண் பார்த்து வருகிறார்கள். அனுஷ்காவை, பிரபாஸ் காதலித்தது உண்மை தான். ஆனால் பிரபாஸ் குடும்பம் காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.

    பிரபாஸ் முடிந்த அளவுக்கு அவர்களது மனதை மாற்ற முயற்சித்தார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அனுஷ்காவுடன் பேசி இருவரும் பிரியும் முடிவை எடுத்துவிட்டார் என்று தெலுங்கு சினிமாவில் தகவல் பரவியுள்ளது. பிரபாசுக்காக காத்திருந்த அனுஷ்காவின் நிலை என்ன ஆகும்? என்பதுதான் பரிதாபம் என்கிறார்கள்.



    அனுஷ்காவும் சமீபகாலமாக படங்களில் ஒப்பந்தமாகாமல், திருமண பரிகாரம் செய்ய சில கோவில்களுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhas #Anushka

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கோவில்களை அடிக்கடி சுற்று வருவதற்கு காரணம் வெளியாகியுள்ளது. #Anushka
    தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வந்தன.

    ராணா, ஆர்யா, நாகசைதன்யா என்று பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வந்தது. புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த அனுஷ்கா திடீரென்று மீண்டும் படங்களில் பிசியாகி இருக்கிறார்.



    தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அனுஷ்காவை முதன்மை கதாநாயகியாக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முயன்றுகொண்டிருக்க அவரோ மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் ஏதோ தோ‌ஷம் இருப்பதால் தான் திருமணம் தடைபடுகிறது. அந்த தோ‌ஷத்தை நிவர்த்தி செய்ய கோவில் கோவிலாக சுற்றி வருகிறார் அனுஷ்கா என்கின்றன தெலுங்கு வட்டாரங்கள்.
    ×