என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபாவளி"
- 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
- 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.
1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.
அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா முன்னிலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அடுத்த நாளில்(29-ந்தேதி) இருந்து கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நாளும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த 9 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளியின் அடுத்த நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு 9 நாட்கள் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று ஹாசனாம்பா கோவில் நடை சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய சம்பிரதாயங்கள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து பிற்பகல் 1.05 மணி அளிவில் மந்திரி கோபாலய்யா ஹாசனாம்பா தேவி வீற்றிருக்கும் கருவறையின் கதவை மூடினார். பின்னர் கோவிலின் தலைமை அர்ச்சகர் கருவறையின் கதவுக்கு பூட்டு போட்டு சீல் வைப்பதன் மூலம் கோவிலின் நடை சாத்தப்பட்டது. இதில் பிரீத்தம் ஜே கவுடா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக மந்திரி கோபாலய்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உண்டியல் காணிக்கை விவரம்
ஹாசனாம்பா கோவிலில் முக்கிய பிரமுகர்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை சிறப்பான முறையில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. எந்தவொரு அசம்பாவிதம் இன்றி ஹாசனாம்பா கோவில் நடை திறந்து சாத்தப்பட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நல்லாட்சி செய்வதன் மூலம் மாநில மக்கள் நல்வாழ்வு வாழ அருள் புரியவேண்டும் என்று ஹாசனாம்பா தேவியிடம் வேண்டினேன். அதேபோல் அனைத்தும் நடக்கும் என்று நம்புகிறேன். ஹாசனாம்பா கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு அதன் விவரம் 3 நாட்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குளித்தலை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்ககேட் பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி பண்டிகை அன்று இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து காற்று மண்டலத்திற்கு கேடு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குளித்தலை கடம்பர் கோவில் பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 22), மைலாடி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (24) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலமாக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்றுள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகை முடிந்துள்ளதால் நேற்று முதல் மக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து திரும்ப தொடங்கி உள்ளனர்.
இதையொட்டி தமிழக அரசு 17,719 பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்க கூடிய 2100 பஸ்களுடன் நேற்று 643 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 730 பஸ்கள் விடப்பட்டன.
இன்றும் வழக்கமான 2100 பஸ்களுடன் சென்னைக்கு மட்டும் 913 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. மற்ற ஊர்களுக்கு 900 பஸ்கள் இயக்கப்படுகிறது.
8-ந்தேதி (திங்கட்கிழமை) வழக்கமான 2100 பஸ்களுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1034 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 1190 பஸ்கள் விடப்படுகிறது.
சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மட்டும் சென்னைக்கு மொத்தம் 6300 பஸ்களுடன் 3676 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னையை தவிர்த்து வெளியூர்களுக்கு வழக்கமான பஸ்களுடன் 4270 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். பண்டிகை கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக, பட்டாசு வெடிக்கையில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
இந்த தீ விபத்துகளில் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு-மீட்புப்பணித் துறையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்களில் நீர் நிரப்பப்பட்டு தயார்நிலையில் இருந்தன.
தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் 11 இடங்களில் பாட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாவது:-
தீபாவளியின்போது தீ விபத்து அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 3-ந் தேதி காலை முதலே அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள், வாகனங்கள் தயார்நிலையில் இருந்தன.
தீயணைப்பு வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளியை கொண்டாடினர். மேலும் தீபாவளியின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் பொதுமக்களும் ஆபத்து இல்லாமலேயே பட்டாசுகள் வெடித்தனர்.
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 11 இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து பெரும் சேதத்தைத் தவிர்த்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படிப்படியாக வரத் தொடங்கினர். தேனிலவு தம்பதியினரின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நீலகிரியில் சுற்றுலாபயணிகள் குவிந்துள்ளனர். அங்குள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி காணப்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் திரளாக வந்தனர். தாவரவியல் பூங்காவுக்கு, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டனர்.
இதேபோல குன்னூர் சீம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குன்னூரில் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சீம்ஸ் பூங்கா இயற்கை சூழலில் அமைந்துள்ளது.
இந்த பூங்காவை சுற்றி உள்ள படகு இல்லம் பசுமையான மலைகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சீம்ஸ் பூங்காவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் புல்வெளியில் விளையாடியும், படகுகளில் பயணம் செய்தும் பூக்களுக்கு இடையே செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான இதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. தீபாவளி விடுமுறையை ஒட்டி சுற்றுலாபயணிகள் வருகை நேற்று அதிகம் காணப்பட்டது. வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
இடையிடையே குறுக்கிடும் மித, அடர் வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணை கவரும் வகையில் உள்ளன. தற்போது அங்கு நிலவி வரும் காலநிலையால் பனியும், பசுமையும் காண்போர் மனதை கொள்ளை கொள்ள செய்துள்ளது. சோலை வனங்களில் காணப்படும் சிங்கவால் குரங்குகள், காட்டெருமைகள், யானைகளை கண்டு சுற்றுலாபயணிகள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
கருமத்தம்பட்டி:
கருமத்தம்பட்டி அடுத்த முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 37). இவர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இவர் தனது மனைவி ரம்யா (30) மற்றும் மகன்கள் பிரணவ் (7), சாய் (2) ஆகியோரை அழைத்து கொண்டு மொபட்டில் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள மனைவி ரம்யாவின் தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன வாகன டிரைவர் சண்முகம் (54) என்பவர் அவரது நிறுவன காரில் சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே அவர் சாலையோரத்தில் காரை நிறுத்தி போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் சிவக்குமார் ஓட்டிவந்த மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்புறம் மோதியது. இதில் இவரது மகன் பிரணவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகுமார் மற்றும் மனைவி ரம்யா, சாய்க்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் பிரணவ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனையடுத்து காயம் அடைந்த சிவகுமார், ரம்யா, சாய் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை புகை மாசில்லாத பண்டிகையாக கொண்டாட வலியுறுத்தி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. காலையில் 1 மணிநேரமும், மாலை 1 மணிநேரமும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் சரவெடிகள் உள்பட அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் அரசு விதித்த கால அளவை யாரும் கண்டுகொள்ளவில்லை. 3-ந் தேதி நள்ளிரவில் இருந்தே தீபாவளி பட்டாசுகள் ஆங்காங்கே வெடிக்க தொடங்கியது.
தீபாவளி அன்றும் அதிகாலையில் இருந்தே சரவெடி உள்பட பல்வேறு வகையான வெடிகளும் வெடிக்கப்பட்டன. தொடர்ந்து பகல், பிற்பகல், மாலையிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இரவு நீண்ட நேரம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
பாளை பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்த பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி- தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் பெரிய அளவில் தீ விபத்துகள் ஏற்படவில்லை.
வழக்கமாக பட்டாசு வெடி விபத்தினால் வைக்கோல் படப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்படும். ஆனால் நேற்று அவ்வப்போது மழை பெய்து வந்ததால் எந்தவித தீ விபத்தும் ஏற்படவில்லை. பட்டாசு வெடித்ததில் பெரிய அளவில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.
கோவை,நவ.5-
கோவை பாப்ப நாயக்கன் பாளையம் அருகே உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் பார்த்தீபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (57). சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்கள் 3 பேரும் கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டித்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய, விடிய மது குடித்தனர். இரவு அங்கேயே படுத்து தூங்கினர். காலையில் எழுந்ததும் 3 பேரும் மீண்டும் மது குடித்தனர்.
பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.இதனை தொடர்ந்து வீட்டிற்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்தீபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் கள்ளச்சாரயம் குடித்து இறந்து இருக்கலாம் என அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த போது 3 பேரும் சாப்பிடாமல் இரவு முழுவதும் விடிய, விடிய மது குடித்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் குடலில் இருந்து பெயிண்ட் அடிக்க கலக்கும் தின்னர் போன்ற ஒரு வாசனை வந்தது. எனவே அவர்கள் 3 பேரும் பெயிண்டர் என்பதால் போதைக்காக மதுவுடன் தின்னரை கலந்து குடித்தார்களா? என்பதற்காக அவர்களது உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவு வந்த உடன் அவர்கள் மதுவுடன் எதை கலந்து குடித்தார்கள் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை நாளில் ஒரே பகுதியை சேர்ந்த 3 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. * * * பார்த்திபன் * * * முருகானந்தம் * * * சக்திவேல்
தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோபி பஜனை கோவில் வீதி பிரகாஷ் (25), அங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், தமிழரசன், வசந்தகுமார், சித்தாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என 5 பேர் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாகவும், அதிக சத்தங்கள் எழுப்பிய பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 115 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று முன்தினம் ரூ.4.58 கோடிக்கு மது விற்பனையானது.
தீபாவளி நாளான நேற்று ரூ.4.80 கோடிக்கு மது விற்பனையானது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடைகளில் ரூ.2.95 கோடிக்கு மது விற்பனையும், தீபாவளி நாளான நேற்று ரூ.2.71 கோடிக்கு மது விற்பனையானது.
மொத்தம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15.04 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்