search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும்.
    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும். ‘ஆவளி’ என்பதற்கு வரிசை என்பது பொருள். தீப+ஆவளி= தீபாவளி. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து, புலரும் காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் தீபாவளியாகும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த தினம் என்பதால், இதனை ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைப்பார்கள்.

    பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஞான பிரகாசத்தை, ஞான ஒளியை அடைய வேண்டும் என்பது தான் தீபாவளியின் உண்மையான தத்துவம். நல்லெண்ணம் ஆகிய எண்ணெய்யை நமது உடலில் பூச வேண்டும். சித்தமாகிய அரப்பினால் தேய்த்து, சஞ்சலம், கெட்ட எண்ணம் போன்ற மனதில் படிந்திருக்கும் அழுக்காற்றை போக்குதல் வேண்டும். ஞானமாகிய வெண்ணிற புத்தாடைகளை உடுத்தி புனிதமாக இருத்தல் வேண்டும்.

    காமம், தேவையற்ற கெட்ட சிந்தனைகள் போன்ற அரக்கர்களை பட்டாசு என்னும் திட உறுதிகளால் சுட்டுப் பொசுக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் போது நம்மையும் அறியாமல் நம் அகத்தில் ஒருவித ஒளிப் பிரகாசம் தோன்றும். அதன் மூலம் ஆனந்தம் உண்டாகும். அந்த நிலையை உருவாக்குவதே தீபாவளி போன்ற பண்டிகையின் உள்நோக்கம்.

    கண்ணபிரான் நரகாசுரனை அழிக்க சென்ற போது, அவனது கோட்டைகளான கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்ற நான்கையும் தாண்டி உட்புகுந்தார். பஞ்ச பூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி இறைவன் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்தும் தத்துவம் இதுவாகும். கிரி துர்க்கம் - மண், அக்னி துர்க்கம் - நெருப்பு, ஜல துர்க்கம் - நீர், வாயு துர்க்கம் - காற்று (நான்கு பூதங்கள் இருக்கும் இடத்தில் ஆகாயமான ஐந்தாவது பூதமும் இருக்கும்).

    பஞ்சபூதங்களால் ஆன நமது உடலில் இறைவனை குடியமர்த்திக் கொள்ள வேண்டும். இறைவன் நம் உள்ளத்தில் இருக்க இடம் அளித்தால், அவன் நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமையை அகற்றி உள்ளத்தில் ஒளியேற்றுவான். அவ்வாறு ஒளிபெற்ற ஒருவனது வாழ்வில் ஆண்டின் ஒரு தினம் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகவே அமையும்.

    அதனால் தான் தீபாவளியைப் பற்றி ரமண மகரிஷி இப்படிச் சொல்கிறார். ‘தீய எண்ணங்கள் தான் நரக(ம்)ன். அவன் குடியிருக்கும் வீடு, நம் உடம்பு. நமது உடலில் இருந்து அந்த மாயாவியை அழித்து நாம் அனைவரும் ஆத்மஜோதியாக திகழ்வதே தீபாவளி’
    பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
    தீபாவளிக்கு பட்டாசுதான் ஒரு முழுமையை தரும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. ஏதேனும் ஒர் வெடியோ, மத்தாப்போ, வீட்டின் முன் வைத்து வெடிப்பதன் மூலம் தீபாவளியின் முழுமையான மகிழ்ச்சி வெளிப்பாடு நிறைவேறுகிறது. மகிழ்ச்சியோடு வெடி வெடிப்பது என்பது, சில சமயம் தவறான மற்றும் எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி விட கூடும். எனவே மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பது என்பது கவனத்துடன் கையாள வேண்டும். பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை:-

    நாம் அணிகின்ற ஆடை என்பது எளிதில் தீப்பற்றி விடாத வகையில் இருத்தல் வேண்டும். நைலான், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடித்தல் கூடாது. பருத்தி துணிகள் அணிவது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது வெளிவரும் தீப்பொறி பட்டாலும் நைலான் ஆடைகள் பொசுங்கி விட கூடும். அதுபோல், தரை வரை புரள விட்டு செல்லும் பிரமாண்ட ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது கூடாது. புதிய ஆடைகளை வெளியே மற்றும் விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது அணிந்து சென்று பட்டாசு வெடிக்கும் போது பருத்தியிலான கச்சித மான ஆடைகள் அணிதல் வேண்டும்.

    பட்டாசுகள் கொளுத்து வதற்கு தீக்குச்சி மற்றும் லைட்டர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. நீளமான குச்சியுடன் கூடிய ஊதுபத்தி, மத்தாப்பூ போன்றவை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பட்டாசிற்கும் நமக்கும் சற்று இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

    வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க செய்கிறோம் என அதனை கையில் எடுத்து ஆராய்ச்சி செய்வதும் கூடாது. ஒருமுறை தீப்பொறி பட்ட பட்டாசு என்பது சில சமயம் சற்று தாமதமாக கூட வெடிக்க கூடும். எனவே வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுப்பது, மீண்டும் மீண்டும் அதன் மீது நெருப்பு வைப்பது போன்ற பணிகளை செய்தல் கூடாது.

    கையில் வைத்து வெடிப்பது, பொதுமக்கள் செல்லும் போது அவர்கள் மீது தூக்கி எறிந்து பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது.

    வீட்டின் உட்புறம் மற்றும் வாகன நிறுத்தம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்தல் கூடாது.

    பட்டாசுகள் வைத்திருக்கும் இடத்தில் அருகில் விளக்குகள்,வெப்பமான மின் விளக்குகள் எரிய விடக்கூடாது. அது போல் பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு பிற பட்டாசுகளை வெடிக்க செய்யக் கூடாது.

    நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் பட்டாசு வெடிப்பது தவிர்த்திட வேண்டும். மேலும் ஓலை வீடுகள் அருகில் ராக்கெட் போன்ற பாய்ந்து செல்லும் வெடிகளை வெடிப்பதை தவிர்த்திட வேண்டும். மத்தாப்பூ கம்பிகளை பற்ற வைத்து விட்டு ஆங்காங்கே தூக்கி எறிதல் கூடாது. பாதுகாப்பாக ஓர் பகுதியில் சேகரித்து பின்னர் அதனை வெளியேற்றிட வேண்டும்.



    பட்டாசு வெடிக்கும் போதுசெய்ய வேண்டியவை

    பட்டாசு வெடிக்கும் போது காலில் செருப்பு அணிந்து தான் வெடித்திட வேண்டும்.

    ஓரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மணல் போன்றவை அருகில் வைத்திருப்பது வேண்டும்.

    எந்த ஒரு பட்டாசை வெடிக்கும் முன்னும் அதன் பெட்டியில் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை படித்து பார்த்து அதற்கு ஏற்ப வெடித்திட வேண்டும்.

    பட்டாசு வாங்கும் போது அது முறையான அனுமதி பெற்று தயாரிக்கப்பட்ட தரமான பட்டாசு தானா என ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    குழந்தைகளை பட்டாசு வெடிக்கும் பகுதியில் இருந்து தூர நிற்க வைத்து பார்க்க செய்ய வேண்டும். பெரிய வெடிகளை குழந்தைகளிடம் கொடுத்து வெடிக்க செய்கிறோம் என ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

    பெரும்பாலும் திறந்த வெளி பகுதிகளில் பட்டாசு வெடிப்பது நன்மையளிக்கும். ஓரே நேரத்தில் பல வெடிகள் மற்றும் மத்தாப்பூகளை கொளுத்துவது வேண்டாம்.

    வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்றி அதனை அணைத்து விட வேண்டும்.

    சாலைகளில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் நடமாட்டத்தை கவனித்து பட்டாசு வெடித்தல் வேண்டும். யாரேனும் வந்தால் உடனே முன்னெச்சரிக்கையாக சைகை செய்து அவர்களை அங்கேயே தூரமாக நிற்க செய்திட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது குனிந்து முகத்தை அதன் அருகில் கொண்டு சென்று பற்ற வைக்க கூடாது. நீளமான குச்சி ஊதுபத்திகள் அதிகம் பயன்படுத்திடல் வேண்டும்.

    முதலுதவி மற்றும் பாதுகாப்பபு நடவடிக்கைகள்

    பட்டாசுகள் எதிர்பாராவித மாக அதிகபடியாய் வெடித்து விபத்து ஏற்படின் வாளியில் உள்ள தண்ணீர் மற்றும் மணலை கொட்டி அணைத்திட வேண்டும்.

    நமது கால், கைகளில் ஏதேனும் தீப்பட்டு விட்டால் உடனே தண்ணீரை ஊற்றி அதனை குளிர்ச்சி படுத்திவிட்டே பின் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    கண்கள் மீது ஏதும் தீப்பொறி பட்டு விட்டால் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும். மெல்லிய ஆடைகள் அணிவதை தவிர்த்து கனமான ஆடைகள் அணிவது மிகுந்த நன்மையளிக்கும்.

    பெரும்பாலும் தீபாவளி சமயத்தில் வீடுகளின் ஜன்னல் களை மூடியே வைத்திருப்பது நல்லது. ஏனெனில் உயர சென்று வெடிக்கும் வெடி, ராக்கெட் போன்றவை தவறுதலாக வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.

    விளக்குகள் ஏற்றி வைத்திருப்பின் அதன் அருகே துணிகள் மற்றும் திரை சீலைகள் படாமல் பார்த்து கொள்ளவும். குழந்தைகள் பட்டாசு வெடித்து முடித்ததும் கைகளை நன்றாக கழுவிவிட சொல்லவும். பட்டாசுகளில் இரசாயன துகள்கள் கைகளில் பட்டு ஓவ்வாமை ஏற்படவும், உணவுகளோடு சேர்ந்து உடலுக்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே தீபாவளியின் போது பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்போம். மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
    தலைநகர் டெல்லியில் இன்று காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியதால் பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். #DelhiPollution
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும்  நிலையில், டெல்லியில் இன்று காலை காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு மிக மோசம் என்ற அளவில், 345 என்ற அளவிற்கு மாசு அதிகரித்தது. இது பாதுகாப்பான அளவைவிட 14 மடங்கு அதிகம்.

    இந்த காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, அதிகாலை நேரத்தில் பனியைப்போல காற்று மாசு மூடியதால் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். பலர் முகமூடி அணிந்து சென்றனர். சாலைகளில் புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். நாளை பட்டாசு வெடிக்கும் சமயத்தில் இதைவிட மாசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



    மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (காற்று தர குறியீட்டு எண்) அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 மிக மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது. #DelhiPollution
    தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.
    சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், 'தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.

    அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், 'தீபாவளி திருநாளில் மட்டும்...எண்ணையில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய், பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

    எனவே தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.

    அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நீராடுவது மிகவும் நல்லது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நரக சதுர்த்தி தினத்தன்று சிலர் கன்னியா லக்ன காலத்தில் நீராட விரும்புவார்கள். அத்தகைய விருப்பம் உள்ளவர்கள் அதற்குரிய எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.



    கங்கா குளியல்

    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாட வேண்டிய பண்டிகையே தீபாவளித்திருநாள். அன்று அதிகாலையில் (சுமார் 5.30 மணிக்கு முன்பாக) அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புதிய ஆடைகள் உடுத்திக் கொண்டு பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் பூஜை முதலியவற்றைச் செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    நரகாசூரனின் தாயார் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று நரகாசூரனை அழித்த ஸ்ரீ மகாவிஷ்ணு தீபாவளி அன்று இவ்விதம் செய்பவர்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கூறினார். மேலும் தீபாவளி அன்று அதிகாலையில் சந்திரன் இருக்கும் போதே முறையாக நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் ஏற்படாது.

    இன்று மட்டும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், தண்ணீரில் கங்காதேவியும் வாசம் செய்வதால் அனைவரும் அன்று வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். குளிக்கும்போது அபாமார்கம் என்னும் நாயுருவிச் செடியை மூன்று முறை தலையைச் சுற்றி தூர எறிந்து விட வேண்டும்.

    எண்ணெயை காய்ச்சி தேய்த்து குளியுங்கள்

    தீபாவளியன்று தேய்த்துக் குளிக்க வேண்டிய எண்ணெயை, முதல் நாளே சிறிது அரிசியும் கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். (ஓமத்திற்குப் பதில் மிளகு சேர்ப்பவர்களும் உண்டு). புராண காரணம் எதுவும் இல்லை என்றாலும் அதிகாலையில் அதுவும் குளிர் காலத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் ஜுரம் போன்ற எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணெயை காய்ச்சியும், நீரை சூடுபடுத்தியும் குளிக்க வேண்டும் எனச் சொல்லி வைத்துள்ளனர்.

    அதே சமயம் அரிசி மகாலட்சுமியின் அம்சம். எனவே அதனை எண்ணெயில் இட்டு காய்ச்சும் வழக்கம் வந்தது என்று சொல்வார்கள். ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இரண்டுமே முக்கியம் என்பதால் அதுவே கங்காஸ்நானத்தின் தத்துவமாக மாறிவிட்டது.
    மனிதனாக வாழ்வோம்; ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaduraiAadheenam #Diwali
    மதுரை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான் வரும். நிலையாமை என்ற இவ்வுலகில் அன்புடன், பண்புடன் வாழ வேண்டும்.

    மனித வாழ்க்கை ஒரு பெரிய மலையை போன்று, உயரமான, நிறைய படிக்கட்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட படிக்கட்டுகளை மிகவும் கஷ்டப்பட்டு, நிதானத்துடனும், பொறுமையுடனும் ஏறினால் அங்கே ஜோதியை- தீப ஒளியை காணலாம். ஒளிமயமான வாழ்வை பெற முடியும்.

    பதவி வரும்போது, பணம் வரும்போது நாம் இதற்கு முன்னால் எப்படி இருந்தோம்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பணிவும், பண்பும் மலரும். எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நன்மையே செய்ய வேண்டும். நன்மை செய்ய இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். அது நன்மை செய்வதற்கு சமம்.

    எந்த துறையானாலும் அங்கே உழைப்புக்கும், தொண்டுக்கும், தியாகத்திற்கும் உரிய மரியாதையை, சிறப்பை வழங்கிட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உழைப்பு, தியாகம், தொண்டு இந்த வாசல்கள் அடைக்கப்பெற்றுவிடும். இதுவே இயற்கை நியதி. தினசரி தியானம் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானது. மனிதனாக வாழ்வோம். ஒளிமிக்க வாழ்வை பெறுவோம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #MaduraiAadheenam #Diwali
    தீபாவளி தினத்தன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார். #Diwali #PMModi
    புதுடெல்லி:

    தீபாவளி தினத்தன்று ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு செல்வதை பிரதமர் மோடி வழக்கத்தில் வைத்துள்ளார்.

    இந்த ஆண்டு அவர் கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார்.

    தீபாவளி தினத்தன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத்துக்கு செல்வார் என்று தெரிகிறது. கேதார்நாத் சிவாலயம் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதிக்கரையோரத்தில் அமைந்துள்ளது.



    இந்த சிவாலயம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். எனவே இங்கு சிறப்பு வழிபாடுகளை செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    கேதார்நாத் ஆலயம் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி பண்டிகை வரையே திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மற்ற நாட்களில் கடும் குளிர் நீடிக்கும் என்பதால் அங்கு பக்தர்கள் செல்ல மாட்டார்கள்.

    கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழை-வெள்ளம் காரணமாக கேதார்நாத் ஆலயம் சேதம் அடைந்தது. பிறகு சீரமைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீட்டர் உயரத்தில் இருக்கும் கேதார்நாத் ஆலயம் பாண்டவர்கள் வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்ட பிறகே மகாபாரத போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

    இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இந்த தலத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகளை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Diwali #PMModi

    தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.
    தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.

    சுபம் கரோதி கல்யாணம்
    ஆரோக்கியம் தன ஸம்பதாம்
    மம புத்தி ப்ரகாசய
    தீபம் ஜோதி நமோஸ்துதே.
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.
    தீபாவளி தினத்தன்று வீட்டில் மட்டுமின்றி கோவில்களுக்கு சென்று தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பலன்களை பெற முடியும்.

    பொதுவாக செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாலையில் கோவிலில் விளக்கு ஏற்றி வருவது நல்லது. நெய்தீபம் ஏற்றினால் கிரகதோஷம் நீங்கும்.
    வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் நடைபெறும் மற்றும் வியாபாரம் நன்கு நடைபெறும், கிரகதோஷங்கள் நீங்கும்.

    எண்ணெய் தீபம் ஏற்றினால் அஷ்டமத்து, ஏழரைச்சனி, செவ்வாய் தோஷம், ராகு, கேது பீடை அகலும். மனசஞ்சலம் இருக்காது. குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்றி விளக்கின் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சொத்து வாங்கலாம். கடன் தீரும்.

    நெய்தீபம் ஏற்றினால் பாவம் நீங்கும், வேலை கிடைக்கும். விநாயகருக்கு விளக்கேற்றினால் கேது தோஷமும் காரியத் தடைகளும் நீங்கும். சிவாலய தீபம் கண் நோயைத் தீர்க்கும். சவுபாக்கியம் கூடும்.

    தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றினால் படிப்பு நன்றாக வரும். பிரயாணத்தில் இடைஞ்சல் வராது. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் ஒவ்வொரு திருவாதிரை அன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, அதனால் ஏற்படும் பலனை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் கோவிலுக்கு நல்ல எண்ணெய் நம்மால் முடிந்த அளவு வாங்கிக் கொடுக்கலாம். நிறைய கோவில்களில் தீபம் ஏற்ற இயலாத நிலைமையில் உள்ளது. அதுபோன்ற கோவில்களுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுப்பது நம்முடைய குடும்பத்திற்கே நல்லது.

    தீபம் எப்படி கோவிலுக்கு வெளிச்சம் கொடுக்கிறதோ அதுபோல நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். கோவிலுக்கு நெய், நல்ல எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் போது நெய், எண்ணெய் மட்டும் வாங்கிக் கொடுக்க கூடாது. திரியும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

    ஆன்மீகச் சிந்தனையில் முதலில் வீட்டில் அந்த சூழ்நிலையை உருவாக்குவது முக்கியம். அதிகாலை வேளையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டால் அங்கு லட்சுமி தாண்டவமாடுவாள் என்பது ஐதீகம். கோலத்தைச் சுற்றி செம்மண் பூசினால் பகவானையும் தாயாரையும் நம் வீட்டுக்கு அழைக்கிறோம் என்பது பொருள். அரிசி மாவில் கோலமிடுவதன் மூலம் எறும்புகளுக்கு உணவு கிடைக்கிறது. இதனால் பெரும் புண்ணியம் ஏற்படும். இவ்வாறு புண்ணியம் தரும் கோலத்தை வீட்டிலுள்ள குடும்பத்தலைவிகள் அல்லது பெண் குழந்தைகளே போட வேண்டும். வீட்டு வேலையாட்களை கோலம் போடச் சொல்லக்கூடாது.

    வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜையின்போது திருவிளக்கு ஏற்றி வழிபடுவது என்றும் இறைவனின் துணையுள்ள நன்மை தரும் தூய சக்தியை வீட்டில் வரவழைக்க ஏதுவான முக்கிய வழியாகும்.

    திருவிளக்கு அசையாமல் எரியும்போது அதை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தால் சஞ்சலமுள்ள மனது நிலைப்படும். தீப ஒளியைப் பார்ப்பது ஒரு வகை ‘குட்டி தியானம்‘ என்றால்கூட மிகையாகாது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையில்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல்’ நேரம் என்பர்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

    திருவிளக்கு மும்மூர்த்தி உருவம் என்று கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பகுதி பிரம்மன் என்றும், நடுத்தண்டாகிய மத்திய பகுதி விஷ்ணு என்றும், அகல் பகுதி சிவன் என்றும், அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன் என்றும், சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீட்டுக்கு வீடு ஐந்து திரி இரட்டைத்திரி நான்கு திரி ஒற்றைத்திரி என அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப விளக்கேற்றுகிறார்கள். திருவிளக்கை ஏற்றினால் வீட்டில் துஷ்ட சக்திகள் அணுகாது என்பது பழங்கால நம்பிக்கை. அறிவியல் ரீதியாக விளக்கெரிக்க நல்லெண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    ஏனெனில் இதிலிருந்து பரவும் மணத்தில் இரும்புச் சத்து இருக்கிறது. செம்பு, வெள்ளி, அலுமினியம் ஆகிய வகை விளக்குகளை ஏற்றும்போது மனித உடலில் எந்த உலோகத்தின் பற்றாக்குறை இருக்கிறதோ அது ஈடுகட்டப்படுகிறது என்பதும் ஒரு நம்பிக்கை.
    மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவர் மனைவி மலர், மகன் ஜெயக்குமார்.

    இவர்கள் 3 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக “கந்த சுவாமி” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினர்.

    350, 500 மற்றும் 750 என மூன்று வகையான மாதாந்திர சீட்டு நடத்தி 12 மாதங்களுக்கு பிறகு தீபாவளிக்கு முன்பு தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு கொடுப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    அவர்களிடம் மதுராந்தகம், திண்டிவனம், அச்சிறு பாக்கம், சித்தாமூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு பணம் கட்டி வந்தனர்.

    இந்த சீட்டுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. 2 மாதத்திற்குள் தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்.

    ஆனால் இதுநாள் வரை வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பொருட்களும் வழங்கப்படவில்லை. இதுபற்றி வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சங்கர் குடும்பத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை.

    மேலும் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது. இதனை அறிந்த சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு மதுராந்தகத்தில் உள்ள சங்கர் வீட்டை முற்றுகையிட்டு கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சங்கர் குடும்பத்தினரிடம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு கட்டி இருந்தனர். எனவே சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி நடந்து இருக்கும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காததாலும் போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதாலும் விமான பயணத்தை ஏராளமான பயணிகள் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்து விட்டதால் பஸ்களை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். இதனால் அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையும் உள்ளது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர். போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதால் விமான பயணத்தை ஏராளமானோர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடிக்கு 5 முறையும் மதுரை-10, திருச்சி-6, கோவை-14, சேலம்-2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    தற்போது இந்த விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த விமானங்களிலும் டிக்கெட்டுகள் இல்லை.

    சில விமானத்தில் மட்டும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் உள்ளன. அவை ரூ.19 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதிலும் சிலர் பயணம் செய்கிறார்கள்.

    எனவே வரும் பண்டிகை காலங்களில் பஸ், ரெயிலில் செல்வதை விட விமான பயணத்தை பெரும்பாலானோர் தேர்வு செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    நரகாசூரன் யார் என்பது பற்றியும், தீபாவளிக்கும், நரகாசூரனுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்தும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பூமாதேவிக்கு சுசீலன் என்னும் ஒரு மகன். கெட்ட சகவாசத்தால் கெட்டவனாகி உலகத்தைத் துன்புறுத்தினான். தவம் செய்து பிரம்மாவிடம் மரணமற்ற தன்மையைக் கேட்டு பிரம்மா அதைத்தர மறுத்ததால், வாயுவாலும் பிருத்திவீயாலும் தனக்கு மரணம் கூடாது என்னும் வரனைப் பெற்றான்.

    நரகத்துக்கு காரணமான ஏராளமான அதர்மச் செயல்களை அவன் செய்து வந்ததால் நரகாசூரன் என்றே அவன் அழைக்கப்பட்டான். ஒரு சிலர் அவன் தாய் மாதேவியை துர்விருத்தையுடைவள் எனப்பேச அதைக் கேட்டு கோபமடைந்த நரகாசூரன், உலகில் ஒரு பெண் கூட சுத்தமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்து தனது பலத்தால் தேவர், மனிதர், கந்தர்வர் என அனைத்துப் பெண்களையும் அபகரித்து பிராக்ஜோதிசபுரம் என்னும் தனது நகரத்தில் ஜெயிலில் அடைத்து வைத்தான். அதனால் அந்தப் பெண்கள் அனைவரும் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார்கள்.

    மேலும் நரகாசூரன் வைகுண்டம் சென்று லட்சுமியை அபகரிக்க முயற்சிக்க மகாலட்சுமி அக்னியிலும், கங்காதீர்த்தத்திற்குள்ளும் பிரவேசித்து விட்டாள். பிறகு பகவான் கிருஷ்ண அவதாரம் செய்து ஆச்வயுஜ மாத கிருஷ்ணபட்ச சதுர்தசி அன்று இரவில் மறுநாள் விடியும் முன்பாக பிரம்ம முகூர்த்ததில் நகரகாசூரனைக் கொன்றார். அந்த நாள்தான் நரக சதுர்தசி நாள். அனைத்துப் பெண்களுக்கும் விடுதலை கிடைத்தது.

    ஆகவே தான் அன்று தீபத்தில் மகாலட்சுமியை ஆவாரகனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்னி சம்பந்தப்பட்ட சூடேற்றப்பட்ட வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    தீபாவளி அன்று வைகுண்டத்திலிருக்கும் மகாலட்சுமி தானாகவே பூலோகத்திற்கு (பூமிக்கு) வந்து தீபஜுவாலை (தீபச்சுடர்), திபதைலம் (நல்லெண்ணெய்), தீர்த்தங்கள் ஆகியவற்றில் சந்தோஷத்தோடு வசிக்கிறாள்.

    தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
    தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த பூஜைகள் விபரம் வருமாறு:-

    மகாலட்சுமி பூஜை- தீபாவளி திருமகளின் அவதார நாள் என்பதால், அன்று மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது. மகாலட்சுமி படத்தினை அலங்கரித்துவைத்து, தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதியுங்கள். மகாலட்சுமி துதிகளைச் சொல்லுங் கள். மனதார வேண்டுங்கள. திருமணம் கைகூடும். மங் களங்கள் சேரும். இதன் பயனாக கூடுதலாக லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

    குபேர பூஜை : செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள். குபேரன் படத்தின் இருபுறமும் விளக்கேற்றி வைத்து, இனிப்பு பலகாரஙகளை நிவேதனம் செய்து வணங்குங்கள். செல்வமகள் உஙகள் இல்லம் தேடி வருவாள்.

    கேதார கவுரி பூஜை : பரமசிவன் பார்வதி படத்தை வைத்து வழிபட வேண்டிய பூஜை அர்த்த நாரீஸ்வரர் படத்துக்கு கூடுதல் சிறப்பு. இதனால் தம்பதியர் ஒற்றுமை கூடும். இல்லற வாழ்வு சிறக்கும்.

    கோ பூஜை : பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.

    சத்யபாமா பூஜை : பூமா தேவியின அம்சமான சத்யபாமாவே கிருஷ்ணருடன் சென்று நரகாசுரனை அழித்தாள். எனவே சத்யபாமாவை வீரலட்சுமியாக பாவித்து வழிபடும் பழக்கம் வட இந்தியாவில் உளளது. வாழ்வில் வரும் தடைகள் யாவும் இந்த பூஜை யால் நீங்கும்.

    ஹரிஹர பூஜை : கிருஷ்ண பட்ச சதுர்த்தி, சிவனுக்குரிய மாத சிவராத்திரி. அன்று இரவு முழுக்க கண்விழித்து இருந்து மறுநாள் நாரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். எனவே சிவ விஷ்ணு வழிபாடு செய்ய ஏற்ற நாளாக தீபாவளி கரு தப்படுகிறது. இந்த வழிபாட்டால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். ஆனந்தம் பெருகும்.

    முன்னோர் வழிபாடு : துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் இல்லத்து இனிமையை இரட்டிப்பாக்கும்.

    குலதெய்வ பூஜை : எத்தனை எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வ வழிபாடே முதன்மையானது. வாழ்வில் நாம் அனைத்து பலன்களையும் பெற குலதெய்வத்தின் ஆசி வேண்டும். எந்த ஒரு பூஜை அல்லது பண்டிகையின் போதும் முதலில் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தைக் கும்பிட வேண்டும்.  குலதெய்வத்தைக் கும்பிட்ட பின் இயன்ற பூஜை, விரதத்தைக் கடைப்பிடியுங்கள். எல்லா நன்மையும் உங்களைத் தேடிவரும்.
    ×