என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபாவளி"
தினம் தினம் நாம் உணவு உண்ணும்போதும் அன்னபூரணியே நமஹ என்று கூறி உணவருந்தினாலே அவள் நமக்கு வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் பசிக்கும்போது தேவையான உணவை தந்து விடுவாள். உணவாய் உண்ணும் எல்லா பொருள்களை விளைவிப்பதும், அதனை உயிர்ப்பிக்க ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. அந்த அன்னபூரணியை தீபாவளி நாளன்றும் அதன்முன், பின் ஆகிய மூன்று நாட்கள் காசியில் தங்கமயமாய் காட்சி தருபவளை வணங்கிட வாழ்நாள் முழுவதற்குமான அன்னத்தை, செல்வத்தை வழங்கிவிடுவாள். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள்.
செல்வ வளங்களை பெற தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது போன்று அன்னபூரணிக்கும் விரதமிருந்து பூஜை செய்திட அள்ள அள்ள குறையாத செல்வங்களையும், அன்னத்தையும், ஞானத்தையும், அன்னபூரணி வழங்குவாள் என ஞான நூல்கள் கூறுகின்றன.
பிட்சாடனார் பசிதீர்க்க அவதரித்த அன்னபூரணி
சிவபெருமானின் ஐந்து தலைகள் போல் தனக்கும் ஐந்து தலைகள் உள்ளது என பிரம்மதேவன் கர்வம் கொண்டார். அதனை தீர்க்க முற்பட்ட சிவன் தன் மனைவி பார்வதிதேவியை வைத்து ஓர் லீலை புரிந்தார். அதன்படி கயிலைக்கு வந்த பிரம்மனை பார்த்து பார்வதிதேவி சிவபெருமான் என நினைத்து வணங்கிட அதனை கண்டு பிரம்மன் கர்வம் கொண்டு சிரித்து விட்டான். இதனை கண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து விட்டார். பிரம்மன் தலை துண்டித்த தோஷத்தால் சிவன் கையிலேயே அந்த கபாலம் ஒட்டி கொண்டது. இந்த தோஷம் போக்க சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அதே நேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கியதற்கு தனக்கு தானே தண்டித்து கொண்டு காசியில் அன்னபூரணியாக அவதரித்து தவம் செய்தாள். இச்சமயம் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்ம கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டாள்.
உணவை அருளும் சக்தி அன்னபூரணி
அன்னை சக்தியும், ஈசனும் ஒரு சொக்கட்டான் விளையாட அதில் ஈசன் வெற்றி பெற்றார். ஆனால் சக்தியோ சிவன் ஏதோ தவறாக ஆடியே தன்னை வெற்றி கொண்டார் என எண்ணி வாதம் செய்தார். ஈசனோ “எல்லாம் மாயை. இதில் இந்த ஆட்டமும் மாயை” என்று கூறி, எனவே வெற்றி, தோல்வி குறித்து அதிக கலக்கம் கொள்ள வேண்டாம் என்று கூறினார். தேவியோ எல்லாம் மாயை எனில் உயிர்களின் இயக்கமும் மாயையா? என வினவ, ஆமாம் என்றார் சிவபெருமாள். அதன் காரணமாய் சக்தி தேவி காசி நகரில் வந்து தவமியற்றினாள். தன் பணியை விட்டு பராசக்தி தவமியற்றியதால் உலகத்தில் உயிர்கள் பசியால் வாடின. உலக மக்களின் துயரம் போக்க ஈசன் தாமே காசிக்கு பிச்சாடனார் ஆக சென்று பிச்சை எடுத்து பசியாறினார். அப்போதுதான் சிவபெருமான் “உலகம் மாயைதான். எனினும் உயிர்கள் வாழ ஆதார சக்தி உணவு தேவை. அதனை அருள்பவள் சக்தியே” என்று தன் தவறை உணர்ந்து கூறினார். அது முதல் காசியில் அமர்ந்து அன்னகூடம் அமைத்து சகல ஜீவராசிகளின் பசிப்பிணி போக்குகிறாள் அன்னதயாபரி.
நவரத்ன சிம்மாசனத்தில் அன்னபூரணி
நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. தீபாவளியன்று அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேர் திரும்ப வரும்போது ஒரு லட்டு கூட இருக்காது. அன்னபூரணியை தீபாவளியன்று தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். அதுபோல் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிடலாம். அன்னபூரணி அனைத்து நலன்களையும் தருவாள்.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ்தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுகிறது.
பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக் கடைகளாக ஜவுளிக்கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி... விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. தீபாவளி பண்டிகைக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பொருட்களை வாங்கி செல்கின்றனர். வெளியூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் தீபாவளிக்காக முன்னதாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு செல்வதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதே போல் அரியலூர் புதுமார்க்கெட் வீதி, எம்.பி.கோவில் தெரு, சின்னகடை தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஜவுளி எடுப்பதற்காகவும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கடைவீதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் அரசியல் நட்சத்திரம் என்ற விருதை அமெரிக்க நிறுவனம் வழங்கியது. விருது பெற்றுவிட்டு டாக்டர் தமிழிசை நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.
கட்சி நிர்வாகிகள் நரேந்திரன், எம்.என்.ராஜா, வினொஜ் செல்வம், தாமரை மணிகண்டன், காளிதாஸ், வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் தங்கமணி, முத்துக்கண்ணன், ஜெய் சங்கர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், மோகன ராஜா, பாஸ்கர், தசரதன் உள்பட பலர் சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
விவேகானந்தரின் மண்ணில் இருந்து அவருக்கு பெருமை சேர்த்த மண்ணில் சென்று விருது பெற்றது மகிழ்ச்சி. இந்த விருதை பா.ஜனதா தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் சமர்பிக்கிறேன். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இல்லை.
அமெரிக்காவில் நம் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நேர்மறையான அரசியலை அவர்கள் விரும்புகிறார்கள். உலக அளவில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருகிறது.
ஒலியும், ஒளியும் சேர்ந்தது தான் தீபாவளி பண்டிகை. இதில் ஒலிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொழிலையும், மகிழ்ச்சியையும் பாதிக்கும். பண்டிகையை பண்டிகையாக கொண்டாட விட வேண்டும். தண்டனை விழாவாக்க கூடாது. வேண்டிய தீபாவளியை பயந்து பயந்து கொண்டாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்க கூடாது.
ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் மத்தியில் கூடுதல் நேரம் பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் என்று பீதியை ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளது. இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாக உள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் தீபா உள்பட பல பிரபலங்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.
இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.
ஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
தீபாவளி பண்டிகைக்கு நாளை முதல் நாளை மறுநாள் வரை பட்டாசு வெடிப்பார்கள். இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்கள்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக அளவில் பட்டாசு வெடிப்பார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அமல்படுத்தப்படும்.
அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்கள். #Diwali #Crackers #ChennaiPolice #SC
சமண மதத்தின் தீபாவளி
சமண மதத்தினரின் முக்கியமான பண்டிகை தீபாவளி. மகாவீரர் நிர்வாணம் அடைந்தது அல்லது மகாவீரர் மோட்சம் அடைந்ததை குறிக்கும் வகையில் சமண தீபாவளி கொண்டாடப்படுகிறது. பீகாரின் பாவபுரியல் மகாவீரர் மோட்சத்தை அடைய முற்பட்டார். மகாவீரர் அமாவாசையன்று பரி நிர்வாணம் அடைய முற்பட்டார். அந்த அமாவாசை இருளில் மகாவீரரின் அறிவு ஒளி பிரகாசம் அடைந்தது. “தீபாளிகா” என்றவாறு கொண்டாடப்பட்ட அதன் அர்த்தம் உடலை விட்டு ஒளி வெளியேறுதல் என்பதாம். தீபாளிகா என்பதே தீபாவளி என மாறிவிட்டது. ஜெயின் சமூகத்தினர் ஜெயின் புத்தாண்டு எனப்படும் பிரதிபதா என்பதும் தீபாவளியன்று வணிக நிறுவனங்களில் புதிய கணக்குகளை தொடங்குகின்றனர்.
தீபாவளியன்று ஜெயின் சமூகத்தினர் கொண்டாட்டம் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளன. ஆம் ஜெயின் சமூகத்தினர் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கமாட்டார்கள் அகிம்சை, அமைதி என்பதை வலியுறுத்தும் சமணத்தில் சத்தம் மிகுந்த பட்டாசு வெடிப்பு நிகழாது. அனைத்து ஜெயின் கோயில்களிலும் மகாவீரரை வணங்கி வழிபட்டபிறகு “நிர்வாண் லட்டு” என்பது வழங்கப்படும். மேலும் ஜெயின் ஆலயம், அலுவலகங்கள், கடைகளில் மின் விளக்குகள் எரிய விடப்படும். சுவதம்பர் ஜெயின் பிரிவினர் இரண்டு நாட்கள் விரதமிருந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்வர்.
சீக்கியர்களின் தீபாவளி
சீக்கியர்களின் தீபாவளி கொண்டாட்டம் என்பது சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான, குரு ஹர்கோயிந்த் மற்றும் இதர 52 நபர்களையும் விடுதலை செய்ததை கொண்டாடும் வகையில் அமைகிறது. “பந்த் சோர் தீபாவளி” என்ற பெயருடன் கொண்டாடப்படும். இந்த தீபாவளியின்போது அமிர்தசரஸ்-ல் உள்ள தங்க கோயில் மற்றும் அனைத்து குருத்வாராக்களிலும் வண்ண விளக்குகள் ஒளிர விடப்படும். குருத்வாராக்களில் தியானம், பிரார்த்தனை போன்றவைகளுடன் இனிப்பு மற்றும் உணவு பரிமாற்றம், உறவினர்களுக்கு பரிசளிப்பது போன்றவாறு தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொது இடங்கள் மற்றும் குருத்வாராக்களில் கண்கவர் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.
புத்த மதத்தினரின் தீபாவளி
புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். அதாவது மாவீரர் அசோகர் புத்த மதத்திற்கு மாறிய நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இவர்களின் தீபாவளிக்கு “அசோக் விஜயதசமி” என்று பெயர். தீபாவளியன்று மந்திரங்கள் மற்றும் வேதம் ஓதுதல் போன்றவை அசோகரை நினைவுபடுத்தும் வகையில் ஓதப்படுகிறது. நேவார் புத்தமதத்தினர் லட்சுமி தேவியை வணங்கும் வகையில் தீபாவளி கொண்டாடுகின்றனர்.
புராணங்களில் தீபாவளி
அறுவடை திருநாள் என்றவாறே புராணகாலங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது பத்மபுராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இரண்டுமே சூரியனை நினைவுப்படுத்தும் வகையில் விளக்குகளை ஒளிர செய்து வணங்குவது என்பதே. 7-ம் நூற்றாண்டில் நாகநந்தா என்ற நாடகத்தில் தீப பிராபதி உத்சவா என்றபடி தீபாவளி பற்றி குறிப்பு உள்ளது. இதனை ஹர்ஷ மகாராஜா குறிப்பிட்டுள்ளார். 9-ம் நூற்றாண்டில் தீபமாலிகா என்றபடி தீபாவளி கொண்டாடபட்டதாக காவிய மிம்சா-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த பெர்ஷிய நாட்டு அல்புருனி எழுதிய குறிப்பில் கார்த்திகை மாத பெளர்ணமி தினத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது என குறிப்பிடுகிறார். முகலாயர்களின் காலகட்டத்திலும் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அக்பர் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக குறிப்புகள் உள்ளன. கல்வெட்டுகள் மற்றும் செம்பு பட்டயங்கள் போன்றவைகளிலும் தீபாவளி திருநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தீபாவளி கொண்டாட்டத்தில் அமைதியான தியானம், பிரார்த்தனை போன்றவைகளுடன், பட்டாசு போன்ற அதிர் வெடி கொண்டாட்ட நிகழ்வுகளும் கலந்தே நடைபெற்று வருகின்றன.
மகாபலி தீபாவளி
பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. மகாபலி முடிசூடிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிறது. அன்று ஏற்றப்படும் தீபம், ‘எமதீபம்’ என்று அழைக்கப்படும். வாமன அவதாரம் எடுத்து நாராயணர், மகாபலி சக்கரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு ஞான திருவடி சூட்டிய நாளே தீபாவளியாகும்.
மகாலட்சுமியும், தீபாவளியும்
பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி தன் மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திருமார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள், எம்பெருமானை மணந்த நாள் ‘தீபாவளி’ திருநாள்.
பார்வதிதேவி விரதபலன்
கவுதம முனிவர் கூறியபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம் இருந்தார். தீபாவளி நாளில் உமாதேவிக்கு காட்சி கொடுத்த பரமேஸ்வரன் பார்வதி தேவிக்கு சரிபாதி உடம்பைக் கொடுத்தார் என்பது புராண வரலாறு.
மராட்டிய தீபாவளி
மராட்டிய மன்னனான வீரச்செயல்களில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி, தன்னுடைய விரோதிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி. அதன் நினைவாக பொதுமக்கள் தங்களின் வீட்டு வாயில்களில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை கட்டுகிறார்கள். இந்த கோட்டை கட்டும் நிகழ்ச்சியில் சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொள்வர். தீபாவளி தினத்தன்று மும்பையில் மண் கோட்டை கட்டப்படுவதை இன்றும் காணலாம்.
அசோக தீபாவளி
சாம்ராட் அசோகர் தன்னுடைய திக் விஜய யாத்திரையை நிறைவு செய்து விட்டு, தனது நாட்டிற்கு திரும்பிய நாள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளே தீபாவளி.
ஜைனர் தீபாவளி
ஜைனர்களின் குருவான மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளி. அந்த ஞான ஒளி மறைந்த தினத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர்.
ஜப்பானில் தீபாவளி
முன்னோர்கள் அனைவரும் தம்தம் சந்ததியினருக்கு ஆசி வழங்கும் தினமாக இந்த தீபாவளி பார்க்கப்படுகிறது. முன்னோர்களுக்காக விளக்குகளை ஏற்றி வைத்து, அவர்களை பூமிக்கு வரவேற்கும் வழிபாடாக இது கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் இதுபோன்று தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. ‘டோரோனாகாஷி’ என்பது தான் ஜப்பானிய தீபாவளிக்கு பெயர்.
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முதல் முறையாக இன்று சென்னையில் உள்ள 12 ஆதரவற்ற பள்ளிகளை சார்ந்த 517 மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து இன்று தீபாவளியை கொண்டாடினர்.
இதற்காக 12 பள்ளிகளிலிருந்து 517 மாணவ, மாணவிகள் கவர்னர் மாளிகைக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கவர்னர் மாளிகையில் உள்ள குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம், பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் அரங்கம், மான்கள் சுற்றித் திரியும் பரந்த புல்வெளி, வனப்பகுதி மற்றும் போலோ விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இங்குள்ள புல்வெளியில் சுற்றித்திரியும் பல வகைகளான மான்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றனர். மேலும், மாணவ-மாணவியர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிடும் வகையில் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டிருந்தன.
பிறகு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து, தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு வந்திருந்த 517 மாணவ-மாணவிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கணக்கிடும் கருவியை (Calculator) பரிசாக வழங்கி தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் என கவர்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNGovernor #Diwali #RajBhavan #RajBhavanDiwali
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்காத மேலாண்மை இயக்குநரை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பரமக்குடி சப்-கலெக்டர் விஸ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், கடலாடி வட்டாட்சியர் முத்துலட்சுமி, துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் விரைந்து சென்று உப்பு நிறுவன திட்ட மேலாளர் விஜயன் மற்றும் தொழிற் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செப்டம்பர் மாத ஊதியம் தொழிலாளர்களின் வங்கி வணக்கில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
போனஸ் தொகை தீபாவளிக்கு முந்தைய நாளுக்குள் வழங்கப்படாத பட்சத்தில் தீபாவளி அன்று தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவதுடன் தொடர்ந்து கதவு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். #Diwali
துளசி தீர்த்தத்தைத் தெளித்து கொண்டால் - மரணபயம் நீங்கும். துளசியை வீட்டில் வளர்த்து வந்தால் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும். தினந்தோறும் துளசியைப் பக்தியுடன் வணங்கிப் பூஜித்தால் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட துளசி - கண்ணனை மணந்த தெய்வப்பெண்.
தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.
தெற்கு கர்நாடகாவில் எல்லா வீடுகளிலும் துளசித் திருமணம் நடைபெறும். வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் நடுவில் திருமணப்பந்தல் மாதிரி பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமைப்பார்கள். மாலை வேளையில் சாளக்கிராம வடிவத்தில் உள்ள கிருஷ்ணரை - பீடத்துடன் தூக்கி வந்து துளசி மாடத்தின் அருகே வைப்பார்கள்.
சாளக்கிராமத்தை வைத்தவுடன் முதலில் கிருஷ்ணருக்குத் தனியாகப் பூஜை நடைபெறும். பின் சாளக் கிராமத்திற்கும், துளசிக்கும் பூஜை செய்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறும். கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருகப் பாடியும், நடனமாடியும், மகிழ்ந்து கொண்டாடி - திருமண நாளை இனிதாக முடிப்பார்கள்.
விழுப்புரம்:
தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 1-ந்தேதி சென்னை உள்பட 24 இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.44 லட்சம் சிக்கியது. நேற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அதிரடி சோதனை நீடித்தது.
உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர். சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தங்கி இருந்த வீட்டுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு குவியல் குவியலாக பட்டாசு பாக்ஸ் மற்றும் புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 120 பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
அதனை தொடர்ந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த நடவடிக்கையை வரவேற்று திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் உள்ள மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை செய்தனர்.
சோதனையின்போது அலுவலகத்தின் நாற்காலிகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.80,200 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்று தெரியவந்தது.
விசாரணை நடந்து கொண்டு இருந்த போது அலுவலக மஸ்தூர் பணியாளர் வெளியே சென்றார். அவரை மீண்டும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்தனர். #Diwali #Vigilancepolice
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்