search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன அவை:

    1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள்.
    2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள்.
    3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள்.
    4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம்.

    5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான 'கல்சா'வை அமைத்த தினம்.
    6. சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள்.
    7. நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள்.
    8. கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.

    9. மாவலிபூஜை செய்யும் நாள்.
    10. வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள்.
    11. ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். (ராமாயண காலத்திற்கு பிறகுதான் தீபாவளி வந்தது. ஆனால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள். ஐப்பசி மாதம் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை, சுக்கிலபட்ச பிரதமை நாள்)
    12. தீபாவளி தினத்தை அரசு விடுமுறை என அறிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடும்படி செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் என அவர் எழுதிய 'அயினி அக்பர்' என்ற நூல் கூறுகிறது.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.

    அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் - லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருந்து வருகிறது.

    நற்பலன் தரும் ஓம் வரைதல்

    தீபாவளிக்கு முதல் நாள் தந்தராஸ் பூஜை மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்து விடுவர். அதாவது வீட்டின் வாசல் நுழைவு பகுதியில் அழகிய ஓம் எனும் எழுத்தை எழுதுவது பச்சரிசி மாவு மற்றும் மஞ்சள் கலந்து ஓம் எனும் பிரணவ எழுத்தை எழுதிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கு செல்வ வளம் விரைவாக வந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை எழுத அதிகம் செலவாகாது. இதனை பலரும் வீட்டின் முன் தந்தராஸ் நாளில் வரைந்து இருப்பர்.

    சங்கு ஒலிக்கச் செய்தல்:

    தீபாவளி நாளில் வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களை கொண்டு வருமாம். அந்த வகையில் வீட்டில் சங்கு வைத்திருப்பதே சிறந்த பலனை தரும். அந்த சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வேண்டுமாம். பண்டிகையின் போது இந்து குடும்பங்களில் பலர் சங்கு ஊதி இறைவனை வணங்குவர். அதுபோல் தீபாவளி அன்று சங்கு ஒலிப்பதன் மூலம் வீட்டிற்கு நல் வளத்தையும் செல்வத்தையும் அழைத்து வர முடியுமாம். அப்படி வீட்டில் சங்கு இல்லாதவர்கள் தீபாவளி நாளில் புதியதாக வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபட்டு வரலாம். அப்படியில்லையெனில் சங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.

    இறையருள் தரும் கரும்பு வழிபாடு:


    விநாயகர் மற்றும் லட்சுமி பூஜை செய்யும் நபர்கள் அதனுடன் வேருடன் கூடிய கரும்பை வைத்தும் வழிபாடு செய்வர். தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நலன் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகுமாம். கரும்பு விவசாயிகளின் நல்வருவாய் மற்றும் இனிப்பான சுவை மிகுந்தது என்பதால் இதனை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

    தாமரை மலர்களால் அர்ச்சனை:

    மகாலட்சுமியின் விருப்பமான மலர் தாமரை. எனவே தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதற்கு தாமரை மலர்களால் லட்சுமியை அலங்கரிப்பதுடன், தாமரை மலரால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். தாமரை மலர் மாலை அணிவித்து லட்சுமி மந்திரம் ஜெபித்து மகாலட்சுமியை வணங்க அவள் நமக்கு லட்சுமி கடாட்சத்தை வழங்கி விடுவாள்.

    அதுபோல் தீபாவளி நேரத்தில் வீட்டில் லட்சுமி கணபதி மந்திரங்களை வைத்து பூஜை செய்திட ஐஸ்வர்யம் பெருகும். தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு பிராந்திய மக்களும் தங்களுக்கென சில வழிபாட்டு முறைகள், சமய சடங்குகளை செய்து வருகின்றனர். இவற்றில் நமக்கு எது விருப்பமானதோ அதனை செயல்படுத்துவது தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
    தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Diwali
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    இன்று முதல் தீபாவளி பண்டிகை வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் தீபாவளி துணிமணிகள் வாங்க மக்கள் குவிந்தனர்.

    சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு, பாண்டிபஜார் உள்ளிட்ட அனைத்து முக்கிய விதிகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குடும்பம் குடும்பமாக மக்கள் பஸ், ரெயில்களில் பயணம் செய்து இறுதி கட்ட கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 நாட்கள் மழை இல்லாமல் இருந்ததால் தீபாவளி விற்பனை மும்முரமாக இருந்தது. ஜவுளி மட்டுமின்றி வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க தி.நகரை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். சிறிய சிறிய துணிக்கடைகள், பிளாட்பார கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    நகை, ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து உள்ளதால் ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக சாரை சாரையாக தி.நகர் மட்டுமின்றி புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, அண்ணாநகர், பெரம்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தீபாவளி நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள், பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்பதால் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் நகரம் முழுவதும் செய்யப்பட்டுள்ளன. பிரதான வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்த பகுதியான தி.நகரில் மட்டும் 500 போலீசாரும் 100 ஆயுதப் படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள், ஹெலிகேம் மூலமும் பிக்பாக்கெட் திருடர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடை விதியை கண்காணிக்கிறார்கள்.

    பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தாம்பரம், புரசைவாக்கம் போன்ற பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வசதியாக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஆம்னிபஸ்கள், அரசு பஸ்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு சென்றதால் நேற்றிரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வட பழனி 100 அடி சாலை, மதுர வாயல் சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருடர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். பஸ் நிலையம் முழுவதும் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். #Diwali
    மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது.
    ஐப்பசி மாதம் அமாவசைக்கு முந்தைய நாளான 'சதுர்த்தசி'க்கு சிறப்பு உண்டு. இதை 'நரக சதுர்த்தசி' என்பர். அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று எண்ணெயில் அலை மகளும் நீரில் கங்கையும் உறைந்திருப்பர். இந்த நாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் ஏழ்மை அகலும். தூய்மை சேரும் என்கிறது தர்ம சாஸ்திரம். சாதாரண நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஏற்காத தர்ம சாஸ்திரம் இந்த சதுர்த்தசியில் மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை கட்டாயப்படுத்துகிறது.

    நீடாடிய பிறகு எமதர்மராஜனை வழிபட வேண்டும். எமனது பதினான்கு பெயர்களையும் பதினான்கு முறை குறிப்பிட்டு கைகளால் நீரை அள்ளி அளித்தாலே போதுமானது.  

    'சதுர்த்தசி' என்றால் பதினான்கு. சந்திரன் ஒவ்வொரு கலையாகத் தேய்த்து தேய்ந்து அன்று 14-வது கலையோடு மிஞ்சி இருப்பான். முன்னோர் ஆராதனைக்கு சந்திரனின் கலையை வைத்து சிரார்த்த நாளை நிர்ணயம் செய்வோம். சந்திரனும் எமனும் முன்னோர்களை வழிபடும்போது இவர்களையும் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

    சந்திரனின் பதினான்காவது கலையே நீராடும் வேளை. பதினான்கு வடிவில் தென்படுபவன் எமன். ஐப்பசி மாத சதுர்த்தசியில் (14-வது திதி) அதிகாலையில் எண்ணையில் அலைமகளும், நீரில் கலைமகளும் அவர்களுடன் எமதர்மராஜனும் பிரச்சன்னமாவர். இந்த மூன்று பேரும் ஒன்று சேரும் சிறப்பு வேளை அது. வாழ்க்கை செழிக்க பொருளாதாரம் தேவை, இதற்கு அலைமகளின் அருள் வேண்டும். வாழ்க்கையை சுவைக்க துய்மையான மனம் தேவை.

    இதற்கு கங்கையின் அருள் வேண்டும். நரக வேதனையில் இருந்து விடுபட, ஏழைகளுக்கு தீபத்தை கொடையாக அளித்து அவர்களையும் எம வழிபாட்டில் சேர்க்க வேண்டும். புத்தாடை அணிந்து எமனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். ஒளிமயமான வாழ்க்கையைப் பெற அது உதவும். தீபத்தை ஏற்றினால் அறியாமை அகன்று விடும். நரக வேதனையில் இருந்து விடுபட தீபங்களை வரிசையாக ஏற்ற வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

    மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது. நரகாசுரன் துயரத்தில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்த நாள் அது. அன்று துன்பம் விலகியதில் மக்களிடம் மகிழ்ச்சி பொங்கியது. சாஸ்திரமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    மஹாளய பட்சத்தில் உலாவ வந்த நமது முன்னோர்களின் வழியனுப்பு விழாவாகவும் செயல்படுகிறது தீபாவளி. அன்று அவர்களுக்கு வழிகாட்ட தீவட்டி ஏந்த வேண்டும். ஆலயங்களிலும், குடியிருப்புகளிலும் தீபங்கள் மிளிர வேண்டும் என்று பிரம்ம புராணம் கூறும். எனவே சாஸ்திரத்தோடு இணைந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். 
    குன்னூரில் பஸ்சில் இடம் பிடிக்க போலீஸ்காரர் ஜன்னல் வழியாக துப்பாக்கியை போட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மூப்பர்காடு, கொலக்கம்பை, முள்ளிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து வருகிறார்கள். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று மாலை முள்ளிகூர் செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் துண்டு, கைப்பை உள்ளிட்டவைகளை போட்டு சீட் பிடித்தனர். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்ய 2 போலீஸ்காரர்கள் வந்தனர். அதில் ஒருவர் ஜன்னல் வழியாக தனது துப்பாக்கியை சீட்டில் போட்டு இடம் பிடித்தார்.

    இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, பஸ்களில் சீட் பிடிக்க துப்பாக்கியை போடும்போது பயணிகள் அச்சம் அடைந்தனர். சமூக விரோதிகள் துப்பாக்கியை எடுத்துச்சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். போலீசார் இந்த செயலை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினர்.

    போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். #Diwali
    சென்னை:

    தீபாவளியையொட்டி தமிழக அரசு 5-ந் தேதியை (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்ததால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பெரும்பாலானோர் 2-ந் தேதி (அதாவது, நேற்று) சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், 5 தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

    அதன்படி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல், தாம்பரம், ஊரப்பாக்கத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதாலும், மற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததாலும் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.



    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக நேற்று ரெயில்களிலும் பலர் பயணம் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான திருச்செந்தூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, அனந்தபுரி, ராமேஸ்வரம், நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று பிற்பகலிலும், இரவிலும் சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    ரெயில்கள் நடைமேடைக்கு வந்ததும் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளை தவிர, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றினார்கள்.

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாமல் இருப்பதற்காக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். #Diwali
    பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த முடிவை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். #TNBusStrike #TNBus #TNBusStrike
    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் கொடுக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி, தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்யப்பட்ட 86 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
     
    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பாக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 22, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது.

    இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முடிவை இன்று பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் வாயிற் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், 12 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர், பொதுமக்களின் நலன்கருதி போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். #TNBusStrike #TNBus #TNBusStrike
    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 16 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. #Omnibuses

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண் டாட செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ், ரெயில்கள் விடப்பட்டுள்ளன. ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் 1100 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

    பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனர்.

    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரை சாலை சுங்கசாவடி, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்கிறார்கள்.

    இன்று (வெள்ளிக் கிழமை) 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்கின்றனர். 4 நாட்களிலும் 4 குழுக்கள் வீதம் 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் கட்டணம், பெர்மிட் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுகுறித்து அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் முத்து கூறியதாவது:-

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். 4 பஸ் நிலையங்களிலும் 4 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பஸ் சிறை பிடிக்கப்படும். ஆன்லைனில் அதிக கட்டணம் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.

    அதனால் பஸ்சில் பயணம் செய்யும் போது அதிக கட்டணம் வசூலித்தது குறித்து புகார் தெரிவித்தால் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மேலும் பெர்மிட் இல்லாமலும் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். #Omnibuses

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்னர்.

    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின. சென்னை உள்பட 24 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மொத்தம் ரூ.44 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ரூ.80 ஆயிரமும், தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ரூ.52,600-ம் சிக்கியது.

    சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஒருவரின் அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணம் பிடிபட்டது. ஸ்ரீபெரும்புதூர் பத்திரபதிவு அலுவலகத்தில் ரூ.28,500 பணம் கைப்பற்றப்பட்டது.

    வேலூரில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் பணம் கிடைத்தது. இதே போல தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் பணமும், தென்காசி ஆர்.டி.ஓ. ஆபிசில் ரூ.87 ஆயிரமும் சிக்கியது.

    மேட்டூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்ததும் யாரும் அவரவரிடத்தில் அப்படியே நிற்க வேண்டும் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இடைத்தரகர்கள் தங்களிடம் இருந்த பணத்தை ஜன்னல் வழியாகவும், அலுவலக மேஜையின் கீழேயும் வீசி எறிந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தை கைப்பற்றினர்.

    ரூ.84ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அலுவலக ஊழியர் 8 பேர், இடைத்தரகர்கள் 25 பேரிடமும் 6 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு தோறும் தங்கள் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழனி கோவில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது.

    இந்த முகாமில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேனி வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.14 ஆயிரத்து 680 பறிமுதல் செய்யப்பட்டது.


    கடலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் கணக்கில்வராத ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புரோக்கர்கள் பையில் வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.

    விழுப்புரம் பத்திரபதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் 4 பேர் தங்கள் பைகளில் 88 ஆயிரத்து 140 ரூபாய் வைத்திருந்தனர். அந்த பணத்துக்கு அவர்கள் உரிய கணக்கு காட்டவில்லை. இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்யவும், ஓட்டுனர் உரிமம் பெறவும் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். அவர்களிடம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தைவிட கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

    அதன்பேரில் அங்கு நடந்த சோதனையில் ரூ.44 ஆயிரத்து 500 பிடிபட்டது. பரிசு பொருட்களும் சிக்கின.

    வேலூர்ஆவின் பொதுமேலாளர் முரளிபிரசாத் காரில் இருந்து ரூ.11 லட்சமும், செயல் பொறியாளர் சேகரிடம் ரூ.2.85 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தோட்டத்தில் வீசப்பட்ட ரூ.1 லட்சம் பணமும் சிக்கியது இதன் மூலம் இங்கு 14.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொது மேலாளர் முரளிபிரசாத், சேகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.10 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 24 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தீபாவளி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்னர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனையில் அரசு அலுவலகங்களில் கைமாற இருந்த லட்சக்கணக்கான லஞ்ச பணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன. #GingeeWeeklyMarket
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் விளை பொருட்கள் விற்பனைக்கு வருவதுடன், ஆடு, மாடு விற்பனையும் அமோகமாக நடைபெறும்.

    தீபாவளி பண்டிகையையொட்டி செஞ்சியில் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலையிலேயே வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிய தொடங்கினர்.

    சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, திருவண்ணாமலை, வேப்பூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். செஞ்சிப்பிபகுதி மட்டுமின்றி இப்பகுதியை ஒட்டியுள்ள கீழ்பெண்ணாத்தூர், சேத்பட், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு ஆட்டின் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரை விலை போனது. இது வழக்கத்தைவிட கூடுதலாகும். இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன.
    தீபாவளி பண்டிகையில் தீவிபத்தை கட்டுப்படுத்த சென்னையில் தயார் நிலையில் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Diwali
    சென்னை:

    தீபாவளி அன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களில் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. மொத்தம் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ராக்கெட் வெடியால் அதிக அளவு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் 32 இடங்களிலும், பிற மாவட்டங்களில் 90 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 81 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து தீ விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில ராட்சத பலூன் பறக்க விடப்படுகிறது. இதனை தீயணைப்பு துறை டி.ஜி.பி. மகேந்திரன் பறக்க விடுகிறார். இணை இயக்குனர் சாகுல் அமீது மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். #Diwali

    தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
    நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.

    அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவாக இருந்த ஜோதிலட்சுமியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிபோனார்கள் அசுரர்கள்.

    திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
    ×