search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
    திருவாரூர்:

    சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுவிநியோகத் திட்ட கிடங்கில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மாத ஒதுக்கீட்டின்படி நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

    அப்போது அனைத்து பொருள்களும் உரிய தரத்துடன், சரியான எடையில் இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர்வு செய்யப்பட வேண்டுமென கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அங்காடிகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும், முன்நகர்வு செய்யப்பட்டு நவம்பர் 1-ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, கையிருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    அமுதம் நியாய விலை அங்காடிகளை ஆய்வு செய்த அமைச்சர் குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். கோபாலபுரம் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தரமான அரிசி, அனைத்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

    மழை காலங்களில் கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகாமல் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
    ஆயுதபூஜை மற்றும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். #Mutharasan #Bus

    கரூர்:

    கரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரஸ்வதிபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதையொட்டி பொது மக்கள் வெளியூர் பயணங்களை அதிகளவில் மேற் கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் அதிகளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல், மத்திய ரெயில்வே துறையானது சென்னை-நெல்லை, சென்னை-கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அந்த ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட, 3 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல் பொருத்த மற்ற காரணங்களை கூறி மாநில அரசு இழுத்தடிக்கிறது.

     


    தமிழகத்தில் அமைச்சர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சோதனையை மத்திய அரசாங்கம் எதற்காக மேற்கொள்கிறது? என்பதை புரிந்து கொள்ளவே முடிய வில்லை. இது தமிழகத்தை பணியவைக்கும் முயற்சியாக தெரிகிறது.

    பாலியல் புகாரில் சிக்கிய மத்திய மந்திரி அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணைக்கு ஒத்துழைத்து தனது நேர்மையை அவர் நிரூபிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் மக்களின் கருத்தை கேட்டு செயல் படுத்தவேண்டும்.

    அந்த திட்டத்தின் பாதிப்புகள் குறித்து வெளியே பேசினாலே கைது நடவடிக்கை என்றாகி விட்டது. எனவே தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என நினைக்க தோன்றுகிறது.

    ரபேல் போர் விமான ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கோருகின்றன. மடியில் கனம் இல்லையென்றால் இதனை ஏற்று மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Mutharasan #Bus

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MRVijayabhaskar #Diwali #SpecialBus
    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். 

    சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.



    தென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

    தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். #MRVijayabhaskar #Diwali #SpecialBus
    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #MRVijayabaskar
    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதால் இந்திய அளவில் வாகன எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் விபத்துக்களை குறைப்பதற்கு போக்குவரத்து துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்த இன்னும் நேரம் உள்ளது. ஏற்கனவே தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். அது வழக்கமான வேலைதான்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


    சாலை விபத்தில் வருடத்துக்கு 17 ஆயிரம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் இருக்கின்றது. சாலை விதிகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கும், மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்காகவும் நான் அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சென்றிருந்தேன். அங்கு சாலை விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடிப்பதை பார்த்தால் நமது நாட்டில் மிக மிக குறைவு.

    அந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும். எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது.

    சாலைகள் நல்ல சாலைகளாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்களை குறைக்க இனிவரும் காலங்களில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    அடுத்த வாரம் 475 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 100 மின்சார பஸ்களை வாங்க நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். அதில் 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும்.

    பஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்த அரசு தயாராக இல்லை. டீசல் விலை உயர்வு அரசு போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு சென்னையில் கூடுதலாக 300 பஸ்களை விட்டுள்ளோம்.

    இது மக்களின் பயணத்துக்கு போதுமாக இருக்கும் என்று கருதகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    விரைவில் போக்குவரத் துறையையும், மெட்ரோ ரெயில் சேவையையும் இணைத்து கார்டு சிஸ்டம் கொண்டு வர உள்ளோம். அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பஸ் எப்போது வரும் என்பதை ‘ஆப்’ மூலம் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். போக்குவரத்து துறையில் உள்ள காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar
    ×